Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வி

Featured Replies

ரஷ்யா இரண்டு வாக்குகளால் தோல்வி

 

 

ஐ.நா.மனித உரிமைப் பேரவையின்  அங்கத்துவத்திற்காக நடைபெற்ற தேர்தலில்  ரஷ்யா  இரண்டு வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 29NATIONS-master768.jpg

47உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு 2017ஆம் ஆண்டுக்காக 14உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்டார்கள். 

இந்நிலையில் ஐ.நா பொதுச்சபையில் நேற்று  வெள்ளிக்கிழமை மனித உரிமை பேரவைக்கு எஞ்சிய அங்கத்துவ உறுப்பு நாடுகளை   தெரிவு செய்வதற்கான தேர்தலில் ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் பங்கேற்று இரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. 

உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் சிரியாவில் இடம்பெறும் விடயங்களுக்கு மூலகாரணமாக ரஷ்யாவே காணப்படுகின்றது என்பதுள்ளிட்ட மனித உரிமை விடயத்தை பின்பற்றுதல் தொடர்பில் ரஷ்யா மீது  குற்றச்சாட்டுக்களை வலுவாக முன்வைத்து வந்தன. 

எனினும், சர்வதேச  அரசியலில் ரஷ்யாவுக்குள்ள பலத்தின் அடிப்படையில் அந்த நாடு மனித உரிமை பேரவைக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெறும்  என்றே பெரும்பாலான கணிப்புக்கள் காணப்பட்டன. 

எனினும் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலையை உண்டாக்கி இருப்பதோடு சிரியா தொடர்பில்  ரஷ்யா கொண்டிருந்த இறுக்கமான கொள்கையே இதற்கு பிரதான காரணமாகவிருப்பதாகவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த தேர்தலில் அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டில் உறுப்பினராக இல்லாதிருந்த அமெரிக்கா, இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக இணைகின்றது. 

மனித உரிமைப் பேரவை உறுப்பினர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்குரியதாகும்.  தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் உறுப்பினராக இருந்த நாடுகள் மூன்றாவது தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடமுடியும் என்பது வரைமுறையாகவுள்ளது.

அதேநேரம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்கள், தற்போதுள்ள முன்னேற்றங்கள் குறித்த நிபுணர்களின் அறிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையிலேயே ரஷ்யா அங்கத்துத்திற்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/12885

  • கருத்துக்கள உறவுகள்

“மாபெரும் வெற்றி: மனித உரிமைப் பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்!”

 

Written By Mithunan on சனி, அக்டோபர் 29, 2016 | பிற்பகல் 2:54:00

 
இலங்கை அரசுக்கு பன்னாட்டு அரங்கில் அதிதீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த ரஷ்ய நாடு -ஐநா மனித உரிமைப் பேரவைக்கு நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
 
 
tamiltheee6.jpg


இலங்கை மீதான விவாதம் மீண்டும் 2017 மார்ச் மாதம் மனிதஉரிமைப் பேரவையில் வரவுள்ள நிலையில், ரஷ்யாவின் தோல்வி இலங்கை அரசுக்கு ஒரு பின்னடைவே ஆகும்.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமைப் பேரவைக்கு, இந்த ஆண்டு 14 உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள். ஐநா அவையில் வெள்ளிக்கிழமை நடந்த தேர்தலில் உலகின் அனைத்து நாடுகளும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தன. அதில் ரஷ்ய நாடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உலகின் அனைத்து மனித உரிமை அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் செய்தன. சிரியா நாட்டில், நேரடியாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள ரஷ்யா எவ்வாறு மனித உரிமைப் பேரவையில் உறுப்பினர் ஆகலாம்? என்கிற கேள்வியை அவை முன்வைத்தன.

எனினும், பன்னாட்டு அரசியலில் ரஷ்யாவுக்கு இருக்கும் பலத்தை வைத்து, அந்த நாடு வெற்றிபெரும் என்றே பெரும்பாலான ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. ஆனால், அனைத்து நம்பிக்கைகளையும் மீறி, ரஷ்யா தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.

மனித உரிமைப் பேரவை உறுப்பினர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கான உறுப்பினர் தகுதி ஆகும். தொடர்ந்து இரண்டு முறை உறுப்பினராக இருந்த நாடுகள் மூன்றாவது தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு ஆண்டு இடைவெளிவிட்டு மீண்டும் தேர்தலில் நிற்கலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளன. 2016 ஆம் ஆண்டில் உறுப்பினராக இல்லாத அமெரிக்கா, இந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் 2017 ஆம் ஆண்டுமுதல் ஐநா மனித உரிமைப் பேரவையில் உறுப்பினராக சேர்கிறது. இந்தியா ஏற்கனவே, உறுப்பு நாடாக இருந்துவருகிறது.

