Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் புலிக்கு வாழும்வரை சிறை

Featured Replies

முன்னாள் புலிக்கு வாழும்வரை சிறை
 

தெஹிவளை பொலிஸ் நிலைய புலானய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாகக்  கடமையாற்றிய சுனில் தாபரை, சுட்டுக்கொலைச் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவே, மேற்படி தீர்ப்பை  வழங்கினார்.  

முல்லைத்தீவைச் சேர்ந்த செல்வத்துரை கிருபாகரன் என்வருக்கே,  இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அத்தண்டனைக்கு மேலதிகமாக ஐந்து வருடகால  சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவரது  உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்ததே, அவர்  சுட்டுக்கொலைச் செய்யப்பட்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-புலிக்கு-வாழும்வரை-சிறை/175-206448

  • கருத்துக்கள உறவுகள்

குற்ற்ஞ்சாட்டப்பட்ட நபராக கருதப்படுகிறாரா அல்லது சுட்டவர் இவர்தானா என்று யாருக்காவது தெரியுமா  இந்தப்பக்கம் வந்து கருத்து சொல்லுங்க  அனைவரும்  இவரை காப்பாற்றலாமா மேல் முறையீடு செய்து மொனராகலை யில் கூட இப்படி தீர்ப்பு வழங்கப்பட்டது ஒருவருக்கு ஆனால்  அவரை காப்பாற்ற யாரும் போகவும் இல்லை அது பற்றி செய்தி வந்துதோ வரவில்லையோ தெரியலை   அவருக்கு வாதாட ஒரு தமிழர் கூட இல்லாததால் தீர்ப்பு வழங்கப்பட்டது 

நாம் தேவையானதை விட்டு விடுகிறோம் என்று மட்டும் எண்ண த்தோன்றுகிறது 

 

அது சரி எப்பப்பா மாவீரர் தினம் ??:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

குற்ற்ஞ்சாட்டப்பட்ட நபராக கருதப்படுகிறாரா அல்லது சுட்டவர் இவர்தானா என்று யாருக்காவது தெரியுமா  இந்தப்பக்கம் வந்து கருத்து சொல்லுங்க  அனைவரும்  இவரை காப்பாற்றலாமா மேல் முறையீடு செய்து மொனராகலை யில் கூட இப்படி தீர்ப்பு வழங்கப்பட்டது ஒருவருக்கு ஆனால்  அவரை காப்பாற்ற யாரும் போகவும் இல்லை அது பற்றி செய்தி வந்துதோ வரவில்லையோ தெரியலை   அவருக்கு வாதாட ஒரு தமிழர் கூட இல்லாததால் தீர்ப்பு வழங்கப்பட்டது 

நாம் தேவையானதை விட்டு விடுகிறோம் என்று மட்டும் எண்ண த்தோன்றுகிறது 

 

அது சரி எப்பப்பா மாவீரர் தினம் ??:unsure:

உங்கள் கவலை அல்லது சிந்தனை நியாயமானது. ஆனால் நாம்தான் குத்துவெட்டோடல்லவா திரிகின்றோம். வா ர்த்தைக்கு வார்த்தை போராளிகள் மாவீரர் என்று பலுக்குவோர்கூட ஒரு சட்ட ஆலோசனைக்குழுவையோ அல்லது இப்படிப்பாதிக்கப்பட போராளிகளுக்கான சட்ட உதவிகள் குறித்தோ சிந்திப்பதாகத் தெரியவில்லை.  உண்மையிலே நாம் தாயகத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகள் சார்பில் ஆட்சிமாற்றத்தின் பின்பாவது  சட்டவாளர்களைக்கொண்ட ஒரு குழுவையும் நிதியத்தையும் அமைத்திருத்தல் வேண்டும். ஆனால் எதுவுமே செய்யவில்லை. அதேவேளை தலைமையின் உத்தரவுகளை செயற்படுத்திய போராளிகளை வதைப்பதானது  இனத்துக்கான மறைமுக அச்சுறுத்தலே. ம.வி.முன்னணி ஒரு அளவுகோலாலும் தமிழீழவிடுதலைப்புலிகள் தமிழருக்கான போராட்ட அமைப்பென்பதால் பயங்கரவாத அளவுகோலாலும் அளக்கப்படுவதன் விளைவே இது. இதனைமாற்றவேண்டுமாயின் முதலில் கூட்டமைப்பினை ஒரு துணிவான தூரநோக்குடைய தலைமை பொறுப்பேற்க வேண்டும்.  களத்தில் நிற்கிறீர்கள் சாத்தியமா?  

