Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலக்க போவது யாரு?

Featured Replies

நெடுக்ஸ் அண்ணே! அடடா, அந்தக் குப்பத்தவர்தானா இவர்.

ஒருநாள் அவர் இந்துக் கல்லூரி மைதானத்தில் வந்து கிறிக்கட் பாத்தாரண்ணே.

அப்போது நம்ம மகாதேவா மாஸ்டர் அதுதான் கொமன்றியெல்லாம் கொடுப்பாரே அவர் இவரைக் கூப்பிட்டு ஒருவித்தியாசமாக இருக்கட்டுமென்று மைக்கை இவர்கைல கொடுத்திட்டார்.

இப்ப இவர் கொமன்றி கொடுக்கிறார் இப்படி!!!

நன்றாகப் பாருங்கள் ரசிகர்களே! அந்த மூன்று பொல்லுக்கு முன்னால் மட்டையைப் பிடித்திருப்பவர் அந்த மட்டையை அங்கும் இங்கும் சுழட்டுவார். அவருக்கு எதிரெ விளாம்பழம் மாதிரி பந்தை வைத்திருப்பவர் அதை அந்த மட்டையில் படாதபடி ஓடிவந்து வீசிஎறிவார். :huh::lol:

( கொஞ்சம் சுட்டது வர்னனை நம்ம சரக்கு . மகாதேவா மாஸ்டர் பின்னாளில் இந்துக்கல்லூர்த் தலைமைஆசிரியராக இருந்தவர்என நினைக்கிறேன்.)

ஆகா சுவி கிளம்பிட்டாங்கையா

ஆமா சுவி இந்து கல்லூரி என்று சொல்லும் போது எந்த இந்துக் கல்லூரி என்று சொன்னால் நன்றாகவிருக்கும்

  • Replies 502
  • Views 74.7k
  • Created
  • Last Reply

அட நம்ம இந்து கல்லூரியா.

அதெ ஊர்லதான் இருக்கு. :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நம்ம யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. தான்.!!!!

வில்லண்ணே!!! ரெம்ப கிளறாதீங்கோ அழுதிடுவன். :lol::D

  • தொடங்கியவர்

ஜமுனா - தாச்மாகல் சொல்லும் கதை என்ன தாத்தா?

கந்தப்பு - சொத்தாலும் சிலவு வைப்பாள் காதலி.

ஜமுனா - ????

ஆகா, நானும் அங்கு தான் படித்தோன். நான் 1976 - 1981 வரை? நீங்கள்? இனுமையான அனுபவங்கள்.

ஜமுனா - தாச்மாகல் சொல்லும் கதை என்ன தாத்தா?

கந்தப்பு - சொத்தாலும் சிலவு வைப்பாள் காதலி.

ஜமுனா - ????

அப்படியா பொன்னி எனக்கு தெறியார்கு கந்தப்பு தாத்தாவுக்கு நல்ல அநுபவம் இருக்கு

:lol:

ஆகா, நானும் அங்கு தான் படித்தோன். நான் 1976 - 1981 வரை? நீங்கள்? இனுமையான அனுபவங்கள்.

ஆ நீங்கள் படித்தனீங்களா மழைக்கு ஒதுங்கினீங்களா

:D:D

  • தொடங்கியவர்

அப்படியா பொன்னி எனக்கு தெறியார்கு கந்தப்பு தாத்தாவுக்கு நல்ல அநுபவம் இருக்கு

:lol::D

தான் அறிவுரை சொன்னாலும், சிறுசுகள் கோட்குது இல்லை என்று அவர் புலம்பினவர். அதானால் தான் அவர் சொல்லுகிற மாதிரி எழுதினான். விள்ங்குது தானொ? வானவில் பார்க்க 5000 சொலவழிக்கிறியள்.

தான் அறிவுரை சொன்னாலும், சிறுசுகள் கோட்குது இல்லை என்று அவர் புலம்பினவர். அதானால் தான் அவர் சொல்லுகிற மாதிரி எழுதினான். விள்ங்குது தானொ? வானவில் பார்க்க 5000 சொலவழிக்கிறியள்.

