Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு தீ வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய முஸ்லிம் குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்ட கூழாமுறிப்பு வனப்பகுதிக்கு தீ வைப்பு

Published by Gnanaprabu on 2017-07-20 16:57:2

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று(19) இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.  

Local_News_copy.jpg

குறித்த பகுதியில் வனங்களை அழித்து புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் இளைஞர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்பாட்டத்தினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.அதாவது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த குறித்த பிரதேசம் இந்த திட்டமிட்ட குடியேற்றம் அமைக்கப்படுவதால் அழிந்துபோகும் அபாயத்துக்குள்ளாகும் எனவும் இயற்கை இருப்பை இல்லாதொழிக்கும்   நடவடிக்கையில் எவர் ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தினை  மேற்கொண்டிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில்  குறித்த பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தேக்குமர கன்றுகள் நடப்படுள்ள பிரதேசம் விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது .இந்த தீ வைப்பால் 10 ஏக்கருக்கு மேற்பட்ட வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.இது திட்டமிட்டு சில விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்குமென பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டனர். 

http://www.virakesari.lk/article/22116

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் குடியேற்றப் பகுதிக்கு, தமிழ் விஷமிகள் தீ வைப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்க்கென அடையாளப்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (19) இரவு நடைபெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வனங்களை அழித்து புதிய முஸ்லிம் குடியேற்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் இளைஞர்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்பாட்டத்தினை குறித்த பகுதியில் மேற்கொண்டிருந்தனர்.அதாவது நேர்த்தியாக உருவாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த குறித்த பிரதேசம் இந்த திட்டமிட்ட குடியேற்றம் அமைக்கப்படுவதால் அழிந்துபோகும் அபாயத்துக்குள்ளாகும் எனவும் இயற்கை இருப்பை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் எவர் ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று சில நாட்களே ஆன நிலையில் குறித்த பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தேக்குமர கன்றுகள் நடப்படுள்ள பிரதேசம் விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது .இந்த தீ வைப்பால் 10 ஏக்கருக்கு மேற்பட்ட வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.இது திட்டமிட்டு சில விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்குமென பிரதேச மக்கள் ஆத்திரம் வெளியிட்டனர்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=149914 .


 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா,

எல்லாம் பிளான் பண்ணியே மாதிரியே காடழிப்பு நடக்குது.

இனி குடிசைகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் "தமிழ் விஷமிகள் தீ வைப்பு..."
விசாரணை , கைது, சாட்சியங்கள்  எதுவுமே இல்லாமல் காக்காமார் கழுவி ஊத்துவான்கள்.
அக்குறணையில்  "கென கெட்ட கூறு கழுதைகள்" இதுவும் கூட நல்ல தலைப்புதான்!!

றிசாட் பதியுதீனின் கைக்கூலிகளால் குடியேற்றம் செய்யப்படவிருந்த 100 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

றிசாட் பதியுதீனின் கைக்கூலிகளால் குடியேற்றம் செய்யப்படவிருந்த 100 ஏக்கர் காடு எரிந்து நாசம்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்றுப் பிரசேதத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு பிரதேசத்தில் 177 ஏக்கர் காட்டினை அழித்து 1444 முஸ்லிம்களைக் குடியேற்றும் நடவடிக்கை அமைச்சர் றிசாட் பதியுதீனால் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர் அமைப்பால் போராட்டம் நிறைவுபெற்ற இடத்திலுள்ள 100 ஏக்கர் காட்டினை றிசாட்பதியுதீனின் கைக்கூலிகள் எரித்து நாசமாக்கியுள்ளனர்.

இப்பிரதேசம் விடுதலைப் புலிகளால் தேக்கு மரக்கன்றுகள் நாட்டப்பட்டு மிகவும் நேர்த்தியாகப் பேணிப் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாகும்.

http://thuliyam.com/?p=74019

Quote

"முஸ்லிம் குடியேற்றப் பகுதிக்கு தமிழ் விஷமிகள் தீ வைப்பு"

 

தான் கட்டிக் காக்கும் பகுதியை தீ வைத்து அழிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை. இது யாரால் ஏன் செய்யப் பட்டிருக்கிறது என்பது எவருக்கும் தெளிவாகப் புரியும்.

Edited by Alternative

2 minutes ago, Alternative said:

 

தான் கட்டிக் காக்கும் பகுதியை தீ வைத்து அழிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு இல்லை. இது யாரால் ஏன் செய்யப் பட்டிருக்கிறது என்பது எவருக்கும் தெளிவாகப் புரியும்.

குடியேற்றம் அமைக்க சுலபமாக செய்யபட்டுளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.