Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா.சம்பந்தன் – சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஆரம்பம்

Featured Replies

விக்னேஸ்வரன், சம்பந்தன் திடீர் சந்திப்பு : காரணம் இதுதான்

 
விக்னேஸ்வரன், சம்பந்தன் திடீர் சந்திப்பு :  காரணம்  இதுதான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்குகொள்ளும் அவசர கலந்துரையாடல் இன்று மாலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சித் தலைவர்களும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர்.

வட மாகாண சபையில் அமைச்சரவை தொடர்பில் நிலவிய சர்ச்சை அதன் பின்பு வட மாகாண சபை உறுப்பினர் நியமனம் தொடர்பான சர்ச்சை என தொடர் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நீண்ட எதிர்பார்ப்பின் மத்தியில் குறித்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது. 

மேற்படி சந்திப்பிற்கான ஏற்பாடுகள் நேற்றைய தினம் இரவு கூட்டமைப்பின் தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நீண்ட மனக் கசப்புக்களின் பின்னர் கொழும்பில் கூட்டமைப்பின் தலைவரும் வட மாகாண முதலமைச்சரும் கொழும்பில் சந்தித்திருந்த வேளையில் அதற்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மாலை 4.30ற்கு முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

https://news.ibctamil.com/ta/internal-affairs/Wigneswaran-Sampanthan-sudden-meeting-reason

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரா.சம்பந்தன் – சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஆரம்பம்

 

 
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

 

 

இந்தச் சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறுகின்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

http://newuthayan.com/story/16727.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வடக்கு முதலமைச்சருடனான விசேட சந்திப்பு

இரண்டாம் இணைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

வடக்கு முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்ற குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 

மேலும் புளொட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகைத் தருவதாக அறியமுடிகின்றது.

முதலாம் இணைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று முதலமைச்சரின் அலுவலகத்தில் தற்போது இடம்பெறவுள்ளது.

விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளவுள்ளதோடு தற்போது உறுப்பினர்கள் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/politics/01/154266

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனையுடன் அமைச்சரவை மாற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றது.

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கட்சித்தலைவர்களும், முதலமைச்சரும் தமிழ்மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிபு அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன.
அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது.

அமைச்சரவை நியமனங்களைப்; பொறுத்த மட்டில் அங்கத்துவக்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/16733.html

  • தொடங்கியவர்

முரண்பாடுகளை அகற்றி மக்களுக்கு சேவையாற்ற தயார். சி.வி

IMG_7715-720x450.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முரண்பாடுகளை அகற்றி மக்களுக்கு சேவையாற்ற நாம் தயாராக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று மாலை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் , முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித்தலைவர்களும், இணைந்து தமிழ்மக்களின் நலன்கருதி பின்வரும் தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிவு  அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தை வெளிப்படுத்துகின்றன.

அத்துடன் அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது குறித்த அமைச்சர் எந்த ஒரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது என்பதுடன் அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்த மட்டில் அங்கத்துவக்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்னமும் மாகாண சபையின் காலம் முடிவடைய ஒரு வருட காலமே இருப்பதனால் அந்த கால பகுதிக்குள் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க எங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை அகற்றி சேவையாற்ற உள்ளோம்.

இன்றைய சந்திப்புக்கு சுரேஷ் பிரேமசந்திரன் வரமாட்டார் எனும் நிலையில் தான் இருந்தார். நான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் வந்திருந்தார்.

அத்துடன் இன்றைய சந்திப்பில் ரெலோ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் செல்வம் , புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன்   தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று இனிவரும் காலத்திலும் இதேபோன்று  தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சித்தலைவர்கள் குறுகிய காலத்திற்கு ஒரு தடவை சந்திப்புகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது   என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/35634

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, நவீனன் said:

இரா.சம்பந்தன் – சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஆரம்பம்

 

6 hours ago, நவீனன் said:

வடக்கு முதலமைச்சருடனான விசேட சந்திப்பு

இரண்டாம் இணைப்பு

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

5 hours ago, நவீனன் said:

அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனையுடன் அமைச்சரவை மாற்றம்

 

3 hours ago, நவீனன் said:

முரண்பாடுகளை அகற்றி மக்களுக்கு சேவையாற்ற தயார். சி.வி

 

3 hours ago, நவீனன் said:

இன்னமும் மாகாண சபையின் காலம் முடிவடைய ஒரு வருட காலமே இருப்பதனால் அந்த கால பகுதிக்குள் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க எங்களுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை அகற்றி சேவையாற்ற உள்ளோம்.

