Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது - புலனாய்வு பிரிவினர்

Featured Replies

புலிகளின் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது - புலனாய்வு பிரிவினர்

வெள்ளி 02-02-2007 21:08 மணி தமிழீழம் [நிலாமகன்]

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருக்கும் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது என ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் கருத்து வெளியிட்டுள்ளனர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டளை தலைமையத்திற்கும் தாக்குதலாளிகளுக்கும் இடையிலான தொடர்பாடல் அதிநவீன செய்மதி தொலை பேசிகளின் மூலமாகவே இடம்பெற்று வருவதாகவும் இதனை கண்காணிப்பதற்கும் பேசப்படும் விடயங்களை கண்டறிவதற்கும் தேவையான வசதி ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவிடம் இல்லை என தெரியவந்துள்ளது

செய்மதி தொலைபேசி உரையாடலை ஒற்றுக் கேட்பதற்கான நவீன உபகரணங்கை ளகொள்வனவு செய்வதற்கு பெருமளவு நிதி தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடவடிக்கைள் குறித்து முன் கூட்டியே தகவல்களை பெறமுடியாதிருப்தாகவும் ஸ்ரீலங்காவின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

பதிவு

உதெல்லாம் தெரிந்து கொண்டுமா சிங்களக் குண்டர்கள் புலிகளை ஒழித்துக் கட்டப்போவதாய் உலகிற்கு தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்?

இவ்வாறு அறிக்கைகள் விடுவதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருப்பதாய் தோன்றுகின்றது. யாராவது யாழ் கள ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தருவீர்களா?

விடுதலைப் புலிகள் செய்மதி தொலைபேசிகளைப் பாவிக்கிறார்கள் என்பது புலனாய்வுப் பிரிவினர் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இதை ஒட்டுக்கேட்பதற்கும் செய்மதிப் படங்களைக் கொடுத்து இராணுவ உதவிகளைச் செய்வதற்கும் இலங்கைக்கு பக்கபலமாக அமெரிக்கா உள்ளது.

இவை எல்லாம் இருந்தும் புலிகள் என்ன செய்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை யாராலும் அறிய முடியவில்லை.

இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தங்கள் இயலாமைக்கு இப்போதே காரணங்களைக் கற்பித்துக் கொள்கின்றனர். பின்னர் உதவியாக இருக்குமே.

தோல்விகளை இப்படிப்பட்ட வழியில்தான் இவர்கள்சொல்வார்கள்.

நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு புலியிடம் விமானம் இருக்கு என்று சொல்லி பிச்சை எடுத்த மாதிரி இதுவும் ஒரு பிச்சைக்கான ஆய்த்தம் தான்

முன்பு புலியிடம் விமானம் இருக்கு என்று சொல்லி பிச்சை எடுத்த மாதிரி இதுவும் ஒரு பிச்சைக்கான ஆய்த்தம் தான்

உங்கள் கருத்து ஓரளவுக்கு உண்மையே.

இலங்கை அரச மிகச்சிறப்பாக கடந்த ஐந்து வருடங்களாக சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இலங்கை இனப்பிரச்சினையை கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளனர். புலிகள் பற்றிய மிகைப்படுத்திய செய்திகளின் பின்ணணியில் அரச புலனாய்வுத்துறையின் மறைகரங்களை இலகுவாக அடையாளங்காணமுடியாது.

இவ்வாறு அறிக்கைகள் விடுவதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருப்பதாய் தோன்றுகின்றது. யாராவது யாழ் கள ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தருவீர்களா?

எங்கே எமது யாழ் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ். எல்லாளன் படையின் வருகையையிட்டு தப்பியோடிவிட்டாரோ :D

Edited by mathuka

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்து ஓரளவுக்கு உண்மையே.

இலங்கை அரச மிகச்சிறப்பாக கடந்த ஐந்து வருடங்களாக சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இலங்கை இனப்பிரச்சினையை கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளனர். புலிகள் பற்றிய மிகைப்படுத்திய செய்திகளின் பின்ணணியில் அரச புலனாய்வுத்துறையின் மறைகரங்களை இலகுவாக அடையாளங்காணமுடியாது.

