Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது நிலத்தை சசிகலா எப்படி அபகரித்தார் என்பதை கூறும் கங்கை அமரன்

Featured Replies

சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டேன் - கங்கை அமரன்

 

திருப்பூர் : சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

அதிமுக., பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் நேற்று முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. சசிகலாவிற்கு எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்ட்டதாக கூறியுள்ளார்.

 

பன்னீருக்கே ஆதரவு:

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா...?, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளி கொண்டு வர வேண்டும். பன்னீர் செல்வம் உண்மையான ஆம்பள. சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில் எதற்காக முதல்வராக வர வேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார். எம்எல்ஏ.,வின் ஆதரவு சசிகலாவிற்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீருக்கு தான் உள்ளது என்றார்.
தன்னுடைய சொத்துக்களை சசிகலா அபகரித்து விட்டதாக ஏற்கனவே பல பேட்டிகளில் கங்கை அமரன் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706960

  • தொடங்கியவர்

பன்னீர்செல்வத்தின் துணிச்சல்! சசிகலாவை விளாசும் கங்கைஅமரன்

Gangai_amaran_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B

''சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன்'' என, இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கங்கை அமரன், எங்களது சொத்துகளை சசிகலா மிரட்டி வாங்கினார் என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். பையனூர் பங்களாவை சசிகலா தம்மிடமிருந்து மிரட்டிப் பெற்றதாகவும், பயத்தின் காரணமாகவே நாங்கள் அந்த பங்களாவைக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சசிகலாவை யாரும் எதிர்க்கத் துணிவில்லாதபோது, பன்னீர்செல்வம் எதிர்த்திருக்கிறார் என்றும், அவரது துணிச்சலை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80139-o-paneerselvam-has-enough-guts--gangai-amaran-slams-sasikala.art

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்

'சசிகலா இப்படித்தான் மிரட்டுவார்...!' கங்கை அமரனின் அனுபவக் கதை

gangai_amaran_long_1_16109.jpg

''முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நிச்சயம் மிரட்டியிருப்பார்'' என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் நமக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு என்ன காரணம்?

 என்னுடைய கருத்து யாருக்கும் ஆதரவு கிடையாது. தமிழ்நாட்டின் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு மனக்குமுறலுடன் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரது மனநிலையை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. பேட்டியின் போது சசிகலா, மிரட்டியதாக தெரிவித்தார். நிச்சயம் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி.க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துக்களை மிரட்டி வாங்கி உள்ளது. 

உங்களை சசிகலா எப்படி மிரட்டினார்?

பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய வீட்டுக்குப் போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டி உள்ளனர். கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எங்களை மீறி செயல்பட்டால் அவ்வளவுதான் என்று சொல்லி உள்ளனர். இதனால் என்னுடைய மனைவி மிகவும் பயந்து விட்டார். ஸ்டுடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் சசிகலாவிடம் போனில் பேசினேன். அதற்கு அவர், அப்படியா... நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இதன்பிறகு அதுபோன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை. ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மப்டியில் கண்காணித்தனர். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணித்தனர். இவ்வாறு மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. பையனூர் பங்களாவை என்னிடமிருந்து பெறப்பட்ட போது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை. 

சசிகலாவை நீங்கள் எதிர்ப்பதற்கு இதுமட்டும்தான் காரணமா?

சசிகலா குடும்பத்தினர் பலரிடமிருந்து சொத்துக்களை வாங்கி குவித்து விட்டனர். இதன்பிறகும் அவர்கள் தங்களது செயல்பாட்டிலிருந்து மாறவில்லை. மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் பதவி ஆசையில் சசிகலா செயல்படுகிறார். ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவின் பதவியில் அமர ஆசைப்படலாமா. ஜெயலலிதாவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தி, கட்சியினரிடையும், மக்களிடையையும் ஆதரவை பெறாமல் முதல்வராக சசிகலா ஆசைப்படுகிறார். தமிழகத்தில் குடிநீர் பிரச்னை, வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் சசிகலா பதவியேற்பதிலேயே ஆர்வமாக இருக்கிறார். இதுபோல சசிகலாவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நான் மட்டுமல்ல... மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. 

நீங்கள் பா.ஜ.க.வில் இருந்து கொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா?

தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுக்கள் இருப்பினும் அதை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது ஒரு அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், தேச மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமை கொண்டு இருக்கிறேன். பா.ஜ.க.வில் இருப்பதில் பெருமைக் கொள்கிறேன்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80271-this-is-how-sasikala-used-to-threaten---gangai-amaran.art

  • தொடங்கியவர்

‘இதனால்தான் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்...!’ - கங்கை அமரன் #OPSVsSasikala

சசிகலா

முதல்வர் பதவிக்கான சண்டையில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்கு அ.தி.மு.க-வில் பதவிச் சண்டை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 5-ம் தேதி  அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளார் என்று தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பதில் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில், திடீரென்று யாருமே எதிர்பார்க்காதபோது ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் அங்கே சுமார் 40 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., ''சசிகலா நிர்பந்தித்த காரணத்தால்தான் நான், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்'' என்றார். அதற்குப் பின் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தமிழக அரசியல் களத்தை அதிரச் செய்தது. அவருடைய பேச்சை மறுத்து... அவ்வப்போது சசிகலா பதிலடி கொடுத்தும் வருகிறார். இப்படி இரு தரப்புக்கான மோதல் வெளிப்படையாக அதிகரித்துள்ள நிலையில், அடுத்து முதல்வராக அமரப்போவது போவது நீயா?... நானா? என்ற நிலை தமிழகத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது.

''என் குடும்பத்தாரை மிரட்டினர்!''  

