Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சத்திரச் சந்திக்கு அருகில் நவீன அங்காடித் தொகுதி ரூ.1000 மில்லியன் ஒதுக்கீட்டில் அமைப்பதற்கு நேற்று அனுமதி

Featured Replies

சத்­தி­ரச் சந்­திக்கு அரு­கில் நவீன அங்­கா­டித் தொகுதி

ரூ.1000 மில்­லி­யன் ஒதுக்­கீட்­டில் அமைப்­ப­தற்கு நேற்று அனு­மதி

 
சத்­தி­ரச் சந்­திக்கு அரு­கில் நவீன அங்­கா­டித் தொகுதி
 

கொழும்பு அர­சின் பாதீட்­டில் வடக்கு மாகா­ணத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி­யில், யாழ்ப்­பா­ணம் சத்­தி­ரச் சந்­திக்கு அண்­மை­யில் நவீன அடுக்­கு­மாடி அங்­கா­டித் தொகுதி அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

செம்­ம­ணி­யில் அமைப்­ப­தற்கு முன்­னர் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­போ­தும், தற்­போது சந்­தி­ரச் சந்­திக்குத் திட்டம் மாற்­றப்­பட்­டுள்­ளது. மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற கூட்­டத்­தில் அதற்­கான அனு­ம­தி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு அர­சின் 2017ஆம் ஆண்­டுக்­கான பாதீட்­டில், வடக்கு மாகா­ணத்­தில் நவீன அடுக்­கு­மாடி அங்­கா­டித் தொகுதி அமைப்­ப­தற்கு ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணத்­தில் அதனை நிறுவ முடிவு செய்­யப்­பட்­டது.

ஏப்­ரல் மாதம், இதனை அமைப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றி­ருந்­தது. செம்­ம­ணிப் பகு­தி­யில் நிறு­வ­லாம் என்று ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இடத்­தின் தூரம், அந்த இடத்­தில் பல மாடி­கள் அமைப்­ப­தற்­கு­ரிய தரைத்­தன்மை இல்­லாமை என்­பன கவ­னத்­தில் எடுக்­கப்­பட்டு மாற்று இடம் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.

யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் புதிய இடத்­தைத் தேர்வு செய்­வ­தற்­கான கூட்­டம் நடந்­தது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா, வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண சபை­உ­றுப்­பி­னர்­க­ளான விந்­தன் கன­க­ரட்­ணம், அ.பரஞ்­சோதி ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் பல்­வேறு இடங்­க­ளின் பெயர்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன. இறு­தி­யில் யாழ்ப்­பாண நக­ரில், சத்­தி­ரச் சந்­திக்கு அண்­மை­யா­க­வுள்ள பிர­தே­சம் தெரிவு செய்­யப்­பட்­டது. சத்­தி­ரச் சந்­திப் பகு­தி­யில் ஆல­யம் அமைந்­துள்ள சூழலை அண்­மித்த 1.5 ஏக்­கர் நிலப் பரப்­பில் நவீன அடுக்­கு­மாடி அங்­கா­டித் தொகுதி அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

http://uthayandaily.com/story/10990.html

  • கருத்துக்கள உறவுகள்

தூர நோக்கு இருந்தால், யாழ்பாணத்தில் இருந்து, வைத்திய சாலை, இந்த அங்காடி சகலத்தினையும் பக்கத்திலுள்ள மண்டைதீவு பகுதிக்கு கொண்டு செல்வதுடன், பண்ணைக்கு சமாந்திரமாக, இன்னுமொரு பாதையும் அமைத்தால், எதிர்காலத்தில் வரக் கூடிய இட நெருக்கடிகளை சமாளிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

1 hour ago, Nathamuni said:

தூர நோக்கு இருந்தால், யாழ்பாணத்தில் இருந்து, வைத்திய சாலை, இந்த அங்காடி சகலத்தினையும் பக்கத்திலுள்ள மண்டைதீவு பகுதிக்கு கொண்டு செல்வதுடன், பண்ணைக்கு சமாந்திரமாக, இன்னுமொரு பாதையும் அமைத்தால், எதிர்காலத்தில் வரக் கூடிய இட நெருக்கடிகளை சமாளிக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பர்களாக

இதன் மூலம் எமது கடல் நீர் பகுதிகளும் அபிவிருத்தியும் மக்கள் பாவனைக்கும் வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Nathamuni said:

தூர நோக்கு இருந்தால், யாழ்பாணத்தில் இருந்து, வைத்திய சாலை, இந்த அங்காடி சகலத்தினையும் பக்கத்திலுள்ள மண்டைதீவு பகுதிக்கு கொண்டு செல்வதுடன், பண்ணைக்கு சமாந்திரமாக, இன்னுமொரு பாதையும் அமைத்தால், எதிர்காலத்தில் வரக் கூடிய இட நெருக்கடிகளை சமாளிக்கலாம்.

