Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்

Featured Replies

15 minutes ago, நவீனன் said:

கூர்மையான அரசியல் விமர்சகர்

திரையில் அவரின் தனித்தன்மையான உடல்மொழி பலரை கவர்ந்தது. அதே போல் அவரது அரசியல் விமர்சனங்களும் வித்தியாசமானவை, மிகக் கூர்மையானவை. தன்னுடைய விமர்சனங்களில் தவறிருப்பின் அதைத் தயங்காமல் ஒப்புக் கொண்ட நேர்மையாளராக இருந்தார்.

அட பாவிகளா, அப்ப சீமானும் துரோகியா?

சோவை புகழும் துரோகி சீமான் ஒழிக:grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இருப்பவர்கள் எழுந்தமானமாக "செத்தாண்டா சேகரு" என்று அறிக்கை விடமாட்டார்கள். tw_blush: ஆனால் மனத்துக்குள் "போய்ச் சேர்த்துது சனியன்" என்று நினைப்பார்கள். :D: கட்டுமரத்துக்கும் இரண்டு நல்ல வார்த்தை சொல்லி மலர்மாலை அணிவிக்க வேண்டியது வரும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் எழுதும் ஒவ்வொரு கருத்துக்களிலும் சிலவிடயங்கள்  தெளிவாகின்றது 
ஒரு விடயத்தை நுண்ணியமாக ஆராயாமல் எழுந்தமானமாக கருத்து சொல்பது ...  
சமயங்களில் நிதானம் இழந்து எழுதுவது  ... 
அபத்தமான  இலங்கை அரசியல் நிலைப்பாட்டை ஆரோக்கியம் என நினைப்பது  ...
புலிகளை வசைபாடுதல் மட்டுமே  மாற்றுக்  கொள்கை என நினைப்பது  ...
இவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம்... கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

நான் இப்படி எழுதுவது அதிகப் பிரசங்கிதனமாக கூட இருக்கலாம்..
பரவாயில்லை, யார் மனதையும் நோகடிக்கும் நோக்கத்தோடு இது பதியப்படவும் இல்லை.

Cho died ...so what...!!! 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, raja.m1982 said:

திருமுருகன் காந்தி அரசியல் இயக்கத்தில் இருப்பவர். அரசியல் கட்சி நடத்துகிறவர் இல்லை. எனது முதல் பதிவில் இதை தெளிவாகப் போட்டிருந்தால் உங்களுக்கு குழப்பம் வந்திருக்காது.

நிற்க.. சீமானின் அறிக்கையைப் படித்தீர்களானால் அவர் சொன்னதில் தவறு ஏதும் காணமுடியாது. அவர் சொன்னவைகள்..

1) அவர் ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகர் - உண்மை

2) நாடக ஆசிரியர் - உண்மை

3) பத்திரிகை ஆசிரியர் - உண்மை

4) அரசியல் விமர்சகர் - உண்மை

5) துணிச்சலாக கருத்துக்களை சொல்பவர் - உண்மை

6) 46 ஆண்டுகள் பத்திரிகை உலகில் சாதித்தவர் - உண்மை

7) அவரது கருத்துக்களின்மேல் மாற்றுக் கருத்து உண்டு - உண்மை

 

8 minutes ago, Sasi_varnam said:

புலிகளை வசைபாடுதல் மட்டுமே  மாற்றுக்  கொள்கை என நினைப்பது  ...
இவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம்... கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை வசைபாடுவதின் மூலம் தாங்கள் புலிகளின் விசுவாசிகள் என்று புல்லாங்குழல் ஊதுபவரும் உண்டே இங்கு சசி.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஜீவன் சிவா said:

புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை வசைபாடுவதின் மூலம் தாங்கள் புலிகளின் விசுவாசிகள் என்று புல்லாங்குழல் ஊதுபவரும் உண்டே இங்கு சசி.

நீங்கள் சொல்வதும் உண்மை தான் ஜீவன்.

அதே நேரம் புலிகளை ஏற்றுக்கொள்ளாமை வேறு... புலிகளின் மேல் காழ்ப்புணர்ச்சியை சம்பந்தமே இல்லாமல் கொட்டுவது வேறு.  

