Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு

Featured Replies

நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு

 
நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு
 

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தே நபர் இன்று காலை 8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்சரணடைந்துள்ளார்.

அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

http://uthayandaily.com/story/13666.html

  • தொடங்கியவர்

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

nallur.jpg

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா . இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்வாறு சரணடைந்த நபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் எனவும்  39 வயதான சிவராசா ஜெயந்தன் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 1994ஆம் ஆண்டு 16 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துக்கொண்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

http://www.virakesari.lk/article/22303

நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகம்! யாழ். பொலிஸில் சரணடைந்தவரின் பின்னணி என்ன?

யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று பொலிஸாரிடம் சரணடைந்திருந்தார்.

பொலிஸாரினால் தீவிரமான தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

39 வயதான சிவராசா ஜயந்தன் என்ற பிரதான சந்தேகநபரே இவ்வாறு சரணடைந்துள்ளார்.

யாழ். நல்லூர் இவருடைய சொந்த இடம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர் 1994ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார். அதன் பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகியிருந்தார்.

2012ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவராசா ஜயந்தன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவ்வாறு பிணையிலுள்ள நிலையிலேயே அவர் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த நபருக்கு முதலாவது திருமணம் மண்கும்பான் என்ற இடத்திலும், இரண்டாவது திருமணம் புங்குடுதீவிலும் நடைபெற்றுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/security/01/153127?ref=home-feed

  • தொடங்கியவர்

சுடச்சொன்னார் சுட்டேன் சந்தேகநபர் வாக்குமூலம்

 
சுடச்சொன்னார் சுட்டேன் சந்தேகநபர் வாக்குமூலம்
 

நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது. இவ்வாறு இன்று காலை சரணடைந்த பிரதான சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://uthayandaily.com/story/13723.html

இவர் நீதிமன்றத்தில் சரணடையாது, போலீசில் சரணடைந்தது மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், இது போலீசாரின் திட்டமிட்ட நாடகம் என்பதை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் அவர் வழங்கியதாக கருதப்படும் வாக்குமூலம் சந்தேகங்களை உறுதிசெய்கிறது. இவர் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்பது சோடிக்கப்பட்ட கதை என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

 நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.

 

  • தொடங்கியவர்

நல்லூர் சூட்டுச் சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

 
நல்லூர் சூட்டுச் சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்
 

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் யாழ். நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன்.

சந்தேக நபர் இன்று நீதிவானின் இல்லத்துக்குப் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டு, முற்படுத்தப்பட்டார். அதன்போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

 

http://uthayandaily.com/story/13862.html

  • தொடங்கியவர்

நல்லூர் சூட்டு சம்பவம் – சரணடைந்தவருக்கு விளக்கமறியல்

a-2-2.png


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யா.நீதவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவு இட்டுள்ளார்.

யாழ்.நீதவானின் வாசஸ்தலத்தில் குறித்த நபரை இன்று மாலை யாழ்.போலீசார் முற்படுத்திய  போது அவரை 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு இட்டார்.

இன்றைய தினம் குறித்த சந்தேக நபர் பதுங்கி இருந்த இடத்திற்கும் அவரை அழைத்து சென்ற போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

அதேவேளை பொலிஸ் விசாரணையில் தன்னுடைய மச்சான் (ஏற்கனவே கைதான நபர்) பொலிசாரின் (நீதிபதியின் மெய்பாதுகாவலர் ) துப்பாக்கியை பறிக்க முடியுமா என சவால் விட்டார் எனவும் அதனாலையே பறித்ததாகவும் அதன் போது அது தவறுதலாக வெடித்து விட்டது  என வாக்கு மூலம் அளித்து இருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

a-1-1.png

http://globaltamilnews.net/archives/34186

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் யாழ்ப்பாண பொலிஸாரினால் தடயங்களை காண்பிப்பதற்காக பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, hasan said:

 நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.