தூரநோக்கு பார்வை எங்கடை அரிசியல் தலைவர்களிட்டை இருக்குமெண்டால் ஏன் நாங்கள் ஊர்விட்டு ஊர் ஒட வேண்டி வருது?

8 hours ago, Nathamuni said:

தூர நோக்கு இருந்தால், யாழ்பாணத்தில் இருந்து, வைத்திய சாலை, இந்த அங்காடி சகலத்தினையும் பக்கத்திலுள்ள மண்டைதீவு பகுதிக்கு கொண்டு செல்வதுடன், பண்ணைக்கு சமாந்திரமாக, இன்னுமொரு பாதையும் அமைத்தால், எதிர்காலத்தில் வரக் கூடிய இட நெருக்கடிகளை சமாளிக்கலாம்.

யாழ் நகரத்துடன் ஒரே ஒரு தரை வழிப் பாலத்தினூடாக இணைக்கப்பட்டிருக்கும் மண்டை தீவில் கொண்டு போய் யாழ் வைத்தியசாலையை வைப்பதால் என்ன பயன் கிடைக்கும் நாதம்ஸ்? யாழ் வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாகவும் இருப்பதால் இப்படி மண்டைதீவில் கொண்டு போய் வைத்தால் பல்கலைகழக மருத்துவபீட மாணவர்களுக்கு எந்தவிதத்தில் அனுகூலமகா இருக்கும்? கொஞ்சம் விளக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

யாழ் நகரத்துடன் ஒரே ஒரு தரை வழிப் பாலத்தினூடாக இணைக்கப்பட்டிருக்கும் மண்டை தீவில் கொண்டு போய் யாழ் வைத்தியசாலையை வைப்பதால் என்ன பயன் கிடைக்கும் நாதம்ஸ்? யாழ் வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாகவும் இருப்பதால் இப்படி மண்டைதீவில் கொண்டு போய் வைத்தால் பல்கலைகழக மருத்துவபீட மாணவர்களுக்கு எந்தவிதத்தில் அனுகூலமகா இருக்கும்? கொஞ்சம் விளக்கவும்

மண்டைதீவுக்கு கொண்டு போகலாமா தெரியவில்லை 
ஆனால் இப்போ இருக்கும் இடத்தில் இருந்து இதை நகர்த்த வேண்டும் என்ற எண்ணம் 
எனக்கு  1990களிலேயே இருந்தது. மிகவும் நெரிசலான போக்குவரத்து மிகுந்த 
இடத்தில் இது அமைந்து இருப்பதால் பல வித அவ்சௌவகாரியங்கள் உண்டு.
ஒரு ஆம்புலன்ஸ்  வண்டி கூட குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையை அடைய முடியவில்லை. 
தவிர மருத்துவ மனைக்கு சீரான காற்று ஓட்டம் இல்லை 
எந்த நேரமும் வாகனங்களின் ஹார்ன் சத்தம் .. நோயாளிகளுக்கு தகுந்த 
அமைதியான சூழல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

யாழ் நகரத்துடன் ஒரே ஒரு தரை வழிப் பாலத்தினூடாக இணைக்கப்பட்டிருக்கும் மண்டை தீவில் கொண்டு போய் யாழ் வைத்தியசாலையை வைப்பதால் என்ன பயன் கிடைக்கும் நாதம்ஸ்? யாழ் வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாகவும் இருப்பதால் இப்படி மண்டைதீவில் கொண்டு போய் வைத்தால் பல்கலைகழக மருத்துவபீட மாணவர்களுக்கு எந்தவிதத்தில் அனுகூலமகா இருக்கும்? கொஞ்சம் விளக்கவும்

வெளிநாடு வாழ் உங்களிடம் இதனை எதிர்பார்க்க வில்லை.

திணறும், திணறப் போகும் நகரத்தின் மத்தியில் வைத்தியசாலை...? சரியானது தானோ ? 

மண்டைதீவு, 2 மைல்கல் கூட இல்லை. தனிப் பாதை ஒன்று மூலம்.. இன்னும் சரியாக திட்டமிடடால், மன்னார், பூநகரி போன்ற பகுதிகளில் இருந்தே மக்கள் படகு அல்லது புதிய பாதைகள் மூலம் வருவது  இலகு.

