Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மக்களின் காணியை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது! சம்பந்தன்

Featured Replies

எங்கள் மக்களின் காணியை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது! சம்பந்தன் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:-

 

sambanthar.jpg

போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளும் தற்போது இல்லை. இந்த நிலையில் எங்கள் மக்களுடைய காணிகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என்று எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காணிப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, படைத்தளபதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்கள் காணிகளுக்காக போராடி வருகிறார்கள் என்றும் இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த பின்னரும் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மக்களின் காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் இராணுவத் தளபதியிடமும் வலியுறுத்தியதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை இக் கருத்துக்களுக்கு பதில் அளித்த இராணுவத் தளபதி மக்களின் காணிகளை இராணுவத்தினர் வைத்திருக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்றும் சிவில் அதிகாரத்தின் பிரகாரமே காணிகள் இராணுவத்தின் வசம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை வடக்கில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் கேப்பாபுலவில் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

https://globaltamilnews.net/archives/24309

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவரைபின் சுட்டுதலின்படி காணிகளை விடவேண்டிய காலஅவகாசத்திற்குள் இலங்கையரசு வந்துள்ளது. ஆனால் இலங்கையரசு செய்யாது. ஆனால் சம்பந்தர் சிங்களத்துக்குக் கிடைத்த ஒரு ஊன்றுகோல். அதனைச் சரியாகப் பயன்படுத்துகிறது. தமிழினம் தலைவிதியை யார்மாற்றுவது?

  • தொடங்கியவர்

காணிகள் விடுவிப்பு: தமிழ் தேசிய கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சகம் இடையே முக்கிய முடிவு

  •  
 

மன்னார், முல்லைத்தீவு, யாழ்பபாணம் ஆகிய வடபகுதி மாவட்டங்களில் ராணுவம் நிலைகொண்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையிலான கூட்டங்களில் பேச்சுக்கள் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்த்த்தேசிய கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சகம் இடையே பேச்சுவார்த்தை Image captionதமிழ் தேசிய கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சகம் இடையே பேச்சுவார்த்தை

தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ராணுவ தளபதி உள்ளிட்ட ராணுவத்தின் முக்கிய தளபதிகளுக்கும் இடையில் இன்று திங்களன்று கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மன்னார் மாவட்டம் முள்ளிக்குளத்தில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு கிராமத்தில் படையினர் நிலைகொண்டுள்ள காணிகள், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இன்னும் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலேயே இந்த உயர் மட்டச் சந்திப்பின்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ராணுவத்தினர் வசமுள்ள கேப்பாப்பிலவு காணிகளையும் விடுவிக்க கோரிக்கை

இந்தச் சந்திப்புக்கு முன்னோடியாக, இரு தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து வடக்கில் தமது காணிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் எனக்கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருவது குறித்து எடுத்துரைத்து, அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

அப்போது பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஏற்கனவே தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள போதிலும், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் தான் விடுத்திருந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை என்றும் இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி தம்மிடம் கவலை வெளியிட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மேற்கோள்காட்டி, ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு - பாதுகாப்பு அமைச்சகம் இடையே பேச்சுவார்த்தை

எனினும் பாதுகாப்புத் தரப்பினருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பேச்சுக்கள் நடத்துவதனால், பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு படைத்தரப்பினருக்குத் தெரிவிப்பதாக ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது உறுதியளித்திருந்ததாகவும் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியுடனான அந்தச் சந்திப்பின் பின்னரே, திங்களன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தது என்ன? இரா. சம்பந்தன் பேட்டி

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டம் 19- ஆம் தேதியும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் தலைமையிலான கூட்டங்கள் 20-ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளையடுத்து, மீண்டும் கொழும்பில் கூட்டமைப்புக்கும் அரச தரப்புக்கும் இடையில் அடுத்த கட்ட பேச்சுக்கள் நடைபெறம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி அந்த ஊர் மக்கள் 47 நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். மன்னார் முள்ளிக்குளம் மக்கள் கடந்த 25 நாட்களாகத் தமது காணிகளை விடுவிப்பதற்காகப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/sri-lanka-39620709?ocid=socialflow_facebook

20 minutes ago, nochchi said:

ஐநாவரைபின் சுட்டுதலின்படி காணிகளை விடவேண்டிய காலஅவகாசத்திற்குள் இலங்கையரசு வந்துள்ளது. ஆனால் இலங்கையரசு செய்யாது. ஆனால் சம்பந்தர் சிங்களத்துக்குக் கிடைத்த ஒரு ஊன்றுகோல். அதனைச் சரியாகப் பயன்படுத்துகிறது. தமிழினம் தலைவிதியை யார்மாற்றுவது?