உதாரணம் இங்கு கனடாவில் ஒரு நண்பர் .. மட்டக்களப்பு மதவாத பௌத்த துறவியின் செயலை பற்றி நாங்கள் விசனமாக  கதைக்கும் போது, அவர்கூறுகிறார் "புலிகள் மட்டும் திறமா என்ன?  அவர்கள் செய்யாத அட்டூழியமா ?" ...

இதில் புலி எங்கே வந்தது? எதை எதோடு முடிச்சு போடுகிறார் பாருங்கள்...
யுத்தம் முடிந்து 7 வருடங்களின் பின்னர் நல்லிணக்கம் பேசும் பொழுது இது... இதை எப்படி பார்க்கலாம்...
இப்படித்தான் போகிறது சிலரது அரசியல் பார்வை.. இதை பற்றி கதைத்தால் புலி விசுவாசி ...புல்லாங்குழல் வாசி......What to do.. 

நெஞ்சில் ரணமாய் இருக்கும் இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன் 
என்னுடன் படித்த நண்பி (பிறந்தது / படித்தது / கல்யாணம் காட்டியது) எல்லாமே யாழ்ப்பாணம். 
யுத்தம் முடிவடைந்து சில மாதங்களின் பின்னர் போராளி இசைபிப்ரியா அவர்களின் காணொளி வந்ததது.
நெஞ்சம் பதை பதைத்க, தூக்கமிழந்த தருணங்கள் அவை. இந்த நண்பியுடன் நான் உரையாடும் போது இது குறித்து பேச்சு வந்தது... அவரின் அன்றைய பதில்/ நிலைப்பாடு அன்றே  எங்கள் நட்புக்கு ஆணி அடித்தது.
அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை தான் " இவையளுக்கு இது வேணும். ஆமிக்காறங்களோட சண்டைக்கு போனால் இதுவம் இல்ல இதுக்கு மேலயும் செய்வான் தானே." இவையல் எத்தின சிங்கள ஆட்களை குண்டு வைச்சு கொன்றிசீனம்"... ஆமி என்ன எல்லோரையுமா இப்படிக்கு கொண்டவன்.... புலிகளை தானே கொண்டவன்...இப்படி பல  விதமாய் கதைத்து காயப்படுத்தினார். 
இப்படியும்  சிலது இருக்கத்தானே செய்யுது... என்ன செய்வது...   
  
 

11 minutes ago, Sasi_varnam said:

அதே நேரம் புலிகளை ஏற்றுக்கொள்ளாமை வேறு... புலிகளின் மேல் காழ்ப்புணர்ச்சியை சம்பந்தமே இல்லாமல் கொட்டுவது வேறு

சசி உங்கள் உணர்வுகள் என்னுடையதும்தான்.

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். நடந்தவை முடிந்ததாக இருக்கட்டும் ஆனால் இனியும் வேறுபட்டிருக்காமல் ஒன்றிணைவோம் என்பதுதான் எனது ஆசை.
 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

சசி உங்கள் உணர்வுகள் என்னுடையதும்தான்.

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். நடந்தவை முடிந்ததாக இருக்கட்டும் ஆனால் இனியும் வேறுபட்டிருக்காமல் ஒன்றிணைவோம் என்பதுதான் எனது ஆசை.
 

மனிதன் மனசு வைத்தால் எதுவுமே சாத்தியம் நண்பா ...

On 12/7/2016 at 3:39 PM, ஜீவன் சிவா said:

ஒரு மிருகத்தின் பேரால் ஆயிரக் கணக்கில் அழித்தது நீங்களா? சோவா?

 

4 hours ago, ஜீவன் சிவா said:

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். 

முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே .....

திரு சோ அவர்கள. எதையும் வெளிப்படையாக பேசுபவர். விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாக பாவனை காட்டிக்கொண்டு தமிழரின் உரிமைப் போராட்டத்தையே எதிர்ததார். வடுதலைப்புலிகளின் வீழ்சசிக்கு பின்னரும் இலங்கை அரசின் யுத்தக்குற்றங்களையும் அக்கிரமங்களையும் ஆதரித்து பேட்டியளித்தார்.  இல்ங்கை அரசு எந்தகாரணத்தை கொண்டும் தண்டிகக்கபடகூடாது என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.

