Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்துக்கு முன்னுள்ள காதல்.

25 members have voted

  1. 1. திருமணத்துக்கு முன்னுள்ள காதலை

    • சொல்வேன்
      13
    • சொல்லமாட்டேன்
      7
    • சொல்வேன் ஆனால் அதிக விபரமாக இல்லை
      5

Please sign in or register to vote in this poll.

Featured Replies

வணக்கம் எல்லோருக்கும் நலமா?

சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??

  • Replies 130
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன்னாள் காதல்கள் பின்னால் காதல்கள் என்றால் அப்புறம் ஏனாம் திருமணம் முடிச்சு இன்னொருவரை ஏமாற்ற வேணும். கேள்வியின் அடிப்படையே கேள்விக்குறியா நிற்குதே..??!

திருமணத்தின் முன்னாள் உள்ளக் காதல்களைச் சொல்லினமோ இல்லையோ மன தளவில் மாறாத வடுக்களோடு திருமணம் என்ற போர்வையில் இன்னொருவரை ஏமாற்றினம் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. அல்லது மாறி மாறி ஏமாற்றினம் என்பது உண்மை. போலி மனிதர்கள்..! உறுதியற்ற இலட்சியமற்ற சுயநல மனிதர்கள். இவர்களுக்காக வாக்களிக்கும் எண்ணம் நமக்கில்லை. :P :icon_idea:

Edited by nedukkalapoovan

நான் சொல்லுவன்....காதல் தோல்வியென்று எதைச் சொல்கிறீர்களென்றதைப் பொறுத்திருக்கு ரசி அக்கா. நமக்கந்த காதல் சரிவராதென்று இருவரும் பேசி முடிவெடுத்து விட்டு சில-பல வருடங்களுக்குப்பிறகு திருமணவாழ்க்கையில் இணையும்போது முன்பு எனக்கு ஒருவர் மீது காதல் இருந்தது ஆனால் எங்களுக்கே அது ஒத்து வராமல் பேசி இருவரும் எங்கட அலுவல்களைப் பார்க்கப் போயிட்டம் என்றுண்மையைச் சொல்வதில் எனக்கெந்த மாறுகருத்துமில்லை.

நெடுக்கால போறவர் என்ன சொல்றீங்கள்?? முதல்காதல்ல நிலைச்சு நிற்காதவர்கள் எல்லாம் உறுதியில்லாதவர்கள் அவர்களெல்லாம் கல்யாணமே பண்ணிக்கக்கூடாதெண்றா நினைக்கிறீங்கள்?

ரசி அக்கா இப்ப நீங்கள் காதலிக்கிறீங்கிளா இல்லாட்டிக் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கிளா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய கருத்து என்ன என்றால் கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஆனால் அதை சொல்ல வேண்டிய நேரத்தில், பார்த்து சொல்ல வேண்டும். அவசரப்பட்டு, அலட்டிக்கவும் கூடாது, இழுத்தடிச்சு கோபமூட்டவும் கூடாது. உண்மையை சொல்லும் போது ஏமாற்றுகின்றோமே என்ற எண்ணம் வருவதையும், எதிர்தரப்பில், ஏமாற்றப்படுகின்றோமே என்ற என்னம் வருவதையும் தவிர்த்து கொள்ளலாம். ஆனால் இவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்கும் என்பது பலருக்கு இருப்பதில்லை.

நெடுக்கால போவான் சொல்வதை கேட்டால் சத்தியமாய் உலகத்தில் நூற்றுக்கு 99 விகிதத்தினருக்கு திருமணம் என்பது நடக்க சந்தர்ப்பமே இல்லை. ஏமாற்றம் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விடையமே ஒழிய, விவாதத்துக்குள் எடுக்க முடியாதவை. நீங்கள் சொல்வது போல வைத்து கொண்டால், உங்கள் மீது ஒருவருக்கு காதல், என்று வைத்து கொள்வோம், அவரை உங்களுக்கு பிடிக்க வில்லை. அவர் தொடர்ந்து சன்னியாசியாகவே இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியான சிநத்தனைகளை பண்டைய பாலத்தில் இருந்திருக்கலாம், மறுமணம் செய்ய சொல்லி தூண்டும் இந்த காலத்தில் உங்கள் விவாதமும் கருத்தும் நகைப்புக்கும், நடைமுறைக்கு ஒத்துவராததுமாகும்

