Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் யாழில் கைது

Featured Replies

பொலிஸார் மீதான வாள்வெட்டு: ஒருவர் கைது?

 
பொலிஸார் மீதான வாள்வெட்டு: ஒருவர் கைது?
 

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும், அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

எனினும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

http://uthayandaily.com/story/15471.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் யாழில் கைது

 

 

யாழ்ப்பாணம் கொக்குவில் நந்தாவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவரை பொலிஸார் சந்தேகத்தில் கைதுசெய்துள்ளனர்.

arrested-handcuffed-police-koppai-jaffna

கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் 20 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரிவிக்கும் பொலிஸார் ஏனையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/22580

சொறிலங்காவின் சிங்கள போலீசாரை நம்ப முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

இது குற்றமும் அவரே குற்றவாளிகளும் அவரே.. கைது செய்வோரும் அவரே.  தென்பகுதியில் இருந்து வரும் குமுறல்களைப் பார்க்க அப்படித்தான் விளங்குது. சில பெரிய ஆட்களின் தேவைக்காக நிகழ்த்தப்படுகிறது.. திட்டமிட்டு.  பலிக்கடா.. மீண்டும்.. தமிழ் இளைஞர்கள். :rolleyes:

தமிழர்களின் கைது புது வடிவத்தில் அரச பயங்கரவாதம்!

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்க இப்படியான நாடகங்கள் தேவை.அவையே தற்போது அரங்கேறுகின்றன.

  • தொடங்கியவர்

கோப்பாயில் பொலிஸார் இருவர் மீது வாள்­வெட்டு சம்­பவம்

 

ஆவா குழுவின் மது உள்­ளிட்ட இருவர் பொலி­ஸாரால் கைது
(எம்.எப்.எம்.பஸீர், எம். நியூட்டன்)

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ ரணை செய்யச் சென்ற போது, இரு பொலி ஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.  

பிர­பல ஆவா குழுவின் மது என அறி­யப்­படும் உறுப்­பினர் உள்­ளிட்ட இரு­வரே நேற்று இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கோப்பாய், யாழ். தலை­மை­யக பொலிஸார் முன்­னெ­டுத்த இரு வேறு நட­வ­டிக்­கை­களின் போது இவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்­க­ளிடம் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.

நல்லூர் சத்­தி­யா­னந்­தன வீதியைச் சேர்ந்த 20 வய­து­டைய மதூ எனப்­படும் சிவ­ராஷா மதுஷன் மற்றும் 23 வய­து­டைய மானிப்பாய் பகு­தியைச் சேர்ந்த விஜ­ய­ரத்னம் சிவராஜ் ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார். மதுவை யாழ். தலமை பொலிஸ் நிலை­யத்தின் சிறப்புக் குழுவும் விஜ­ய­ரத்னம் சிவ­ராஜை கோப்பாய் பொலி­ஸாரும் கைது செய்­த­தாக அவர் மேலும் குறிப்­பிட்டார்.

 முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் யாழில் பொலிஸார் மீதான வாள்­வெட்டு தொடர்பில் அதிர்ச்சித் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார். கைதான இரு சந்­தேக நபர்­க­ளி­டமும் பிரத்­தி­யேக குழுக்கள் தனித்­த­னி­யாக விசா­ர­ணை­களை நடாத்­து­வ­தா­கவும் அவர்­க­ளி­ட­மி­ருந்து முக்­கிய பல தக­வல்கள் பெறப்­பட்­டுள்ள நிலையில் அதனை மையப்­ப­டுத்தி அடுத்த கட்ட விசா­ர­ணை­களை நகர்த்­தி­யுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி தெரி­வித்தார்.

 ஏனைய சந்­தேக நபர்­களைக் கைது செய்ய சிறப்பு திட்டம் வகுக்­கப்­பட்டு 6 குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார். . அதன்­படி இந்த வாள் வெட்டுத் தக­கு­த­லா­னது ஆவா எனும் குழுவின் உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஆயுதக் குழு­வொன்றின் தாக்­குதல் என்­பதை இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் பொலிஸார் உறுதி செய்­து­கொண்­டுள்­ளனர்.

