Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் வன்முறை வெடிக்கும்- சம்பந்தன்

Featured Replies

அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் வன்முறை வெடிக்கும்- சம்பந்தன்

 

அரசியல் தீர்வு ஒன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கத் தவறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இர.சம்பந்தன் பிரித்தானியாவிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீலட் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோது சமபந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் தவறிழைக்க முடியாது. அதனால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவது அவசியம் என்றும் யாப்பு உருவாக்க நடவடிக்கைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படுவதாக சுட்டிக்காட்டியதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1957ஆம் அண்டில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவுமே கைகூடவில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக அதிகாரப்பரவலாக்கம் குறித்து பேச்சுக்கள் இடம்பெற்றன.

ஆனால் இந்தியாவின் ஒத்துழைப்புடன் 1987இல் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவலாக்கல் மாத்திரமே அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச்சட்டமாக ஏற்கப்பட்டது. ஆனாலும் அது தொடர்பாகவும் பல்வேறு முரண்பாடுகள் எழுந்தன.

அதனால் அந்த திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்காக ஏதோஒரு வகையில் முயற்சி எடுத்தன.

ஆனாலும் அதுவும் பயனைத் தரவில்லை என அமைச்சர் மார்க் பீலட்டிடம் எடுத்துக் கூறியதாக சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்க்கின்றனர். ஆகவே அந்த இரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட நிலையிலான அதிகாரப்பரவலாக்கம் ஒன்றையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களும் இணைக்கப்படுவதால் சிங்கள மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. ஏனெனில் பிரிவினைக்கு அரசியல் யாப்பில் இடமில்லை என்று எடுத்துச் சொன்னதாக சம்பந்தன் கூறினார். அதேவேளை யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் நீதியான அரசியல் தீர்வு ஒன்றை எதிர்ப்பார்க்கின்றனர்.சாத்தியப்படக்கூடிய தீர்வில் அவர்கள் அக்கறையுடன் இருக்கின்றனர் என்றும் எடுத்துக் கூறியதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.

காணி அபகரிப்பு செயற்பாடுகளை கைவிடுதல், காணிகளை விடுத்தல். அரசியல் கைதிகளை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளில் நல்லாட்சி அரசாங்கம் கூடுதல் கவணம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுட்டிக்காட்டியதாகவும் சம்பந்தன் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதேவேளை பிரித்தானிய அமைச்சர் மார்க் பீலட் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்தமை தொடர்பாக எதிர்க்கட்சி அலுவலகம் இன்று வியாழக்கிழமை இரவு செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/politics/Sampanthan-meeting-with-British-Minister

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் ராஜதந்திரத்துக்கு என்ன நடந்தது? வன்முறை என்று கூவி இருக்கிற மிச்சம் மீதியையும் வாரிக்குடுக்க திட்டம் போடுறார். புலியளின்    ஆயுதப் போராட்டத்தை தாம் ஆதரிக்கவில்லை என்று பீற்றினார். இப்ப வன்முறை  கூவுறார்.  அந்தாளும் விரக்தி நிலையை அடைஞ்சுட்டுது. 

8 hours ago, நவீனன் said:

அரசியல் தீர்வு ஒன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கத் தவறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இர.சம்பந்தன் பிரித்தானியாவிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த *************** 50 வருட அரசியலில் உருப்படியாக ஒரு கருத்தை, ஒரு வசனத்தை கூறிய சரித்திரம் இல்லை.

அரசியல் தீர்வு இல்லையேல் தமிழ் மக்கள் தமது உரிமையை பாதுகாக்க ஆயுத போராட்டத்தை மீளவும் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லும் பக்குவம் இந்த *************** இல்லை. தனது  **************** தனத்தை உணர்ந்து அரசியலில் இருந்து விலகுவதே நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் வன்முறை வெடிக்கும்- சம்பந்தன்....

Bildergebnis für feuer löschen

 

எதுக்கும் இப்பிடி ஒரு போத்திலை வாங்கி கைகாவலாய் வைச்சிருப்பம்.:grin:

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு த.தே.கூ. முழுமனதுடன் பங்காற்றியுள்ளது :  சம்பந்தன்

Published by Priyatharshan on 2017-10-06 05:45:11

 

சமகால அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 99c694665e99672cbdd93f916892d187_XL.jpg

 

இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஆசிய - பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட்டுக்கும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

 

'அதிகாரப்பகிர்வின் தேவை குறித்து 1957 ஆண்ட முதல் பேசப்பட்டுவருகிறது. கடந்த 30 வருடகாலமாக இது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருதை இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர்  சுட்டிக்காட்டியதுடன் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவே முதல்முறையாக அதிகாரப்பகீர்வு அரசியல்யாப்பு ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதையும் அதனைத்தொடர்ந்தே பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண்பது குறித்து பேசி வருவதையும் குறிப்பிட்டார்.  

 

கடந்தகால வன்முறைகளினால் 50 வீதமான இலங்கைத் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியதுடன்  , தேசிய பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காணத் தவறும் பட்சத்தில் மேலும் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்றும் புதிய அரசமைப்பில் பிரிவினையைத் தடுக்கும் உறுதிப்பாடு கொடுக்கபட்டுள்ளமையால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதனை நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

தமிழ் மக்கள், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற தங்களது இறையாண்மையின் அடிப்படையில் அவர்களது சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களைப் பயன்படுத்தக்கூடியவாறான ஓர் அதிகாரப் பகிர்வு ஒழுங்கையே நாம் வலியுறுத்துகிறோம். இத்தகைய அதிகாரங்கள் எவ்வகையிலும் மீளப் பெறப்படலாகாது என்பதையும்  எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வலியுறுத்தினார். 

 

இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் என்று இதன்போது  உறுதி தெரிவித்த  பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்ட்,  புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

 

இந்தச் சந்திப்பில் பிரிட்டன் அமைச்சர் மார்க் பீல்டுடன், இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பிரிட்டன் அகாரிகளும் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/25366

11 hours ago, நவீனன் said:

அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் வன்முறை வெடிக்கும்- சம்பந்தன்

சம்பந்தனின் வெடியால் உலகம் அதிர்ந்து போயுள்ளது! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.