Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்!

Featured Replies

லாக்கானது ஏடிஎம் கார்டு... பிச்சையெடுத்த ரஷ்ய வாலிபர்... உதவிக்கரம் நீட்டியது போலீஸ்!

 
 

காஞ்சிபுரம், பிச்சை

காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்தார்.  தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரஷ்யன்ரஷ்யாவைச் சேர்ந்தவர் பெர்ன்கோவ். இவர் கோயில்களை காண்பதற்காக செப்டம்பர் 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக ரயில் மூலம் நேற்று இரவு 8.15 மணிக்கு காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏடிஎம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏடிஎம் கார்டை உடைத்து போட்டுவிட்டார். கையில் செலவுக்குப் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. இரவு நேரம் என்பதால் எங்கே எப்படி போகவேண்டும் என அவருக்குப் புரியவில்லை. கையில் பணம் இல்லாததால் எங்கும் தங்க முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் காஞ்சிபுரம் நகரில் சுற்றித் திரிந்தார். இதில் களைப்படைந்த அவர் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் படுத்து உறங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் அங்கே கோயிலில் சிலர் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறார். செலவுக்கு பணம் இல்லாததால் அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுத்துள்ளார்.துளசி காஞ்சிபுரம்

இதை கேள்விப்பட்ட சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி அங்கு வந்தார். அவரை மீட்டுவந்து காவல் நிலையத்தில் விசாரணை செய்தபோது, ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்துள்ளதாகவும், ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டதால் பிச்சை எடுத்ததாகவும் கூறி இருக்கிறார். பின்பு அந்த உதவி ஆய்வாளர் செலவுக்கு 500 கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள ரயிலில் சென்னைக்கு ஏற்றி அனுப்பி இருக்கிறார்.

அந்த காவலருக்கு நன்றி தெரிவித்த பெரன்கோவ், தூதரகம் மூலம் உதவியை நாடப்போவதாக கூறியிருக்கிறார்.

http://www.vikatan.com/news/tamilnadu/104592-russian-youth-begs-in-kancheepuram-temple-due-to-atm-card-issue.html

  • கருத்துக்கள உறவுகள்

காவல் ஆய்வாளர் துளசி போன்றவர்களால்தான் காவல்துறை பெருமையடைகிறது.....!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

காவல் ஆய்வாளர் துளசி போன்றவர்களால்தான் காவல்துறை பெருமையடைகிறது.....!

சும்மா அவசரப்படாதீங்கோ....

பாட்டீ, போன இடத்தில கண்கடை தெரியாமல் செலவழிச்சுப்போட்டு...

கஞ்சா பாட்டீயோ?

இன்ரநெற் காலத்தில... பாஸ்வேற், வங்கி அலுவல் எல்லாம், கையில... மோபைலில...

போலீசு... மாமூல் காசா இருக்கும். சொந்தக்காசை குடுப்பார்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சும்மா அவசரப்படாதீங்கோ....

பாட்டீ, போன இடத்தில கண்கடை தெரியாமல் செலவழிச்சுப்போட்டு...

கஞ்சா பாட்டீயோ?

இன்ரநெற் காலத்தில... பாஸ்வேற், வங்கி அலுவல் எல்லாம், கையில... மோபைலில...

போலீசு... மாமூல் காசா இருக்கும். சொந்தக்காசை குடுப்பார்களா என்ன?

காஞ்சிபுரம், பிச்சை

 

ஹாப்பி..... இன்று முதல்.... ஹாப்பி....  :D:
இந்தியா... இன்று முதல்... வல்லரசாயிடுச்சு.  ஹாப்பி....     :grin:

முனி.... அந்த, ரஷ்யா காரன், ஒரிஜினல்  பிச்சைகாரன் மாதிரியே...   இருக்கிறான்,
இந்தியாவில்... முன்பு கோவில் வாசல்களில், ஆகக்  குறைந்தது  50 பிச்சைகாரரை  காணலாம்.
இப்போ... இவன் ஒருத்தன், தனிய இருந்து  பிச்சை எடுப்பதால்.....
இந்தியா... பொருளாதாரத்தில் முன்னேறி விட்டதாக  உணர்கின்றேன். tw_yum:  :wink:

இப்போ.... இந்தியாவில்,  ஒரு அணா. இரண்டு அணா  என்று சில்லறைக்  காசை.... பிச்சை   கொடுக்காமல், 
அந்த அங்கிள்....  தாள் காசை,   பிச்சையாக  போடுகின்றதை பார்க்க...  உடம்பெலாம்,   "(F) புள்ளாய்  அரிக்குது." :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இப்படியானவர்களுக்கு உதவுவதும் போலிசின் வேலை என்பது தெரியாமல் குத்தி முறியிதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

காஞ்சிபுரம், பிச்சை

 

ஹாப்பி..... இன்று முதல்.... ஹாப்பி....  :D:
இந்தியா... இன்று முதல்... வல்லரசாயிடுச்சு.  ஹாப்பி....     :grin:

