Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அண்ணை றைற்"

Featured Replies

தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது.

http://kanapraba.blogspot.com/2007/02/blog-post_15.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய நினைவுகள் மீண்டும் மலர்கின்றன.என் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் உங்கள் முயற்சி.....வாழ்த்துகளும் நன்றிகளூம்....மணியண்ணையின் பஸ் விட்ட புகையில அச்சு வேலிவாழைப்பழம் எல்லாம் அப்ப பழுத்திடும்........

  • தொடங்கியவர்

மிக்க நன்றி புத்தன் :lol:

அருமையான படைப்பு அண்னா நன்றிகள்

  • தொடங்கியவர்

வணக்கம் ஈழவன்

உங்களைப் போன்ற இளைய தலைமுறையிடம் இவர் படைப்பு சேர்ந்தது குறித்து எனக்கும் மிக்க மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருவர் அரட்டையடிக்கின்ற சமயத்தில் இடையிடையே, அண்ணை ரைட்" எண்டு சொல்லிக் கொள்வார். அப்போது அவர் சொல்கின்ற விதம் வேடிக்கையாக இருக்கும். இப்போது தான் புரிகின்றது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எவ்வளவு தூரம் கவர்ந்திருந்தது என்று.

இணைப்புக்கு நன்றி பிரபா! இவ்வாற பதிவுகளை வரவேற்கின்றோம்.

( இந்த ஒலிப்பதிவை தரவிறக்கம் செய்யலாமா? அதற்கு உதவி செய்வீர்களா? :D )

  • தொடங்கியவர்

வணக்கம் தூயவன்

கருத்துக்கு நன்றிகள், இதுபோன்ற ஒலிப்பதிவுகளைத் தொடர்ந்தும் தரவிருக்கின்றேன். mp3 இல் தரமுடியாமைக்குக் காரணம், அவர்கள் இதை சீ.டீ வடிவில் வெளியிட உத்தேசித்திருப்பதால் தான்.

கானாபிரபா.........

திறமைகள் எல்லாமே காலம் தாழ்த்திதான் உணரப்படுமாம்........

விதிவிலக்காய் -அவர்கள் - வாழும் காலத்திலேயே - கலைஞர்களை பாராட்டுகிறீர்கள்!

என்ன சொல்ல ? -நன்றியுடையோம்!

தளம்பலில்லாத கொள்கையோடு - உங்க பயணம் .... சுவை!

அதைவிட சுவை நீங்க எழுதும் விதம்!! :rolleyes:

  • தொடங்கியவர்

வணக்கம் வர்ணன்

உங்களைப்போன்ற நண்பர்களின் கருத்துக்களால், இதுபோன்ற முயற்சிகளில் நான் தொடர்ந்தும் ஈடுபட உற்சாகமூட்டுக்கின்றது, மிக்க நன்றிகள்.

சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் என்ற இருபெரும் முதலைகளின் வாயில் அகப்பட்டுக் கிடப்பதனால் நம்மில் பலருக்கும் மறந்து போன தரமான எம்மீழக் கலைஞர்களின் விபரங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் கானா பிராபா அண்ணாவிற்கு நன்றிகள்.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் மணிவாசகன்

80 இல் வந்த நகைச்சுவையில்

கியர்ப் பெட்டியை மறைக்கிறது ஆச்சி வைத்திருக்கும் கடகம்

ட்றைவர்: ஆச்சி கடகத்தை அங்காலை எடணை , கியர் போடப்போறன்

ஆச்சி: அதை உந்தக் கடகத்துக்குள்ள போடு மேனை

  • கருத்துக்கள உறவுகள்

கியர்ப் பெட்டியை மறைக்கிறது ஆச்சி வைத்திருக்கும் கடகம்

ட்றைவர்: ஆச்சி கடகத்தை அங்காலை எடணை , கியர் போடப்போறன்

ஆச்சி: அதை உந்தக் கடகத்துக்குள்ள போடு மேனை

இப்போது வருகின்ற நகைச்சுவைகள், இவற்றை அடியேற்றியே வருகின்றது போலிருக்கின்றதே!

விரைவில் ஏனைய பதிப்புக்களையும் இணையுங்களேன். கேட்க ஆர்வமாக இருக்கின்றது.

அன்புள்ள கானா பிரபா

அருமை அருமை...:D உங்களுடைய முயற்சியில் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணன் அவர்களின்

அண்ணை சரி" தனிநடிப்பு ஒலிவடிவின் எழுத்துப் பதிவை வாசித்தேன்.

நான் பலமுறை தட்டிவானில் யாழ்ப்பாணம் போகும் போது நடந்த நிகழ்வுகள் கண் முன்விரிந்தன.

இந்த இடங்கள் இன்றும்கூட பசுமையாய் என் கண்முன் சிறகு விரித்துப் பறந்து கொண்டிருக்கிறது.

