Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்­தான இந்­திய மருத்­து­வக் கழிவு  வடக்­குக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றதா?

Featured Replies

 
ஆபத்­தான இந்­திய மருத்­து­வக் கழிவு  வடக்­குக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றதா?
 
o

ஆபத்­தான இந்­திய மருத்­து­வக் கழிவு  வடக்­குக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றதா?

 

காலா­வ­தி­யான மருந்துப் பொருள்­கள், ஆயி­ரத்­துக்­கும் மேலான கண்­ணா­டிப் போத்­தல்­கள், பொலித்­தீன்­கள், ஊசி­வ­கை­கள் போன்ற மருத்­து­வக் கழி­வு­கள் கடந்த மூன்று நாள்­க­ளாக வட­ம­ராட்சி தொண்­ட­மா­னாறு கடற்­ப­ரப்­பில் கரை­யொ­துங்குகின்­றன. இவை ஆபத்­தான மருத்­து­வக் கழி­வு­களா என்­கிற சந்­தே­கம் மக்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.

அந்­தப் பொருள்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்தே இங்கு வரு­கின்­றன என சுகா­தா­ரப் பிரி­வி­னர் சந்­தே­கிக்­கின்­ற­னர். பொருள்­க­ளில் உள்ள இந்­திய அரச முத்­தி­ரை­கள், அங்­குள்ள வர்த்­தக நிலை யங்­க­ளின் பெயர்­களை வைத்தே அவர்­கள் இவ்­வாறு சந்­தே­கிக்­கின்­ற­னர்.

கரை­யொ­துங்­கும் மருத்­து­வக் கழி­வு­கள் தொண்ட­மா­னாறு மீன­வர்­கள் மத்­தி­யி­லும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தி­யா­வின் மருத்­து­வக் கழி­வு­கள் பட­கு­க­ளில் எடுத்­து­வ­ரப்­பட்டு நடுக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­ற­னவா என்­கிற சந்­தே­கத்­தை­யும் இது கிளப்­பி­விட்டுள்­ளது.

‘‘கழி­வுப் பொருள்­கள் கடற்­க­ரை­யில் கரை­யொ­துங்­கு­வ­தால் கடற்­ப­ரப்பை அண்­டிய பிர­தே­சங்­க­ளில் வாழும் மக்­கள் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். கடற்­கரை முழு­வ­துமே குப்­பை­மே­டா­கக் காணப்­ப­டு­கின்­றது.

கடல் வளம் பாதிப்­ப­டை­கின்­றது. மீன் இனம் அழி­வ­டை­கின்­றது” என்­கின்­ற­னர் கடற்­றொ­ழி­லா­ளர்­கள்.

வட­ம­ராட்­சி­யின் ஏனைய கடற்­ப­ரப்­புக்­க­ளி­லும் இவ்­வா­றான கழி­வுப் பொருள்­கள் கரை­யொ­துங்­கு­கின்­றன. ஆயி­னும் இந்­தக் கடற்­க­ரை­யி­லேயே அதி­க­மா­கக் கரை­யொ­துங்­கு­கி­றது என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

‘‘இவ்­வாறு மருத்­து­வக் கழி­வு­கள் கரை­யொ­துங்­கு­வது குறித்­து­இ­து­வரை எமக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் இது பற்றி ஆரா­யப்­ப­டும்’’ என வட­ம­ராட்சி நகர சபை அதி­காரி­ ஒரு­வர் தெரி­வித்­தார்.

tho-1-750x400.jpg

tho-2-750x400.jpg

tho-3-750x400.jpg

tho-4-459x400.jpg

tho-5-750x400.jpg

tho-6-750x400.jpg

tho-750x400.jpg

http://newuthayan.com/story/47402.html

  • தொடங்கியவர்

தொண்டைமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்!

 

தொண்டைமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கும்  ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்!

காலாவதியான மருந்துப் பொருள்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசிவகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த மூன்று நாள்களாக வடமராட்சி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்குகின்றன.

இவை ஆபத்தான மருத்துவக் கழிவுகளா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்தப் பொருள்கள் இந்தியாவிலிருந்தே இங்கு வருகின்றன என சுகாதாரப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.