 

2 minutes ago, நவீனன் said:

தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதி பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், ராணுவ தளபதி உள்ளிட்ட ராணுவத்தின் முக்கிய தளபதிகளுக்கும் இடையில் இன்று திங்களன்று கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

சில வாரங்களின் முன்னர் யாழ் மாவட்ட தளபதி மாற்றப்பட்டதும் + அவரது பேச்சும் ஓரளவு நம்பிக்கை தருவதாக உள்ளது 

நம்பிக்கையை தவிர வேறுவழி இப்போதைக்கு இல்லை என்றே நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
காணி விடுவிப்பு திகதியை உடனே முடிவெடுங்கள் - முப்படைத் தளபதிகளுடனான சந்திப்பில் நேற்று விடாப்பிடியாக நின்றுகொண்ட சம்பந்தன்
 
 
காணி விடுவிப்பு திகதியை உடனே முடிவெடுங்கள் - முப்படைத் தளபதிகளுடனான சந்திப்பில் நேற்று விடாப்பிடியாக நின்றுகொண்ட சம்பந்தன்
காணி­கள் விடு­விக்­கப் ப­டும் திக­தி­களை இப்­போதே - உட­னேயே கூறுங்­கள். தனி­யார் காணி­களை நீங்­கள் எப்­படி வைத்­தி­ருக்க முடி­யும்?. இவ்­வாறு கார­சா­ர­மா­கக் -­க­டு­மை­யான வார்த்­தை­க­ளால் முப்­ப­டைத் தள­ப­தி­க­ளை­யும், பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ரை­யும் துளைத்­தெ­டுத்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் .
 
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­கும், பாது­காப்­புத் தரப்­பி­ன­ருக்­கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல் பாது­காப்பு அமைச்­சில் நேற்­றுக் காலை நடை­பெற்­றது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்­தச் சந்­திப்பு நீடித்­தி­ருந்­தது. 
 
சந்­திப்­பின் ஆரம்­பத்­தி­லி­ருந்தே, எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், கடும் தொனி­யில் - இறுக்­க­மா­கவே முப்­ப­டைத் தள­ப­தி­க­ளு­ட­னும், பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ரு­ட­னும் பேச்சு நடத்­தி­னார். 
 
தனி­யார் காணி­களை எப்­படி நீங்­கள் வைத்­தி­ருக்­க­லாம்? காணி­களை இழந்த மக்­கள் கஷ்டப்­ப­டு­கின்­றார்­கள். நடு வீதி­யில் நிற்­கின்­றார்­கள். அவர்­க­ளது காணி­க­ளைப் பிடித்து வைத்­துள்ள நீங்­கள், அதில் விவ­சா­யம் செய்­கின்­றீர்­கள். தொழிற்­சா­லை­கள் நடத்­து­கின்­றீர்­கள். காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் திக­தி­களை இப்­போதே எனக்­குச் சொல்ல வேண்­டும். அதனை உட­னேயே கூறுங்­கள் என்று கேட்­டுக் கொண்­டார்.
 
இதற்­குப் பதி­ல­ளித்த முப்­ப­டைத் தள­ப­தி­கள், நாங்­கள் யாரு­டைய காணி­யை­யும் பலத்­கா­ர­மாக வைத்­தி­ருக்­க­மு­டி­யாது. சிவில் அதி­கா­ரி­கள்­தான் முடி­வெ­டுக்­க­வேண்­டும். அரச தலை­வரோ, பாது­காப்பு அமைச்­சின் செய­லரே, எங்­களை அந்­தக் காணி­க­ளி­லி­ருந்து வேறு காணிக்­குப் போகச் சொன்­னால் போவோம். நாம் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் முகாம்­கள் இருந்த காணி­க­ளையே பிடித்து வைத்­துள்­ளோம் என்று குறிப்­பிட்­டுள்­ள­னர்.
 
