Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"அண்ணை றைற்"

Featured Replies

வணக்கம் சாத்திரியார்

உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு நினைவுமீட்டலுக்காகவே குறிப்பிட்டேன். வேறுநோக்கம் இல்லை. அதில் ஒரு காட்சி இப்படி இருந்தது. பஸ்ஸில் ஆட்டை ஏற்றுவதை பற்றி. அதைவைத்து தொடரும் சம்பாசணை டபிள்மணிங்கில இருக்கும். அதனை முழுமையாக குறிப்பது பொருத்தமில்லை. யாராவது தமது பாடசாலை பற்றி ஏதாவது கதைத்தால் கோபம் வருவது வழமையே. ஆனால் தவறான தகவலை எழுதிவிட்டேன் என மற்றவர்கள் கருதகூடாது என்பதால் மீள அதனை குறிப்பிட்டேன்.

பாலசந்திரனின் படைப்பில் டபிள்மீனீங்??????????? :o

எதையோ நினைத்து எழுத அர்த்தம் மாறிவிட்டது. அதேபாணியிலான நாடகத்தை பார்த்திருந்தேன். ஆனால் அதில் டபிள்மீனிங் கொண்ட பல காட்சிகள் செய்யப்பட்டு இருந்தன என்பதே சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரியார்

உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு நினைவுமீட்டலுக்காகவே குறிப்பிட்டேன். வேறுநோக்கம் இல்லை. அதில் ஒரு காட்சி இப்படி இருந்தது. பஸ்ஸில் ஆட்டை ஏற்றுவதை பற்றி. அதைவைத்து தொடரும் சம்பாசணை டபிள்மணிங்கில இருக்கும். அதனை முழுமையாக குறிப்பது பொருத்தமில்லை. யாராவது தமது பாடசாலை பற்றி ஏதாவது கதைத்தால் கோபம் வருவது வழமையே. ஆனால் தவறான தகவலை எழுதிவிட்டேன் என மற்றவர்கள் கருதகூடாது என்பதால் மீள அதனை குறிப்பிட்டேன்.

எதையோ நினைத்து எழுத அர்த்தம் மாறிவிட்டது. அதேபாணியிலான நாடகத்தை பார்த்திருந்தேன். ஆனால் அதில் டபிள்மீனிங் கொண்ட பல காட்சிகள் செய்யப்பட்டு இருந்தன என்பதே சரியானது.

விசால் மன்னிக்கவும் மானிப்பாய் இந்து கல்லூரி நானும் கொஞ்ச காலம் ஒதுங்கின பாடசாலை என்பதால் உடனே கொஞ்சம் ரென்சனாயிட்டன் ஆனால் முன்பு நாடங்கள் எழுதி முடிந்தவுடன் ஆசிரியர்கள் அதை வாங்கி படித்து இரட்டை அர்த்த வசனங்கள் அரசியல் வசனங்கள் மற்றும் யாரையாவது புண்படும்படியான வசனங்கள் இருந்தால் அவற்றை நீக்கியபின்னரே அதை நடித்துபழக அனுமதிப்பார்கள் பின்னர் கால போக்கில் அந்த நடைமுறைகள் இல்லாது போய் நீங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கலாம்.

சாதிக்கு பேர் போன கரவெட்டி அவரது பிறபிடம் என்பதும் குறிபிடத்தக்கது.

நானும் கேள்விப்பட்டேன் கோழிப்புக்கை கரவெட்டியில் பிரபலம் என்று.. ஆனால் இதை கேள்விப்படல.. :rolleyes::D

கரவெட்டி வாழ் உறவுகள் யாழில் இருக்கிறார்கள்..!!

ஏன் இதை வாசிக்கவில்லையா? :lol: .......இல்லை

வாசித்து உண்மை என்று ஒத்துக்கொள்கிறார்களா? :o .......இல்லை

நமக்கென்ன என்று இருக்கிறார்களா?? :angry:

Edited by ப்ரியசகி

  • கருத்துக்கள உறவுகள்

'' தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் "

ஏன் எல்லா விடயத்திலையும் சாதியைக்கொண்டு போய் நுளைக்கிறீங்க???????????????????????????

உங்களுக்கு விவாதிக்க வேறு விடயங்களே கிடைக்கவில்லையா?

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'' தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் "

ஏன் எல்லா விடயத்திலையும் சாதியைக்கொண்டு போய் நுளைக்கிறீங்க???????????????????????????

உங்களுக்கு விவாதிக்க வேறு விடயங்களே கிடைக்கவில்லையா?

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

கலைஞன் என்றவன் தான் வாழும் காலத்தில் தனது சமூகத்தில் உள்ள சிறுமையை கண்டும் காணாமல் போவது சரியா என்பதுதான் எனது கேள்வி?

60களின் பிற்பகுதியில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக கூத்து பாணியில் அமைந்த 'கந்தன் கருணை' நாடகம் போடப்பட்ட போது அதெற்கெதிராக கல்லெறிந்து நாடகத்தை போடவிடாது குழப்பிய கீர்த்தி மிக்க ஊர் கரவெட்டி.

இன்னும் நிறைய சொல்லலாம்.....................................................

...........................................

கலைஞன் என்றவன் தான் வாழும் காலத்தில் தனது சமூகத்தில் உள்ள சிறுமையை கண்டும் காணாமல் போவது சரியா என்பதுதான் எனது கேள்வி?