தொண்டைமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கும்  ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்!

பொருள்களில் உள்ள இந்திய அரச முத்திரைகள், அங்குள்ள வர்த்தக நிலையங்களின் பெயர்களை வைத்தே அவர்கள் இவ்வாறு சந்தேகிக்கின்றனர்.

கரையொதுங்கும் மருத்துவக் கழிவுகள் தொண்டமானாறு மீனவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் படகுகளில் எடுத்துவரப்பட்டு நடுக் கடலில் கொட்டப்படுகின்றனவா என்கிற சந்தேகத்தையும் இது கிளப்பிவிட்டுள்ளது.

தொண்டைமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கும்  ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்!

கழிவுப் பொருள்கள் கடற்கரையில் கரையொதுங்குவதால் கடற்பரப்பை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

கடற்கரை முழுவதுமே குப்பைமேடாகக் காணப்படுகின்றது. கடல் வளம் பாதிப்படைகின்றது. மீன் இனம் அழிவடைகின்றது என  கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சியின் ஏனைய கடற்பரப்புக்களிலும் இவ்வாறான கழிவுப் பொருள்கள் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொண்டைமானாறு கடற்பரப்பில் கரையொதுங்கும்  ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்!

ஆயினும் இந்தக் கடற்கரையிலேயே அதிகமாகக் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவது குறித்து இதுவரை எமக்கு அறிவிக்கப்படவில்லை.

எனினும் இது பற்றி ஆராயப்படும் என வடமராட்சி நகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Indian-medical-vaccines-Thondamanaru-sea

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கடற்கரையில் ஒதுங்கும் ஆபத்து!

 

யாழ். வடமராட்சி கடற்பகுதிகளில் இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தொண்டமானாறு, அக்கரை, வளலாய் கடற்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மருத்துவக் கழிவுகள் கரையொதுங்குவதாக அந்தப் பகுதி மீனவர்கள் குறிப்பிட்டனர்.

ஊசிமருந்து, கண்ணாடிப் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் இந்தியாவிலிருந்து வருகின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

வழமைக்கு மாறாக முதன்முறையாக இவ்வாறான பெருந்தொகை மருந்துப் பொருட்கள் கரையொதுக்குவதாக அந்தப் பகுதியில் நீண்டகால மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கழிவுப்பொருட்கள் மூலம் கடற்கரையோர மக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படலாம் எனவும் மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த கழிவுகள் கப்பல் ஊழியர்கள் பயன்படுத்தி விட்டு கடலில் போட்டிருக்கக்கூடும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜி.குணசீலன் கருத்துத் தெரிவித்தார்.

மூன்று உரப்பைகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் வெற்று மதுப் போத்தல்கள் கரை ஒதுங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எதுவும் தமக்கு அறியக்கிடைக்கவில்லை எனவும் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர், கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

தமிழ்வின்.காம்

  • தொடங்கியவர்

இந்தியா கழிவுகள் யாழ் கடலில் கரை ஒதுங்கு கின்றன. உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ? 

IMG_7358-800x600.jpg

இந்தியாவில் இருந்து மருத்துவ கழிவுகள், கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் யாழ்.தொண்டமனாறு கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன.

யாழ். வடமராட்சி , தொண்டமனாறு மற்றும் அக்கரை கடற்கரை பகுதிகளில் கழிவு பொருட்கள் கடந்த புதன் கிழமை முதல் கரையொதுங்கி வருகின்றன. அவை இந்தியாவில் இருந்தே கரையொதுங்குகின்றது என தெரிவிக்கபப்டுகின்றது.

மருத்துவகழிவுகள், காலாவதியான மருந்து பொருட்கள் , மாத்திரைகள் , கண்ணாடி (மருந்து) போத்தல்கள் , மருந்து ஊசிகள் , உள்ளிட்டவையுடன் , அழகு சாதன கிறீம் போத்தல்கள் மற்றும் டியூப் வகைகள் , மதுபான போத்தல்கள் , லைட்டர்கள் , சுவையூட்டப்பட பாக்கு வகைகள் என பல தரப்பட்ட கழிவு பொருட்கள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையொதுங்குகின்றன.