தமிழரின் உரிமை போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அதாவது விடுதலைப்புலிகள் உருவாக முன்பே  திரு. ஜே.ஆர் ஜெயவர்ததனாவை சந்தித்து விடுதலைப் போரட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். புலிகள் உட்பட    விடுதலைப்போராளிகள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று திட்டிய இவர் அதேசமயம் இலங்கை அரசாங்கத்தின் அத்தனை பயங்கரவாத அக்கிரமங்களையும் வெளிப்படையாக ஆதரித்தார். இலங்கை அரச படைகள் தமிழரை கொன்ற ஒவ்வோரு தடவையும் அதை நியாயப்படுத்தி தனது கேள்வி பதில் பகுதியில் எழுதி மகிழ்ந்தார்

இவரது ஆத்மா  நரகத்தில் அவதியுற என்னும் இறைவனை வேண்டி நிற்கிறேன். 

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2016 at 7:49 AM, Surveyor said:

போராட்டத்தில் போராடியும் அதற்க்கு சார்பாக இருந்தவர்களையும் மரணித்தபின்பும் கொச்சைப்படுத்தும் உங்களை எந்த வகையில் சேர்ப்பது?

அவர்கள் செய்தால் அது தர்மயுத்தம் .............

அதையே அடுத்தவன் கற்று கொண்டால் 
அது படு மிருக யுத்தம் !

இப்பிடி பல சாமி இந்தியாவிலே சுத்துது !

ஒவ்வரு மனிதனும் வாழ்வை ஒவ்வரு வகையாக விளங்கி கொள்கிறான் 
பக்தியை புரிந்து கடவுளிடம் தம்மை ஒப்படைப்பவன் 
காதலை புரிந்து தன்னை காதலியிடம் ஒப்படைப்பவன் 
சமூக சீரழிவை கண்டு சமூக சேவையில் தன்னை அர்பணிப்பவன் 
பூமி இயற்கை மீது காதல் கொண்டு தன்னை அர்பணிப்பவன் 
தனது குடுமபம் மீது காதல் கொண்டு தன்னை அர்ப்பணிப்பவன் 
எதோ ஒரு கல்வி (மருத்துவம் கணிதம் விஞ்ஞானம்) யில் காதல் கொண்டு 
ஆராய்ச்சியில் தன் வாழ்வை அழிப்பவன் 

..............................என்று எந்த வகையில் சென்றாலும் ஒரு ஆறு அறிவு மனிதன் 
தனது கடமை என்று ஒன்றை ஏற்று கொள்கிறான். அதை இன்னொருவன் மறுதலிக்க கூடும் 
அல்லது அது தவறே என்றும் வாதிட கூடும்.


இதில் எதுவுமே இல்லாது .............. சொந்த பிழைப்பு நடாத்த 
ஒரு சமூகம் .... இயற்கை .....குடும்பம் ....காதலி  என்று எதோ ஒன்றை அழித்து 
சுத்த பித்தலாட்டம் காட்டி ...... எதோ ஒருவனின் பலயீனத்தை பயன்படுத்தி 
தான் பிரபலம் காட்டி வாழ்ந்து சாகும் .....

ஒவ்வரு மிருகக்கத்தின் இறப்பிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டு !!! 

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தொலைக்காட்சியில் ஜெயலலிதாவுடன் நடித்த நடிகை (பெயர் ஞாபகம் இல்லை) ஜெயலலிதாவின் நினைவுப்பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் ஜெயலலிதாவை பற்றி கூறும் போது பழைய நடிகைகள் ஏழு பேருடன் சோவையும் அழைத்து விருந்து வைத்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியதையும் குறிப்பிட்டு ஒவ்வொருவருக்கும் சேலையும் சோவுக்கு வேட்டி சால்வையும் கொடுத்து மகிழ்வித்தாராம். சாப்பாட்டு வேளையில் சோவின் சாப்பட்டுக்குள் மிளகாய் கடிபட்டு விட்டதாம். அதற்காக மிளகாய் கடிபட்டதால் உறைப்பில் உணவை உண்ண முடியவில்லை என முணுமுணுத்தாராம்.உடனே ஜெயலலிதா சோ முறைப்பாடு செய்யாத இடமே இல்லை எனலாம் என ஒரே போடாக போட்டாராம்,

“உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்!” - ஜெயலலிதாவின் ஏக்கம்!