முனி.... அந்த, ரஷ்யா காரன், ஒரிஜினல்  பிச்சைகாரன் மாதிரியே...   இருக்கிறான்,tw_blush:
இந்தியாவில்... முன்பு கோவில் வாசல்களில், ஆகக்  குறைந்தது  50 பிச்சைகாரரை  காணலாம்.
இப்போ... இவன் ஒருத்தன், தனிய இருந்து  பிச்சை எடுப்பதால்.....
இந்தியா... பொருளாதாரத்தில் முன்னேறி விட்டதாக  உணர்கின்றேன். tw_yum:  :wink:

இப்போ.... இந்தியாவில்,  ஒரு அணா. இரண்டு அணா  என்று சில்லறைக்  காசை.... பிச்சை   கொடுக்காமல், 
அந்த அங்கிள்....  தாள் காசை,   பிச்சையாக  போடுகின்றதை பார்க்க...  உடம்பெலாம்,   "(F) புள்ளாய்  அரிக்குது." :grin:

போடுற தாள் காசைக் கூட கவனித்து இருக்கின்றிர்கள் சூப்பர்......!

எல்லாப் போலீசையும் சகட்டு மேனிக்கு குற்றம் சொல்லக் கூடாது.....! கொடுப்பதற்கு முதலில் மனம் ஒத்துழைக்க வேண்டும்.....!  tw_blush:

  • தொடங்கியவர்

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர் மாயம்…! காவல்துறை தேடுதல் வேட்டை

 
 

காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் கடந்த 10-ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, பணம் கொடுத்து சென்னையில் உள்ள தூதரகத்துக்கு அனுப்பினார்கள். இப்போது அவரை காவல்துறையினர் தேடிவருவதால் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது காஞ்சிபுரம்.

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

 

ரஷ்யாவைச் சேர்ந்தவர் இவாஞ்செலின் பெர்ன்கோவ். இவர் கோயில்களைக் காண்பதற்காக கடந்த 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக 9-ம் தேதி இரவு 8.15க்கு ரயில் மூலம் காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏ.டி.எம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏ.டி.எம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டார். கையில் பணம் இல்லாததால் காஞ்சிபுரத்தில் இரவு முழுக்க வலம் வந்தார். கடைசியில் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலிலில் படுத்து உறங்கிவிட்டார். கோயில் வாசலில் வயதானவர்கள் பிச்சை எடுப்பதை கண்ட அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார்.

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

அவருக்கு இரக்கப்பட்டு கோவிலுக்கு வந்தவர்கள் பணத்தைப் போட்டார்கள். தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல் நிலைய காவலர்கள் அவரை விசாரணை செய்து, சென்னையில் உள்ள தூதரத்துக்கு அனுப்பினார்கள். அப்போது, அந்த இளைஞர் ரயிலில் ஏற்றிவிட வந்த காவலரிடம், இந்தப் பணம் செலவு ஆன பிறகு வந்தால், மீண்டும் பணம் கொடுப்பீர்களா? என்றார். ரஷ்ய இளைஞர் கேலி செய்வதாக எண்ணி அந்த காவலர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

இந்த தகவல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்குச் சென்றது. ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு நீண்டகால நட்பு இருக்கிறது. சென்னையில் உள்ள அதிகாரிகள் அவருக்குத் தேவையான உதவிகளை அளிப்பார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் பிச்சை எடுத்த அந்த ரஷ்ய இளைஞர்,  ரஷ்ய தூதரகத்துக்குச் செல்லவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் இல்லை. இதனால் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ரஷ்யத் தூதரகம் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவரைப் பிடிப்பதற்காக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் காவல்துறையினர் இணைந்து அவரை தேடிவருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104865-russian-youth-who-begged-in-kancheepuram-is-missing.html

  • தொடங்கியவர்

''தொடர்ந்து பிச்சை எடுப்பேன்!'' - ரஷ்ய இளைஞர் தடாலடி

ஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் எவ்ஜினி பெர்டிகோவ், ஏ.டி.எம் கார்டு லாக்காகிவிட்டதால், காஞ்சிபுரம் கோயிலில் கடந்த 10-ம் தேதி பிச்சையெடுத்தார். காவல்துறையினர் அவரை மீட்டு, பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பினார்கள். ஆனால், அந்த இளைஞர் ரஷ்ய தூதரகத்துக்கு வரவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிச்சையெடுத்த ரஷ்ய இளைஞர்

 

போலீஸார் அந்த ரஷ்ய இளைஞரைத் தேடிவரும் நிலையில் சென்னை தி.நகரில் உள்ள போக் சாலையில் மற்றொரு டூரிஸ்ட்டுடன் அவரைப் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்துள்ளார். அந்தப் பத்திரிகையாளரிடம் ரஷ்ய இளைஞர் கூறியதாவது, ''எனக்கு ரஷ்ய தூதரக உதவித் தேவையில்லை. ட்ராவல் செய்வது பிடித்துள்ளது. அதற்காகத் தொடர்ந்து மக்களிடம் பிச்சையெடுப்பேன். இப்போது மீடியாக்களில் செய்தி வந்திருப்பதால் என்னைப் பார்த்தால் நிறைய பேர் பேசுகிறார்கள். அவர்களிடம் 100 ரூபாய் நான் கேட்கிறேன். இப்போது கொஞ்சம் பணம் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பிச்சையெடுப்பேன். பெங்களுரு செல்வது என் அடுத்தத் திட்டம்'' எனத் தெரிவித்துள்ளார். 