அது தொடர்பில் மீனவர் ஒருவர் தெரிவிக்கையில் , இந்த கழிவு பொருட்கள் திடீரென செவ்வாய்க்கிழமை முதல் கரையொதுங்கு கின்றன. இவை இந்தியாவில் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளாக இருக்கலாம்.

யாழில்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாகவும் காற்றின் திசை காரணமாகவும் இவை இலங்கை கடற்பரப்பை நோக்கி வந்து கரையொதுங்கி இருக்கலாம். மீண்டும் காற்று திசை மாறும் போது மேலும் கழிவுகள் கரையொதுங்க சந்தர்ப்பம் உண்டு.

இந்த கழிவு பொருட்களில் உள்ள சில மாதிரிகளை வைத்து பார்க்கும் போது இவை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கடலில் கொட்டப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். அத்துடன் இந்த கழிவு பொருட்கள் மீன் பிடிவலைகளிலும் அகப்பட்டு உள்ளன

கடந்த புதன்கிழமை பெருமளவான கழிவு பொருட்கள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையொதுங்கி இருந்தன. அது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து கழிவு பொருட்களை பார்வையிட்ட பின்னர் அவற்றை கடற்கரையில் இருந்து உழவு இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினார்கள் என தெரிவித்தார். அது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபை க்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சகிதன் தெரிவிக்கையில் , கடற்கரையில் இந்தியாவில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல்கள் வந்தன. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று இருந்தோம். மருந்து போத்தல்கள் உட்பட மதுபான போத்தல்கள், லைட்டர்கள் , என பல பொருட்கள் கரை ஒதுங்கி இருந்தன. அவற்றை நகர சபை ஊழியர்கள் மூலம் கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளோம். என தெரிவித்தார். அதேவேளை கழிவு பொருட்களை தமிழக அரசு படகுகள் மூலம் நடுக்கடலுக்கு கொண்டு வந்து கடலினுள் கொட்டுகின்றார்களா ? எனும் சந்தேகமும் மீனவர்கள் மத்தியில் உள்ளது.

கழிவு பொருட்கள் கரையொதுங்குவது தொடர்பில் அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இந்திய தமிழக அரசால் கடலினுள் கழிவு பொருட்கள் கொட்டப்படுகின்றனவா ?என மீனவர்கள் மத்தியில் உள்ள சந்தேகத்தை நீக்கும் விதமாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

கடலினுள் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொட்டுவதனால் கடல் வளங்கள் பாதிப்படைந்து , மீன் இனங்கள் அழிவடைவது மாத்திரமின்றி சுற்று சூழலுக்கும் சவால் விடும் அளவில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

இவை தொடர்பில் உரிய அதிகாரிகள் கரிசனை கொண்டு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா ? அல்லது கழிவு பொருட்கள் கரை ஒதுங்க விட்டு அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை மாத்திரம் செய்ய போகின்றார்களா ?

IMG_7218-800x600.jpgIMG_7220-800x600.jpgIMG_7241-800x542.jpgIMG_7250-800x600.jpgIMG_7254-800x600.jpgIMG_7263-800x584.jpgIMG_7269-800x600.jpgIMG_7276-800x600.jpgIMG_7287-800x600.jpgIMG_7292-800x600.jpgIMG_7313-800x600.jpgIMG_7318-800x600.jpgIMG_7339-800x600.jpgIMG_7346-600x800.jpgIMG_7348-600x800.jpgIMG_7351-800x600.jpgIMG_7358-1-800x600.jpgIMG_7379-800x600.jpgIMG_7382-800x600.jpgIMG_7384-800x600.jpgIMG_7387-800x600.jpgIMG_7400-800x600.jpgIMG_7404-800x600.jpgIMG_7407-800x600.jpgIMG_7412-800x600.jpg

http://globaltamilnews.net/archives/50643

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்திய சென்னை, வெள்ளம் அள்ளிக் கொண்டு வந்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

சமீபத்திய சென்னை, வெள்ளம் அள்ளிக் கொண்டு வந்ததோ?

