Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(படங்கள்) காத்தான்குடியில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 23 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு இலங்கை விமானப் படை தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் காத்தான்குடி விஜயம் செய்ததுடன், அவருக்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்டார். இதன் போது கிழக்கு மாகாணத்திற்கும் காத்தான்குடி நகரத்திற்கும் முதற்தடவையாக வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்திற்;கு பொன்னாடை போர்த்தப்பட்டு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு இலங்கை மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு கெம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்,அஷ்ஷெய்யித் மசூர் மௌலானா,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து காத்தான்குடி பூர்வீக நூதனசாலை,ரிதிதென்னையில் அமைக்கப்பட்டுவரும்  மட்டக்களப்பு கெம்பஸ் ஆகியவற்றுக்கும் விஜயம் இளவரசர் செய்தார். ரிதிதென்னை மட்டக்களப்பு கெம்பஸூக்கு விஜயம் செய்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசருக்கு மட்டக்களப்பு கெம்பஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=150378 .

 

 

 

1-DSC_0028-1500885988.jpg

DSC_0283.JPG?resize=596%2C397&ssl=1

7-DSC_0013.JPG?resize=596%2C434&ssl=1

2-DSC_0178.JPG?resize=596%2C397&ssl=1

DSC_0073.JPG?resize=596%2C384&ssl=1

DSC_0200.JPG?resize=596%2C397&ssl=1

 

மத்திய கிழக்கை, குறிப்பா சிரியாவை, ரொம்ப அபிவிருத்தி பண்ணிட்டாங்க இந்த வகாபிகள். இனி ஆசியா தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் ஒருபக்கம். இந்தியாக்காரன் மறுபக்கம், அராபியன் வேறு ஒரு பக்கம். ஜப்பான் காரன் பிறிதொருபக்கம். அமெரிக்கன் மேலாலே எண்டால் பாக்கிஸ்தான் கீழால...

எங்க போய் நிறுத்தப் போறாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சீனாக்காரன் ஒருபக்கம். இந்தியாக்காரன் மறுபக்கம், அராபியன் வேறு ஒரு பக்கம். ஜப்பான் காரன் பிறிதொருபக்கம். அமெரிக்கன் மேலாலே எண்டால் பாக்கிஸ்தான் கீழால...

எங்க போய் நிறுத்தப் போறாங்களோ?

இனி  மன்னார்தான் ....

1 hour ago, விசுகு said:

இனி  மன்னார்தான் ....

மன்னாரில கைவக்க ஏலாது, வத்திக்கானே துணைக்கு வரும், முல்லையில் கை வைத்து அகபட்டாச்சு.

அடுத்து கிளிநொச்சி என்று நினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Dash said:

மன்னாரில கைவக்க ஏலாது, வத்திக்கானே துணைக்கு வரும், முல்லையில் கை வைத்து அகபட்டாச்சு.

அடுத்து கிளிநொச்சி என்று நினைக்கிறன்

எங்களுக்கு எல்லாம் ஓகே.

ஆனால் ஒண்டு......

எங்கடை பதவியிலை/கதிரையிலை கைவைக்காட்டில் சரி...:grin:

Bildergebnis für sampanthan sumanthiran maavai

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கட இடத்தில தமிழும் இல்ல.. சிங்களமும் இல்லை. இங்கிலீசும் அரபிக்கும்.

சவுதி நன்கு திட்டமிட்டு.. தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை தமிழர்கள் நிலத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைப் பயன்படுத்தி.. உள் நுழைத்து வருகிறது.

இதன் பலாபலன் நிச்சயம் தமிழ் மக்களுக்கு மிக ஆபத்தானதாகவே இருக்கும்.

சவுதி உலகில் மனித உரிமைகளை மதிக்காத ஒரு கேவலமான.. மிலேச்சத்தனமான கடும் போக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் மிதக்கும் நாடாகும்.

இந்த நாட்டின் ஊடுருவல்.. தமிழர் பகுதிகளில் நிகழ்வது தமிழ் மக்களுக்கே ஆபத்தாகும். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7-DSC_0013.JPG?resize=596%2C434&ssl=1

பல்லாயிரக்கணக்கில் சிரியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறும் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வக்கில்லை.
இதற்குள் கோலாட்டம் குச்சியாட்டத்துடன் வரவேற்பு நடத்தும் நானாக்கள்.

45 minutes ago, குமாரசாமி said:

7-DSC_0013.JPG?resize=596%2C434&ssl=1

பல்லாயிரக்கணக்கில் சிரியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறும் முஸ்லிம்களுக்கு உதவி செய்ய வக்கில்லை.
இதற்குள் கோலாட்டம் குச்சியாட்டத்துடன் வரவேற்பு நடத்தும் நானாக்கள்.

சவுதிகாரன் துணைக்கு போவன் ஆனால் பிணைக்கு போக மாட்டான், இது எங்கட உள்ளூர்  நானாமாருக்கு விளங்கவில்லை.

உந்த இடத்துக்கு புது பல சேனா அல்லது RSS காரண் வந்தால் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி விடுவாங்கள்.

இஸ்ரேல் பக்கம் எட்டியும் பார்க்க மாடீனம்.

மண் குதிரையை நம்பி பந்தயத்துக்க்ய் வெளிக்கிடீனம்.

ஆனால் ரணில் மாமா இவர்களுக்கு புதிய அரசியல் யாப்பில் பெரிய ஆப்பு இருக்கு.

 

2 hours ago, nedukkalapoovan said:

அவங்கட இடத்தில தமிழும் இல்ல.. சிங்களமும் இல்லை. இங்கிலீசும் அரபிக்கும்.

சவுதி நன்கு திட்டமிட்டு.. தீவிர இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை தமிழர்கள் நிலத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைப் பயன்படுத்தி.. உள் நுழைத்து வருகிறது.

இதன் பலாபலன் நிச்சயம் தமிழ் மக்களுக்கு மிக ஆபத்தானதாகவே இருக்கும்.

சவுதி உலகில் மனித உரிமைகளை மதிக்காத ஒரு கேவலமான.. மிலேச்சத்தனமான கடும் போக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் மிதக்கும் நாடாகும்.

இந்த நாட்டின் ஊடுருவல்.. தமிழர் பகுதிகளில் நிகழ்வது தமிழ் மக்களுக்கே ஆபத்தாகும். :rolleyes:

அப்ப இதை தடுப்பது யார்??

தாயகத்தில் உள்ள தமிழ் மக்கல் எந்த அச்சமும் இன்றி  போராடீனம் !!

புலம் பெயர்ந்தார்கள் ஏதாவது பங்களிப்பு ??

2 hours ago, குமாரசாமி said:

எங்களுக்கு எல்லாம் ஓகே.

ஆனால் ஒண்டு......

எங்கடை பதவியிலை/கதிரையிலை கைவைக்காட்டில் சரி...:grin:

Bildergebnis für sampanthan sumanthiran maavai

விக்கி தான் இந்த விடயத்தில் இருக்கமாக நின்று கணிசமான வெற்றியையும் பெற்று இருக்கிறார்.

 

மிச்ச மூன்றும் தமிழனுக்கு வடக்கு கிழக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொன்னாலும் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் முதலமைச்சர் நிதியம் அமைத்து வெளிநாடு பணம் நேரடியாக பெற முடியாது. கிழக்கில் இந்த ஷேக்குகளையும், சவூதி இளவரசர்களிடம் இருந்து பணம் எப்படி வருகிறது? இந்த பணம் இலங்கை வழியே.... சிரியா போகாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.