Edited by Nitharsan

நான் முன்பு வாசித்த கதை ஒன்று யாபகத்துக்கு வருகிறது. திருமணம் முடிந்தபின்பு சில நாட்களின் பின்பு மனைவி கணவரைப் பார்த்து ' நீங்கள் கல்யாணத்துக்கு முன்பு யாரையும் காதலித்தீர்களா? ' என்று கேட்க அதற்கு கணவர் முன்பு பல பெண்களைக் காதலித்ததினை மனைவிக்குச் சொன்னால் திட்டு வாங்க வேண்டி வரும் என்பதனால் 'இல்லை' என்று பதில் சொன்னார். பிறகு மனைவி கணவரிடம்' உங்களை யாரும் காதலித்தார்களா?' என்று கேக்க கணவர் தன்னை விரும்பிய பெண்களின் பெயரைச் சொன்னால் மனைவி கோபப்பட்டாலும் படுவா என்று நினைத்து 'இல்லை' என்று சொல்ல , அதற்கு மனைவி 'ஒருதரும் விரும்பாத உங்களை போயும் போயும் நான் கட்டினே, என்னால தான் உங்களுக்கு வாழ்க்கை கிடைச்சது' என்று சொன்னார். பிறகு கோபப் படும் போது அடிக்கடி 'என்னாலதான் உங்களுக்கு வாழ்க்கை கிடைத்தது' என்று சொல்லி திட்டுவா.

ஹா ஹா அரவிந்தன் இது நீங்கள் வாசிச்ச கதைதானே :-)

நிதர்சன் 75 வீதமென்றது குறைவு போல இருக்கு...காதலென்றில்லை குறைந்தது ஒரு ஈர்ப்பாவது 99 வீதமானவர்களுக்கு இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கணவர்/மனைவியின் குணத்தினைப் பொருத்து சொல்ல வேண்டும். கணவர் மனைவிக்கு இடையில் ஒன்றையும் மறைக்கக்கூடாது தான் ஆனால் ஒரு குடித்து விட்டு மனைவியை அடிக்கும் கணவரிடம் எப்படி தனது முந்தைய காதலை மனைவி சொல்லமுடியும்?. எதுக்கெடுத்தாலும் சந்தெக்கிக்கும் கணவர்/மனைவி யிடம் எப்படி சொல்ல முடியும்?.

சிலருக்கு சொல்லாவிட்டாலும் அடி விழும். சொன்னால் கூடுதலான அடி விழும்

"சில்லுன்னு ஒரு காதல்" யாருக்கும் ஞாபகம் வரேல்லத்தானே :-)

வணக்கம் எல்லோருக்கும் நலமா?

சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??

சொல்வேன், அப்படி சொல்வதில் சிக்கல் வருமாகவிருப்பின் தொடரும் வாழ்வே சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து. பருவ வயதிலே யார்மீதாவது காதலோ அல்லது ஈர்ப்போ இல்லாது இருந்தார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது.... :P

  • கருத்துக்கள உறவுகள்

"சில்லுன்னு ஒரு காதல்" யாருக்கும் ஞாபகம் வரேல்லத்தானே :-)

நெஞ்சில் ஒர் ஆலயம் தான் யாபகத்துக்கு வருகிறது

ஓ அந்தப்படம் நான் பார்க்கேல்லயே...அதில என்ன சிறப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அந்தப்படம் நான் பார்க்கேல்லயே...அதில என்ன சிறப்பு?

அந்தப்படத்தில் தான் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற பாடல் இருக்கிறது

எங்களிடம் கேட்பதன் முன் ரசிகை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களிற்கு இன்னும் திருமணமாகவில்லை என்றால் திருமணத்திற்கு முன் உள்ள உங்கள் காதலை உங்கள் வருங்காலக் கணவருக்கு ரசிகை நீங்கள் சொல்வீர்களா? அவரிடமும் அவர் யாரையாவது காதலிதுள்ளாரா என்று கேட்பீர்களா?

