Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனமிருந்தால்???

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று  தாயகத்திலிருந்து (மட்டக்கிளப்பு) வைபரில் ஒரு படம் வந்தது

படத்தில்  ஒரு தாய் ஒரு மகள்

இவர் யெயந்தன் படையணியின் தளபதிகளில் ஒருவரின் மனைவி  மற்றும் பிள்ளை அண்ணை  என்று எழுதியிருந்தது

தொலைபேசி  எடுத்தேன்

அந்த பிள்ளைக்கு பாடசாலைக்கு போக ஒரு சைக்கிள் கேட்கினமண்ணை என்றார்

சரி சைக்கிள் என்னவிலை? என்பதற்கு

12 500 ரூபாக்கள் என்றார்

உங்களிடம் 12 500 ரூபா  இருந்தால் வாங்கிக்கொடுக்கமுடியுமா 

இந்த மாசம்   ஏலாது

வாற மாசம் அனுப்புகின்றேன் என்றேன்

சரியண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு தொடர்பு கொள்கின்றேன் என்றார்

என்னை அவர்களுடன்  கதைக்கும்படி தொலைபேசி  இலக்கம் அனுப்பியிருந்தார்

அவர்களுக்கான தேவையை  பூர்த்தி  செய்கின்றேன்  

 நான்  தொலைபேசியில்  கதைக்க வேண்டிய அவசியமில்லை என மறுத்துவிட்டேன்.

இப்போ எனது கேள்வி  இதில காசு எவரிடமிருக்கு???

மனசு????

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் செய்தி உண்மையா?பொய்யா?என்பதை உறுதிப்படுத்துங்கள்.

அடுத்து ஒவ்வொரு தேவைக்கும் உங்களையோ யாரையுமோ காத்துக் கொண்டிருக்காமல் சுயமாக உழைக்க கற்றுக் கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உறுதிப்படுத்துங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் செய்தி உண்மையா?பொய்யா?என்பதை உறுதிப்படுத்துங்கள்.

அடுத்து ஒவ்வொரு தேவைக்கும் உங்களையோ யாரையுமோ காத்துக் கொண்டிருக்காமல் சுயமாக உழைக்க கற்றுக் கொடுங்கள்.

 

19 hours ago, MEERA said:

விசுகு உறுதிப்படுத்துங்கள்

உதவி  கேட்டவர் நல்லவர் தான்

தெரிந்தவர் தான்

ஆனால் எனது மனதுக்கு உறுத்தியது

அவரது பொக்கற்றுக்குள் காசு இருக்கு...

அவரும் வேலை செய்பவர் தான்  சம்பளம்பெறுபவர் தான்..

ஆனால் புலத்திலிருந்து  தான் இவ்வாறான உதவிகள் வரணும் என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறதே..

Edited by விசுகு

1 hour ago, விசுகு said:

ஆனால் புலத்திலிருந்து  தான் இவ்வாறான உதவிகள் வரணும் என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறதே..

புலம் பெயந்தவர்கள் கட்டாயமாக உதவி செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் - இது இவர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

புலம் பெயந்தவர்கள் கட்டாயமாக உதவி செய்யவேண்டும் என்ற நிர்பந்தம் - இது இவர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல முன்னுதாரணமா ஜீவன் சிவா??

இன்று தாயகத்தில் நடக்கும் பல சீரளிவுகளுக்கு இது தானே காரணம் என சொல்லப்படுகிறது?

இதை எவ்வாறு தடுத்த நிறுத்தப்போகின்றோம்??

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் பிறியாக இருந்து கொண்டு மற்றவர்களிடம் சாட்டி விட்டு தப்பிக் கொள்வோர் தான் அதிகம்..ஆனால் நானும் திருந்திறபாட்டைக் காணம்.வெளி நாட்டிலிருந்து பணம் வந்தால் போதும் அடுத்த கேள்வி கேட்க ௬டாது என்ற மாதிரித் தான் உதவி கேட்டு நிற்போரின் மனோ நிலை.

ஆனாலும் உண்மையாக உதவி தேவையானோர் பலர் - அவர்களுக்கு இந்த உதவிகள் போய் சேரனும் + சேர்ந்தே ஆகணும்.
தரம் பிரிப்பது ரொம்ப கஷ்டம் - பிரித்தே ஆகவேண்டியது கட்டாயம்.