இதற்கு இரா.சம்­பந்­தன், நாம் மக்­க­ளின் காணி­க­ளைத்­தான் கேட்­கின்­றோம் என்று இறுக்­க­மான பதிலை உடனே குறிப்­பிட்­டுள்­ளார். அத்­து­டன் பலாலி விமான நிலைய விரி­வாக்­கம் எனில், அத­னு­டன் தொடர்­பு­டைய நிலங்­களை மாத்­தி­ரமே நீங்­கள் வைத்­தி­ருக்­க­லாம். எஞ்­சிய நிலங்­களை நீங்­கள் வைத்­தி­ருக்க முடி­யாது. அவற்றை உடனே விடு­விக்­க­வேண்­டும் என்று அழுத்­த­மா­கத் தெரி­வித்­துள்­ளார். 
 
‘காணி­களை விடு­விப்­ப­தற்கு - முகாம்­களை இட­மாற்­று­வ­தற்கு கால அவ­கா­சம் தேவை’ என்று முப்­ப­டைத் தள­ப­தி­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர். 
பாது­காப்­புத் தரப்­பின் சந்­திப்பு நடை­பெற்று முடிந்த பின்­னர் நடந்த பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த இரா.சம்­பந்­தன், எமது மக்­கள் பொறு­மை­யாக நீண்ட காலம் காத்­தி­ருக்­கின்­ற­னர். ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு இரண்டு வரு­டங்­கள் கடந்­தும் இன்­ன­மும் காணி­கள் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை. மக்­கள் ஆதங்­கத்­தில் போரா­டு­கின்­ற­னர். அவர்­கள் பொறு­மையை இழந்த நிலை­யி­லேயே போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­த­னர். 
 
மக்­க­ளு­டைய விருப்­பத்தை மீறி நாங்­கள் எத­னை­யும் செய்­யப் போவ­தில்லை. அவர்­க­ளு­டைய கோரிக்கை நியா­ய­மான கோரிக்கை. இந்த விட­யத்தை வெற்றி கொள்­ளும் வகை­யில் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­மா­னால் அதனை எமது மக்­க­ளுக்கு விளக்கி அவர்­க­ளு­டைய விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் முன்­னெ­டுப்­போம். இந்­தக் காணி விவ­கா­ரத்­திற்கு உட­ன­டி­யாக அரசு முற்­றிப்­புள்ளி வைக்க வேண்­டும்.
 
30 வரு­டங்­க­ளாக, மக்­கள் காணி­க­ளுக்­குப் போக முடி­யா­மல் தவிக்­கின்­ற­னர். இந்த நிலமை இனி­யும் தொடர முடி­யாது. தேவை­யான காணி­கள் தொடர்­பில் அரசு பரி­சீ­லிக்­க­வேண்­டும். அனைத்­துக் காணி­க­ளை­யும் வைத்­தி­ருக்க முடி­யாது. இன்­றைய தினம் ஆரம்­பித்­தி­ருக்­கும் இந்த முயற்ச்சி தொட­ரும். கட்­டா­யம் இந்­தப் பிரச்­சி­னைக்கு முற்­றுப் புள்ளி வைக்­க­வேண்­டும் - என்­றார். (த-5-101)

http://www.onlineuthayan.com/news/25621

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரிடத்தில் கூட்டமைப்பிற்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருகிறது என்று தெரிந்து போட்ட நாடகம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

தமிழரிடத்தில் கூட்டமைப்பிற்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருகிறது என்று தெரிந்து போட்ட நாடகம்.

 

உன்மை தான் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி   

  • தொடங்கியவர்

தமிழர் பகுதி காணிகள் விடுவிக்கப்படுமா?

9 hours ago, MEERA said:

தமிழரிடத்தில் கூட்டமைப்பிற்கு எதிரான மனோநிலை அதிகரித்து வருகிறது என்று தெரிந்து போட்ட நாடகம்.

இவ்வளவுக்கு உங்களுக்கு தெரியுதண்டா நீங்க ஜாதகம் பாக்கலாமே // கற்பனைகளுக்கும் நிஜத்துக்கும் தூரம் அதிகம்.

9 hours ago, முனிவர் ஜீ said:

உன்மை தான் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி   

அனுப்பிட்டு ..... 