 

பார்த்த, அனுபவித்த சம்பவத்தை ஒருவர் விபரிக்கும் போது எப்படி பொய்யென உங்களால் கூற முடிகிறது. சுட்டவர் போதையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.(எங்களின் பத்திரிகை செய்திகளின் படி). அப்போ ஏன் மெய்பாதுகாவலரை சுட்டார்?? முன்பு கொழுவல் இருந்ததா மெய்பாதுகாவலருடன்?? 

பதட்டமான சூழல் சுட்டவருக்கு தானே இருந்தது. எனவே அவர் எதுவும் செய்திருக்கலாம்??

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, hasan said:

 நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.

 

நீதிபதியின் வாக்குமூலத்தில்  துப்பாக்கியை லோட் பண்ணிய முறையே  ஒரு தேர்ந்த துப்பக்கிதாரியின் கைவண்ணம் என்று கூறியிருக்கிறார் 
ஆனால் சுட்டவர் அது தவறுதலாக வெடித்துள்ளது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் .
சுட்டவர் வாக்குமூலம் எங்கோ நொண்டுகிறதே . லோட் பண்ணியபின் எப்படி துப்பாக்கி தவறுதலாக வெடிக்கும் ....?
லோட் பண்ணுவதே துப்பாக்கியை வெடிக்கத்தானே ...?

  • தொடங்கியவர்

நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: சுவிஸ் குமாருக்கும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பு?

 


நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு: சுவிஸ் குமாருக்கும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் தொடர்பு?
 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸாரிடம் சரணடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர் யாழ். நீதவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செல்வராசா ஜயந்தன் என்ற 39 வயதான நபரே சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபராக அடையாளங்காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சரணடைந்த சந்தர்ப்பத்தில், யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் யாழ். நீதவான் முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தடுப்புக்காவலில் உள்ள சுவிஸ் குமாருக்கும் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதென இன்றைய தினக்குரல் பத்திரிகை செய்தி வௌியிட்டிருந்தது.

இதன் காரணமாகவே நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளதாக தினக்குரல் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியபோது அவர் அதனை மறுத்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் சரத் பிரேமச்சந்திர, உப பொலிஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பூதவுடல் சிலாபம் குமாரகட்டுவ பிரதேசத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் நாளை (26) இடம்பெறவுள்ளன.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட பலர் இன்று காலை அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று பிற்பகல் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சரத் பிரேமச்சந்திரவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/107960/

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்தது யாரோ அப்பாவி.. அவரின் மனைவி சொல்வது தான் உண்மை.

இது நீதிபதியை இலக்கு வைச்சு நடத்தட்ட அரச பயங்கரவாதத் தாக்குதல். அது தோல்வியில் முடிந்ததும்.. பல வகையில்.. அது நிகழ்ந்தது முதல் திசை திருப்பலில் சிங்கள காவற்படையும் அரசும் செயற்பட்டு வருகிறது. இதில மகிந்த ஆட்களின் பின்புலமும் இருக்க வாய்ப்புள்ளது.

ஏலவே யாழ் நீதிமன்றம் மீது ஒட்டுக்குழுக்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தி விட்டு முன்னாள் போராளிகள் மீது பழிபோட்டது போலத்தான் இதுவும். :rolleyes:

  • தொடங்கியவர்

நீதிபதி இளஞ்செழியன் விவகாரம் : பிரதான சந்தேகநபர் சரண்

p14-0de439773d9b25ef38ef705d0f7d95b34289b90b.jpg

 

8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் பாது­கா­வலர் ஒரு­வரின் உயிரைப் பறித்து மற்­றொ­ரு­வ­ருக்கு காயத்தை ஏற்­ப­டுத்­திய துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் யாழ். பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்த நிலையில் நேற்று கைது செய்­யப்பட்டார்.

நேற்று காலை 7.00 மணி­ய­ளவில் 39 வய­து­டைய செல்­வ­ராசா ஜயந்தன் எனும் குறித்த சந்­தேக நபர் சர­ண­டைந்­த­தா­கவும் அத­னை­ய­டுத்து அவரைக் கைது செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர தெரி­வித்தார்.