DGeoRp-UAAATOae.jpg

 

  • தொடங்கியவர்

முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரத்­தில் முத­ல­மைச்­சர் விடாப்­பிடி

வடக்கு மாகாண அமைச்­ச­ரவை விரை­வில் மாறும்

 
முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரத்­தில் முத­ல­மைச்­சர் விடாப்­பிடி
 

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை விரை­வில் முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உறு­தி­யாக இருக்­கி­றார். அமைச்­ச­ர­வை­யைப் பற்­றிய முடி­வு­க­ளில் எவரது தலை­யீ­டும் இன்றி முடி­வெ­டுக்­கும் உரிமை தனக்கு மட்­டுமே வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளது கூட்­டத்­தில் ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­னார்.

‘‘அமைச்­ச­ரவை மாற்­றம் விரை­வில் இடம்­பெ­றும். அது பகு­தி­யா­கவா, முழு­மை­யா­கவா என்­பது குறித்து இன்­னும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை‘‘ என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்­றி­ரவு தெரி­வித்­தார் முத­ல­மைச்­சர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா, புளொட் தலை­வர் த.சித்­தார்த்­தன், ஈபி­ஆர்­எல்­எவ் தலை­வர் க.சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன், ரெலோ அமைப்­பின் தலை­வர் செல்­வம்­அ­டைக்­க­ல­நா­தன் மற்­றும் செய­லா­ளர் ந.சிறிக்­காந்தா ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு முத­ல­மைச்­ச­ரின் இல்­லத்­தில் நேற்று மாலை 6 மணி­யி­லி­ருந்து இரவு 9.15 மணி வரை­யில் நடை­பெற்­றது.
இந்த நீண்ட சந்­திப்­பின் பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கருத்­துத் தெரி­விப்­பார் என்று கூறி விட்டு எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் புறப்­பட்­டுச் சென்­றார். முத­ல­மைச்­சர் ஊட­கங்­க­ளுக்­குத் தெரி­வித்­த­தா­வது:

இன்­றைய (நேற்­றைய) கூட்­டத்­தில் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் வர­மாட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பி­னும் நான் அவரை வரு­மாறு அழைத்­தேன். அவர் வந்­தார். என் மீது அவர் வைத்­துள்ள மதிப்பை அது காட்­டு­கின்­றது.

கூட்­டத்­தில், தமிழ் மக்­க­ளின் நலன் கரு­திப் பின்­வ­ரும் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளோம். முத­ல­மைச்­சர் தனக்­கி­ருக்­கும் சட்­ட­ரீ­தி­யான தற்­து­ணிபு அதி­கா­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி அமைச்­ச­ரவை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவோ திருத்தி அமைப்­ப­தற்கோ அங்­கத்­து­வக் கட்­சி­கள் சம்­ம­தத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றன.
அமைச்­சர்­கள் மாற்­றப்­பட்­டால் அது குறித்த அமைச்­சர்­கள் குற்­றம் இழைத்­தார்­கள் என்று அர்த்­தப்­ப­டாது.
அமைச்­ச­ரவை நிய­ம­னங்­க­ளைப் பொறுத்­த­மட்­டில் அங்­கத்­து­வக் கட்­சி­க­ளின் ஆலோ­ச­னை­க­ளை­யும் கருத்­தில் எடுத்து அவை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது – என்­றார்.

இதே­வேளை, அமைச்­ச­ர­வை­யைப் பற்றி முடி­வெ­டுக்­கும் உரிமை தனக்கு மட்­டுமே இருக்­க­வேண்­டும் என்­ப­தில் முத­ல­மைச்­சர் விடாப்­பி­டி­யாக இருந்­தார் என்று உத­யன் அறிந்­தது. அதே­நே­ரத்­தில் தனக்கு எதி­ரா­ன­வர்­கள் என்று அவர் கரு­தும் சிலரை எந்­தக் கார­ணம் கொண்­டும் அமைச்­ச­ர­வை­யில் சேர்த்­துக்­கொள்­ள­மாட்­டார் என்­ப­தை­யும் அவர் ஆணித்­த­ர­மாக இந்­தக் கூட்­டத்­தில் எடுத்­து­ரைத்­தார். ‘‘யார் பரிந்­து­ரைத்­தா­லும் அந்த 5 பேரில் எவ­ருக்­கும் அமைச்­சர் பதவி கொடுக்­க­மாட்­டேன்‘‘ என்­றார் அவர்.