யார் தமிழர்களுக்காக போராடப் போகிறார்கள்

மக்களுக்கு தெரியும் யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று. அது உங்களது + எனது அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் எனக்கு தெரியும். ஆனால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எது சரியோ செய்யட்டும் // இல்லை அடுத்த தேர்தலில் மண் கவ்வட்டும்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களே முடிவு செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

உன்மை தான் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி   

 

5 minutes ago, ஜீவன் சிவா said:

இவ்வளவுக்கு உங்களுக்கு தெரியுதண்டா நீங்க ஜாதகம் பாக்கலாமே // கற்பனைகளுக்கும் நிஜத்துக்கும் தூரம் அதிகம்.

அனுப்பிட்டு ..... 

யார் தமிழர்களுக்காக போராடப் போகிறார்கள்

மக்களுக்கு தெரியும் யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று. அது உங்களது + எனது அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் எனக்கு தெரியும். ஆனால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எது சரியோ செய்யட்டும் // இல்லை அடுத்த தேர்தலில் மண் கவ்வட்டும்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களே முடிவு செய்யட்டும்.

முனிவர்  கூட்டமைப்புக்கு வாக்களிக்காத விடயம் இவருக்கு எப்படி தெரிந்தது..

பணம் துட்டு மணி????

26 minutes ago, விசுகு said:

முனிவர்  கூட்டமைப்புக்கு வாக்களிக்காத விடயம் இவருக்கு எப்படி தெரிந்தது..

பணம் துட்டு மணி????

முனிவர்  கூட்டமைப்புக்கு வாக்களிக்காத விடயம் விசுகுக்கு எப்படி தெரிந்தது..

பணம் துட்டு மணி????

 

Better luck next time :grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

முனிவர்  கூட்டமைப்புக்கு வாக்களிக்காத விடயம் விசுகுக்கு எப்படி தெரிந்தது..

பணம் துட்டு மணி????

Better luck next time :grin:

முனிவர் ஊரிலேயே  வாழ்பவர்

அவர் சொல்கிறார் இவர்களை  வீட்டுக்கு அனுப்பணும் என்று..

வாக்களித்தவர்கள்  சொல்லட்டும் என நீங்கள் எழுதினால் அர்த்தம் என்ன?

அப்புறம் விதண்டாவாதம் .....

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

முனிவர் ஊரிலேயே  வாழ்பவர்

அவர் சொல்கிறார் இவர்களை  வீட்டுக்கு அனுப்பணும் என்று..

வாக்களித்தவர்கள்  சொல்லட்டும் என நீங்கள் எழுதினால் அர்த்தம் என்ன?

அப்புறம் விதண்டாவாதம் .....

ம் கூட்டமைப்பின் நிலை வந்து  மக்களுக்கான் சேவையை எப்படி செய்ய வேண்டியுள்ளது என்றால் நேராக மூக்கை தொடாமல்  தலையை சுற்றித்தான் தொட வேண்டும் என்றநிலைப்பாடு  அதானால்  இவர்களின் மார்கட் சறுக்க தொடங்கியுள்ளது  ஆனாலும்  என்ன அப்பு சொல்கிறார் வெட்டி போட்டாலும் கையை வீட்டுக்குத்தானாம் கீறுமாம்  மீண்டும் யாரைத்தான் கொண்டுவாரது என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் இல்லை வார முழுப்பேரும் தன்ற பையை நிரப்பிய பின்பே  அடுத்த  கட்ட நகர்வுக்குள் நுழைகிறான் அதற்க்கிடையில் தேவையுள்ள மக்கள்  ................................................

51 minutes ago, ஜீவன் சிவா said:

இவ்வளவுக்கு உங்களுக்கு தெரியுதண்டா நீங்க ஜாதகம் பாக்கலாமே // கற்பனைகளுக்கும் நிஜத்துக்கும் தூரம் அதிகம்.

அனுப்பிட்டு ..... 

யார் தமிழர்களுக்காக போராடப் போகிறார்கள்

மக்களுக்கு தெரியும் யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று. அது உங்களது + எனது அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் எனக்கு தெரியும். ஆனால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எது சரியோ செய்யட்டும் // இல்லை அடுத்த தேர்தலில் மண் கவ்வட்டும்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களே முடிவு செய்யட்டும்.

