Jump to content

நாகர்கோவில் பள்ளிச்சிறார்கள்மீது குண்டுவீசி படுகொலைசெய்த 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்!


Athavan CH

Recommended Posts

நாகர்கோவில் பள்ளிச்சிறார்கள்மீது குண்டுவீசி படுகொலைசெய்த 21ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்!

யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் பிரதேசத்தில் 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதலில் பலியான 39 மாணவர்களின் 21ஆவது நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவேளையில் சிறீலங்கா விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர்.

விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 25 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதிற்குட்பட்ட மாணவர்களே.

இன்றைய இந்நினைவுகூரல் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

download-59

http://thuliyam.com/?p=42219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரக்கம் அற்ற ஈன சிங்களவனின் செயலால் அநியாயமாக கொல்லப்பட்ட பாலர்களுக்கு நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு கூறுகிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா இனப்படுகொலையாளரின் படுபாதகச் செயலால் பலியான குருத்துகளுக்கு அகவணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

இந்தச் சம்பவத்துக்கு முழுப் பொறுப்பும் உடையவர் இன்றைய நல்லாட்சியின் தலைவி சந்திரிக்கா அம்மையார். இப்படியான  படுகொலையாளர்கள்.. எல்லாம் எந்தத் தண்டனையும் இன்றி.. இந்த உலகில் அதிகார வர்க்கங்களால் பாதுக்காக்கப்படுவதால் தான்.. இந்த உலகில் மனித இனம் அரச பயங்கரவாதத்தால்.. பெருந்தொகையில் அழிந்து கொண்டிருக்கின்றது. tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா விமானங்கள்....  பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது..... 
குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதில்.... உயிரிழந்த 39 மாணவர்களுக்கும், நினைவு அஞ்சலிகள். 

இன்று அவர்கள் உயிருடன் இருந்தால்.... 30 வயதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
இந்தக் கொடுமையை  செய்தவர்கள்... ஆண்டவனால் தண்டிக்கப் படாவிட்டால்.... கடவுள் என்று ஒருவர் இருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.