 

எவ்ஜினி பெர்டிகோவுக்கு இந்தியா வருவதற்கு எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் கிடையாது. மனம்போன போக்கில் ட்ராவல் செய்வது மட்டும்தான் அவரின் இலக்கு. பெர்டிகோவின் கைகளில் முன்னதாக அவர் சென்று வந்த, நாடுகளின் கொடிகளைப் பச்சைக்குத்தியுள்ளார். சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியக் கொடியை பச்சைக்குத்தியிருக்கிறார். நவம்பர் 22-ம் தேதி வரை அவருக்கு இந்திய விசா உள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/104894-i-will-continue-begging---russian-tourist.html

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுப்பதையே ஒருவர் "ஹாபீ "யாக வைத்திருந்தால் என்ன செய்ய முடியும். யார் கண்டது இவர்தான் ரஷியாவில் மூன்றாவது கோடீஸ்வரர் என்று கூட செய்திகள் வரலாம். எதையும் ஏற்க மனசை திடப்படுத்தி வைத்திருக்க வேண்டும்......!  tw_blush:

பாவி...இனி அந்த போலீஸ்காரர் ஐந்து சதமும் பிச்சை போடாதபடி செய்து போட்டான்.....! 

  • கருத்துக்கள உறவுகள்

சிவன் சொன்னான்.. நான் பிச்சை எடுக்கிறேன்.. பேட்டிக்கே பணம் வாங்கிய பலே ரஷ்ய இளைஞர்!

சிவனின் உத்தரவால் பிச்சை எடுக்கிறேன்-ரஸ்ய இளைஞர்-வீடியோ சென்னை: சிவபெருமான் உத்தரவிட்டதால் தான் பிச்சை எடுப்பதாகவும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சென்னையிலும் பிச்சை எடுத்த போது பிடிபட்ட ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் தெரிவித்துள்ளார். ஏடிஎம்கார்டு முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் போனதாக காஞ்சிபுரத்திற்கு சற்றுலா வந்த ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் குமரக்கோட்டம் முருகன் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தார். இந்த தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி உதவி ஆய்வாளர் துளசி அவரிடம் விசாரணை நடத்தி ரூ. 500 பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ரஷ்ய இளைஞர் பிச்சை எடுத்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பார்த்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இவாஞ்சலின் ரஷ்யா செல்ல அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார். இந்நிலையில் நேற்று தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அமர்ந்து இவாஞ்சலின் பிச்சை எடுத்துள்ளார். நண்பரை பார்ப்பதற்காக காத்திருந்த போது அவர் பிச்சை எடுத்துள்ளார்.

பிடிபட்ட இளைஞர் இதனையடுத்து போலீஸ் அதிகாரிகள் இவாஞ்சலினை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் சுற்றுலா வந்ததற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்றும் போலீசார் சரிபார்த்துள்ளனர். அவருக்கு அடுத்த மாதம் 11ம் தேதி வரை விசா உள்ளது.

இந்தியா பிடித்திருக்கிறது இதனிடையே பிச்சை எடுப்பது குறித்து சுவாரஸ்யமான தகவலை இவாஞ்சலின் கூறியுள்ளார். நான் இந்தியா வரும் போது இந்திய மதிப்பில் ரூ. 4000 மட்டுமே என்னிடம் இருந்தது. இந்தியா எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்கு பிச்சை எடுத்தால் அனைவரும் பணம் கொடுக்கின்றனர்.

தடுக்க முடியாது சிவபெருமான் உத்தரவிட்டதால் தான் நான் பிச்சை எடுத்தேன். நான் பிச்சை எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதில் புது டெக்னிக்கையும் வைத்துள்ளார்.

பேட்டிக்கும் பணம் தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புபவர்கள் ரூ. 10 தர வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம். மக்களும் அவருக்கு பணம் கொடுத்து செல்ஃபி எடுத்துச் சென்றுள்ளனர். இதே போன்று தொலைக்காட்சி ஊடகங்கள் பேட்டி எடுக்க சென்ற போது காசு கொடுத்தால் தான் பேட்டி என்று சொல்லி காசு வாங்கிக் கொண்டு பேட்டி கொடுத்துள்ளாராம் இவாஞ்சலின்.

என்ன செய்யப் போகிறார்? இவாஞ்சலின் உதவி கேட்டால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும் என்று ரஷ்ய நாட்டு தூதரகம் கூறி விட்டது. இந்நிலையில் விசா முடியும் இவாஞ்சலின் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாமல் அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/no-one-can-stop-me-from-begging-caught-russian-youth-evangelin/articlecontent-pf267637-298511.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

  • தொடங்கியவர்

 

தாம் தொடர்ந்து பிச்சை எடுக்க அனுமதி வழங்க வேண்டும் - ரஷ்ய நாட்டு இளைஞர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.