நானும் ஒரு ஓட்டு கூத்தியிருக்கிறன் பாருங்க இந்த ஊட்டுக்காரர்களை நம்பி நம்ம சனங்களுக்கு நல்லது செய்வாங்க என்று அனுப்பினால்   அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகளுக்கு இவர்கள் முட்டுக்கட்டை  அதை விரிவாக சொல்ல விரும்பவில்லை அது உங்களுக்கு தெரியும் 

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

ம் கூட்டமைப்பின் நிலை வந்து  மக்களுக்கான் சேவையை எப்படி செய்ய வேண்டியுள்ளது என்றால் நேராக மூக்கை தொடாமல்  தலையை சுற்றித்தான் தொட வேண்டும் என்றநிலைப்பாடு  அதானால்  இவர்களின் மார்கட் சறுக்க தொடங்கியுள்ளது  ஆனாலும்  என்ன அப்பு சொல்கிறார் வெட்டி போட்டாலும் கையை வீட்டுக்குத்தானாம் கீறுமாம்  மீண்டும் யாரைத்தான் கொண்டுவாரது என்ற நிலைப்பாட்டில் தமிழர்கள் இல்லை வார முழுப்பேரும் தன்ற பையை நிரப்பிய பின்பே  அடுத்த  கட்ட நகர்வுக்குள் நுழைகிறான் அதற்க்கிடையில் தேவையுள்ள மக்கள்  ................................................

நானும் ஒரு ஓட்டு கூத்தியிருக்கிறன் பாருங்க இந்த ஊட்டுக்காரர்களை நம்பி நம்ம சனங்களுக்கு நல்லது செய்வாங்க என்று ஆனால் அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகளுக்கு இவர்கள் முட்டுக்கட்டை  அதை விரிவாக சொல்ல விரும்பவில்லை அது உங்களுக்கு தெரியும் 

ம்ம்ம்

கூட்டமைப்பு

அதன் பின் விக்கி  ஐயா

எல்லாமே ஏமாற்றம்...?

ஏன் இவர்கள்  இப்படி?????????????????????????????

கோடி பெறும் கேள்வி  இது

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

கூட்டமைப்பு

அதன் பின் விக்கி  ஐயா

எல்லாமே ஏமாற்றம்...?

ஏன் இவர்கள்  இப்படி?????????????????????????????

கோடி பெறும் கேள்வி  இது

அந்த குப்பை மேட்டில் சரிந்து இறந்து போன மக்களுக்கு இரங்கல் தெரிவித்த சம்பந்தன் ஐயா ( மனிதாபிமானம் ) வரவேற்கிறேன் ஒரு எதிர் கட்சி தலைவர் கூட  அறிக்கை விட்டார்  நல்லது 

அங்கே மாதக்கணக்காக புழுதிக்குள்ளும் இந்த அடிக்கிற வெயில்  (வந்தால் தெரியும்) சனங்கள் குந்தியிருந்து தங்களின் நிலத்தை பெற்றுக்கொண்டு வாழ நிற்கிற மக்களுக்கு என்ன  போய் சொல்லியிருக்கிறார் .............................

6 minutes ago, விசுகு said:

ம்ம்ம்

கூட்டமைப்பு

அதன் பின் விக்கி  ஐயா

எல்லாமே ஏமாற்றம்...?

ஏன் இவர்கள்  இப்படி?????????????????????????????

கோடி பெறும் கேள்வி  இது

கூட்டமைப்பு

அதன் பின் விக்கி  ஐயா

எல்லாமே ஏமாற்றம்...?

ஏன் இவர்கள்  இப்படி?????????????????????????????

இந்த கேள்விக்கு விடை தெரியாமல்தான்

                                                  நான்

                                                  நீங்கள் 

                                                  முனிவர்

                                                  இங்குள்ள மக்கள்.

 

மாற்றத்துக்கான வேறு வழி தெளிவாக தெரியும்வரை

தெரியாத பேயுடன் வாழ்வதை விட தெரிந்த பூதத்துடன் வாழலாம் என்பது காரணமாயிருக்கலாம்.

3 minutes ago, முனிவர் ஜீ said:

அந்த குப்பை மேட்டில் சரிந்து இறந்து போன மக்களுக்கு இரங்கல் தெரிவித்த சம்பந்தன் ஐயா ( மனிதாபிமானம் ) வரவேற்கிறேன் ஒரு எதிர் கட்சி தலைவர் கூட  அறிக்கை விட்டார்  நல்லது 

மனிதாபிமான ரீதியில் சரிதான் // ஆனால் அங்கு குடியிருந்தவர்கள் சட்டத்தை மீறி அடாத்தாக குடியேறியவர்கள் என்றும் கோத்தபாயா இவர்களை வெளியேற்ற முயற்சி எடுத்ததாகவும் ஒரு கதை உலாவுதே.