ஒருவரிவினா   உண்மையில் அறியாமாலா அல்லது.............

51 minutes ago, nochchi said:

உங்கள் கவலை அல்லது சிந்தனை நியாயமானது. ஆனால் நாம்தான் குத்துவெட்டோடல்லவா திரிகின்றோம். வா ர்த்தைக்கு வார்த்தை போராளிகள் மாவீரர் என்று பலுக்குவோர்கூட ஒரு சட்ட ஆலோசனைக்குழுவையோ அல்லது இப்படிப்பாதிக்கப்பட போராளிகளுக்கான சட்ட உதவிகள் குறித்தோ சிந்திப்பதாகத் தெரியவில்லை.  உண்மையிலே நாம் தாயகத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகள் சார்பில் ஆட்சிமாற்றத்தின் பின்பாவது  சட்டவாளர்களைக்கொண்ட ஒரு குழுவையும் நிதியத்தையும் அமைத்திருத்தல் வேண்டும். ஆனால் எதுவுமே செய்யவில்லை. அதேவேளை தலைமையின் உத்தரவுகளை செயற்படுத்திய போராளிகளை வதைப்பதானது  இனத்துக்கான மறைமுக அச்சுறுத்தலே. ம.வி.முன்னணி ஒரு அளவுகோலாலும் தமிழீழவிடுதலைப்புலிகள் தமிழருக்கான போராட்ட அமைப்பென்பதால் பயங்கரவாத அளவுகோலாலும் அளக்கப்படுவதன் விளைவே இது. இதனைமாற்றவேண்டுமாயின் முதலில் கூட்டமைப்பினை ஒரு துணிவான தூரநோக்குடைய தலைமை பொறுப்பேற்க வேண்டும்.  களத்தில் நிற்கிறீர்கள் சாத்தியமா?  

ஒருவரிவினா   உண்மையில் அறியாமாலா அல்லது.............

இந்தளவுக்கு ஆரோக்கியமாக சிந்திக்கவும் மக்கள் / போராளிகளின் வாழ்வு பற்றி அக்கறையுடன் பணியாற்றவும் புலம்பெயர் தேசங்களிலும் சரி, புலத்திலும் சரி இன்று யாரும் இல்லை நொச்சி. 

புதிய தலைமைக்கான தேவை பெருமளவில் தேவைப்படும் காலம் இது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

 உண்மையிலே நாம் தாயகத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகள் சார்பில் ஆட்சிமாற்றத்தின் பின்பாவது  சட்டவாளர்களைக்கொண்ட ஒரு குழுவையும் நிதியத்தையும் அமைத்திருத்தல் வேண்டும்.

 சட்டவாளர்களைக்கொண்ட ஒரு குழுவையும் நிதியத்தையும் அமைப்பதற்கு தாயகத்தில் அல்லது புலம்பெயர் நாடுகளில் உள்ள சட்டத்தரணிகள் யாரவது முன்வருவார்களா? முன்வருவா்களாயின், அவர்களுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்குப் பலதமிழர்கள் முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படி நிதியை வழங்க முன்வருபவர்களில் நானும் ஒருவராக இணைந்துகொள்வேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனைச் செயற்படுத்தத் திறனுள்ள ஒருவர் அல்லது நிறுவனம் எங்கள் யாழ்களத்தினூடகவேனும் வெளிப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

 சட்டவாளர்களைக்கொண்ட ஒரு குழுவையும் நிதியத்தையும் அமைப்பதற்கு தாயகத்தில் அல்லது புலம்பெயர் நாடுகளில் உள்ள சட்டத்தரணிகள் யாரவது முன்வருவார்களா? முன்வருவா்களாயின், அவர்களுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்குப் பலதமிழர்கள் முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படி நிதியை வழங்க முன்வருபவர்களில் நானும் ஒருவராக இணைந்துகொள்வேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனைச் செயற்படுத்தத் திறனுள்ள ஒருவர் அல்லது நிறுவனம் எங்கள் யாழ்களத்தினூடகவேனும் வெளிப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.  

