Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் – ஐங்கரநேசன்

Featured Replies

ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன்
 

“என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையில், அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில், ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (09) நடைபெற்றது. நல்லூர் பிரதேச சனசமூகநிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே, மேற்குறித்த கருத்தை பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“விசாரணைக் குழுவினர், தங்கள் அறிக்கையில், உழவர் விழாக்களைக் களியாட்ட நிகழ்ச்சிகளாகக் குறிப்பிட்டிருப்பதோடு, இவ்விழாக்களை மாவட்ட மட்ட நிகழ்ச்சிகளோடு மட்டுப்படுத்தாமல், மாகாண மட்டத்துக்கு விரிவுபடுத்தியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிகழ்ச்சிகளை தேர்தல் கால வாக்குத் திரட்டல் என்றும் அமைச்சரின் பெருமையை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். உழவர் பெருவிழா, முற்றுமுழுதாக, சாதனை உழவர்களைக் கௌரவிக்கும் விழா. இதனைக் களியாட்ட விழாவாக அவர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மட்டத்தில் போட்டிகளை நடாத்தி விவசாயிகளை, மத்திய அரசாங்கம் கௌரவிக்கும்போது, மாகாண மட்டத்தில், வட மாகாண அரசாங்கம் போட்டிகளை நடாத்தி எமது விவசாயிகளைக் கௌரவிப்பதில் தவறேதும் இல்லை. இந்தக் கௌரவம் விவசாயிகளை உற்சாகப்படுத்தி மென்மேலும் சாதனைகளைப் புரிவற்குத் தூண்டுகின்ற ஓர் ஊக்கி.

“நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் சேர்வதை, அமைச்சரின் தேர்தல் கால வாக்குத் திரட்டும் முயற்சி என்று கொச்சையாக இவர்கள் குறிப்பிட்டாலும், இதன் பின்னால் கூட்டத்தைக் கண்டு அஞ்சும் அதிகார வர்க்கத்தின் மனோ நிலையே மேலோங்கி இருக்கிறது. ஆளும் தரப்பும், அதிகார வர்க்கமும் மக்கள் கூட்டமாகத் திரளுவதை விரும்பாது. அனுமதிக்காது. இவ்வாறு சேரும் கூட்டம் எங்கே தங்கள் அதிகாரத்துக்கு எதிராக ஒருநாள் திரும்பிவிடுமோ என்ற அச்சம் ஆளும்தரப்புக்கு எப்போதும் இருக்கும். அவர்களின் மனோநிலையையே விசாரணைக்குழுவும் பிரதிபலித்திருப்பது வேதனைக்குரியது.

“விசாரணைக்குழுவின் முன்னால் நான் தோன்றிவிட்டு பின்னர் அக்குழுவை குறைசொல்லலாமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள், நான் இலஞ்சம் வாங்கினேன், நிதி மோசடியில் ஈடுபட்டேன் என்று குறிப்பிட்டுவிட்டு நான் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தால் அது பொய்யாக இருந்தாலும் இக் குழுவை நான் விமர்சித்திருக்க முடியாது. ஆனால், அவர்களே தங்களது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதை நிரூபிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, நான் பதவி விலக வேண்டும் என்றும் கோரியிருப்பதுதான் அவர்களின் நீதி நியாயம் குறித்தும், மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி முதலமைச்சரை பதவியிறக்கும் சதிமுயற்சிக்கு இவர்களும் துணைபோயுள்ளார்களோ எனவும் சந்தேகப்படவைத்திருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

வேதபாரயண சனசமூக நிலையத்தின் தலைவர் இ.சத்தியானந்தனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் க. சிவநேசனும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ஊழல்-புரிந்ததாக-எங்கும்-குறிப்பிடவில்லை/71-200292

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் - ஐங்கரநேசன்

இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றம் – ஐங்கரநேசன்

 

என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில் இதற்கு முரணான வகையில் என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையில் அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.07.2017) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் பொ.ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சனசமூகநிலையங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

விசாரணைக் குழுவினர் தங்கள் அறிக்கையில் உழவர் விழாக்களைக் களியாட்ட நிகழ்ச்சிகளாகக் குறிப்பிட்டிருப்பதோடு, இவ்விழாக்களை மாவட்டமட்ட நிகழ்ச்சிகளோடு மட்டுப்படுத்தாமல் மாகாண மட்டத்துக்கு விரிவுபடுத்தியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிகழ்ச்சிகளை தேர்தல் கால வாக்குத் திரட்டல் என்றும் அமைச்சரின் பெருமையை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். உழவர் பெருவிழா முற்று முழுதாக சாதனை உழவர்களைக் கௌரவிக்கும் விழா. இதனைக் களியாட்ட விழாவாக அவர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசாங்கம் தேசியமட்டத்தில் போட்டிகளை நடாத்தி விவசாயிகளைக் கௌரவிக்கும்போது, வடமாகாண அரசாங்கம் மாகாணமட்டத்தில் போட்டிகளை நடாத்தி எமது விவசாயிகளைக் கௌரவிப்பதில் தவறேதும் இல்லை. இந்தக் கௌரவம் விவசாயிகளை உற்சாகப்படுத்தி மேன்மேலும் சாதனைகளைப் புரிவற்குத் தூண்டுகின்ற ஒரு ஊக்கி.

நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் சேர்வதை அமைச்சரின் தேர்தல் கால வாக்குத் திரட்டும் முயற்சி என்று கொச்சையாக இவர்கள் குறிப்பிட்டாலும், இதன் பின்னால் கூட்டத்தைக் கண்டு அஞ்சும் அதிகார வர்க்கத்தின் மனோ நிலையே மேலோங்கி இருக்கிறது. ஆளும்தரப்பும், அதிகார வர்க்கமும் மக்கள் கூட்டமாகத் திரளுவதை விரும்பாது. அனுமதிக்காது. இவ்வாறு சேரும் கூட்டம் எங்கே தங்கள் அதிகாரத்துக்கு எதிராக ஒருநாள் திரும்பிவிடுமோ என்ற அச்சம் ஆளும்தரப்புக்கு எப்போதும் இருக்கும். அவர்களின் மனோநிலையையே விசாரணைக்குழுவும் பிரதிபலித்திருப்பது வேதனைக்குரியது.

விசாரணைக்குழுவின் முன்னால் நான் தோன்றிவிட்டு பின்னர் அக்குழுவை குறைசொல்லலாமா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள், நான் இலஞ்சம் வாங்கினேன், நிதிமோசடியில் ஈடுபட்டேன் என்று குறிப்பிட்டுவிட்டு நான் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தால் அது பொய்யாக இருந்தாலும் இக்குழுவை நான் விமர்சித்திருக்க முடியாது. ஆனால், அவர்களே தங்களது அறிக்கையில் நான் நிதிமோசடியில் ஈடுபட்டதை நிரூபிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டு, நான் பதவிவிலகவேண்டும் என்றும் கோரியிருப்பதுதான் அவர்களின் நீதிநியாயம் குறித்தும், மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி முதலமைச்சரை பதவியிறக்கும் சதிமுயற்சிக்கு இவர்களும் துணைபோயுள்ளார்களோ எனவும் சந்தேகப்படவைத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

வேதபாரயண சனசமூக நிலையத்தின் தலைவர் இ.சத்தியானந்தனின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவநேசனும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

http://thuliyam.com/?p=73203

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்பீட்டம், சுண்ணாகம் நிலத்தடி நீர் விடயத்தில் உங்கட முகமூடி கிழிந்து விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

நம்பீட்டம், சுண்ணாகம் நிலத்தடி நீர் விடயத்தில் உங்கட முகமூடி கிழிந்து விட்டது

இலஞ்சவாதிகள் தூங்குவதில்லை என்று சொல்ல வாறீயள்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

இலஞ்சவாதிகள் தூங்குவதில்லை என்று சொல்ல வாறீயள்:10_wink:

புத்தன், சுண்ணாக நீர் பிரச்சனை எழுந்த வேளையில் நான் இவர் தொடர்பாக எழுதிய போது, யாழ்கள உறவு(பெயர் ஞாபகத்தில் இல்லை) என்னிலும் பார்க்க ஐங்கரநேசனுக்கு மண்ணிலும் மக்களிலும் கூடிய அக்கறை இருக்கிறது என்று.

மீண்டும் சொல்கிறேன் சுண்ணாக நீர் பிரச்சனையில் இவருக்கு தொடர்பிருக்கிறது.

சுன்னாகம் நீர்ப் பிரச்சனையில் எப்படி  ஐங்கரநேசனுக்கு தொடர்பிருக்கு என்று தயவு செய்து எழுதுங்கோ மீரா. நானும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 

இல்லை நானும் புன்னாலைக்கட்டுவன் கிணத்துக்கும் விக்கியருக்கும் தொடர்பு இருக்கென்று எழுதுவன் - அது என்ன என்று யாரும் கேட்கமுடியாது :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

புத்தன், சுண்ணாக நீர் பிரச்சனை எழுந்த வேளையில் நான் இவர் தொடர்பாக எழுதிய போது, யாழ்கள உறவு(பெயர் ஞாபகத்தில் இல்லை) என்னிலும் பார்க்க ஐங்கரநேசனுக்கு மண்ணிலும் மக்களிலும் கூடிய அக்கறை இருக்கிறது என்று.

மீண்டும் சொல்கிறேன் சுண்ணாக நீர் பிரச்சனையில் இவருக்கு தொடர்பிருக்கிறது.

பெரிய  மனிதர்கள் தான்

நாட்டுப்பற்றாளர்கள் தான்

ஆனால் வித்தியா கொலையில்  வி.ரி.  தமிழ் மாறனுக்கும்

சுண்ணாக நீர் பிரச்சனை பிரச்சினையில் ஐங்கரநேசனுக்கும்

தொடர்பிருக்கிறது

விசாரணைகளில் அவை தெரிய  வரும்

அதுவரை தேவையற்றவற்றை  ஆதாரமற்றவற்றை பேசாமல் இருப்பதே நல்லது.

 

ஐங்கரநேசன் ஒப்பாரிவைப்பதில் பிரயோசனம் இல்லை!
செய்த தவறுகளை ஏறுக்கொண்டு திருந்திவாழ முயற்சிப்பதே தமிழினத்துக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

சுன்னாகம் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக ,இந்த பேட்டியில் இவர்கள் இருவரும் பகிரங்கமாக முதலமைச்சர் விக்கியை குற்றம் சொல்கின்றார்கள் ,இவருக்கு யார் விசாரணை குழுவை நியமிப்பது ?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Gari said:

சுன்னாகம் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக ,இந்த பேட்டியில் இவர்கள் இருவரும் பகிரங்கமாக முதலமைச்சர் விக்கியை குற்றம் சொல்கின்றார்கள் ,இவருக்கு யார் விசாரணை குழுவை நியமிப்பது ?

சம்பத்துக்கு எதிராக நான் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைக்கிறன், நீங்கள் விசாரணை குழுவை நியமிப்பீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.