Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய் பிடிகாரர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் ஊரில் நாய்களை வீட்டுக்குள் விடுவதில்லையே.

படியில் ஏறினாலே பேச்சு வேண்டுவினம் இங்கு புலம்பெயர் சில வீடுகளில் நாய் வளர்ப்பை பார்த்து நாய் வளர்க்கும் கொஞ்ச நஞ்ச ஆசையும் போயிட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீதிகளில் பெரும்பாலும் அயலட்டை நாய்கள்தான் திரியும். நாய்பிடிகாரர் வந்தால் முதலே அவ்வழியால் சயிக்கிளில் வருபவர்கள் சொல்லி விடுவார்கள். அப்படியும் சில சமயங்களில் ஒன்று இரண்டு பிடிபடுவதுண்டு. பிறகு காசு குடுத்து இறக்கி விடுவினம். வால் எடுத்தபின் நாய்களை புதைத்து விடுவார்கள்.கண்டபடி போடமாட்டினம்.

நாய்போல ஒரு நண்பனோ வேலைக்காரனோ உலகில் கிடையாது. வெளியே போன வீட்டுக்காரர்கள் வீட்டுக்கு வரும் நேரங்களுக்கு சரியாய் வாசலில் வந்து நிக்கும்.பொங்கல் நாட்களில் எங்காவது போய் ஒழித்துக் கிடக்கும், ஆரவாரம் குறைந்தபின் வெளியே தலைகாட்டுவார். ஆடிமாதங்களில் வீட்டில் தங்கமாட்டார். சிலநாட்களின் பின் நாறிப்போய் வந்து கோடிக்குள் படுத்து கிடப்பார். அப்பொழுது அவருக்கு ராஜமரியாதையுடன் அம்மாவோ,ஆச்சியோ சாப்பாடு கொண்டுபோய் குடுத்து விட்டு வருவினம். சில சமயம் குட்டை பிடித்து விட்டால் அவர் எதிர்பாராமல் சுடுசாம்பல் கொண்டு போய் கொட்டி விடுவார்கள். பிச்சுக்கொண்டு ஓடுவார். இப்படி நிறைய சொல்லலாம்......!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பெருமாள் said:

படியில் ஏறினாலே பேச்சு வேண்டுவினம் இங்கு புலம்பெயர் சில வீடுகளில் நாய் வளர்ப்பை பார்த்து நாய் வளர்க்கும் கொஞ்ச நஞ்ச ஆசையும் போயிட்டுது .

 

ஊரில் எவரும் நாய் வளர்க்கலாம்....

ஆனால் இங்கு அப்படியில்லை..

அதற்கு ஏகப்பட்ட செலவும் பந்தாவும்...

பொக்கற் நாய் எண்டு ஊமல் சைசிலை    தேவாங்கு மாதிரி   ஒரு நாய் விக்கிறாங்கள்....

அதைத்தான் எங்கடை சனம் இப்ப விரும்பி வாங்குதுகள்....

மகள் ஆசைப்படுறாளம்...:cool:

image_6b8771c2-7f9f-49c0-bbd7-a0e5e83b38ab.jpg?v=1411713652

  • கருத்துக்கள உறவுகள்

Cute Christmas Cookies GIF by Best Friends Animal Society

நாய்க்கு... பழைய சோறு போடாமல், நல்ல "ரின் சாப்பாடாக"  வாங்கிப் போடுங்கப்பா....  :grin: 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

எங்கள் வீதிகளில் பெரும்பாலும் அயலட்டை நாய்கள்தான் திரியும். நாய்பிடிகாரர் வந்தால் முதலே அவ்வழியால் சயிக்கிளில் வருபவர்கள் சொல்லி விடுவார்கள். அப்படியும் சில சமயங்களில் ஒன்று இரண்டு பிடிபடுவதுண்டு. பிறகு காசு குடுத்து இறக்கி விடுவினம். வால் எடுத்தபின் நாய்களை புதைத்து விடுவார்கள்.கண்டபடி போடமாட்டினம்.