இருக்கலாம் நானும் நேற்று கடலுக்குள்  படகில் செல்லும் போது கண்டேன் சில வேளை நீ ரோட்டத்தில்  வந்திருக்கலாம்  அல்லது மருத்துவ கழிவுகளை கடலினுள் கொட்டி இருக்கலாம் இதை இலங்கை அரசு கண்டு பிடித்து மீன் வளங்களை பாதுகாக்க வேணும் இல்லையென்றால் கடலுணுணவி அதிகம் சாப்பிடுபவர்கள் நம் மக்கள் அதிக நோய்களை சம்பாதிக்க நேரிடலாம் மீனவ தொழில் வேற பாதிப்படையலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்கலாம் நானும் நேற்று கடலுக்குள்  படகில் செல்லும் போது கண்டேன் சில வேளை நீ ரோட்டத்தில்  வந்திருக்கலாம்  அல்லது மருத்துவ கழிவுகளை கடலினுள் கொட்டி இருக்கலாம் இதை இலங்கை அரசு கண்டு பிடித்து மீன் வளங்களை பாதுகாக்க வேணும் இல்லையென்றால் கடலுணுணவி அதிகம் சாப்பிடுபவர்கள் நம் மக்கள் அதிக நோய்களை சம்பாதிக்க நேரிடலாம் மீனவ தொழில் வேற பாதிப்படையலாம் 

இதை கடலினுள் எறிவார்கள் என்று நினைக்க வில்லை. அவர்களுக்கும் ஆபத்து தானே. 

இது வெள்ளம் செய்த வேலை தான் என நினைக்கிறேன். 

பொருட்களை பார்க்கையில் அப்படி தான் தெரிகிறது. அஜந்தா பாக்கு தூள்.

அதிலுல்ல முகவரிக்கு, இலங்கை தூதரக அதிகாரிகள் போய், விசாரித்தால் தெரியுமே.

அல்லது நாமே போன் போட்டுப் பார்க்கலாம்.

IMG_7358-1-800x600.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎.‎11‎.‎2017 at 6:58 AM, நவீனன் said:
 
ஆபத்­தான இந்­திய மருத்­து­வக் கழிவு  வடக்­குக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றதா?
 
o

ஆபத்­தான இந்­திய மருத்­து­வக் கழிவு  வடக்­குக் கட­லில் கொட்­டப்­ப­டு­கின்­றதா?

‘‘இவ்­வாறு மருத்­து­வக் கழி­வு­கள் கரை­யொ­துங்­கு­வது குறித்­து­இ­து­வரை எமக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் இது பற்றி ஆரா­யப்­ப­டும்’’ என வட­ம­ராட்சி நகர சபை அதி­காரி­ ஒரு­வர் தெரி­வித்­தார.

http://newuthayan.com/story/47402.html

சம்சுங் அவர்களுக்கும் இதுபற்றி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். அவர்களுக்கும் அறிவிக்கப்படும்வரையும் படங்கள் பார்ப்போம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதை கடலினுள் எறிவார்கள் என்று நினைக்க வில்லை. அவர்களுக்கும் ஆபத்து தானே. 

இது வெள்ளம் செய்த வேலை தான் என நினைக்கிறேன். 

பொருட்களை பார்க்கையில் அப்படி தான் தெரிகிறது. அஜந்தா பாக்கு தூள்.

அதிலுல்ல முகவரிக்கு, இலங்கை தூதரக அதிகாரிகள் போய், விசாரித்தால் தெரியுமே.

அல்லது நாமே போன் போட்டுப் பார்க்கலாம்.

 உன்மையா சொல்ல போகிறார்கள் நாதா இதை இந்திய தூதரகம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது என நினைக்கிறன் அவர்களிடம் கேட்கலாம் அல்லவா இந்த கழிவுகள் எங்கிருந்து வருகிறது  என்று மற்றும் கடல் வளம் சார்ந்த அமைப்புகள் எத்தனையோ வடக்கில் இருக்கிறது ஆனால் அதையெல்லாம் செய்ய மாட்டார்கள் எங்க ஒரு ஏழை மீனவன் தவறாக மீன் பிடிக்கிறானோ அவனை பிடிச்சி காண்பித்து பீத்துக்கொள்வானுகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Nathamuni said:

சமீபத்திய சென்னை, வெள்ளம் அள்ளிக் கொண்டு வந்ததோ?