திரியொன்றில் முன்புமொரு தடவை தமிழருக்கான நிதியம் தொடர்பான கருத்தாடல் இடம்பெற்றது. ஆனால்  கருத்தாகவே நின்றுவிட்டது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்த யாழ்களத்திலிருந்து நாடுகள்வாரியாக மூவர்கொண்ட குழுக்களை முதலில் நிறுவி அவற்றை இணைத்து ஒருநாட்டிலே பதிவுசெய்வோமாயின் இங்குள்ள சட்டச் சிக்கல்களைக் கடப்பதோடு யாழ்களமும் காலப்பணியொன்றைக் கையேற்றதாகும். செய்வோமென்று  கைகோர்ப்போமாயின்  நகர்த்தமுடியும். 

தமிழர்கள் மத்தியில் முக்கியமாக ஈழத்தமிழர்கள் மத்தியில் நிதி சேர்த்தல் முகாமைப்படுத்தல் மற்றும் பகிர்தல் என்பன கடும் பிரச்சனைகளுக்குரிய விடயம். ஒரு வகையில் வேலியில் போகின்ற ஓணானை பிடிச்சு விளையாடுதல் போன்றது.
உதவி செய்கின்றவர்களை துரோகியாக்கி விட்டு பின் தம் அலுவல்களை பார்க்கின்றவர்களும், ஒரு செயலை முன்னெடுக்கின்ற ஒருவரை அல்லது ஒரு சிறு பிரிவை தனிய விட்டுட்டு மற்றவர்கள் தத்தம் வேலையை பார்ப்பதும் தான் வழமை. இது தொடர்பாக மோகன் என்ன எண்ணத்தை கொண்டு இருக்கின்றார் என தெரியாது

வட மாகாணசபை இது தொடர்பாக நேர்மையுடன் பங்காற்ற முடியும். ஆனால் கையாலாகாத முதலமைச்சரையும் அவரின் முட்டாள் அமைச்சர்களையும் கொண்டு இயங்கும் தற்போதைய வட மாகாண சபை இதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் முதூர் சிறுமி விவகாரத்தில் ஆஜராகிய வக்கில் பணம் வாங்காமல்  குற்றவாளியை தப்பித்து போகாமல்  தானாகமுன்வந்து அந்த வழக்கில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்தார் இப்படியும் வக்கீல்கள் இருக்கிறார்கள் இவரை போன்ற ஆட்களை நாடுவதால் சில வேளைகளில் சந்தேகத்தில் கூட கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை மீள் வழக்கு பதிவு செய்து விடுவிக்கலாம் என்பதும்  எனது கருத்து 

 

இது ஒரு நண்பனின் முகநூல் பதிவில் இருந்து  இந்த வக்கீலை பாராட்டி எழுதியிருந்தார் 

மூதூர் பிரதேச சிறுமிகள் பாலியல் வன்புணர்வு வழக்கில் மரபணு சோதனைகளின் அடிப்படையில் உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு புலனாய்வுப் பிரிவினருக்கு பாரம் கொடுக்கப்பட்டமையும், சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையினர் இந்த வழக்கை கண்காணித்தமையும் விரைவாக உண்மைக் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட காரணமாகியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த போதிலும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இந்த வழக்கில் தானாகவே ஆஜராகி வழக்கின் போக்கை முன்னேற்றகரமாக மாற்றிய சட்டத்தரணி நண்பன் Stanislaus Celestine, மற்றும் முகநூல் நண்பர்கள், அரசியல்வாதிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள். 