நாய்போல ஒரு நண்பனோ வேலைக்காரனோ உலகில் கிடையாது. வெளியே போன வீட்டுக்காரர்கள் வீட்டுக்கு வரும் நேரங்களுக்கு சரியாய் வாசலில் வந்து நிக்கும்.பொங்கல் நாட்களில் எங்காவது போய் ஒழித்துக் கிடக்கும், ஆரவாரம் குறைந்தபின் வெளியே தலைகாட்டுவார். ஆடிமாதங்களில் வீட்டில் தங்கமாட்டார். சிலநாட்களின் பின் நாறிப்போய் வந்து கோடிக்குள் படுத்து கிடப்பார். அப்பொழுது அவருக்கு ராஜமரியாதையுடன் அம்மாவோ,ஆச்சியோ சாப்பாடு கொண்டுபோய் குடுத்து விட்டு வருவினம். சில சமயம் குட்டை பிடித்து விட்டால் அவர் எதிர்பாராமல் சுடுசாம்பல் கொண்டு போய் கொட்டி விடுவார்கள். பிச்சுக்கொண்டு ஓடுவார். இப்படி நிறைய சொல்லலாம்......!  tw_blush:

சுவி உங்கள் தகவலுக்கு நன்றி.பதின்ம வயதிலிருந்து இப்போது வரை அந்த நாய்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் இருந்தேன்.இங்கு பலரும் இப்படி நாயை பிடிக்கிறதே தெரியாமல் இருந்திருக்கலாம்.தெரிந்தவர்களுக்கும் அந்த நாய்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பற்றி தெளிவின்மை காணப்பட்டது.

நாயின் குணாதிசியங்கள் பற்றி எழுதியிருந்தீர்கள்.முக்கியமாக ஒன்றை விட்டுவிட்டீர்கள்.

மனிதருக்கே இல்லாத மாதிரி நாய்களுக்கு ஒரு குணம் என்னவென்றால்

எப்போதாவது விரதம் இருக்கும்.அந்த நேரங்களில் றாலைப் பெரித்து கொடுத்தா என்ன மீனை பொரித்து கொடுத்தா என்ன இறைச்சியைக் கொடுத்தாலும் சாப்பிடவே மாட்டுது.தனியே புல்லை மட்டுமே தின்னும்.மனிதர்களின் விரதங்கள் சில வேளைகளில் இடையில் முறிந்துவிடும்.நாய்களுக்கு மட்டும் எப்படி விரத வைராக்கியம் இருக்கிறதோ தெரியவில்லை.

  • நாய்­களை இனி­மேல் சிவ­னே­சன் பார்ப்­பார்- சுகா­தார அமைச்­சர் அறி­விப்பு
நாய்­களை இனி­மேல் சிவ­னே­சன் பார்ப்­பார்- சுகா­தார  அமைச்­சர் அறி­விப்பு
 
 

நாய்­களை இனி­மேல் சிவ­னே­சன் பார்ப்­பார்- சுகா­தார அமைச்­சர் அறி­விப்பு

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள தெரு நாய்­க­ளின் பிரச்­சி­னை­கள் எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் தொடக்­கம் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சுக்­குப் பாரப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. எனவே நாய்­கள் பற்­றிய பிரச்­சி­னை­களை இனி­மேல் விவ­சாய அமைச்­சர் பார்த்­துக்­கொள்­வார்.
இவ்­வாறு வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் மருத்­து­வர் ஜீ. குண­சீ­லன் சபை­யில் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத் திட்ட விவா­தத்­தில், சுகா­தார அமைச்சு மீதான நேற்­றைய விவா­தத்­தில் அமைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள தெரு­நாய்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் வலி­யு­றுத்­தி­னார். இதற்­குச் சுகா­தார அமைச்­சர் நேற்­றுப் பதி­ல­ளித்­தார்.

‘‘நாய்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் விவ­சாய அமைச்­சர் இனி­மேல் பார்த்­துக்­கொள்­வார். நாய்­க­ளின் இனப் பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வது, அதற்­கான செயற்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது போன்­றன கால்­நடை துறை ஊடாக அவர்­க­ளி­டம் பாரப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. விவ­சாய அமைச்­சுக்கு நாம் எந்த சந்­தர்ப்­பத்­தி­லும் பக்­க­ப­ல­மாக செயற்­ப­டு­வோம்’’ என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/55198.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.