நானும் உடன் படுகிறேன் சமாதானம் முப்பது வருடங்களுக்கு முன்னால் இன்று உள்ள இராணுவ எண்ணிக்கையின் ஒரு சிறிய பகுதியே இருந்தது, மிக ஆரம்ப நிலை இராணுவ உபகரணங்களுடன். இராணுவ வலிமையை இப்படி பூதாகரமாய் வளர்த்து வைத்தது புலிகளேதான் இல்லை என்றால் இப்போது வேட்டைத் துப்பாக்கிகளோடுதானே இருந்திருப்பார்கள்.

இதுவே புலிகளுக்கு தோல்வியேதான்

முன்பு களத்தில் நான் குறிப்பிட்ட விடயத்தை மீண்டும் இங்கு தேவை கருதி சொல்லலாம்.

கடந்த ஐந்து வருடங்களாக இலங்கைக்குள் நுழைந்த அன்னிய மூதலீடுகள்தான் சமாதானத்தை மட்டும் அல்ல வரக்கூடிய யுத்தத்தின் போக்கையும் தீர்மானிக்கும் என்பது இன்னும் காலாவதியாகிவிடவில்லை. அப்போ துள்ளிக்குதித்த சிலர் இப்போ என்ன சொல்லுவார்கள்?

...இலங்கை அரச மிகச்சிறப்பாக கடந்த ஐந்து வருடங்களாக சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இலங்கை இனப்பிரச்சினையை கொண்டுவருவதில் வெற்றி கண்டுள்ளனர். புலிகள் பற்றிய மிகைப்படுத்திய செய்திகளின் பின்ணணியில் அரச புலனாய்வுத்துறையின் மறைகரங்களை இலகுவாக அடையாளங்காணமுடியாது.

புலனாய்வுத் துறைக்கு வக்காளத்தா ? இல்லை, புலிகள் பலமில்லாதவர்கள் என்கிறீர்களா ?

புலனாய்வுத் துறைக்கு வக்காளத்தா ? இல்லை, புலிகள் பலமில்லாதவர்கள் என்கிறீர்களா ?

எனது கருத்தை நான் எழுதுவதுபோல் உமது கருத்தை ( இருந்தால்...?) நீர் எழுதும். கொடிபிடிக்கிறது, பட்டம் ஏத்திறது இனியும் வேண்டாம்.

அன்னிய மூதலீடுகள்தான் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். யுத்தத்தைத் திணிப்பது சிங்கள அரசுதான். சர்வதேசம் முதலீடு செய்யும் போது அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து சமாதான முன்னெடுப்புக்களைச் செய்யும். ஏனெறால் முதலீடு செய்த பணம் இலாபத்தோடு கிடைப்பதற்கு சில வருடங்கள் செல்லும். பின்னர் இனவாதிகளைத் திருப்திப் படுத்தும் நடவடிக்கையில் இறங்குவார்கள். சர்வதேசமும் கண்களை மூடிக் கொள்ளும்.

இப்போதும் அப்படித்தான். சமாதானம் பேசி இன்னும் கொஞ்சக் காலம் இழுத்தடித்தால் கொடுத்த காசிற்கு நட்டம் ஏற்படாது.

ஆனால் இன்று விடுதலைப் புலிகள் சர்வதேச வலைப் பின்னலை நன்கு கற்றுத் தெளிந்து விட்டார்கள். மிகத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். அதனால் தானோ என்னவோ, சமீபத்தைய சந்திப்புகள் பற்றி அரசாங்கமோ, விடுதலைப் புலிகளோ, நோர்வேயோ எந்தக் கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.

நானும் உடன் படுகிறேன் சமாதானம் முப்பது வருடங்களுக்கு முன்னால் இன்று உள்ள இராணுவ எண்ணிக்கையின் ஒரு சிறிய பகுதியே இருந்தது, மிக ஆரம்ப நிலை இராணுவ உபகரணங்களுடன். இராணுவ வலிமையை இப்படி பூதாகரமாய் வளர்த்து வைத்தது புலிகளேதான் இல்லை என்றால் இப்போது வேட்டைத் துப்பாக்கிகளோடுதானே இருந்திருப்பார்கள்.