 

 

2 minutes ago, நிழலி said:

தமிழர்கள் மத்தியில் முக்கியமாக ஈழத்தமிழர்கள் மத்தியில் நிதி சேர்த்தல் முகாமைப்படுத்தல் மற்றும் பகிர்தல் என்பன கடும் பிரச்சனைகளுக்குரிய விடயம். ஒரு வகையில் வேலியில் போகின்ற ஓணானை பிடிச்சு விளையாடுதல் போன்றது.
உதவி செய்கின்றவர்களை துரோகியாக்கி விட்டு பின் தம் அலுவல்களை பார்க்கின்றவர்களும், ஒரு செயலை முன்னெடுக்கின்ற ஒருவரை அல்லது ஒரு சிறு பிரிவை தனிய விட்டுட்டு மற்றவர்கள் தத்தம் வேலையை பார்ப்பதும் தான் வழமை. இது தொடர்பாக மோகன் என்ன எண்ணத்தை கொண்டு இருக்கின்றார் என தெரியாது

வட மாகாணசபை இது தொடர்பாக நேர்மையுடன் பங்காற்ற முடியும். ஆனால் கையாலாகாத முதலமைச்சரையும் அவரின் முட்டாள் அமைச்சர்களையும் கொண்டு இயங்கும் தற்போதைய வட மாகாண சபை இதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்

முதல்வரிடம் திட்டம் இருந்தாலும் அதை செயல்படுத்த சிலர் விடார்

விடாக்கண்டன்கள் அதிகம் இப்ப

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

தமிழர்கள் மத்தியில் முக்கியமாக ஈழத்தமிழர்கள் மத்தியில் நிதி சேர்த்தல் முகாமைப்படுத்தல் மற்றும் பகிர்தல் என்பன கடும் பிரச்சனைகளுக்குரிய விடயம். ஒரு வகையில் வேலியில் போகின்ற ஓணானை பிடிச்சு விளையாடுதல் போன்றது.
உதவி செய்கின்றவர்களை துரோகியாக்கி விட்டு பின் தம் அலுவல்களை பார்க்கின்றவர்களும், ஒரு செயலை முன்னெடுக்கின்ற ஒருவரை அல்லது ஒரு சிறு பிரிவை தனிய விட்டுட்டு மற்றவர்கள் தத்தம் வேலையை பார்ப்பதும் தான் வழமை
.
இது தொடர்பாக மோகன் என்ன எண்ணத்தை கொண்டு இருக்கின்றார் என தெரியாது

வட மாகாணசபை இது தொடர்பாக நேர்மையுடன் பங்காற்ற முடியும். ஆனால் கையாலாகாத முதலமைச்சரையும் அவரின் முட்டாள் அமைச்சர்களையும் கொண்டு இயங்கும் தற்போதைய வட மாகாண சபை இதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்

மிகவும்  சரியான கூற்று. ஆனால் இப்படியே போனால் என்னதான் முடிவு. யார்தான் பார்ப்பது. உதவியென்றால் நானிவளவு தருகிறேன். மற்றவிடயம் உங்களோடு என்று ஒதுங்குவோரே அதிகமாக உள்ளது.  சரியான திட்டமிடலோடும் ஆதாரங்களோடும்  செயற்பாடுகளை ஒருங்கிணைத்தால் புறம்பேசுவோரை மக்களே ஒதுக்கிவிடுவார்கள் என்றே நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

உள­வுத்­துறை பொறுப்­ப­தி­காரி தாப்­றுவை சுட்­டுக்­கொலை செய்த முன்னாள் புலி உறுப்­பி­ன­ருக்கு ஆயுள் தண்­டனை

 

14 வரு­டங்­களின் பின்னர் கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்ப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)

தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்தின் உளவுத்துறை பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் தாப்­றுவை, பொலிஸ் உத்­தி­யோ­க­பூர்வ குடி­யி­ருப்­புக்குள் நுழைந்து சுட்டுக் கொலை செய்த குற்­றத்­துக்­காக முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்­பினர் என சந்­தே­கிக்­க­ப்படும் நபர் ஒரு­வ­ருக்கு கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று ஆயுள் தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­தது.

