Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை

Featured Replies

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை

தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் அதிகாரி ப்ரயன் புரக் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை, காணி விடுவிப்பு மற்றும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற தாமதமாகின்றமை என்பன தொடர்பிலும் எதிர்க் கட்சித் தலைவர் அமெரிக்க காங்கிரஸ் அதிகாரிக்கு விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறும் அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/156801?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழுத்தம் கொடுப்பதிருக்கட்டும். நீங்கள் அழுத்தம் திருத்தமா 70 ஆண்டகால எமதின அழிவையும் அலைவையும்  சொல்லுங்க. உறைக்கிறவிதமா.. 
கள்ளன் பொலிஸ்விளையாட்டு இனிஎடுபடுமென்று (தமிழரிடம்) நான்நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும்....அமெரிக்காவும்.....எனும் தலைப்புக்கு...என்ன படம் பொருந்த்தமாக இருக்கும் எனத் தேடிய போது....கிடைத்த  படம்!

நீங்களும் ...ஏதாவது கிடைத்தால் இணைக்கவும்!

 

d-man-pleading-his-boss-illustration-per

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புங்கையூரன் said:

சம்பந்தனும்....அமெரிக்காவும்.....எனும் தலைப்புக்கு...என்ன படம் பொருந்த்தமாக இருக்கும் எனத் தேடிய போது....கிடைத்த  படம்!

நீங்களும் ...ஏதாவது கிடைத்தால் இணைக்கவும்!

Bild könnte enthalten: 1 Person, Nahaufnahme 

Bild könnte enthalten: 1 Person, Text   Bild könnte enthalten: 1 Person, Text  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

பன்னாட்டுச் சமூகம் கடமை தவறமுடியாது

இலங்­கை­யில் மிக­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்ட தமி­ழர் களுக்கு பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஊடாக நீதி கிடைக்­கும் என்று எதிர்­பார்த்­தோம், ஆனால் அது நிறை­வே­ற­வில்லை என்று தனது ஆதங்­கத்தை அமெ­ரிக்­கா­வி­டம் தெரி­வித்­தி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.

நேற்றுத் தன்­னைச் சந்­தித்த அமெ­ரிக்க காங்­கி­ரஸ் சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தார். பன்­னாட்­டுச் சமூ­கம் கைவிட்­ட­போ­திலும், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்­கிற நம்­பிக்­கை­யில் தாம் செயற்­ப­டு­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

ஐ.நா. தீர்­மா­னத்தை இலங்கை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தும் என்­கிற நம்­பிக்கை தனக்கு உள்­ளது என சம்­பந்­தர் தெரி­விக்­கின்­ற­போ­திலும், அது ஒரு அவ­நம்­பிக்கை என்­ப­தையே அவ­ரது கருத்­துக்­கள் காட்­டு­கின்­றன. பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மூல­மாக தமி­ழர்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை என்று அமெ­ரிக்­கர்­க­ளி­டம் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­பதே கொழும்பு மீதான அவ­நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்­து­கி­றது.

கொழும்­பில் ஆட்­சி­யி­லி­ருக்­கும் அர­சு­கள் தமி­ழர்­க­ளுக்கு ஒரு­போ­தும் உரி­மை­க­ளையோ அதி­கா­ரங்­க­ளையோ ஆட்­சி­யில் பங்­கையோ வழங்­கப்­போ­வ­தில்லை என்­கிற உறு­தி­யான நம்­பிக்கை தமி­ழர்­க­ளி­டம் எப்­போ­துமே உண்டு. நெருக்­க­டி­யான கால­கட்­டங்­க­ளில் தமிழ்த் தலை­மை­க­ளைப் பயன் ப­டுத்­தி­விட்டு பின்­னர் தூக்­கி­வீ­சி­வி­டு­வதை கொழும்பு அர­சி­யல் தலை­மை­கள் கலா­தி­கா­ல­மா­கக் கடைப்­பி­டித்து வரு­வ­தால் ஏற்­பட்ட பட்­ட­றிவு அது.

அத­னால்­தான் இந்­தத் தடவை பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மீது அள­வுக்­க­தி­க­மான நம்­பிக்­கை­யைத் தமி­ழர்­க­ளும் தமிழ்த் தலை­மை­க­ளும் கொண்­டி­ருந்­தன. போரின் பின்­னர் இலங்­கை­யின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரம் பன்­னாட்டு அரங்­கில் பேசு­பொ­ரு­ளா­ன­போது அது தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மான நிலமை என்­கிற அனு­மா­னம் எட்­டப்­பட்­டது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் அதன் தமிழ் எதி­ரா­ளி­க­ளும்­கூட, பன்­னாட்டு அரங்­கில் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மா­கக் காணப்­ப­டும் இந்­தச் சூழ்­நி­லை­யைச் சரி­யா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு ஒரு தீர்வை அடைந்­து­வி­ட­வேண்­டும் என்று முனைப்­புக் காட்­டி­னர்.