இது கூட்­டத்­தில் பலத்த சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது. முதல்­வ­ரின் பிடி­வா­தத்தை அடுத்­தும், அமைச்­ச­ரவை விட­யத்­தில் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் ஆலோ­ச­னையை ஏற்­ப­தற்கு அவர் தயா­ரில்­லாதை அடுத்­தும் அவர் பிடி­வா­தம் பிடிப்­ப­தைப்­போன்றே அமைச்­சர்­களை நிய­மிக்­கும் அவ­ரது உரி­மையை அங்­கீ­க­ரிப்­பது என்று கட்­சி­க­ளின் தலை­வர்­கள் முடி­வெ­டுத்­தார்­கள்.

http://newuthayan.com/story/16772.html

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

இரா.சம்பந்தன் – சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஆரம்பம்

 

 
 
 
 

htp://newuthayan.com/story/16727.html                                                                                                                                            

 பேறு காலத்திலும் சிரமம்பாராது கூட்டத்தில் கலந்துகொண்ட சில தலீவர்களின் ஒற்றுமை கண்டு உள்ளம் பூரிக்கிறது. :cool:

தலீவர்களின் அதிகாரங்கள், அவர்களுக்கு வேண்டியவர்களின் பதவிகள், இவை பற்றியே அவசியமான உரையாடல். :grin:

தமிழர் வாழ்வைச் சீரளிக்கும் அரசின் செயற்பாடுகள், அதனின்றும் மக்களைக் காப்பது எப்படி என்ற பேச்சுக்கள்....

மூச்......... :shocked:                                                                                                              

  • தொடங்கியவர்

பிரச்­சினை இப்­போ­தைக்கு ஓயாது

 

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ரவை விவ­கா­ரத்­தில் தோன்­றி­யுள்ள சர்ச்சை இப்­போ­தைக்கு முடி­வுக்கு வரும்­போல் இல்லை என்று நேற்­றைய கூட்­டத்­தின் பின்­னர் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் பேசிய கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளில் ஒரு­வர் தெரி­வித்­தார்.

சபை­யின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட முத­ல­மைச்­ச­ரின் குழு அளித்த அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் இரு அமைச்­சர்­களை அவர்­க­ளது பத­வி­க­ளைத் தியா­கம் செய்­யு­மாறு முத­ல­மைச்­சர் கோரி­னார். அத­ன­டிப்­ப­டை­யில் விவ­சாய அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான பொ.ஐங்­க­ர­ நே­ச­னும் கல்வி அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான க.குரு­கு­ல­ரா­சா­ வும் தமது பத­வி­க­ளைத் தியா­கம் செய்­த­னர்.

ஏனைய இரு அமைச்சர்­க­ளான சுகா­தார அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கத்­தை­யும் போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் மா.டெனீஸ்­வ­ர­னை­யும் பதவி நீக்­கு­வ­தி­லும் முத­ல­மைச்­சர் தீவி­ர­மாக இருந்­தார். இதற்­காக மற்­றொரு விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தார்.

அதற்­குக் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யது. இதை­ய­டுத்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் ஒன்­றும் கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனி­னும் இறுதி நேரத்­தில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னின் தலை­யீட்டை அடுத்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான தீர்­மா­னம் கைவி­டப்­பட்­டது.

அதன் பின்­ன­ரும் பத­வி­யில் இருந்த அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான விசா­ரணை நடக்­கும் என்று முத­ல­மைச்­சர் அறி­வித்­த­தால் இது ஒரு சர்ச்­சை­யா­கத் தொடர்ந்­தது. அத­னைச் சரி­செய்­வ­தற்­கா­கவே நேற்று சம்­பந்­தர், முத­ல­மைச்­சர் மற்­றும் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் நான்­கி­ன­தும் தலை­வர்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் கூடிக் கலந்­து­ரை­யா­டி­னர்.

இந்­தக் கூட்­டத்­தில் அமைச்­சர்­களை நிய­மிக்­கும் முத­ல­மைச்­ச­ரின் அதி­கா­ரத்­தில் தலை­யீடு செய்­வ­தில்லை என்று கட்­சி­க­ளின் தலை­வர்­கள் இணங்­கி­னர்.

‘‘இறு­தி­யில் இவ்­வா­றா­ன­தொரு இணக்­கம் எட்­டப்­பட்­டது என்­றா­லும் முத­ல­மைச்­ச­ரின் நிலைப்­பாட்­டிற்கு சில கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். வேறு வழி­யில்­லா­மல் அந்த இடத்­தில் அவர்­கள் இணங்­கிப் போயி­ருந்­தா­லும் முழு­ம­ன­தோடு அவர்­கள் இணங்­கி­னார்­கள் என்று சொல்­வ­தற்­கில்லை.

எனவே இந்­தப் பிரச்­சினை இத்­தோடு முடிந்­து­போ­கும் என்று நான் நினைக்­க­வில்லை. அது தொடர்­வ­தற்­கான வாய்ப்­பு­களே இருக்­கின்­றன‘‘ என்று உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார் தலை­வர் ஒரு­வர்.