இதுவே புலிகளுக்கு தோல்வியேதான்

துரோகிகளும், பதவி், பண ஆசை பிடிச்ச ஒட்டுண்ணிகளும் இல்லாதிருந்தால் எப்பவோ தமிழீழம் கிடைச்சிருக்கும்.

அன்னிய மூதலீடுகள்தான் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். யுத்தத்தைத் திணிப்பது சிங்கள அரசுதான். சர்வதேசம் முதலீடு செய்யும் போது அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து சமாதான முன்னெடுப்புக்களைச் செய்யும். ஏனெறால் முதலீடு செய்த பணம் இலாபத்தோடு கிடைப்பதற்கு சில வருடங்கள் செல்லும். பின்னர் இனவாதிகளைத் திருப்திப் படுத்தும் நடவடிக்கையில் இறங்குவார்கள். சர்வதேசமும் கண்களை மூடிக் கொள்ளும்.

இப்போதும் அப்படித்தான். சமாதானம் பேசி இன்னும் கொஞ்சக் காலம் இழுத்தடித்தால் கொடுத்த காசிற்கு நட்டம் ஏற்படாது.

ஆனால் இன்று விடுதலைப் புலிகள் சர்வதேச வலைப் பின்னலை நன்கு கற்றுத் தெளிந்து விட்டார்கள். மிகத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். அதனால் தானோ என்னவோ, சமீபத்தைய சந்திப்புகள் பற்றி அரசாங்கமோ, விடுதலைப் புலிகளோ, நோர்வேயோ எந்தக் கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.

.

நீர் குறிப்பிட்ட கருத்துகள் கவனத்தில்கொள்ளவேண்டியவை

Edited by SAMATHAANAM

எனது கருத்தை நான் எழுதுவதுபோல் உமது கருத்தை ( இருந்தால்...?) நீர் எழுதும். கொடிபிடிக்கிறது, பட்டம் ஏத்திறது இனியும் வேண்டாம்.

எம் இனத்திற்காக உயிர்த் தியாகங்கள் செய்து போராடுபவர்களுக்கு நான் கொடி பிடிப்பதை பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

புலிகளின் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது - புலனாய்வு பிரிவினர்

இதற்கு அமெரிக்கா உதவி செய்யவில்லைய

புலிகளின் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது - புலனாய்வு பிரிவினர்

இதற்கு அமெரிக்கா உதவி செய்யவில்லைய

உங்கள் கருத்து புரியவில்லை.

அமெரிக்கா உதவி செய்யவில்லையா என்று கேட்கிறீர்களா ?

அல்லது, உதவி செய்யவில்லை என்று உறுதியாகக் கூருகிறீர்களா ?

.அமெரிக்கா எதற்கு உதவப்போகிறது. ஏதாவது ஒருவழியைக் கண்டுபிடித்து

விடுதலைப்புலிகளுடன் மோதவிடுவது. பிறகு சிங்களப் படையினர் எவ்வாறு

தோற்றுப் போகிறார்கள் என்று பார்த்து மாற்று வழி காண்பது. இது

சிங்கள அரசுக்கு விளங்குவதில்லை. தங்களுக்கு உதவுகிறார்கள் என்று

நினைத்து அவர்களின் காலைச் சுற்றுகிறார்கள்

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு எப்படியாவது புலிகளை ஒடுக்கி அதன்மூலம் தமிழ்த் தேசிய எழுச்சியை அடக்கி, தமிழர்களைஅடிமையக வைத்திருக்கவே விரும்புகின்றது. இதற்காக சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுத்து, புலிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முயல்கின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான் புலிகளின் பலத்தைப் பற்றி கதைகளை அவிழ்த்துவிட்டு பிற நாடுகளை தங்கள் வலைக்குள் வீழ்த்த முயற்சிக்கின்றார்கள்.

புலிகளும் தமிழ்மக்களும் இவற்றையெல்லாம் தாங்கித் தொடர்ந்தும் பலத்துடன் தேசியத்தை எழுச்சிபெற வைக்கவேண்டும்.. இல்லாவிடில் தமிழர் இலங்கையில் அடிமை இனமாகத்தான் இருக்கும். அதைப்பற்றி அமெரிக்கனுக்கோ அல்லது வேறு எவருக்கோ அக்கறை இருக்காது.