 

 

p30a.jpg

சாட்டிலைட் சேனல்கள் இல்லாத காலம் அது. அரசு தொலைக் காட்சியான தூர்தர்ஷன் மட்டுமே அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. தனியார் தயாரித்துத் தரும் தொடர்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப ஏக டிமாண்ட் இருந்தது. கரன்சியை தள்ளினால்தான் சீரியல்களுக்கு அனுமதியே கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலில் தனது நாடகத்துக்கு அனுமதி கேட்டு அப்ளிகேஷன் போட்டிருந்தார் சோ. அனுமதி கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அப்போது ராஜீவ் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் நேரு, சோவுக்கு ரொம்ப நெருக்கம். ஆனாலும் சிபாரிசுக்கு போய் நிற்கவில்லை சோ. ‘‘என்னோட சீரியலுக்கு அனுமதி தர தூர்தர்ஷன் அலுவலர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள்’’ என தனது ஊழியர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டார். ‘‘எதுக்கு கவலைப்படுறீங்க சார்... பணத்தை கொடுத்திட வேண்டியதுதானே’’ என ஊழியர்கள் சொன்னபோது, ‘‘பணம் இல்லாமல் இல்லை. அதைக் கொடுத்து சீரியலுக்கு அனுமதி வாங்கிவிடலாம். அதற்கு நான் துக்ளக்கை நிறுத்திவிட வேண்டும். பரவாயில்லையா?’’ என பதில் சொன்னார் சோ. அவர்தான் சோ!

1991 - 1996 ஜெயலலிதா ஆட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 1996 சட்டசபைத் தேர்தல் நேரத்தில், காங்கிரஸில் இருந்து பிரிந்து த.மா.கா என்கிற புதிய கட்சியை மூப்பனார் ஆரம்பித்து தி.மு.க-வோடு கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினியின் ஆதரவும் கிடைத்தது. ‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அதனால் தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்’’ என பகிரங்கமாகவே சொன்னார் ரஜினி. த.மா.கா கூட்டணி அமையவும் ரஜினி ஆதரவு தரவும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சோ. தி.மு.க ஆட்சியும் அமைந்தது. அதனாலேயே சோ மீது வெறுப்பு காட்டினார் ஜெயலலிதா. அந்த காலகட்டத்தில்தான் சோவின் மகள் திருமணம் நடந்தது. ‘‘மகளின் திருமணத்துக்கு ஜெயலலிதாவுக்கு பத்திரிகை வைக்கலாமா?’’ என துக்ளக் ஊழியர்களிடம் கருத்துக் கேட்டார். அதன்பிறகுதான் அழைப்பிதழ் வைக்க ஜெயலலிதாவிடம் அப்பாய்ன்மென்ட் கேட்டிருக்கிறார் சோ. ‘‘நீங்க வர வேண்டாம். நானே உங்க ஆபிஸுக்கு வருகிறேன்’’ என சொல்லி, துக்ளக் ஆபிஸுக்கு ஜெயலலிதா போனார். ‘ஜெயலலிதா வருகிறார்’ என்கிற தகவலை ஊழியர்களிடம் சொன்ன சோ, ‘‘அவங்க வருவாங்க... உங்கள் ஒவ்வொருவரையும் அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரவர் இருக்கையிலேயே இருங்கள்’’ என்றார். ஜெயலலிதா வந்ததும் அறிமுகப் படலம் நடந்து முடிந்தது. அதன்பிறகு, ‘‘மாடியில்தான் என் ஆபீஸ். உன்னால படி ஏற முடியுமா? எதற்காக சிரமப்படுகிறாய். இங்கேயே பேசிக் கொள்ளலாமா?’’ என சோ சொல்ல... ‘‘எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை’’ என சொல்லி, படியேறி போய் அவர் அறையில் பேசிவிட்டுப் போனார் ஜெயலலிதா. ‘நீ... வா...’ என ஜெயலலிதாவிடம் ஒருமையில் பேசியவர், ஊழியர்களிடம் ‘அவங்க... வருவாங்க’ என பன்மையில் பேசினார். முந்தையது அந்நியோன்யம்; பின்னது மரியாதை! 

p30b.jpg

சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்தார் சோ. அவரை பார்க்கப் போயிருந்தார் ஜெயலலிதா. ‘‘உடம்பை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்க... ரெஸ்ட் எடுங்க... நீங்க ரொம்ப வருஷம் இருக்கணும். உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும். எனக்குப் பின்னாடிதான் நீங்க போகணும்’’ என சோவிடம் ஆறுதல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

‘அப்படி எல்லாம் பேசக்கூடாது’ என்று கண்டித்தார் சோ. ஆனால், ஜெ. சொன்னதுதான் இறுதியில் நடந்தது. முந்தைய நாள் ஜெயலலிதாவும் பிந்தைய நாள் சோவும் இறந்துபோனார்கள்!