முள்­ளி­வாய்க்கால், முல்­லைத்­தீவு பகு­தி யைச் சேர்ந்த மதன் எனப்­படும் செல்­லதுறை கிரு­பா­க­ர­னுக்கு எதி­ரா­கவே இந்த தீர்ப்பு அளிக்­கப்­பட்­டது. கொழும்பு மேல் நீதிமன் றின் நீதி­பதி பிய­சேன ரண­சிங்க இந்த தீர்ப்பை நேற்று அறி­வித்தார்.

2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்­பெற்ற இந்த கொலை தொடர்பில் 14 வரு­டங்­களின் பின்னர் நேற்று இந்த தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. 55 சாட்­சி­யங்கள் விசா­ரணை செய்­யப்­பட்டு சட்டமா அதி­பரால் தொட­ரப்­பட்­டி­ருந்த 4 குற்­றச்­சாட்­டுக்­களில் மூன்று தொடர்பில் பிர­தி­வா­தியை குற்­ற­வா­ளி­யாக கரு­தியே நீதி­மன்றம் மேற்­படி தீர்ப்பை அளித்­தது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தொட­ ரப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டு உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து அது தொடர்பில் ஆயுள் தண்­ட­னையும் துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் பிர­தி­வா­திக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்த இரு குற்­றச்­சாட்­டுக்­களில் ஒன்­றுக்கு 5 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் மற்­றைய குற்­றச்­சாட்­டுக்கு 25 ஆயிரம் ரூபா தண்­டமும் விதிக்­கப்­பட்­டது.

தெஹி­வளை புல­னாய்வு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் தாப்­றுவின் ஒற்­ற­ராக குற்­ற­வாளி செயற்­பட்­ட­தா­க வும், தகவல் வழங்­கு­வதைப் போன்று, பொலிஸ் விடு­திக்குள் சென்று உறக்­கத்தில் இருந்த பொலிஸ் அதி­கா­ரியை சுட்­டுக் ­கொன்­ற­தா­கவும் முறைப்­பாட்­டாளர் தர ப்பில் மன்றில் வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­ டன.

சம்­ப­வத்­தை­ய­டுத்து தண்­டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் தெஹி­வளை பொலி­ஸாரால் குற்­ற­வாளி கைது செய்­யப்­பட்டு கல்­கிஸை நீதிவான் நீதி­மன்றில் பீ 6544 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை நடத்­தப்­பட்டு பின்னர் ஒரு வரு­டத்தில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்­ற­வா­ளிக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. இந்­நி­லை­யி­லேயே பயங்­க­ர­வாத விவகா­ரங்­களை விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட கொழும்பு விசேட நீதி­மன்றில் அது தொடர்பில் சட்டமா அதி­பரால் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்பெற்­றன. விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து தீர்ப்­புக்­காக நேற்று குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது முதலாம் இரண்டாம் நான் காம் குற்­றச்­சாட்­டுக்கள் வழக்குத் தொடுநர் சட்டமா அதி­பரால் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூபிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­பதி பிய­சேன ரண­சிங்க அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து தண்­ட­னைக்கு முதல் மன்றில் கருத்­துரை நிகழ்த்­திய சிரேஷ்ட அரச சட்­ட­வாதி நயனா சென­வி­ரத்ன, நீதி­மன்றம் குற்­ற­வா­ளி­யாக கண்ட பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்டு தொடர்பில் ஆயுள் தண்­டனை வழங்க முடியும் என சுட்­டிக்­காட்­டினார்.