நேற்­றைய கூட்­டம் தொடர்­பில் உத­யன் அறிந்­த­வை­கள் வரு­மாறு:
ரெலோ அமைப்­பி­னர், தமது கட்­சி­யின் சார்­பில் அமைச்­ச­ர­வை­யில் அங்­கம் வகிக்­கின்ற பா.டெனீஸ்­வ­ரனை நீக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னர்.

அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் பேசப்­பட்­ட­போது, விசா­ர­ணைக் குழு விடு­வித்த இரு அமைச்­சர்­க­ளை­யும் நீக்கி விட்டு, டெனீஸ்­வ­ர­னுக்­குப் பதி­லாக ரெலோ அமைப்பு பிரே­ரிப்­ப­வ­ருக்­கும் மற்­றைய அமைச்­சுப் பத­வியை புளொட்­டுக்­கும் வழங்­கும் முடிவை முத­ல­மைச்­சர் முன்­வைத்­தார். இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சேனா­தி­ராசா இதற்­குக் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளார். தமது கட்­சி­யின் அமைச்­ச­ர­வைப் பிர­தி­நித்­து­வத்தை மாற்றி வழங்­கு­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­டார்.

மாகாண சபை­யில் 15 பேர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கும்­போது அந்­தக் கட்­சிக்கு அமைச்­சர் ஆச­னம் வழங்­கா­மல் விடு­வது மேலும் பிரச்­சி­னையை சிக்­க­லாக்­கும் என்று ரெலோ மற்­றும் புளொட் கட்­சி­யி­னர் கூறி­யுள்­ள­னர்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வர் மாவை.சேனா­தி­ராசா, திரு­மதி அனந்தி சசி­த­ரனை எங்­க­ளது கட்­சி­யின் அங்­கத்­த­வ­ராக இப்­போது கருத வேண்­டாம் என்று கூறி­னார். எங்­கள் கட்­சிக்­கு­ரிய அமைச்­சர் யார் என்­பதை நாம் பிரே­ரிப்­போம் என்று கூறி­யுள்­ளார்.

இதற்கு முத­ல­மைச்­சர், அந்த ஐவ­ரின் (மாகா­ண­ச­பை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் அணி என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வர்­கள்) பெய­ரைத் தந்­தால் அவர்­களை நிய­மிக்­கவே மாட்­டேன் என்று நேர­டி­யா­கச் சொன்­னார்.

விசா­ர­ணைக்­குழு விடு­வித்த இரு அமைச்­சர்­க­ளும் நான் நிய­மிக்­கும் விசா­ர­ணைக்­குழு முன்­பா­கத் தோன்­ற­மாட்­டோம் என்று கூறி­யுள்­ள­னர். அப்­படி அவர்­கள் தோன்­றா­விட்­டால் எனக்கு இருக்­கின்ற அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்தி அவர்­களை நீக்­கு­வேன் என்று கூட்­டத்­தில் ஒரு கட்­டத்­தில் முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி இழைத்த தவ­று­களே இந்­தப் பிரச்­சினை எல்­லா­வற்­றுக்­கும் கார­ணம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். தலை­வர் சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் குற்­றஞ்­சு­மத்­தி­னார்.

http://newuthayan.com/story/16909.html

  • கருத்துக்கள உறவுகள்

எமதினத்தின் அதிகப்படியான உயிரிழப்பினால் உருவானஅதிகார வலுவற்ற மாகாணசபையைத் தமிழினத்தை வலுவிழக்கச்செய்யப் பயன்படுத்துவதில்  இந்திய ச் சிங்களக் கூட்டு வெற்றியடைந்துவருகிறது. ஆனால் மக்கள் நலனறியாது மக்களின் ஈகத்தால் குளிர்காயும் அரசியல்வாதிகள் சொகுசு மகிழுந்துகளில்  ஊர்கோலம் போவதும் உள்ளுக்குள் குத்திமுறிவதுமாக நாட்களைகடத்த  சிங்களம் ஒருபுறமும் முசுலிம்கள் மறுபுறமுமாய் நிலங்களைப் புடுங்கி இனஅழிப்பை நிறைவேற்ற  எதையும் தடுக்காது  தான்தோன்றித்தனமான அரசியல் கூத்தாடுவதற்கா கூட்டமைப்பு. 

On 8/6/2017 at 2:16 AM, நவீனன் said:

முரண்பாடுகளை அகற்றி மக்களுக்கு சேவையாற்ற நாம் தயாராக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு அறிக்கையை விடுவதே கேவலமானது.
மக்களுக்கு சேவை செய்யவே அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முரண்பட இல்லை!

எது எப்பிடியோ ஒரு மாற்றுத் தலைமை வேண்டும் என்று மக்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள்.

தற்போதைய தலைமை உதவாது என்றும் முடிவெடுத்துவிட்டார்கள்!

Edited by போல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.