நீங்க சொன்னா கேட்கிறன் ஆனால் கந்தப்பு லேசுபட்ட்ட ஆள் இல்லை கோயிலில போய் சைட் அடிக்கிறது,என்ட யுனி பெட்டைகளை சைட் அடிக்கிறது என்று மோசம்

:lol:

  • தொடங்கியவர்

யம்மு - அப்பு எனக்கு ஒண்டும் சொல்ல வோண்டாம், எனக்கு எல்லாம் தொரியும். எனக்கு உடம்பொல்லாம் மூளை.

கந்தப்பு - உடம்பொல்லாம் இருந்தா அது கொளுப்பு அப்பு. தலையில இருந்தால் தான் மூளை.

யம்மு???

யம்மு - வட் இஸ் ட ஒப்பசிட் து பெண்குயின்?

மாப்பு - தெறியாது?

யம்மு - ஆண்கிங்

ஆ நீங்கள் படித்தனீங்களா மழைக்கு ஒதுங்கினீங்களா

:lol::D

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

அட நம்ம இந்து கல்லூரியா.

அதெ ஊர்லதான் இருக்கு. :P :P

எனக்கு தெரிந்ததெல்லாம் நான் படித்த கல்லூரி பம்பலபிட்டி இந்துக் கல்லூரி மட்டும்தான்

அதுதான் நம்ம யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. தான்.!!!!

வில்லண்ணே!!! ரெம்ப கிளறாதீங்கோ அழுதிடுவன். :lol::D

ஏன் நீங்கள் என்ன சிம்சி குப்ப வண்டியா.........? அத கிளற நாத்தம் தாங்காம அழ :P

  • கருத்துக்கள உறவுகள்

மகாதேவா (இரசாயனவியல் ஆசிரியர் - யாழ் இந்துக்கல்லூரி) கிரிக்கெட் மைதான நடுவராகச் செயற்பட்டால்..

மட்டையாளர் தயாராக..

எடேய்.. விக்கெட்டுக்கு நடுவில் நந்தி போல் நிற்காதே. விலகி நில் பார்க்கலாம். மட்டையை கால் பக்கமா வை பார்க்கலாம்.. ( மகாதேவாவின் ரவ் சிரிப்பு ).. ஒரு மாதிரியா மட்டையை வைத்துவிட்டாய். ஆடு பார்க்கலாம்.

எடேய் எங்கையடா பந்து வீசுபவனைக் காணவில்லை. நடாவின் போண்டாவும் ரீயும் சாப்பிடப் போய்விட்டானா..யாரும்( மகாதேவாவின் அதே ரவ் சிரிப்பு) கண்டால் என்னிடம் வரச் சொல்லி விடுங்கள் சரியா. (மீண்டும் ரவ் சிரிப்பு)

என்ன பந்தை வீசச் சொன்னேன். நீ பந்தைக் கொண்டு சிரங்கா சொறிந்து கொண்டிருக்கிறாய். பிறகு நல்ல டாக்டரிடம் காட்டு. இப்போ பந்தை வீசு பார்க்கலாம்.

எடேய் சொறிஞ்சது காணும்.. எங்கே விரைவாக பந்தைப் போடு பார்க்கலாம்.. எடேய் பந்தை என் காலிற்கா போடச் சொன்னேன்... என் காலிற்கு இலக்குப் பார்த்து எறிகிறாய்.என்னிடம் ஓகனிக் கெமிஸ்றிக்கு வருகிறாய் அல்லவா. வா அங்கு வைத்துக் கவனித்துக் கொள்கின்றேன் உன்னை..!

