Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணைக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் போராளி(காணொளி)

Featured Replies

a144-696x348.png

அரசியல்வாதிகள் தங்களது சுய லாபங்களை

நோக்குடன் கொண்டு தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதை தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை . என இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போதே முன்னாள் போராளி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
முன்னாள் போராளிகள் 107 நபர்கள் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன. நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை,தடுப்பூசிகளை பரீட்சித்து பார்த்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.
அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகளுக்கு தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மன அளவில் பாதிப்படைந்துள்ளோம். 95 வீதம் முன்னாள் போராளிகள் தமக்கு என்ன நடந்திருக்கும் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம். எமக்கு தீர்வுத்திட்டம் வேண்டுமேன பேசும் அவர்கள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளிப்படவில்லை முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.
நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதுக்கு காரணம் எமது போராட்டம் இந்த அளவிற்கு வலுப்பெற்றது. நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும்.
நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காக, போராடிய முன்னாள் போராளிகள் மாவீரர்கள் அவர்கள் ஒன்றும் அறியதாவர்கள் எங்களுக்கு தனிநாடு எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் , தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள் . அவர்களை நாங்கள் நினைவு கூறுவதற்கு கூட தற்போது எதுவும் இல்லை.

என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140போராளிகளில் நாங்கள் 4 பேர் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூறு முடியாதா? அவ்வாறு நினைவு கூர்வது தவறா? யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்?
உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது.
முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றால் கூட புலனாய்வு பிரிவினர் எம்மை பின்தொடர்கின்றனர். அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை கூற வேண்டும் என வந்துள்ளேன் என தெரிவித்தார்.
 

http://www.tamilkingdom.com/2016/08/18_18.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தமிழனுக்காய் போராடினாய், இன்று உண்மைக்காய் போராடுகிறாய். சந்தர்ப்பம், சூழ்நிலை உன் போராட்டத்தை மாற்றினாலும் போராட்டம் மாறவில்லை. ஏனெனில் உனது போராட்டம் நிஞாயமானது, உண்மையானது. அன்றும் உயிரை தியாகம் செய்யத் துணிந்தாய் இன்றும் தொடருகிறாய். இந்தத் தமிழினம் உனக்கு எந்தளவு பாதுகாப்பு தரப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் உசுப்பேத்தலுக்கு  காது குடுத்து பப்பா மரத்தில் ஏறாமல் .உங்கள் பாதுகாப்பை கவனத்தில் எடுங்கள் நண்பனே 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

அன்று தமிழனுக்காய் போராடினாய், இன்று உண்மைக்காய் போராடுகிறாய். சந்தர்ப்பம், சூழ்நிலை உன் போராட்டத்தை மாற்றினாலும் போராட்டம் மாறவில்லை. ஏனெனில் உனது போராட்டம் நிஞாயமானது, உண்மையானது. அன்றும் உயிரை தியாகம் செய்யத் துணிந்தாய் இன்றும் தொடருகிறாய். இந்தத் தமிழினம் உனக்கு எந்தளவு பாதுகாப்பு தரப்போகிறது?

இதனை விட.... உணர்வு பூர்வமாக, எல்லோராலும், எழுத முடியாது.
உங்கள் கருத்துக்கு....  நன்றி சாத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

இனியும் உசுப்பேத்தலுக்கு  காது குடுத்து பப்பா மரத்தில் ஏறாமல் .உங்கள் பாதுகாப்பை கவனத்தில் எடுங்கள் நண்பனே 

ஸ்ரீலங்கா..... சிறைகளில் உள்ள... போராளிகளுக்கு,
விஷ ஊசி.... ஏற்றப் பட்ட கருத்தையும், அவரின் மன நிலையையுமே தெரிவிக்கின்றார்.
இதனை... அவர், சர்வ தேசத்துக்கு முன் கொண்டு செல்வதில் தப்பில்லை.
ஆனால்..... சர்வதேசமும், நாமும்.... குருடர்களாக இருக்கும் போது....  என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

இனியும் உசுப்பேத்தலுக்கு  காது குடுத்து பப்பா மரத்தில் ஏறாமல் .உங்கள் பாதுகாப்பை கவனத்தில் எடுங்கள் நண்பனே 

அது...., 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா...அவர் நடந்ததை சொல்லியூள்ளார்........

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

இனியும் உசுப்பேத்தலுக்கு  காது குடுத்து பப்பா மரத்தில் ஏறாமல் .உங்கள் பாதுகாப்பை கவனத்தில் எடுங்கள் நண்பனே 

ஒருவரது நல்ல செயல்பற்றிச் சொல்வதற்குப் பெயர் உசுப்பேத்தல் அல்ல, அது பாராட்டு. தவறான செயல்களை செய்ய ஊக்குவிப்பதுதான் உசுப்பேத்தல் அன்பரே.
தமிழரின் பாதுகாப்பு யாரிடம் உள்ளது....? சிறீலங்கா இன்று தமிழர்களின் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. அங்கு தமிழர்கள் பாதுகாக்கப்படுவது சிங்கள அரசியல்வாதிகளின் தேவைக்காக. சிங்களவர்களுக்குத் தமிழர்களைக் காட்டி இனவெறி ஊட்டித் தாங்கள் அரசியல் சுகத்தில் திளைத்து நிலைத்திருப்பதற்காக. புரிந்துகொள்ளுங்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா..... சிறைகளில் உள்ள... போராளிகளுக்கு,
விஷ ஊசி.... ஏற்றப் பட்ட கருத்தையும், அவரின் மன நிலையையுமே தெரிவிக்கின்றார்.
இதனை... அவர், சர்வ தேசத்துக்கு முன் கொண்டு செல்வதில் தப்பில்லை.
ஆனால்..... சர்வதேசமும், நாமும்.... குருடர்களாக இருக்கும் போது....  என்ன செய்வது?

நாம்.... குருடர்களாக இருக்கும் போது....  என்ன செய்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.