60களின் பிற்பகுதியில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக கூத்து பாணியில் அமைந்த 'கந்தன் கருணை' நாடகம் போடப்பட்ட போது அதெற்கெதிராக கல்லெறிந்து நாடகத்தை போடவிடாது குழப்பிய கீர்த்தி மிக்க ஊர் கரவெட்டி.

இன்னும் நிறைய சொல்லலாம்.....................................................

...........................................

நீங்க ஏதோ முடிவோடதான் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். 60 களில் நடந்ததை 200 களில ஒப்பிடக்கூடாது. இப்போது அப்படி குறிப்பாக கரவெட்டியில் (நீங்கள் அந்த இடத்தை குறிப்பாக சொன்னபடியால்) குழப்பம் செய்வார்களா? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. மாற்றங்கள் படிப்படியாக சமுதாயத்தை முன்னேற்றித்தான் இருக்கிறது. பழசை கிளறாதைங்கோ........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க ஏதோ முடிவோடதான் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். 60 களில் நடந்ததை 200 களில ஒப்பிடக்கூடாது. இப்போது அப்படி குறிப்பாக கரவெட்டியில் (நீங்கள் அந்த இடத்தை குறிப்பாக சொன்னபடியால்) குழப்பம் செய்வார்களா? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. மாற்றங்கள் படிப்படியாக சமுதாயத்தை முன்னேற்றித்தான் இருக்கிறது. பழசை கிளறாதைங்கோ........

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

என்னதான் சொன்னாலும் சாதியத்தின் தீவிரம் குறைந்துவருவதை காணவில்லையா? அதற்கு விடுதலைப் போராட்டமும் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் குறிப்பிடத்தக்க காரணிகள். நீங்கள் சொல்வதை போன்று ஒன்றுமே இல்லாமலல் நாடுவிட்டு போனவர்களில் கூட சாதியம் பார்க்கும் தன்மை இருக்கலாம். சாதி கதைத்து சண்டையிட்டு இரத்தம் சிந்திய காலம்போய் டைனிங்ரேபிளில் மட்டுமே கதைக்கும் விசயமாக போயிட்டுது. எவ்வளவோ மாறியிட்டம். மீதியும் படிப்படியாக மாறும்.

Edited by vishal

எனக்கென்னவோ இப்படி அந்த கலைஞரை பற்றி கதைக்கையில், சாதியை இடையில் கொண்டு வந்தது சரியாக படல..:lol:

Edited by ப்ரியசகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

உங்களைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டிருக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்களைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டிருக்க
  • கருத்துக்கள உறவுகள்

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

எங்கே போராடுகின்றீர்கள்? மக்களை மனரீதியாகத் தாழ்த்துகின்ற வேலையைத் தானே செய்கின்றீர்கள். வேண்டுமானால் எதிர்காலத்தில் ஜாதித்தலைவர் பட்டம் கிடைக்க சிலவேளைகளில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். அல்லது குறித்த ஜாதியின் முன்னோடி என்ற பெருமை கூடக் கிடைக்கலாம்.

ஆனால் அதற்கு நீங்கள் நிறையவே கஸ்டப்பட வேண்டியிருக்கும். மற்றய ஜாதி என்று குத்தல்கள், மற்றவர்கள் பெறுகின்ற எல்லா விடயங்களுக்கும், ஜாதி முத்திரை குத்துதல் என்று நிறையவே!

ஆனால் மக்கள் தெளிவோடு இருப்பதால் உங்கள் பாடு மிகமிகக் கஸ்டம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

ஆமாம் நீங்கள் தொடருங்கள் அதுவும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.ஆனால் நான் உங்களிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் எல்லாப்பகுதிகளுக்குள்ளும் இந்த கேவலங்கெட்ட சாதிப்பிரச்சனையை புகுத்தாதீர்கள்.பின்னர் உங்களுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மதிப்பில்லாமல் போய்விடும்.எந்த தலைப்பின் கீழ் என்றொரு விவஷ்தையில்லாமல் எல்லா இடத்திலும் சாதியை தூக்கிப்பிடிக்கின்றீர்களே.உ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

தம்பி மானிப்பாய் இந்துகல்லூரியில எப்ப படித்தனீர்????????72 முதல் 80 வரை நானும் அங்கே தான் ஒதுங்கினான்......

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

போராடுங்கள் நல்ல விடயம் அதை தான் நானும் சொல்கிறேன் இங்கு வந்து எல்லா பகுதிகளிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சாதியை இழுக்காமல் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யுங்கள் இதுவரை நீங்கள் சாதிக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் எங்கெல்லாம் நடாத்தியிருக்கிறீர்கள் என்பதைனையும் விளக்குங்கள் நிங்கள் தாயகத்தின் எந்த ஊரை சேர்ந்தவர் என்னென்ன போராட்டங்களை அங்கு செய்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்

தம்பி மானிப்பாய் இந்துகல்லூரியில எப்ப படித்தனீர்????????72 முதல் 80 வரை நானும் அங்கே தான் ஒதுங்கினான்......

நாடகம் பார்க்கிறதுக்குத்தான் ஒதுங்கினனான். 1994 ஆக இருக்கவேண்டும். அது ஒரு கனாக்காலம்.:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.