ஓட்டெடுப்பு முடிவுகளை பார்த்தேன். ஒருவரும் சொல்லமாட்டேன் எனும் தெரிவிற்கு ஓட்டு போடவில்லை. யாழ் களத்தில் நான் ஒருவனாவது உண்மை பேச ஆசைப்படுகின்றேன். இதனால் சொல்லமாட்டேன் எனும் தெரிவுக்கு அடியேன் ஓட்டுப் போட்டு உள்ளேன்.

வாழ்க்கையில் ஏற்கனவே நொந்து போய் இருக்கிறோம்,இந்த நிலையில் தங்கைக்கு ஒரு கீதம் படத்தில் நளினி தனது போலிஸ்காரன் கணவன் சிவகுமாருக்கு தனது காதல் பிரச்சனைகளை கூறி பின் கஸ்டப்பட்டது போல் நம்மால் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது.

எம்மிடம் திருமணத்திற்கு பின் மனுசி இந்தக் கேள்வியை கேட்டால் இப்படித்தான் சமாளிப்போம்: "சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

ஓட்டெடுப்பு முடிவுகளை பார்த்தேன். ஒருவரும் சொல்லமாட்டேன் எனும் தெரிவிற்கு ஓட்டு போடவில்லை. யாழ் களத்தில் நான் ஒருவனாவது உண்மை பேச ஆசைப்படுகின்றேன். இதனால் சொல்லமாட்டேன் எனும் தெரிவுக்கு அடியேன் ஓட்டுப் போட்டு உள்ளேன்.

நீங்கள் உண்மை பேசுவதாக யாரால் உறுதிப்படுத்த முடியும். அனைவரும் தங்கள் தங்கள் முடிவை கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் நீங்கள் மட்டும்தான் உண்மை கூறுவதாக எப்படி நம்ப முடியும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

எப்படி உங்களுக்கு தைரியம் வரும்?

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

நீங்கள் உண்மை பேசுவதாக யாரால் உறுதிப்படுத்த முடியும். அனைவரும் தங்கள் தங்கள் முடிவை கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது பொய் நீங்கள் மட்டும்தான் உண்மை கூறுவதாக எப்படி நம்ப முடியும். :icon_idea:

நான் உண்மை பேசியுள்ளேனா என்பதை கண்டுபிடிப்பதற்கு நான் திருமணம் முடிக்கும் வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும். :D

கருத்துக் கணிப்பில் ரசிகை ஒரு தவறு செய்துள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது.

அவர் இவ்வாறு கேள்வியை கேட்டிருக்க வேண்டும்:

ஒருவரை நீங்கள் காதலிக்கும் போது உங்களிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள விடயத்தை உங்கள் காதலருக்கு சொல்வீர்களா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

்: "சீ சனியனே வாயை மூடடி, உனக்கு தாலி கட்டின மனுசனோட எப்படி நாகரீகமாக் கதைக்கிறதென்று உனக்கு வீட்டில கொப்பன், கொம்மா சொல்லித் தரேலையே? வெளிநாடு வந்தாலும் நீங்கள் திருந்த மாட்டீங்களடி! "

கொஞ்சம் நாடடிபட்ட மனைவி என்றா, அதை திருப்பி சொல்லி இங்க வந்தும் அந்த பட்டிக்காட்டு கதை மாறவில்லையோ என்று கேட்டிடுவா, எதுக்கும் கதைக்கும் போது கவனம், இங்கு பலர் ஊருக்கு போய் திருமணம் செய்வார்கள் நீங்கள் அந்த வகை என்றால் தப்பித்துக்கொள்வீர்கள் ஆனாலும் சில மாதங்களுக்கு தான் அந்த அமைதியும்....

Edited by Nitharsan

கொஞ்சம் நாடடிபட்ட மனைவி என்றா, அதை திருப்பி சொல்லி இங்க வந்தும் அந்த பட்டிக்காட்டு கதை மாறவில்லையோ என்று கேட்டிடும் எதுக்கும் கதைக்கும் போது கவனம், இங்கு பலர் ஊருக்கு போய் திருமணம் செய்வார்கள் நீங்கள் அந்த வகை என்றால் தப்பித்துக்கொள்வீர்கள் ஆனாலும் சில மாதங்களுக்கு தான் அந்த அமைதியும்....