இந்தச் சூழ்நிலையில் பாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சசிகலாவுக்கு எதிராகவும் அவர் பேசி வருகிறார். இதுகுறித்து கங்கை அமரனிடம் பேசியபோது, '' 'உங்களுடைய நிலம் முதல்வருக்குப் பிடித்துள்ளது. எனவே, அந்த நிலத்தை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்' என்று சசிகலா தரப்பினர் என்னிடம் கேட்டனர். அதற்கு நான், 'நிலத்தை விற்கும் அளவுக்கு எனக்கு எந்தப் பிரச்னையும் தற்போது இல்லை' என்று கூறினேன். சில நாட்கள் கடந்த நிலையில், 'ஜெயா டி.வி'-யில் சேரும்படி எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்போது எனக்கு அரசியல் சாயம் வேண்டாம். பணியிலும் சேருவதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தேன். இதனைத் தொடர்ந்து முதல்வரின் அலுவலகத்தில் இருந்து பேசியதாகச் சொன்னவர்கள், 'கங்கை அமரன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? பின்னி எடுத்துவோம்' என்று என் குடும்பத்தாரை மிரட்டினர். பின்னர், சசிகலாவை... நான் தொலைபேசியில் அழைத்து, 'முதல்வரின் அலுவலகத்தில் இருந்து இப்படி மிரட்டல் வந்துள்ளதே' என்று கேட்டேன். அதற்கு அவர், அதிர்ந்துபோனவராக... 'என்ன அண்ணா சொல்கிறீர்கள்' என்று கேட்டார். பிறகு, 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றார்.

கங்கை அமரன்

சில நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் நிலத்தைக் கொடுக்கச் சொல்லி சசிகலா தரப்பினர் அழுத்தம் கொடுத்தார்கள். எனது குடும்பத்தினர் பயந்தார்கள். 'பணியில் சேர முடியாது' என்று சொன்னதற்கே... இவர்கள் இப்படி மிரட்டுகிறார்கள்; 'நிலத்தைக் கொடுக்க முடியாது' என்று பிடிவாதம் பிடித்தால்.... ஆபத்து வரும் என்று கருதி நிலத்தைக் கொடுத்துவிட்டேன். என்ன செய்வது... நிலத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் அந்த அளவுக்கு சம்பாதித்து தற்போது உயர்ந்துள்ளேன். மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் துடிக்கவில்லை மாறாக பணத்தைச் சம்பாதிக்கவே ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் நிலையை தற்போது நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது. உறவுகளைச் சந்திக்கவிடாமல் அவரைத் தனிமைச்சிறையில் வைத்திருந்திருந்தார்கள் என்பது அவருடைய அண்ணன் மகள் தீபா சொல்லியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களின் நலனை யோசிப்பவராக இருந்திருந்தால்... ஜெயலலிதாவின் மறைவை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள்; அவர்களுடைய செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சி செய்திருப்பார்கள்; அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்துவருகிறார்கள்; தமிழக அரசியலை எண்ணி அயல் நாடுகளில் உள்ளவர்களும் சிரிக்கிறார்கள்.

பன்னீர்செல்வம்

''ஓ.பி.எஸ். செயல்பாடுகள் எனக்குப் பிடித்துள்ளன!'' 

'வர்தா' புயல், ஜல்லிக்கட்டு விவகாரம் போன்ற பிரச்னைகளில் ஓ.பி.எஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் எனக்குப் பிடித்துள்ளன. சசிகலா மீண்டும் பணம் சம்பாதிக்கத்தான் வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவருக்கு, மக்கள் செல்வாக்கு இல்லை. என்னையும் மிரட்டிக் கையெழுத்து வாங்கினார்கள். அதேபோன்று பன்னீர்செல்வத்தையும் மிரட்டித்தான் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அவரை ஒடுக்கிவைக்கப் பார்த்தார்கள். அவரும் பொறுமையாகத்தான் இருந்தார். எத்தனை நாள் பொறுமையாக இருப்பார். வெடித்துவிட்டார்'' என்றார்.

http://www.vikatan.com/news/coverstory/80343-this-is-why-i-am-supporting-o-panneerselvam-says-gangai-amaran-opsvssasikala.art

  • கருத்துக்கள உறவுகள்

தனது நிலத்தை சசிகலா எப்படி அபகரித்தார் என்பதை கூறும் கங்கை அமரன்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதாவின் பெயரால் சகலதும் சுபம். இனிமேல் தான் கலகம்..:grin:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க ரெடி 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

திறக்கலாம் , அப்போது  ஒரு  விலை பேசி விற்றிருப்பார் , இப்போது  இலவசமாக  திரும்ப பெற யோசிக்கிறார் ,

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

வடிவேலு ஞாபம் இருக்கா? அவரோட நிலைமைதான் இவருக்கும் கிடைச்சிருக்கும்.. இவர் பெரிய நட்சத்திரம் இல்லை என்றாலும் இருக்கிறதை எல்லாம் உருவி விட்டு ஓட விட்டிருப்பார்கள். :D:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

இவர் ஏன் செயலலிதா உயிரோடு இருக்கும்போது இதுபற்றி வாயே திறக்கவில்லை?

உண்டு இல்லை என்றாக்கி இருப்பார் அம்மா. அம்மா இல்லாத போது ஏதாவது திருப்பி கிடைக்கும் என முயற்சிக்கிறார். சசியும் லேசுப்பட்டவர் இல்லை. அவரின் திரிசங்கு நிலையில் கங்கை அமரன் மீன் பிடிக்க நினைக்கிறார். கங்கை கடலில் போட்ட காசாக இதனை நினைக்க வேண்டியது தான்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.