இது எனது அனுபவப் பகிர்வு + மனத்தாங்கல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

ஆனாலும் உண்மையாக உதவி தேவையானோர் பலர் - அவர்களுக்கு இந்த உதவிகள் போய் சேரனும் + சேர்ந்தே ஆகணும்.
தரம் பிரிப்பது ரொம்ப கஷ்டம் - பிரித்தே ஆகவேண்டியது கட்டாயம்.

இது எனது அனுபவப் பகிர்வு + மனத்தாங்கல் 

உண்மைதான் ஜீவன் சிவா

இரண்டு மூன்று தரம் வாங்கிக்கட்டினாலும்

கேட்கும் போது இல்லை என்று சொல்வதில்லை..

காரணம் நீங்க  சொல்வது தான்

சொல்வார்களே

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்

ஒரு சுற்றவாளி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்று

யாயினிக்கு விருப்பு வாக்கு போட்டது

அவரும் பல உதவிகளை  தொடர்ந்து செய்பவர்.

அவரது அனுபவங்களும் எமக்குத்தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, யாயினி said:

தாங்கள் பிறியாக இருந்து கொண்டு மற்றவர்களிடம் சாட்டி விட்டு தப்பிக் கொள்வோர் தான் அதிகம்..ஆனால் நானும் திருந்திறபாட்டைக் காணம்.வெளி நாட்டிலிருந்து பணம் வந்தால் போதும் அடுத்த கேள்வி கேட்க ௬டாது என்ற மாதிரித் தான் உதவி கேட்டு நிற்போரின் மனோ நிலை.

யாயினி தேவையில்லாத போது கொடுக்கும் பணம் அவர்களை அழிவிற்கே கொண்டு போகிறது.

பணத்தைக் திரும்ப திரும்ப கொடுத்துக் கொண்டிருக்காமல் ஏதாவது தொழிலை இயலுமானவரை nhதடங்க முயலுங்கள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த  உதவி  செய்யப்பட்டு

நான்  எவ்வளவோ மறுத்தபோதும்

அந்த பிள்ளையுடனும் தாயுடனும் தொலைபேசியில் கதைக்க வைத்து

படங்களும்  வந்திருந்தன

அதை  இங்கே இணைக்கின்றேன்

நன்றாக படிப்பதாக சொன்னார்

படிப்பதற்கு உதவிகள் தேவைப்படும் போது 

சைக்கிள்  வாங்கிக்கொடுத்தவருடன் தொடர்பு கொள்ளுங்கள்  என சொல்லியுள்ளேன்

தாய் வீதியோரமாக மரவள்ளி  பொரித்து விற்கும்  தொழிலை வீட்டுடன் இருந்து செய்து வருவதாக சொன்னார்

கொஞ்சம் உதவினால் மகளின் படிப்பை அவரே பார்த்துக்கொள்வார்

 பார்க்கலாம் 

image.jpg

 

 image.jpg

Edited by விசுகு

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் விசுகு....! உதவிகள் சரியான நபருக்கு சரியான சமயத்தில் சேரும்பொழுது மனசு நிம்மதி அடைகின்றது....!

  • 3 months later...
On 6/23/2017 at 8:22 PM, விசுகு said:

இந்த  உதவி  செய்யப்பட்டு

நான்  எவ்வளவோ மறுத்தபோதும்

அந்த பிள்ளையுடனும் தாயுடனும் தொலைபேசியில் கதைக்க வைத்து

படங்களும்  வந்திருந்தன

அதை  இங்கே இணைக்கின்றேன்

நன்றாக படிப்பதாக சொன்னார்

படிப்பதற்கு உதவிகள் தேவைப்படும் போது 

சைக்கிள்  வாங்கிக்கொடுத்தவருடன் தொடர்பு கொள்ளுங்கள்  என சொல்லியுள்ளேன்

தாய் வீதியோரமாக மரவள்ளி  பொரித்து விற்கும்  தொழிலை வீட்டுடன் இருந்து செய்து வருவதாக சொன்னார்

கொஞ்சம் உதவினால் மகளின் படிப்பை அவரே பார்த்துக்கொள்வார்

 பார்க்கலாம் 

 

விசுகு உங்கள் உதவிகளுக்கும் , உயர்ந்த சேவை மனப்பாண்மைக்கும் நன்றிகள் பல..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.