மக்கள் குறைவான பிரதேசங்களுக்கு அலுவலங்களை, நகர்த்தி புதிய ஊர்களை, வியாபார மையங்களை அமைக்க வேண்டும்.

இன்னும் சொல்ல்வதனால், வளமான மண்ணுள்ள பலாலி பகுதியில் இருந்து விமான நிலையத்தினை, வறண்ட தீவுப் பகுதிக்கு கொண்டு போக வேண்டும். இந்த கோரிக்கை முன்னரே வந்தது.

ஒரு சரியான தூர நோக்குள்ள அரசியல் தலைமை தான் தேவை.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மண்டைதீவு ,அங்கால சாட்டி கடற்கரை எல்லாம் கொஞ்சம் சுத்தமான இடங்கள். அங்கு வைத்தியசாலை வந்தால் நாறிடும்....!

1 hour ago, Nathamuni said:

வெளிநாடு வாழ் உங்களிடம் இதனை எதிர்பார்க்க வில்லை.

திணறும், திணறப் போகும் நகரத்தின் மத்தியில் வைத்தியசாலை...? சரியானது தானோ ? 

மண்டைதீவு, 2 மைல்கல் கூட இல்லை. தனிப் பாதை ஒன்று மூலம்.. இன்னும் சரியாக திட்டமிடடால், மன்னார், பூநகரி போன்ற பகுதிகளில் இருந்தே மக்கள் படகு அல்லது புதிய பாதைகள் மூலம் வருவது  இலகு.

மக்கள் குறைவான பிரதேசங்களுக்கு அலுவலங்களை, நகர்த்தி புதிய ஊர்களை, வியாபார மையங்களை அமைக்க வேண்டும்.

இன்னும் சொல்ல்வதனால், வளமான மண்ணுள்ள பலாலி பகுதியில் இருந்து விமான நிலையத்தினை, வறண்ட தீவுப் பகுதிக்கு கொண்டு போக வேண்டும். இந்த கோரிக்கை முன்னரே வந்தது.

ஒரு சரியான தூர நோக்குள்ள அரசியல் தலைமை தான் தேவை.
 

நகரப் பகுதியின் நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் செய்ய வேண்டியது யாழ் நகரப் பகுதியின் மத்தியில் இன்னும் இருக்கும் பேரூந்து நிலையத்தினை வேறு இடங்களுக்கு நகர்த்துவதுடன் நகரத்தின் மத்தியில் இருக்கும் சந்தையை மீன் சந்தைக்கு அருகில் பண்ணை பாலம் பக்கம் கொண்டு செல்வது. இப்பவும் படகு வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மன்னார் பூநகரி போன்ற இடங்களில் இருந்து பண்ணை வரைக்கும் படகில் வந்து இறங்கி ஒரு  எட்டு நடந்தால் ஆஸ்பத்திரி வந்து விடும்.

இங்கிலாந்தில் என்ன மாதிரி என்று தெரியாது. இங்கு கனடாவில் ரொரன்டோ வில் இருக்கும் முக்கிய மருத்துவமனைகள் சன நெரிசல் மிக்க இடங்களில் தான் உள்ளது. இதற்கு காரணம் இலகுவாக வந்தடைய கூடிய வழி என்பது மட்டுமல்லாது மருத்துவமனை க்கு உதவ கூடிய போலீஸ், தீயணைப்பு, மின் விநியோகம் போன்றவையும் அருகில் இருப்பதனால்.

மற்றப்படி பலாலி விமான நிலையத்தினை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பான விடயம் கண்டிப்பாக கவனத்தில் மீண்டும் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் கார்கில்ஸ் போன்ற அங்காடிகள் மற்றும் திரையரங்குகளும் நகரத்தின் மத்திய பிரதேசத்தில் இருந்து நகர்த்தப்பட வேண்டும்.

51 minutes ago, suvy said:

மண்டைதீவு ,அங்கால சாட்டி கடற்கரை எல்லாம் கொஞ்சம் சுத்தமான இடங்கள். அங்கு வைத்தியசாலை வந்தால் நாறிடும்....!