தமி­ழர்­கள் இலங்­கை­யில் ஒரு தீர்­வைப் பெற்­று­வி­டு­வ­தற்கு இது ஒரு சிறந்த பன்­னாட்­டுச் சூழல் என்று எல்­லோ­ரா­லுமே கணிக்­கப்­பட்­டது. பூகோள அர­சி­ய­லைத் திறம்­ப­டக் கையாள்­வ­தன் மூலம் ஒரு தீர்வை அடைந்­து­விட முடி­யும் என்று, கருத்­து­வே­று­பா­டு­கள் இருந்­தா­லும், கூட்­ட­மைப்­பும் அதன் தமிழ் எதி­ரா­ளி­க­ளும்­கூ­டக் கரு­தி­னர்.

அதன்­படி செயற்­பட்­ட­னர். அத­னால்­தான் ஐ.நா. தீர்­மா­னங்­கள் மீது அள­வுக்­க­தி­க­மான எதிர்­பார்ப்­பு­கள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டன.
மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­ப­டும் தீர்­மா­ னங்­கள் இலங்­கையை நேர­டி­யா­கக் கட்­டுப்­ப­டுத்த மாட்டா என்­பது தெரிந்­தி­ருந்­தா­லும், அதில் தொடர்­பு­ப­டும் சக்­தி­மிக்க நாடு­க­ளின் அணு­கு­மு­றை­யின் மூலம் ஏதோ­வொரு வெளிச்­சம் கிட்­டும் என்ற நம்­பிக்கை இருந்­தது.

இப்­போது அந்த நம்­பிக்கை மெல்ல மெல்­லத் தளர்ந்து வரு­கி­றது. அதன் வெளிப்­பாட்­டையே சம்­பந்­த­னின் கருத்­துக்­கள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. அவர் கொழும்பை நம்­பு­கி­றார் என்று கூறி­னா­லும், பன்­னாட்டு அழுத்­தம் ஒன்றே இலங்­கை­யைச் செயற்­பட வைக்­கும் வழி என்­பதை அமெ­ரிக்­கர்­க­ளுக்­குத் தனது கருத்­துக்­கள் ஊடா­கத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

பன்­னாட்­டுச் சமூ­கம் இந்­தச் செய்­தி­யைச் சரி­வ­ரப் புரிந்­து­ கொண்டு உட­ன­டி­யாக வினை­யாற்­ற­வேண்­டி­யது அவ­சி­யம். ஏனெ­னில் , கொழும்பு அர­சுக்­கும் விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இடை­யி­லான போர் வலுச் சம­நி­லை­யின் இடையே புகுந்து குழப்பி விடு­த­லைப் புலி­களை அழிப்­ப­ தற்­கான அனைத்து உத­வி­க­ளை­யும் கொழும்­புக்கு வழங்­கி­ய­தன் மூலம் தமி­ழர்­க­ளின் இன்­றைய பேரம் பேச­மு­டி­யாத நிலையை உரு­வாக்­கி­ய­தில் பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு மிக முக்­கிய பங்கு இருக்­கி­றது.

எனவே இலங்­கை­யில் நிலை­யான நீடித்த அமை­தியை ஏற்­ப­டுத்­தும் பொறுப்­பும் கட­மை­யும் அதற்கு இருக்­கி­றது. அந்­தக் கட­மை­யில் இருந்து பன்­னாட்­டுச் சமூ­கம் தடு­மா­றக்­கூ­டாது.

கொழும்பு மீது தொடர்ச்­சி­யான அழுத்­தத்­தைக் கொடுப்­ப­தன் மூலமே அத­னைச் சாத்­தி­ய­மாக்க முடி­யும். சம்­பந்­த­ரும் இத­னைத்­தான் பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்­குச் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

http://newuthayan.com/story/24076.html

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கள் நேரில் வந்தால் .........
வாயுக்குள்ளே எடுத்து ஒரு கொழுக்கடடையை விழுங்கிறது 
அடுத்தவன் யாரும் சொல்ல போனால் அவனையும் தடுக்கிறது 

பின்பு அங்கிட்டு இருந்து அறிக்கை விட்டா ...
இப்ப உலகம் இருக்கிற நிலைமையில இவருடைய அறிக்கையைதான் 
அமேரிக்கா பார்த்துக்கொண்டு இருக்கிறது ...

வருகுது வாயிலே ...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 29.8.2017 at 8:36 PM, நவீனன் said:

இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும்: அமெரிக்காவிடம் சம்பந்தன் கோரிக்கை

மகிந்த:-பொங்கி எழுந்து வாக்கு வாங்குபவர்.
மைத்திரி:-அமைதியாக வாக்கு வாங்குபவர்.
ஆனால் கொள்கை ஒன்று....இரண்டும்/சிங்களம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
இது தெரியாமல் எங்கடை சம்பந்தன் வேட்டியை வயித்துக்குமேலை கட்டிக்கொண்டு அரசியல் செய்யுது.tw_blush:

சம்பந்தனுக்கு அப்பவே பெரிய செல்வாக்கு இல்லை...இருந்தாலும் தமிழர்விடுதலைக்கூட்டணி எண்ட பெயர்....தமிழீழத்தின் தலைநகர தலைவன் எண்ட பெயரிலை வாக்கு கேட்டு பாராளுமன்றம் போன ஒரு...ஒரு.....ஒரு....tw_angry:

இதே வேண்டுதல் இல்லாட்டி உதவியை அமெரிக்காவிட்டை 2009லையே பகிரங்கமாய் கேட்டிருக்கலாம் எல்லே.....:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.