பொலிஸார் மீது தாக்­குதல் நடாத்­திய குழுவில் 15 பேர்­வரை இருந்­துள்­ள­மையை விசா­ர­ணையில் வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்ள பொலிஸார், அந்த குழு­வுக்கு தலைமை தாங்­கி­யவர் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் உறுப்­பினர் என்­பதை அடை­யாளம் கண்­டுள்­ளனர். அத்­துடன் குறித்த பிர­தான சந்­தேக நபர் ஆவா பாதாள உலகக் குழுவின் முக்­கிய உறுப்­பினர் என்­பதும் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்­டோவின் கட்­டுப்­பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்­னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகி­யோரின் மேற்­பார்­வையில் 6 பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளன. அந்த பொலிஸ் குழுக்­களின் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே பல்­வேறு விட­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ள­துடன் பிர­தான சந்­தேக நபர் உள்­ளிட்ட 10 பேர் வரை இது­வரை அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.

  சந்­தேக நபர்­களை கைதுச் செய்­வ­துடன் அவர்கள் பயன்­ப­டுத்­திய ஆயு­தங்­க­ளுடன் மோட்டார் சைக்­கிள்­க­ளையும் கைப்­பற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்ட்­டுள்ள நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக எந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடாத்தி வருகின்றனர். இந் நிலையில் கைதான இரு சந்தேக நபர்களும் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-02#page-1

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல்.. கைதுன்னு செய்தி பெரிசா வரும்.. ஆனால்.. கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி.. கைதின் பின் அவர்கள்.. என்ன ஆனார்கள் என்ற செய்தி வெளில வராது. ஏலவே.. வித்தியா கொலை வழக்கில் மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டவர்களையே.. காப்பாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த சொறீலங்கா காவல்துறை பற்றி உலகம் தெளிவாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம்.

இந்தச் சூழல்களை அதற்கு நாம் பயன்படுத்தத் தவறின்.. சொறீலங்கா அரசும்.. அரச படைகளும்.. இதே தில்லு முல்லு விளையாட்டை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கும். இவர்களின் பொய் நாடகங்களையும்.. நோக்கங்களையும் வெளி உலகம் உணர்ந்து கண்டிக்கும் போது.. இவற்றை கைவிட அல்லது குறைக்க.. அல்லது மாற்று வழிகளைத் தேட சொறீலங்கா அரசும்.. படைகளும் நிற்பந்திக்கப்படும். :rolleyes:

சில முன்னாள் போராளிகளை விலைக்கு வாங்கி வைச்சுக் கொண்டும்.. இந்த நாடகங்களை ஒட்டுக்குழு ஆட்கள் மற்றும் பிற தமக்கு உதவும் புலனாய்வுப் பணியில் இருப்போரையும் வைச்சுக் கொண்டு.. சிங்கள அரசும்.. படையும்.. இவற்றை அரங்கேற்றி வருகிறது.. என்பது தெளிவாகும். இதனை சர்வதேசத்துக்கும் தெளிவு படுத்த வேண்டும். 

பெரும்பாலான முன்னாள் போராளிகள் எனி ஒரு ஆயுதப் போராட்டம் தேவை இல்லை.. அதுவும் தேசிய தலைமையால்.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட பின் என்ற எண்ணத்தோடு தான் உள்ளார்கள். இவர்களின் புனர்வாழ்வு அவர்களை உருப்படியாக சிந்திக்க வைச்சுதோ இல்லையோ.. அவர்களை வழிநடத்திய தலைமை.. ஆயுதங்களை மக்களின் எதிர்காலம் கருதி மெளனித்ததை அந்தப் போராளிகள்.. உளமாற ஏற்றுக் கொண்டு சாதாரண சமூக வாழ்வை நிம்மதியாக வாழவே இப்ப பிரியப்படுகிறார்கள். அதிலும் வேண்டும் என்று பொருண்மிய கஸ்டங்களையும்.. இராணுவ நெருக்குவாரங்களையும்.. பாலியல் தொல்லைகளையும் கொடுத்து கெடுத்து வருகிறது.. சொறீலங்கா அரசும்.. படைகளும் அதன் அடிவருடிகளும்.. என்பதை உலகம் உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டியது அவசியமாகும். !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.