உங்கடை கதையை பாத்தால் இவ்வளவுகாலமும் தமிழ்நாட்டுப்பக்கம் வெள்ளமே வரேல்லை எண்டுற மாதிரியெல்லே கிடக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உங்கடை கதையை பாத்தால் இவ்வளவுகாலமும் தமிழ்நாட்டுப்பக்கம் வெள்ளமே வரேல்லை எண்டுற மாதிரியெல்லே கிடக்கு.....

எனக்குத் தெரிஞ்சன்ன,

2015, 2017 தான் சென்னையில் பெருவெள்ளம்....

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

எனக்குத் தெரிஞ்சன்ன,

2015, 2017 தான் சென்னையில் பெருவெள்ளம்....

2015ல்  வெள்ளம் சென்னையில்  வந்தபோது இப்படியான பொருள்கள் வடமராட்சி பக்கமோ அல்லது ஈழத்தின் கரையோர பக்கம்களிலோ குறிப்பிட்டு சொல்லும்படியான மருத்துவ கழிவுகள் மட்டும் ஒதுங்க வில்லை அந்த பகுதியில்   இந்த நவம்பர் டிசம்பர் காலபகுதி கடல் நீர் ஓட்டத்துக்கு பெரும்பாலும் பர்மா யங்கூன் பக்க பொருள்கள் மூங்கில் போன்றவை மட்டுமே ஒதுங்குவது உண்டு .  

அங்கு கேரளாக்காரன் தமிழ்நாட்டின் எல்லை புறங்களில் களவாக இப்படியான மருத்துவ கழிவுகள் கொட்டிவிட்டு ஓடி பிரச்சனை எழுவது உண்டு . இவை பெரும்பாலும்  சென்னை கழிவுகள் அப்படிஇல்லாமல் எதுக்கும் ஒருக்கா கதிரியக்க பரிசோதனையும் செய்வது நல்லது கூடம்குள அணுமின் நிலைய கழிவுகளும் நடுக்கடலில் கொட்டுகினமோ என்று பகிடிதான் என்றாலும் டெல்லிக்கு தமிழன் உலகில் வாழவே பிடிப்பதில்லையே என்பது உண்மைதானே.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் யாழ்குடாநாட்டின் கடற்கரைப்பகுதியில் மிகப்பெரிய அளவில் மருத்துவமனைக் கழிவுகள் ஒதுங்கியுள்ளன என இலங்கையின் வடக்கிலிருந்து வெளிவரும் இணையத்தளங்கள் படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன. அக்கழிவுகளில் சென்னைச்சுற்றுப்புறத்தின் முகவரிகளுடனான வெற்று டப்பாக்களும் காணப்படுகின்றன.

ஷென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் காணப்படும் தனியார் மருத்துவமனைகளது மருத்துவக்கழிவுகளை ஜே ஜி மல்டி கிலாவ் எனும் நிறுவனம்தான் கையாளுகின்றது. தற்போது தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் ஆதரவாளர்களது கண்காணிப்பு அதிகமாக இருப்பதால் இந்நிறுவனம் மருத்துவக்கழிவுகளை இலங்கைத்தூவுக்கு அண்மித்த பகுதிகளில் கடலில் கொட்டியிருக்கலாம்.

அவ்வேளையில் அப்பிரதேசத்தில் காணப்பட்ட மீனவர்களைக் கலைந்து செல்லவும் அவர்களது கவனத்தைத் திசைதிருப்பவும் இந்தியக்கரயோரக்காவற்படையின் சென்னைக்கட்டளைப்பீடம் இந்நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயற்பட்டிருக்கலாம். இந்த நிறுவனம் தமிழ்நாடு தவிர கேரளாவிலும் தனது சேவையைத் தொடர்கிறது அண்மைக்காலத்தில் கேரளாவை அண்மித்த தமிழகத்தின் எல்லைக்கிராமங்களில் கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவமனைக்கழிவுகள் அடங்கிய கண்டேனர்கள் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கபட்டது நினைவிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.