ஆனால் தமிழர் பகுதியில் சொந்த காணியில் இருந்து அடாத்தாக சட்டத்தை மீறி விரட்டப்பட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஜீவன் சிவா said:

கூட்டமைப்பு

அதன் பின் விக்கி  ஐயா

எல்லாமே ஏமாற்றம்...?

ஏன் இவர்கள்  இப்படி?????????????????????????????

இந்த கேள்விக்கு விடை தெரியாமல்தான்

                                                  நான்

                                                  நீங்கள் 

                                                  முனிவர்

                                                  இங்குள்ள மக்கள்.

 

மாற்றத்துக்கான வேறு வழி தெளிவாக தெரியும்வரை

தெரியாத பேயுடன் வாழ்வதை விட தெரிந்த பூதத்துடன் வாழலாம் என்பது காரணமாயிருக்கலாம்.

பேய் அடிச்சுட்டு போயிடுது 

பூதம் காக்க வச்சி விழுங்குது அவ்வளவுதான் :104_point_left:

6 minutes ago, ஜீவன் சிவா said:

கூட்டமைப்பு

அதன் பின் விக்கி  ஐயா

எல்லாமே ஏமாற்றம்...?

ஏன் இவர்கள்  இப்படி?????????????????????????????

இந்த கேள்விக்கு விடை தெரியாமல்தான்

                                                  நான்

                                                  நீங்கள் 

                                                  முனிவர்

                                                  இங்குள்ள மக்கள்.

 

மாற்றத்துக்கான வேறு வழி தெளிவாக தெரியும்வரை

தெரியாத பேயுடன் வாழ்வதை விட தெரிந்த பூதத்துடன் வாழலாம் என்பது காரணமாயிருக்கலாம்.

மனிதாபிமான ரீதியில் சரிதான் // ஆனால் அங்கு குடியிருந்தவர்கள் சட்டத்தை மீறி அடாத்தாக குடியேறியவர்கள் என்றும் கோத்தபாயா இவர்களை வெளியேற்ற முயற்சி எடுத்ததாகவும் ஒரு கதை உலாவுதே.

ஆனால் தமிழர் பகுதியில் சொந்த காணியில் இருந்து அடாத்தாக சட்டத்தை மீறி விரட்டப்பட்டவர்கள்.

கொழும்பு நகர் பிரதேசத்தில் இல்லாமல் சேரிபோல் வாழ்பவர்கள்  அங்கே வேலை செய்ய போய் குடியேறியவர்கள் கோட்டபாய இவர்களை அகற்றி வேறு இடத்தில் தொடர் மாடிகளாக வீடு கட்டித்தருகிறோம் ர்ன்று சொல்லியும் போகாதவர்கள் 

ஆனால் தமிழர்கள் விரட்டப்பட்டது உன்மையே அது உலகறியும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

இவ்வளவுக்கு உங்களுக்கு தெரியுதண்டா நீங்க ஜாதகம் பாக்கலாமே // கற்பனைகளுக்கும் நிஜத்துக்கும் தூரம் அதிகம்.

அனுப்பிட்டு ..... 

யார் தமிழர்களுக்காக போராடப் போகிறார்கள்

மக்களுக்கு தெரியும் யாரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று. அது உங்களது + எனது அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் எனக்கு தெரியும். ஆனால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எது சரியோ செய்யட்டும் // இல்லை அடுத்த தேர்தலில் மண் கவ்வட்டும்.

அவர்களுக்கு வாக்களித்த மக்களே முடிவு செய்யட்டும்.

ஓட்டுப் போட்டவர்களே நொந்து போய் இருக்கினம் இதுக்குள்ள ஓட்டே இல்லாத உங்கட குசும்பிற்கு அளவில்லை.

முதலில் உங்களால் முடிந்தால் சிறீலங்கா அரசாங்கம் செய்யும் மொழி வெறியையாவது மனிதாபத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பின்னர் அங்குள்ள மக்களை மனோநிலையை பற்றி கதைக்கலாம், கண்ணுக்கு தெரியும் இனவெறியை தடுக்க உங்களால் முடியாது விடினும் பிழையை பிழை என ஏற்க முன்வாருங்கள்.