இந் நிலையில் கைது செய்­யப்பட்ட சந்­தேக நப­ரிடம் யாழ். தலை­மை­யக

பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி காமினி ஹேவா­வித்­தா­ரன தலைமை­யி­லான சிறப்புக் குழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

நல்லூர் கோயில் பகு­தியில் நான் மது­போ­தையில் நின்­றி­ருந்தேன். அப்­போது எனது மச்சான் (ஏற்­க­னவே கைதாகி உள்­ளவர்), உந்தப் பொலிஸை (நீதி­ப­தியின் மெய்ப்­பா­து­கா­வலர்) உன்னால் சுட­மு­டி­யுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவ­ரது பிஸ்­டலை எடுத்தேன். அது சுடு­பட்டு விட்­டது என சந்­தேக நபர் விசா­ர­ணை­களின் போது பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவ­ரது வாக்கு மூலத்தில் உள்ள விட­யங்­களை உறுதி செய்ய தொடர்ந்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பில் 8 வரு­டங்­க­ளாக இணைந்து செயற்­பட்டு ஆயுத பயிற்சி பெற்­ற­வரே பிர­தான சந்­தேக நபர் என்­பது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் சரணடைந்துள்ள பிர­தான சந்­தேக நபர் ஏற்­க­னவே 2012 ஆம் ஆண்டு கோப்பாய் பகு­தியில் இடம்­பெற்ற படு கொலை ஒன்றின் சந்­தேக நபர் எனவும், அது தொடர்பில் அவர் பிணையில் இருந்து வரு­வதும் மேல­திக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் சிறப்புக் குழுவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந்த கொலை தொடர்பில் ஒவ்­வொரு மாதமும் அவர் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் கையொப்­பமி­டு­வதும், எற்­க­னவே கைது செய்­யப்பட்ட இரு­வரும் கூட அந்த கொலை தொடர்­பி­லான சந்­தேக நபர்­களே என்­பதும் விசா­ர­ணைகளில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

 இந்த நிலையில் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகி­யோரின் மேற்­பார்­வையில் மூன்று சிறப்புக் குழுக்கள் விசா­ர­ணை­களை தொடர்­கின்­றன.

 பிர­தான சந்­தேக நபர் கைது செய்­யப்பட்­டுள்ள நிலையில் சந்­தேக நபர் தொடர்பில் பல தக­வல்கள் பொலி­ஸாரால் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

 குறித்த சந்­தேக நபர் 1996 ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­துள்­ளதுடன் அங்கு ஆயுதப் பயிற்­சியைப் பெற்று 2004 ஆம் ஆண்டு வரை அந்த இயக்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­டுள்ளார். பின்னர் அந்த இய­கத்தில் இருந்து வில­கி­யுள்ள அவர் திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ள­தா­கவும், சந்­தேக நப­ருக்கு 6 பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. முதல் மனைவி மூலா­மாக நான்கு பிள்­ளை­களும் இரண்டாம் மனைவி ஊடாக இரு பிள்­ளை­களும் சந்­தேக நப­ருக்கு உள்­ள­தா­கவும் சந்­தேக நபர் தொழில் ரீதியில் பஸ் சார­தி­யாக செயற்­பட்­டுள்­ள­மையும் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

தற்­போது கைது செய்­யப்பட்­டுள்ள சந்­தேக நபரின் சகோ­தரர், உற­வுக்­கா­ரர்­க­ளான 42 வய­தான பால­சிங்கம் மகேந்­திர ராசா, 49 வய­து­டைய செல்­வ­ராசா மகேந்­திரன் ஆகி­யோ­ரிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணைகள் மற்றும் ஏனைய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய மேற்­படி தக­வல்­களை பொலிஸார் சேக­ரித்­துள்­ளனர்.

கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.10 மணி­ய­ளவில் நல்லூர் பகுதியில் இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் பதி­வா­கி­யி­ருந்­தது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.