எடேய் உனக்கு பந்து வீச தெரியாது போல் இருக்கிறதே. பேசாமல் நடாவின் கன்ரீனில் போண்டாவும் பிளேன் ரீயும் வாங்கி வாங்க பார்க்கலாம்.சரியான களைப்பாக இருக்கிறது. எடேய் நீ அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. இங்கே வா பார்க்கலாம்.. ஒரு செயார் கொண்டு வா பார்க்கலாம்.. (கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்தப்படி மைதானத்திற்கு கதிரை ஒன்று வரவழைத்து அமர்ந்து கொள்கிறார் மகாதேவா..!) :lol:

(நாம் யாழ் இந்துவில் இருந்த போது பெரியவர்களுக்கு கெமிஸ்ரி படிப்பிச்சவர். நாம் பெரியவர்கள் ஆன போது அவர் பாடசாலையை விட்டுப் போய் விட்டார்..! இருந்தாலும்.. அவரின் பேச்சு மிகவும் கவர்ந்தது. மிகவும் கண்டிப்பான ஆசிரியர்.. ஆனால் பண்பானவர்.) :P

Edited by nedukkalapoovan

நான் மகாதேவன் ஆசிரியரை கண்டதில்லை ஆனால் அவரின் புத்தகங்களை படித்திருகிறேன் அருமையான புத்தகங்கள்,அவர் தற்போது காலமாகிவிட்டார் என நினைகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் மகாதேவன் ஆசிரியரை கண்டதில்லை ஆனால் அவரின் புத்தகங்களை படித்திருகிறேன் அருமையான புத்தகங்கள்,அவர் தற்போது காலமாகிவிட்டார் என நினைகின்றேன்

என்ன மகாதேவா காலமாகிவிட்டாரா..??! நாமறியவில்லையே..!

எம் அன்புக்குரிய ஆசிரியராச்சே..! யாழ் குடாவை விட்டு வெளியேறி நீண்ட காலமாகையால் என்ன நடக்குது போகுது என்று ஒன்றுமே தெரியல்ல... :lol::lol:

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

யாரை கட்ச் பண்ணினிங்கள்

:lol:

ஏன் நீங்கள் என்ன சிம்சி குப்ப வண்டியா.........? அத கிளற நாத்தம் தாங்காம அழ :P

:lol::lol:

நெடுக்ஸ் தாத்தா நீங்கள் நல்லா தான் கலக்குறீங்க

படித்தது என்றும் இல்லை. மழைக்கு ஒதுங்கினது என்றும் இல்லை. ஆனாலும் பிழையை உணர்ந்து குயிக் காய் கச் அப் பண்ணிட்டம் இல்ல.

பாடசாலை வாசலில பெட்டி கடை வச்சிருந்தீங்கதானே :lol:

பாடசாலை வாசலில பெட்டி கடை வச்சிருந்தீங்கதானே :lol:

:lol::lol:

:lol::lol:

என்ன இளிப்பு அவர்கிட்ட கடனுக்கு மாங்காய் வாங்கி சாப்பிட்டது மறந்தாச்சா........?

அது ஒரு விவாக ரத்து வழக்கு. மகள் 18 வயது வரை தாயிடமே வளரவேண்டும் என்றும், அதுவரை மகளின் பராமரிப்புக்காக மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை கணவன் வழங்கி வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.. அதன்படி 18 வயது நிறைவில் கடைசி தொகையை மகளிடம் கொடுத்த அப்பா சொன்னார்..

" கலா.. .. இதை உன் அம்மாவிடம் கொடு.. இதுதான் நான் தரும் கடைசி தொகை என்று நான் சொன்னதாக சொல்.. பின்னர் அவள் முகம் போகும் போக்கை பார்.. ஒரெ காமெடி்யா இருக்கும்..!"

மகள் அப்படியே செய்தாள்.. அப்பா சொன்னதையும் சொன்னாள்..

அம்மா எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் பதிலளித்தாள்...

"கலா.. அவர்ட்ட சொல்லு.. 18 வயசு வரைக்கும், தனக்கு பொறக்காத ஒரு பெண்ணுக்கு பராமரிப்பு தொகை கொடுத்ததுக்கு நான் நன்றி சொன்னேன்னு.. அப்புறம் அவர் முகம் போகும் போக்கைப் பார்.. ஒரே டிராஜடியா இருக்கும்..!"