ஊருக்குப் போய்த் திருமணம் செய்தால் நீங்கள் தற்போது இருக்கும் நாட்டில் செய்யும் திருவிளையாடல்கள் தெரியவராது என்னும் நினைப்பிருந்தால் அதை மாற்றிவிடுங்கோ. இப்போதெல்லாம் ஊரில் இருந்து வருபவர்கள் தான் விபரமா வருகிறார்கள் :P

என்னை பெறுத்தவரையில், எனது கணவர், வேற யாரையும் காதலிதிருந்தால், அதை என்னிடம் சொல்லாமல் விடுவது நல்லது..எனது கொள்கை, என் கணவரின் வாழ்க்கையில் முதல் பெண்ணும் நானாக தான் இருக்கவேன்டும்..கடைசியும் நானாக தான் இருக்கவேண்டும்(கொஞ்சம் பொசசிவ்னஸ் கூட எனக்கு)..அவர் காதலித்தது பிழை என்று சொல்லமாட்டென்..ஆனால் அதை தாங்கும் சக்தி நம்மிடம் இருப்பதில்லை..ஆகவே சொல்லாமல்விடுவது நல்லது.., அனேகமான பெண்கள் இப்படி தான் இருப்பர்கள் என்று நினைகிறேன்..நா எதை எதிர்பார்கிற்ரோமோ அதே எதிர்பார்பை தான் எமக்கு வரபோகிறவரும் கொண்டிருப்பார் என நாம் நினைத்தோமானால், இந்த முதல் காதல், இரண்டாம் காதல் எல்லாம் வர சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவே!

எப்படி உங்களுக்கு தைரியம் வரும்?

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது! :icon_idea::D:D

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

நீங்கள் மட்டும் பையங்களுடன் டீ போட்டு கதைப்பீங்களாக்கும்! அஜித், விஜய், தனுஷ் டீ போட்டு கதைத்தால் நன்றாக ரசித்து பார்ப்பீங்களாக்கும்! நாம மட்டும் டீ போட்டு கதைக்கக்கூடாதாக்கும்! :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு மாப்பிள்ளை எவ்வளவு நாகரீகமாக் கதைக்கிறாரு பாருங்க...பார்த்துப் பழகுங்கோ.

நான் நல்லாய் இருக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா?

மாப்பிள்ளையைப் பார்த்துக் கதைத்தால்.. அய்யோ சாமி

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது! :icon_idea::D:D

நீங்கள் இன்னும் திருமணம் முடிக்கவில்லை போல் இருக்குது. எந்த வீரனும் கல்யாணத்தின் பின்பு யானையாக இருந்து பூனையாக மாறுவான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நீங்களும் சின்னப்புவும் தலைவியிடம் சரணடைந்துபடும் கஸ்டங்களை நேரில் பார்ப்பதால் தான் சீ இப்படியாக ஒரு அடிமை போல் திருமணம் செய்தபின் மனைவிக்கு பயந்து வாழ வேண்டுமா என ஒரு ஆவேசம் எனக்குள் வந்து விட்டது!

இவர்கள் எல்லாம் பரவாயில்லை. களத்தில் முகத்தார் என்று ஒருவர் இருந்தார். ( இப்பவும் இருக்கின்றார்.தாயகத்தில் எண்டதால் முன்பு போல வருவதில்லை) அவரைப் பார்த்தபின், முடிச்சுக்கட்டிக் கொண்டு காசிக்குப் போவியள். அவரின் வாழ்வு, அப்படி ஒரு பயந்த வாழ்க்கை .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் பரவாயில்லை. களத்தில் முகத்தார் என்று ஒருவர் இருந்தார். ( இப்பவும் இருக்கின்றார்.தாயகத்தில் எண்டதால் முன்பு போல வருவதில்லை) அவரைப் பார்த்தபின், முடிச்சுக்கட்டிக் கொண்டு காசிக்குப் போவியள். அவரின் வாழ்வு, அப்படி ஒரு பயந்த வாழ்க்கை .

ஒருவேளை முகத்தார் மனைவிக்குப் பயந்துதான் யாழுக்கு வருவதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் சொல்லி ஏன் டைம் யை வேஸ்ட் பண்ணனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.