4 minutes ago, MEERA said:

ஓட்டுப் போட்டவர்களே நொந்து போய் இருக்கினம் இதுக்குள்ள ஓட்டே இல்லாத உங்கட குசும்பிற்கு அளவில்லை

உங்களுக்கும் ஒட்டும் நீங்கள் நாட்டிலும்  இல்லை எண்டு சொல்லுறாங்களே // அப்ப உங்கட குசும்பை எப்படி அழைப்பது.

உங்கை இருந்து விண்ணானம்  பேசாமல் உங்களுக்கு உண்மையிலையே மக்கள் மீது ஆசை இருந்தால் இங்குவந்து ஏதாவது பண்ணுங்கோ. 

 

உங்களைமாதிரி உங்கை இருந்து உசுப்பேத்தின கூட்டத்தினரால்தான் எமது சமுதாயமே நாறி இருக்குது.

நீங்கள்தான் இதை திருத்தவேண்டும் // அதையும் எண்ட தலையில கட்டுற நீங்கள் 

காசு தாறம் // தமிழ் ஈழம் எடுத்து தா கோஷ்தான் நீங்கள் 

 

இதுக்குமேல் நேர விரயம் 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்கும் ஒட்டும் நீங்கள் நாட்டிலும்  இல்லை எண்டு சொல்லுறாங்களே // அப்ப உங்கட குசும்பை எப்படி அழைப்பது.

உங்கை இருந்து விண்ணானம்  பேசாமல் உங்களுக்கு உண்மையிலையே மக்கள் மீது ஆசை இருந்தால் இங்குவந்து ஏதாவது பண்ணுங்கோ. 

 

உங்களைமாதிரி உங்கை இருந்து உசுப்பேத்தின கூட்டத்தினரால்தான் எமது சமுதாயமே நாறி இருக்குது.

நீங்கள்தான் இதை திருத்தவேண்டும் // அதையும் எண்ட தலையில கட்டுற நீங்கள் 

காசு தாறம் // தமிழ் ஈழம் எடுத்து தா கோஷ்தான் நீங்கள் 

 

இதுக்குமேல் நேர விரயம் 

நாங்க நாட்டில் இல்லை என்பது இன்றுதான் உங்களுக்கு தெரியுதா? 

நாங்க எங்க இருந்தாலும் என்ன பண்ண வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் நீங்க சும்மா உங்க இருந்து கொண்டு ரீல் விடவேண்டாம்.

நீங்க எந்த கோஷ்டி என்று எமக்கு தெரியாதா? ஆமா நீங்க உங்கயிருந்து இவ்வளவுகாலமும் என்னத்தை புடுங்கினீங்க? 

முதலில் சிறீலங்கா அரசின் இனவெறியை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நாட்டை விட்டு ஓடி விட்டு வயது போன காலத்தில் திரும்பி வந்து எங்களுக்கு படம் காட்டாதீர்கள்.

கூட்டமைப்பிற்கு ஓட்டுப் போட்டவரே இங்கு வந்து தனது நிலைப்பாட்டை எழுதியும் திருந்தவில்லை நீங்கள்.

image.jpg

Edited by MEERA

Just now, MEERA said:

நாங்க எங்க இருந்தாலும் என்ன பண்ண வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்

நான் எதையுமே செய்யவில்லை என்பதை மனதார ஒத்துக்கொள்கின்றேன் // நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.

4 minutes ago, MEERA said:

ஆமா நீங்க உங்கயிருந்து இவ்வளவுகாலமும் என்னத்தை புடுங்கினீங்க?

உங்கை இருந்து மக்களுக்கு என்னத்தை நீங்கள் புடுங்கினீங்க எண்டு சொல்லலாமே 

5 minutes ago, MEERA said:

நீங்க எந்த கோஷ்டி என்று எமக்கு தெரியாதா?

நிச்சயமா காசு தாறன் தமிழீழம் தா எண்டு உங்கை இருந்து இங்கிருப்பவர்களை பலிகொடுத்து கேக் வெட்டிய கோஷ்டி இல்லை 

ஒவ்வொரு தமிழனும் தமிழனாலேயே கொலை செய்யப்படும்போது 

போங்கடா நீங்களும் உங்கட கூத்தும் எண்டு வெளியேறிய ஒருவன்தான் நான்.