__________________

என்ன இளிப்பு அவர்கிட்ட கடனுக்கு மாங்காய் வாங்கி சாப்பிட்டது மறந்தாச்சா........?

தலை அந்த ஆச்சியா இவர்

:lol:

அவ இல்லை அவ பக்கத்தில கந்தப்பு போல ஒருத்தர் உக்காந்திருப்பர் தானே அவர்தான் இவர் :P

அவ இல்லை அவ பக்கத்தில கந்தப்பு போல ஒருத்தர் உக்காந்திருப்பர் தானே அவர்தான் இவர் :P

ஓ ஆச்சியிட்ட ஏச்சு வாங்கி கொண்டு இருப்பார் அவரா

:P

ஓ ஆச்சியிட்ட ஏச்சு வாங்கி கொண்டு இருப்பார் அவரா

:P

ஆமா அவரேதான் அந்த அப்புதான்

ஆமா அவரேதான் அந்த அப்புதான்

எனக்கு அவரை பிடிக்காது

:angry: :angry:

ஒருவன் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் அவனை தடுத்து நிறுத்தியது.

கணவன்: என்ன பிரச்சனை சார்?

போலீஸ்: நீங்க 55 கிலோமீட்டர் வேகத்துல போக வேண்டிய இடத்துல 75 கிலோமீட்டர் வேகத்துல போயிருக்கீங்க..

கணவன்: இல்லை சார் நான் 65கிலோமீட்டர் வேகத்தில் தான் போனேன்.

மனைவி: என்னங்க நீங்க 80ல் தானே போனீங்க...

(கணவன் அவன் மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: உங்க வண்டியோட ஹெட்லைட் உடஞ்சிருக்கு..

கணவன்: அப்படியா. சார் நான் அதை கவனிக்கவேயில்லை...

மனைவி: என்னங்க சொல்றீங்க, அது உடைஞ்சி 4 வாரம் ஆச்சே..

(கணவன் மீண்டும் அவனது மனைவியை முறைத்துப்பார்க்கிறான்)

போலீஸ்: நீங்க சீட்பெல்ட் போடவே இல்லை..

கணவன்: நீங்க வர்றதுக்கு முன்னாடி தான் சார் நான் அதை அவிழ்த்தேன்.

மனைவி: என்னங்க நீங்க எப்பவுமே சீட்பெல்ட் போடமாட்டீங்களே...

கணவன்: (கோபத்துடன்)நீ கொஞ்சம் வாயை மூடுறியா..

போலீஸ்: மேடம் உங்க கணவர் எப்பவும் உங்களை இப்படி தான் திட்டுவாரா?

மனைவி: எப்பவும் எல்லாம் இப்படி திட்ட மாட்டாரு. தண்ணி அடிச்சிருந்தா மட்டும் தான் இப்படி திட்டுவாரு..

போலீஸ் ; ஓ.. தண்ணி வேறே போட்டுருக்காரா..?

மனைவி ; ஓட்டுநர் உரிமம் இல்லாத டென்ஷனை மறக்க கொஞ்சம் போட்டுருக்கார்..!

போலீஸ் ; அடடா.. உரிமம் இவர்கிட்டே இல்லையா..?

மனைவி ; ஆமாங்க.. திருட்டுக் காரை ஓட்டுறதுக்கு எதுக்கு உரிமம் எல்லாம்..அப்படின்னு கேட்கிறார் சார்..!

போலீஸ் ; ஓஹோ... கார் திருட்டுக்காரா..?

மனைவி ; கொலை செஞ்சுட்டு தப்பி ஓடும்போது ஷோரூம்லே போய் புதுக்கார் வாங்க முடியுமான்னு சொன்னார்..!

கணவன் ; ஏண்டி நீ என் பொண்டாட்டியா.. இல்லே இவர் பொண்டாட்டியா..?

மனைவி ; ஏங்க..? மறந்துட்டீங்களா..? இவர் பொண்டாட்டிய கொலை பண்ணிட்டுதானே தப்பிச்சு போய்கிட்டு இருக்கீங்க..!!!

__________________

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.