Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்...இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

Featured Replies

வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்

9-7b6a6da93b7fb121acf1c6402cfecae3ad8bbbd7.jpg

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்புதிய அரசியலமைப்பு உரு வாக்கப்படக்கூடாது என மீள்குடி யேற்

றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச் சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்ச ரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக் கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள்  

விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்  

தற்போதைய அரசியலமைப்பில் இருபதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் அனைத்து தரப்புக்களினதும் ஒத்துழைப்புக்களை வேண்டியும் புதிய அரசிலமைப்பினை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. யுத்தம் நிறைவடைந்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த நாட்டில் சகல இனங்களும் தமது உரிமைகளை பெற்றுக்கொண்டு அந்நியோன்னியமாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பிரதமர் நிருவாக ஆட்சிமுறைமை கொண்டு வரவேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. உண்மையிலேயே சிறுபான்மை சமுகங்களுக்கு உள்ள பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறையாகும். கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களின் வாக்குகளின் ஊடாகத்தான் ஜனாதிபதி தெரிவு செய்ய முடியும் என்பது வெளிப்படுத்தப்பட்டள்ளது.

குறிப்பாக முஸ்லிம் சமுகம் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஒருவரைத் தெரிவு செய்வதற்கான ஆதரவை வழங்குகின்றபோது தமக்காணப் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான வழியினை பெற்றுக்கொள்கின்றார்கள். ஜனாதிபதி வேட்பாளாருடன் நடைபெற்ற பேச்சுக்கள் ஊடாக முஸ்லிம் சமுகத்திற்கு விரோதமான சக்திகளை நாம் தோற்கடித்திருக்கின்றோம் என்பதை கண்கூடாக காண்டிருக்கின்றோம்.

தற்போதைய நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் தற்போது வழங்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி ஆட்சி முறைமையே தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

வடக்கு கிழக்கு பிரச்சினையில் வடக்கு கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்ற முன்மொழிவு காணப்படுகின்றது. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கும் விடயத்தில் சில விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 42 சதவீதம் வாழ்கின்றார்கள். நாட்டிலே கிழக்கு மாகாணத்தில் மட்டுமே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நாட்டின் வரலாற்றினை எடுத்துப் பார்க்கையில் வடக்கும் கிழக்கும் இணைந்து இருந்தபோது இரத்த அறு ஓடியது. கிழக்கு மாகாணத்தில் இருந்த மூவினங்களும் பிரிந்திருந்தன. தற்போது கிழக்கு மாகாணம் பிரிந்து தனியாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் தற்போது அமைதியாக இருக்கின்றது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தினை தமிழ் சகோதரர், முஸ்லிம் சகோதரர் என மாறிமாறி முதலமைச்சராக இருந்துள்ளார்கள். மூன்று இனக்குழுவையும் பிரதிநிதித்துவப்படும் அமைச்சரவையொன்று காணப்படுகின்றது. இந்த விசேட தன்மையானது ஏனைய மாகாணங்களில் இல்லை. இவ்வாறு மூன்று இனங்களும் ஒற்றுமையாக அமைதியாக சகோதரத்துவத்துடன் வாழும் மாகாணத்தினை வடக்கு மாகாணத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் என்ன?

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இரவோடு இரவாக வடக்கினையும் கிழக்கினையும் இணைத்தார். அவ்வாறு நிருவாகமுறை மாற்றப்பட்டபோது கிழக்கு மாகாண மக்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாற்றப்பட்டனர். ஆகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை சிறுபான்மையினராக்கும் வடகிழக்கு இணைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது. வடக்கும் கிழக்கும் தனித்தே இருக்க வேண்டும்.

வடக்குடன் கிழக்கு இணைந்திருந்தாக வரலாறொன்று இல்லை. கிழக்குடன் வடமத்திய மாகாணத்தினை இணைத்து ஆட்சி நடத்தியமைக்கான வரலாறு இருக்கின்றன. எனவே வடக்கினை கிழக்குடன் இணைக்க வேண்டும் என்று கோருவதில் நியாயமில்லை. ஆகவே வடகிழக்கினை மீண்டும் இணைத்து இனத்தினை பாதித்து, இனமொன்றின் வீதாசாரத்தினை குறைத்து இரத்த ஆறு ஓடுவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறானதொரு புதிய அரசியலமைப்பினை உருவாக்க முடியாது. இந்த நட்டில் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது இனங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டும்.

தற்போதை நிலையில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த எவராலும் முதலைமைச்சராகவோ அல்லது அமைச்சராகவோ இருக்க முடியும். அவ்வாறு மூவினமும் இணைந்து ஆட்சி செய்து அமைதியாக வாழும் ஒரு மாகாணமாக கிழக்கு இருக் கையில் வடக்கும் கிழக்கு இணையவேண்டும் என்று கூறுவபர்கள் அதற்கான காரணம் என்னவென்பதை வெளிப்படுத்தப்படணே;டும்.