 

http://www.tamilthee.com/2016/10/blog-post_190.html?m=1

3 minutes ago, விசுகு said:

. இந்தியா ஏற்கனவே, உறுப்பு நாடாக இருந்துவருகிறது.

மனிதப் படுகொலைகளுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு பெயர் போன இந்தியா, இந்த அவையில் இருப்பதே மனித இனத்துக்கு பாரிய இழுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

மனிதப் படுகொலைகளுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு பெயர் போன இந்தியா, இந்த அவையில் இருப்பதே மனித இனத்துக்கு பாரிய இழுக்கு.

உண்மைதான்

ஆனால்     ரஷ்யா ஒரு உலக வல்லரசு

அத்துடன் வீட்டோ அதிகாரத்தை தன்னகத்தே கொண்ட பெரும் தேசம்.

அதனது கையசைப்பிலேயே இந்தியா அசைந்ததும்

தற்பொழுது இந்தியாவின் அசைப்பில் அது ஆடுவதும் நடக்கிறது

இந்த விடயம் பல உலக விடயங்களில் மாறுதலை தரலாம் சிரியா உட்பட.

  • தொடங்கியவர்

மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா வெளியேற்றம்

putin_19424.jpg

ரஷ்யா, ஐக்கிய நாடுகளின் சபையில் தான் வகித்த வந்த, மனித உரிமை கவுன்சில் பதவியை இழந்தது. 193 நாடுகளைக் கொண்ட ஐ.நா சபையில், நேற்று மனித உரிமை கவுன்சிலுக்கான ஓட்டெடுப்பில் ரஷ்யா வெளியேற்றப்பட்டது. மொத்தம் 14 நாடுகள் மனித உரிமை கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றிலேயே முதன்முறையாக, ஐ.நா-வின் பாதுகாப்பு குழுவில் நிரந்திர உறுப்பினராக இருக்கும் ஒரு நாடு, மனித உரிமை கவின்சிலில் இருந்து வெளியேற்றுப்படுவது இது தான் முதல் முறை. சிரியாவில் நடக்கும் போரில், ரஷ்யாவின் வெளியுறவு கொள்கைகள் தான், அந்நாட்டிற்கு இந்த நிலைமை வர காரணம் என கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/world/70873-russia-ousted-from-human-rights-council.art

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ சொந்த செலவில் சூனியம் வைக்கிற மாதிரி இருக்கு ......

அவர்கள் அனுகுண்டை அடுக்கி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு அகதியாக போவது உத்தமம்போல் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சிய கப்பலுக்கு எண்ணை போடாமல் தடுப்பது.. ரஷ்சியாவை ஐநா பொறுப்புக்களில் இருந்து தட்டிக்கழிப்பது.. ரஷ்சியா மீது ஒரு சதத்துக்கும் செல்வாக்குச் செய்ய முடியாத... பொருண்மிய தடை என்ற பெயரில்.. என்னத்தையோ போட்டு ஊரை ஏய்க்கிறது.. இது தான் இப்ப அமெரிக்காவினதும்.. அதன் கூட்டாளி மேற்குலக நாடுகளினதும் வங்குரோத்து சாணாக்கியம்.

உவை எல்லாம்.. ரஷ்சியாவை பலமாக்கி வருகிறதே தவிர.. ஒன்றும் பலவீனப்படுத்தவில்லை.

சேர்பிய யுத்தத்தில்.. ரஷ்சியாவின் பலவீனம்.. உக்ரைன் யுத்தத்தில்.. பலமாக வந்து நின்றது. யாரால்.. மேற்குலகின் தவறான கொள்கைகள்.. மற்றும் அணுகுமுறைகளால் ஆகும். எல்லாம் உணர்ச்சி அரசியலாகிப் போட்டுது.. மேற்குலகில். விவேக அரசியல் அருகிட்டுது. மேற்குலகம்.. ஆட்டம் காண ஆரம்பிச்சிருக்குது. தேவை இல்லாமல்.. அமெரிக்காவுக்கு வால்பிடிச்சு கண்ட விடயங்களின் மூக்கை நுழைக்கப் போய். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரைக்கிறுக்கன்  புட்டின் இருக்கிற படியாலை தொட்டதெல்லாம் பொன் எண்டு மேற்குலகம் நினைக்குது....
முழுகிறுக்கன் ஸ்டாலின் இப்பவும் இருந்திருந்தால்....... ஆப்கானிஸ்தான் இராக் ஊடாக சிரியா வரைக்கும்..... ஒருத்தனும் தலை காட்டேலாது. :11_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.