இரண்­டா­வது குற்­றச்­சாட்­டான கைத்­துப்­பா­க்­கி­யொன்றை வைத்­தி­ருந்­தமை தொடர் பில் 5 முதல் 20 வரு­டங்கள் வரை கடூ­ழிய சிறைத் தண்­டனை வழங்­கப்­பட முடியும் எனவும் 4 ஆவது குற்­றச்­சாட்­டான அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி கைத்­துப்­பாக்கி வைத்­தி­ருந்­தமை தொடர்பில் 25 ஆயிரம் ரூபா தண்டம் அல்­லது 2 வருட சிறை அல்­லது தண்­ட­மும்­ வி­திக்க முடியும் என சுட்­டிக்­காட்டி குற்­ற­வா­ளிக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்க கோரினார்.எனினும் குற்­ற­வாளி சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா, தனது சேவை பெறுநர் தகவல் வழங்­கவே பொலிஸ் நிலையம் சென்­ற­தா­கவும், அவ­ரது சகோ­தரன் புலி அமைப்பைச் சேர்ந்­தவர் என்­பதை மையப்­ப­டுத்தி அவர் இந்த கொலையை செய்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் நாட்­டுக்கு எதி­ரான தகவல் ஒன்றை தெரிந்­து­ கொண்டு அந்த தக­வலை கொடுக்­காமல் இருந்தார். அல்­லது மறைத்தால் 7 ஆண்­டுகள் அவருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­படக் கூடிய குற்றம் என்­ப­தா­லேயே தகவல் வழங்க தனது சேவை பெறுநர் சென்­ற­தாக கூறினார். எவ்­வா­றா­யினும், நீதி­மன்றம் தனது சேவை பெறு­நரை குற்­ற­வா­ளி­யாக கண்­டதன் பின்னர், அவர் இது­வரை 14 வரு­டங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரும் காலம் மற்றும் அவ­ரது வய­தான தாய் மற்றும் சகோ­தரர் ஆகி­யோரை கருத்திற்கொண்டு இலகு தண்­டனை விதிக்­கு­மா­றும் அவர் கோரினார்.

இதனையடுத்து நீதிபதி தண்டனையை அறிவித்தார். முதல் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, இரண்டாம் குற் றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார். நான்காம் குற்றத்துக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த நீதிபதி அதனை செலுத்தாது விடின் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரித்ததுடன் குற்றவாளி விளக்கமறியலில் இருந்த காலத்தை கருத்திற் கொண்டு இந்த தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

http://epaper.virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

குற்ற்ஞ்சாட்டப்பட்ட நபராக கருதப்படுகிறாரா அல்லது சுட்டவர் இவர்தானா என்று யாருக்காவது தெரியுமா  இந்தப்பக்கம் வந்து கருத்து சொல்லுங்க  அனைவரும்  இவரை காப்பாற்றலாமா மேல் முறையீடு செய்து மொனராகலை யில் கூட இப்படி தீர்ப்பு வழங்கப்பட்டது ஒருவருக்கு ஆனால்  அவரை காப்பாற்ற யாரும் போகவும் இல்லை அது பற்றி செய்தி வந்துதோ வரவில்லையோ தெரியலை   அவருக்கு வாதாட ஒரு தமிழர் கூட இல்லாததால் தீர்ப்பு வழங்கப்பட்டது 

நாம் தேவையானதை விட்டு விடுகிறோம் என்று மட்டும் எண்ண த்தோன்றுகிறது 

 

அது சரி எப்பப்பா மாவீரர் தினம் ??:unsure:

சுவிஸ் குமாரை விடுவிக்கப் போன அக்காமார் எல்லாம் இருக்கினமே தவிர.. இப்படியான இளைஞர்களை விடுவிக்க.. யாரும் இப்ப போக மாட்டினம். எல்லாரும்.. கொள்ளையர்களையும் கொலைஞர்களையும் குடுக்காரர்களையும் காப்பாற்றுவதில் பிசி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nedukkalapoovan said:

சுவிஸ் குமாரை விடுவிக்கப் போன அக்காமார் எல்லாம் இருக்கினமே தவிர.. இப்படியான இளைஞர்களை விடுவிக்க.. யாரும் இப்ப போக மாட்டினம். எல்லாரும்.. கொள்ளையர்களையும் கொலைஞர்களையும் குடுக்காரர்களையும் காப்பாற்றுவதில் பிசி. :rolleyes:

அதான்ப்பா நான் சொன்னேனே விடாக்கண்டன்கள் என 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.