அதேநேரம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் உரியமுறையில் பகிரப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 13ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகரங்கள் அமைச்சரவை தீர்மானங்கள், சுற்று நிருபங்களால் முடக்கப்பட்டுள்ளன. அவ்வாறு 13ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பயன்படுத்தி மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை உள்ளடக்கியவகையில் அதிகாரங்களை வழங்க வேண்டும். ஆனால் அதற்காக வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பாராளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்புக்கூறும் வகையிலான பிரதிநிதித்துவம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக எந்த தியாகங்களையும் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதிக்கின்ற முறைமைக்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தற்போது 21முஸ்லிம் பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். அவர்களை ஐந்து ஆறு பிரதிநிதிகளாக குறைப்பதற்கு இடமளிக்க முடியாது. 10சதவீதமான முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தும் உரிய பாராளுமன்ற தேர்தல் முறைமையொன்றுக்கே நாம் முழுமையான ஆதரவளிப்போம் என்றார்.

http://epaper.virakesari.lk/

42 minutes ago, colomban said:

வடக்குடன் கிழக்கு இணைந்தால் இரத்த ஆறே ஓடும் ! ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம்களின் இரத்த ஆறு ஓடினால் அதன் பின்னர் அங்கு உண்மையான அமைதி ஏற்படும் என்பது உலக வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி போகிறது இந்தாள் பேச்சு?

இப்ப 42% இன்னும் கொஞ்ச நாளில 50% மேல போய்விடும்... அப்புறம் கிழக்கே நம்மது. முஸ்லீம் சரியா சடடம் வேண்டும் என்று கேட்டு ஜிஹாத் பண்ணி ரத்த ஆறு ஓட வைப்போம்.

அட போங்கப்பா.... நீங்களும் உங்கட ஐடியாவும்...

அம்பாறை, ஊவா மாகாணத்துடன் இணைக்கப்பட வேண்டும்....

சுமன தேரர் தான் இனி எங்கண்ட தலைவர்... அவர் தான் உங்களுக்கு மருந்து தருவார் ... பேதி போக...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஒத்தைக்கு ஒத்தை ரெடியா

  • தொடங்கியவர்
இணைக்காது அதிகாரத்தை தா’
 

image_b014d4b950.jpg“இந்த நாட்டில் மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு காரணத்துக்காகவும் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படக் கூடாது” என, இராஜங்க அமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (08)  ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

“சிறுபான்மையின மக்களுக்கு உள்ள பாதுகாப்பாக, தற்போதைய ஜனாதிபதி ஆட்சி முறையை நாம் வரவேற்றோம். 1988ஆம் ஆண்டு முதல் சிறுபான்மை மக்களின் ஆதரவு, வாக்குகளுடனயே ஜனாதிபதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

“எங்களுடைய மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அவர்களுடன் கலந்துரையாடி, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தீர்வுகளைப் பெற்று வந்திருக்கின்றோம். ஆதலால் எமக்கு, அதாவது சிறுபான்மை மக்களுக்கு தற்போதைய ஜனாதிபதி ஆட்சி முறை நன்மையளித்திருக்கிறது. ஆதலால், இந்த ஜனாதிபதி முறையை மாற்றுவதானது, சிறுபான்மையின மக்களுக்குத் தீங்காக அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

“அத்துடன், வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் ஒருசாரார் கருத்துத் தெரிவித்துள்ளனர். வடக்கு, கிழக்கு இணைந்திருந்த போதுதான் கிழக்கில் இரத்த ஆறு ஓடியது. கிழக்கில் முஸ்லிம்கள் 42 சதவீதம் வாழ்கின்றனர். வடக்கு, கிழக்கை இணைப்பதன் ஊடாக நாம் அந்த மாகாணத்தில் சிறுபான்மை இனமாக மாறக்கூடிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

“மேலும், கிழக்கு மாகாணமானது சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் வாழும் மாகாணமாகும். அங்கு எவரும் முதலமைச்சராக வரலாம். நாம் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

“நாம் எந்தவொரு காரணத்துக்காகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். வடக்கு- கிழக்கை இணைத்து, மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு புதிய அரசமைப்பின் ஊடாக வழிசமைத்துவிடக் கூடாது.

“வடக்கு – கிழக்கை இணைப்பதற்கு எந்தவொரு அடிப்படையான நியாயமும் கிடையாது. கிழக்கில் சிறப்பானதொரு ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது. மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். ஆனால், வடக்கு – கிழக்கை இணைப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இணைக்காது-அதிகாரத்தை-தா/175-206887

  • கருத்துக்கள உறவுகள்

கிஸ்புல்லா தன்ற இனம் பாதிப்படைந்திரா கூடாது என்பதில் வலு கவனமாக இருக்கிறார் ஆனால் நம்ம தமிழர் நலன் சார்ந்த தலமைகள்  எருமைகள் போல் மழையும் தெரியாமல் வெயிலும் தெரியாமால் மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டு திரிகின்றன 

கிஸ்புல்லாவை பாராட்டலாம் தன்ற இனம் தான் முக்கியம் என்ற் குறிக்கோளின் நிற்கிறான்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2017 at 2:31 AM, Nathamuni said:

சுமன தேரர் தான் இனி எங்கண்ட தலைவர்... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.