ஆனால் என்ன இப்போ அங்கே சிங்கள இராணவ ஆடுகள் எங்கள் ஊர்களை மேய்ந்துகொண்டிருப்பது கவலையளிக்கிறது.

"காலம் ஒருநாள் மாறாது போகுமா

நம் கண்ணீர் ஒர் நாள் ஆனந்தக்கடலாக மாறுமா.."

அதுவரையில் இப்படியான எங்கள் கலைஞர்களின் படைப்புக்களை தேடி எடுத்து உங்கள் பாணியிலே பதிவு செய்துகொண்டே இருங்கள். உங்கள் பணி தொடரட்டும். உங்களோடு சில பதிவுகள் தொடர்பாக கதைக்கவேண்டும்...உங்கள் மின்னஞ்சல் தரவும்..

அன்புடன்

தமிழ்வானம்

  • தொடங்கியவர்

தூயவன்

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. இன்னும் பல அன்றைய காலகட்டத்து நாடகங்கள் ஒலிவடிவில் என்னிடம் உள்ளன. ஆனால் வெறுமனே அவற்றை ஒலியாகப் போடாது அவற்றின் சிறப்பு, மற்றும் எழுத்து வடிவம் ஆக்குதல் போன்ற முயற்சிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுகின்றது. இன்னும் 2 வாரங்களுக்குள் அடுத்த பதிவு வரும்.

வணக்கம் தமிழ்வானம்

எங்களைப் போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஈழத்தவருக்கு இவை தானே அருமருந்து இல்லையா? உங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். நீங்கள் என்னுடைய யாழ் கள மின்னனஞ்சலுக்கும் மடல் போடலாம். உங்களுக்கு ஒரு மடல் போடுகின்றேன்.

ஊர் ஞாபகம் வந்திச்சு கேட்க..அதுவும் நாங்க அடிக்கடி போய் வாற இடங்கள்...இன்னும் கேட்க ஆசையா இருந்திச்சு.

நன்றாக நடித்திருக்கிறார் நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன்.

நன்றி கானா பிரபா அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் மீண்டும் மலர்கின்றன.என் நன்றிகளுடன் வாழ்த்துக்கள்.

நான் இவரின் குரல் கேட்க எங்கயோ கேட்டது போல இருந்திச்சு. அம்மாவிட கேட்ட போது இவர் தாம் ரிரின் இல் வைத்திலிங்கம் ஷோ நிகழ்ச்சி நடத்துவர எண்டு அறிந்தேன். இடைக்கிட பார்த்திருக்கேன். ஆனால் பெயரை கவனித்ததில்லை. அவரோட நிகழ்ச்சு ரொம்ப நல்லா இருக்கும்.

  • தொடங்கியவர்

ப்ரியசகி மற்றும் கறுப்பி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் மிக அவதானமாக சாதிய பிரச்சினைகளை பட்டும்படாமலே எப்போதும் கையாண்டுள்ளார் என்பதை இன்றும் அவரது நிகழ்சிகளை பார்க்கும் எவருக்கும் புரியக்கூடிய விசயம்.

சாதிக்கு பேர் போன கரவெட்டி அவரது பிறபிடம் என்பதும் குறிபிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலச்சந்திரன் மிக அவதானமாக சாதிய பிரச்சினைகளை பட்டும்படாமலே எப்போதும் கையாண்டுள்ளார் என்பதை இன்றும் அவரது நிகழ்சிகளை பார்க்கும் எவருக்கும் புரியக்கூடிய விசயம்.

சாதிக்கு பேர் போன கரவெட்டி அவரது பிறபிடம் என்பதும் குறிபிடத்தக்கது.

அப்ப அந்த அருமை பெருமையளை எடுத்து கொஞ்சம் சொல்லுங்கோவன். :huh:

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

அய்யா விசால் மானிப்பாய் இந்து கல்லூரியில் விழையாட்டு இல்லங்களிடையேயான நாடக போட்டிகள் நடை பெறுவது வழைமை அப்படி நான் வேறு பாடசாலைகளில் பார்த்தது கிடையாது ஆனால் நடந்திருக்கலாம் அன்றைய காலகட்டத்தில் எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் சொல்வது போல இரட்டை அர்த்த வசனம் ஆபாசமாக நாடகங்கள் அங்கு நடாத்த முடியாது அதற்காக பாடசாலை நிருவாகம் அனுமதிப்பதும் இல்லை காரணம் அங்கு மேடையேற போகும் நாடகங்களை முதலிலேயே ஒரு ஆசிரியர் குழு பார்வையிட்ட பின்னர்தான் அவை மேடையேறும். நானும் அந்த பாடசாலையின் பழைய மாணவன் என்கிற முறையிலும் சில நாகங்களை எழுதி நடித்தவன் என்கிற முறையிலும் சொல்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

பாலசந்திரனின் படைப்பில் டபிள்மீனீங்??????????? :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.