தீவிர இந்துத்வா ஆதரவாளர் சோ. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் அட்டைப் படத்தை கருப்பு நிறத்தில் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தார். தனது அலுவலகத்தில் பணியாற்றிய முஸ்லிம் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வேளையும் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கித் தந்த பண்பாளர்.

துக்ளக்கில் வெளிவரும் ‘கேள்வி பதில்’ பகுதிக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் தவறாமல் பதில்களை கொடுத்துவிடுவார் சோ. வேலைகள் இருந்தால் மட்டுமே வியாழக்கிழமை வரையில் தள்ளிப் போகும். அவர் இறப்பதற்கு முன்புகூட பதில்களை கொடுத்துவிட்டுத்தான் போனார். அந்த பதில்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் ரெடியானது. தனது மருமகள் சித்ராவை அழைத்து வாசகர் கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்திருக்கிறார். துக்ளக் ஆரம்பித்த காலத்தில் இருந்து கேள்வி பதில் பகுதி கடைசி நேரத்தில் பிரின்டுக்கு போன வரலாறு கிடையாது. அதுதான் முதல்முறை. அது கடந்த ஞாயிறு அன்றைக்குத்தான் அரங்கேறியது. உடல்நிலை குன்றி வீட்டில் இருந்த காலகட்டத்தில்கூட ஒவ்வொரு இதழும் அவரின் பார்வைக்குப் போய் ஓகே ஆனபிறகுதான் பிரின்ட்டுக்கே போகும். அப்படித்தான் கடந்த துக்ளக் இதழை ரெடி செய்துவிட்டு எடிட்டரிடம் ‘ஓகே’ வாங்க சப் எடிட்டர்கள் அப்போலோ போனார்கள். அதே ஞாயிற்றுக்கிழமைதான் அப்போலோவில் இருந்த ஜெயலலிதா சீரியஸ் என செய்திகள் பரவின. ‘‘நிறைய கெடுபிடிகள் சார்... நாங்க போராடித்தான் இங்கே வந்தோம்’’ என சோவிடம் சொல்லியிருக்கிறார்கள் சப் எடிட்டர்கள். ‘‘யாராவது வி.ஐ.பி-கள் வருகிறார்களா என்ன?’’ என கேட்டுவிட்டு பக்கங்களைப் பார்த்து திருத்தங்களை சொல்லியிருக்கிறார் சோ. ‘‘கடைசி நேரத்தில் பதில்களை கொடுத்திருக்கீங்க... வழக்கம் போல இருந்தது சார்’’ என சப் எடிட்டர்கள் சொல்ல, ‘‘அப்ப இம்ப்ரூவ்மென்டே இல்லை என்கிறீர்களா?’’ என இரட்டை அர்த்தத்தில் கேட்டுவிட்டு, ‘‘சோவின் கேள்வி பதில்கள் வருவதை போஸ்டரில் போடுங்க’’ எனவும் சொல்லியிருக்கிறார். ‘சோவின் கேள்வி பதில்கள்’ இதுவரைக்கும் போஸ்டரில் வந்ததே கிடையாது. ‘‘அவ்வளவுதான் சார்... இனிமேல் என்ன இருக்கு சார்’’ என்றபடியே சப் எடிட்டர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

p30.jpg

‘‘இம்ப்ரூவ்மென்ட் இல்லையா?’’ என அவர் எதற்காக கேட்டார் என தெரியவில்லை. அதன்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றமே இல்லாமல் போய்விட்டது. உடனே ஐ.சி.யூ-வுக்கு சோ மாற்றப்பட்டார். அதே நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையும் சீரியஸ் ஆகிக் கொண்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பேர்களின் உயிர்களும் போராடிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா உயிர் பிரிந்தபோது அந்த செய்தி சோவின் நினைவுக்குப் போய் சேரவில்லை. அடுத்த 30 மணி நேரத்தில் சோவின் உயிரும் உடலைவிட்டுப் பிரிந்து போனது.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.