பெரிய மழை அடிக்கும் காலங்களில் மண்டை தீவில் வெள்ளம் பெரும் பிரச்சனையாகி விடுவதுண்டு. அதன் நில அமைப்பு அவ்வாறு தான் இருக்கு . சாட்டி/வெள்ளக்கடற்கரை  எப்பவும் துப்பரவான இடம். என் அப்பாவின் சொந்த ஊர் வேலணை என்பதால் இந்த பகுதிகளுக்கு பல தடவை போயுள்ளேன் மண்டைதீவில் சில மறக்க முடியாத துயர நிகழ்வுகளும் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

நகரப் பகுதியின் நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் செய்ய வேண்டியது யாழ் நகரப் பகுதியின் மத்தியில் இன்னும் இருக்கும் பேரூந்து நிலையத்தினை வேறு இடங்களுக்கு நகர்த்துவதுடன் நகரத்தின் மத்தியில் இருக்கும் சந்தையை மீன் சந்தைக்கு அருகில் பண்ணை பாலம் பக்கம் கொண்டு செல்வது. இப்பவும் படகு வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் மன்னார் பூநகரி போன்ற இடங்களில் இருந்து பண்ணை வரைக்கும் படகில் வந்து இறங்கி ஒரு  எட்டு நடந்தால் ஆஸ்பத்திரி வந்து விடும்.

இங்கிலாந்தில் என்ன மாதிரி என்று தெரியாது. இங்கு கனடாவில் ரொரன்டோ வில் இருக்கும் முக்கிய மருத்துவமனைகள் சன நெரிசல் மிக்க இடங்களில் தான் உள்ளது. இதற்கு காரணம் இலகுவாக வந்தடைய கூடிய வழி என்பது மட்டுமல்லாது மருத்துவமனை க்கு உதவ கூடிய போலீஸ், தீயணைப்பு, மின் விநியோகம் போன்றவையும் அருகில் இருப்பதனால்.

மற்றப்படி பலாலி விமான நிலையத்தினை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பான விடயம் கண்டிப்பாக கவனத்தில் மீண்டும் எடுக்கப்பட வேண்டும். அத்துடன் கார்கில்ஸ் போன்ற அங்காடிகள் மற்றும் திரையரங்குகளும் நகரத்தின் மத்திய பிரதேசத்தில் இருந்து நகர்த்தப்பட வேண்டும்.

பெரிய மழை அடிக்கும் காலங்களில் மண்டை தீவில் வெள்ளம் பெரும் பிரச்சனையாகி விடுவதுண்டு. அதன் நில அமைப்பு அவ்வாறு தான் இருக்கு . சாட்டி/வெள்ளக்கடற்கரை  எப்பவும் துப்பரவான இடம். என் அப்பாவின் சொந்த ஊர் வேலணை என்பதால் இந்த பகுதிகளுக்கு பல தடவை போயுள்ளேன் மண்டைதீவில் சில மறக்க முடியாத துயர நிகழ்வுகளும் உள்ளன.

அட, நம்ம 'படலை கட்டி வேலணைக்' கோஸ்டி.... 

இவை ஒரு Wish list. அத்துறை சார் நிபுணர்களே ஆய்வு செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அட, நம்ம 'படலை கட்டி வேலணைக்' கோஸ்டி.... 

இவை ஒரு Wish list. அத்துறை சார் நிபுணர்களே ஆய்வு செய்ய முடியும்.

ஆமோதிக்கின்றேன்:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 12/07/2017 at 6:38 PM, நிழலி said:

பெரிய மழை அடிக்கும் காலங்களில் மண்டை தீவில் வெள்ளம் பெரும் பிரச்சனையாகி விடுவதுண்டு. அதன் நில அமைப்பு அவ்வாறு தான் இருக்கு . சாட்டி/வெள்ளக்கடற்கரை  எப்பவும் துப்பரவான இடம். என் அப்பாவின் சொந்த ஊர் வேலணை என்பதால் இந்த பகுதிகளுக்கு பல தடவை போயுள்ளேன் மண்டைதீவில் சில மறக்க முடியாத துயர நிகழ்வுகளும் உள்ளன.

தமிழக நீர்வள பெருக்கம் குறித்து சீமான் சொல்லி வருவது குடாநாடு, முக்கியமாக தீவுப் பகுதிக்கு பொருத்தம்.

பெரு மழை, காலங்களில் வரும் அபரிமிதமான தண்ணியை, குளம், குட்டை என்று வெட்டி உருவாக்கி சேமிக்காது, கடலில் கலக்க விட்டு, பின்னர் வெயில் காலங்களில் குடங்களுடன் தண்ணீருக்கு அலையும் அவலம்.

சிங்கள அரசுக்கு அக்கறை இல்லை. நமது மாகாண அரசாவது இது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.