11 minutes ago, MEERA said:

நாட்டை விட்டு ஓடி விட்டு வயது போன காலத்தில் திரும்பி வந்து எங்களுக்கு படம் காட்டாதீர்கள்.

இதை நாட்டை விட்டு காசுக்காக ஓடியவர் சொல்வது தமிழனுக்கே அவமானம் 

நானாவது எனது சொந்த பெயர் வயது ஊர் எதையுமே மறைக்காமல் வாழ்கின்றேனே 

பெயர் முதல் அனைத்தும் புனைவு / பொய்  

உங்கள் படம் காட்டல் எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஜீவன் சிவா said:

நான் எதையுமே செய்யவில்லை என்பதை மனதார ஒத்துக்கொள்கின்றேன் // நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.

உங்கை இருந்து மக்களுக்கு என்னத்தை நீங்கள் புடுங்கினீங்க எண்டு சொல்லலாமே 

நிச்சயமா காசு தாறன் தமிழீழம் தா எண்டு உங்கை இருந்து இங்கிருப்பவர்களை பலிகொடுத்து கேக் வெட்டிய கோஷ்டி இல்லை 

ஒவ்வொரு தமிழனும் தமிழனாலேயே கொலை செய்யப்படும்போது 

போங்கடா நீங்களும் உங்கட கூத்தும் எண்டு வெளியேறிய ஒருவன்தான் நான்.

இதை நாட்டை விட்டு காசுக்காக ஓடியவர் சொல்வது தமிழனுக்கே அவமானம் 

நானாவது எனது சொந்த பெயர் வயது ஊர் எதையுமே மறைக்காமல் வாழ்கின்றேனே 

பெயர் முதல் அனைத்தும் புனைவு / பொய்  

உங்கள் படம் காட்டல் எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் புரியும்.

யாழில் பெரும்பாலானவர்கள் புனை பெயரில் தான் இருக்கினம்,

ஆமா நீங்க நோர்வேக்கு என்னத்தை புடுங்க ஓடினீர்கள்? இன்றைக்கும் நோர்வே ஓய்வூதியம் பெறுகிறீர்கள், நீங்க நோர்வேக்கு ஓடும் போது நாம் ஊரில் தான். 

மற்றவனெல்லாம் காசுக்காக ஓட நீங்க ஏன் ஓடினீர்கள்

நான் யாரிடமாவதுதமிழீழம் தாறம் என்று  காசு வாங்கியதை முதலில் நிரூபியுங்கள் நீங்கள் ஒரு ஆண் என்றால்.

Edited by MEERA

1 minute ago, MEERA said:

நான் யாரிடமாவதுதமிழீழம் தாறம் என்று  காசு வாங்கியதை முதலில் நிரூபியுங்கள் நீங்கள் ஒரு ஆண் என்றால்.

இல்லை நான் ஒரு பெண்

ஆனால் எனது பெயர் மீரா இல்லை

 

MEERA

  • Advanced Member
  •  
  • MEERA
  • கருத்துக்கள உறவுகள்
  •  766
  • 2,672 posts
  • Gender:Not Telling
  • Location:UK
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே உங்களுக்கு வேற பிரச்சனை, 

Quote

நான் எதையுமே செய்யவில்லை என்பதை மனதார ஒத்துக்கொள்கின்றேன் // நான் வெறும் பார்வையாளன் மட்டுமே.

பார்வையாளன் என்றால் பேசாம மூடிக் கொண்டு இருங்கள்.

3 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை நான் ஒரு பெண்

ஆனால் எனது பெயர் மீரா இல்லை

 

MEERA

  • Advanced Member
  •  
  • MEERA
  • கருத்துக்கள உறவுகள்
  •  766
  • 2,672 posts
  • Gender:Not Telling
  • Location:UK

பேசாம மூடுங்க.

Just now, MEERA said:

உண்மையிலேயே உங்களுக்கு வேற பிரச்சனை, 

பார்வையாளன் என்றால் பேசாம மூடிக் கொண்டு இருங்கள்.

நன்றி 

நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரர் / கெட்டிக்காரி என்று தெரியாமலே போச்சுதே 

பார்வையாளனுக்கு கண்ணாடி தேவையில்லை 

ஆனால் பச்சை நிற கண்ணாடி போடுபவர்களுக்கு எல்லாமே பச்சையாய் தெரியுமாம் 

இதுக்கு என்னிடம் மருந்துமில்லை / நேரமுமில்லை 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.