சிங்கள அரசு எப்படியாவது புலிகளை ஒடுக்கி அதன்மூலம் தமிழ்த் தேசிய எழுச்சியை அடக்கி, தமிழர்களைஅடிமையக வைத்திருக்கவே விரும்புகின்றது. இதற்காக சர்வதேச நாடுகளை தம் பக்கம் இழுத்து, புலிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முயல்கின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான் புலிகளின் பலத்தைப் பற்றி கதைகளை அவிழ்த்துவிட்டு பிற நாடுகளை தங்கள் வலைக்குள் வீழ்த்த முயற்சிக்கின்றார்கள்.

புலிகளும் தமிழ்மக்களும் இவற்றையெல்லாம் தாங்கித் தொடர்ந்தும் பலத்துடன் தேசியத்தை எழுச்சிபெற வைக்கவேண்டும்.. இல்லாவிடில் தமிழர் இலங்கையில் அடிமை இனமாகத்தான் இருக்கும். அதைப்பற்றி அமெரிக்கனுக்கோ அல்லது வேறு எவருக்கோ அக்கறை இருக்காது.

''தேசியம் எழுச்சி பெறவைக்க வேண்டும்'' என தினம் மூன்றுவேளை நல்லா உண்டபின்னும் உண்ணுமுன்பும் நூற்றெட்டு தரம் மனனம் செய்தால் தேசியம் பீறிட்டு பாயும்.

  • கருத்துக்கள உறவுகள்

'

''தேசியம் எழுச்சி பெறவைக்க வேண்டும்'' என தினம் மூன்றுவேளை நல்லா உண்டபின்னும் உண்ணுமுன்பும் நூற்றெட்டு தரம் மனனம் செய்தால் தேசியம் பீறிட்டு பாயும்.

உமக்கு ஒண்டுக்குள்ளாலயும் பீறிட்டுப் பாயாது எண்டு நல்லா விளங்குது.. :D:(:D

நீரும் உம்மைப் போன்ற காயடிக்கப்பட்ட கூட்டமும் என்னதான் தலையால் நடந்தாலும், தேசிய எழுச்சியைக் குறைக்கேலாது, திசையை மாற்றவும் ஏலாது. அது எப்போதோ தன்னுடைய திசையைத் தீர்மானித்துவிட்டது.. :lol:

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

'

''தேசியம் எழுச்சி பெறவைக்க வேண்டும்'' என தினம் மூன்றுவேளை நல்லா உண்டபின்னும் உண்ணுமுன்பும் நூற்றெட்டு தரம் மனனம் செய்தால் தேசியம் பீறிட்டு பாயும்.

"சிங்கள அரசு தரமறுக்கின்ற தீர்வும், சமாதானத்தையும் தமிழருக்குத் தான் விருப்பமில்லாததால் தான் கிடைக்கவில்லை என்று தமிழர் தரப்பைத் திட்டி" நூற்றியெட்டுத் தடவை, எழுதினால் தானே உங்களுக்கு மூன்று வேளை உணவு! அப்படி எழுதினால் எதிரிகளிடம் இருந்து பணம் பீறிட்டுப் பாயும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை நான் எழுதுவதுபோல் உமது கருத்தை ( இருந்தால்...?) நீர் எழுதும். கொடிபிடிக்கிறது, பட்டம் ஏத்திறது இனியும் வேண்டாம்.

இனியும் வேண்டாம்????

இனியும் என்றால்...??? என்றிலிருந்து வாகரையை சிங்கள செம்மறி படைகள் ஆக்கிரமித்ததில் இருந்தா???? அல்லது வேறொரு நாளில் இருந்தா??

  • கருத்துக்கள உறவுகள்

quote name='SAMATHAANAM' date='Feb 3 2007, 09:40 AM' post='255784']

'

''தேசியம் எழுச்சி பெறவைக்க வேண்டும்'' என தினம் மூன்றுவேளை நல்லா உண்டபின்னும் உண்ணுமுன்பும் நூற்றெட்டு தரம் மனனம் செய்தால் தேசியம் பீறிட்டு பாயும்.

நண்பர்களே என்னுடைய கருத்து என்வெண்றால் இதை fisching என்று அழைப்பார்கள் தூண்டீல் போட்டுள்ளார்கள் மீன் சிக்குதாவெண்றுபார்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.