Jump to content

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள்


Recommended Posts

  • Replies 133
  • Created
  • Last Reply

‘அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே..!’ - ட்விட்டரில் நெகிழ்ந்த ஹர்பஜன்

 

நடக்க உள்ள ஐபிஎல் போட்டிக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ளார், ஹர்பஜன் சிங். இதற்காக சென்னை வந்துள்ள இவர், தமிழ் மக்கள்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்

 

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், ஐபிஎல் 11-வது சீசன் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதனால், இந்த சீசன் விறுவிறுப்புக்குச் சற்றும் பஞ்சம் வைக்காத வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால், சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். சென்னை வந்துள்ள கிரிகெட் வீரர்கள், நேற்று முன்தினம் திறந்த பேருந்தில் சென்னையைச் சுற்றியுள்ளனர். அவர்களுக்கு, கிரிகெட் ரசிகர்கள் மற்றும் சென்னைவாசிகள் எனப் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

முதன்முதலாக, சென்னை அணியில் ஹர்பஜன் சிங்  விளையாட உள்ளார். சென்னையில் பயணம்செய்ததுகுறித்தும், தமிழ் மக்கள்குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “தமிழ் நாட்டுக்கு வருகைதந்த நாளிலிருந்து, தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவுகடந்த பாசமும் நேசமும் என்னை வியக்கவைக்கிறது. உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே, இந்த பந்தம் தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியமாகத் தொடரட்டும்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.  சென்னை அணியில் தேர்வுசெய்ததிலிருந்து, ஹர்பஜன்சிங் தமிழ் கற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்’ என்னும் வரிகள் தனியார் நிறுவன விளம்பரத்தில் வரும் வரிகள் என்று ஹர்பஜனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

 

தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே .இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்

https://www.vikatan.com/news/sports/120676-harbhajan-sing-tweet-about-tamil-peoples-love.html

Link to comment
Share on other sites

கண்ணீர் விட்ட தோனி: தண்ணீர் கொடுத்து ஆற்றிய சுரேஷ் ரெய்னா: சென்னையில் நெகிழ்ச்சி

 

 
MS-Dhoni-CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி : கோப்புப் படம்   -  படம்உதவி: ட்விட்டர்

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாட வந்துள்ளதை நினைத்து கேப்டன் எம்எஸ் தோனி கண்ணீர் விட்டு நெகழ்ச்சி அடைந்தார். உடனடியாக சுரேஷ் ரெய்னா தண்ணீர் கொடுத்து அவரை ஆற்றுப்படுத்தினார்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைக்கு பின் ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட வந்துள்ளது. ஏலத்தில் கலந்து கொண்டு புதிய வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் ஏற்கனவே இருந்த ரவிந்திர ஜடேஜா, ரெய்னா, தோனி, பிராவோ ஆகியவீரரக்ளைத் தவிர ஏராளமானோர் புதிய வீரர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக சிஎஸ்கே அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசினார்.

அப்போது அவர், கடந்த 2 ஆண்டு தடைக்கு பின் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வந்துள்ளதை நினைத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். அதேசமயம் கடந்த 2ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இல்லாததை நினைத்து நாதழுதழுக்க பேசி கண்ணீர் விட்டார். கடந்த கால கசப்பான நினைவுகளை மறந்துவிடுவோம் என்று கூறியபோது கண்ணீர்விட்ட தோனி, எதிர்காலத்தை நோக்கி வெற்றியுடன் நடைபோட வேண்டும் என்றார்.

இன்று முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியையும், புன்னகையும் தெரிகிறது. நமக்கு அடுத்து முக்கியமானது, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான். சிஎஸ்கே திரும்பி வந்துவிட்டது, நாம் திரும்வந்துட்டோம், வந்துட்டோம் என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

இதையடுத்து, மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சுரேஷ் ரெய்னா தண்ணீர் கொண்டுவந்து தோனிக்கு கொடுத்து அவரை ஆற்றுப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் தனது பயணத்தை தொடங்கிய தோனி 10 ஆண்டாக பயணிக்கிறார். இடையில் 2 ஆண்டுகள் இடைவெளி மட்டுமே இருந்தது. 159 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 3561 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 37.88 ரன்களும், அதிகபட்சமாக 70 ரன்கள் நாட்அவுட் என்ற நிலையிலும் தொடர்கிறார்.

http://tamil.thehindu.com/sports/article23391928.ece

Link to comment
Share on other sites

தோனியும், ஹஸ்ஸியும் ‘டிரிக்’ பொக்கிஷம்: சிஎஸ்கே வீரர் ஜெகதீசன் பெருமிதம்

 

 
TH02JAGADEESAN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜெகதீசன் : கோப்புப்படம்

தோனியிடம் விக்கெட் கீப்பிங் குறித்த ஏராளமான நுணுக்கங்களையும், ஹஸ்ஸியிடம் பேட்டிங் குறித்த டிப்ஸ்களையும் கற்று வருகிறேன் என்று சிஎஸ்கே வீரரும் தமிழரான ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த என் ஜெகதீசன் 11-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். ரூ.20லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ள ஜெகதீசன், டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், இந்த வாய்ப்பைப் பெற்றார்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேப்டன் தோனி தலைமையில், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதனாத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

விக்கெட் கீப்பரான ஜெகதீசன் தனக்கு தோனியும், மைக் ஹஸ்ஸியும் அளிக்கும் பயிற்சி குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியும், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸியும் ‘டிரிக் பொக்கிஷங்கள்’. இருவரிடமும் ஏராளமான பேட்டிங், விக்கெட் கீப்பிங் தொடர்பான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்.

அதிலும் மைக் ஹஸ்ஸியுடன் கிரிக்கெட் குறித்து பேசும்போது நமக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் தன்னை சிறந்தவர் என்று ஹசி நிரூபித்தவர். திறமையான வீரரான ஹசி பேட்டிங்கில் ஏராளமான நுணுக்கங்களை கற்றுத் தருகிறார். குறிப்பாக பந்துவீச்சாளரை நிலைகுலைய வைக்கும் வகையில் எப்படி தாக்குதல் ஆட்டத்தை கையாள வேண்டும் என்று நன்றாக கற்றுத்தருகிறார்.

விக்கெட் கீப்பிங்கைப் பொறுத்தவரை கேப்டன் எம்.எஸ்.தோனியுடன் பயிற்சி நேரங்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பேன். எனக்கு பல ‘டிரிக்’குகளை சொல்லிக்கொடுப்பார்.

சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது, என்னைத் தேர்வு செய்தது என்பது மிகச்சிறந்த தருணம். தமிழ்நாட்டுக்காக விளையாடிவிட்டு, இப்போது, இந்த ‘சிங்கத்துக்காக’ விளையாடுகிறேன்.

அதிலும் ‘பேட்டிங், கீப்பிங் லெஜண்ட்’ தோனியுடன் இணைந்து விளையாடுவது என்பது கிடைப்பதற்கு அரி்ய ஒருவாய்ப்பு. இவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்று வருகிறேன்.

என்னுடைய பலவீனத்தை தோனியிடம் கூறி, அதை எப்படி நிவர்த்தி செய்து கொள்வது, சூழ்நிலைக்கு ஏற்ப கீப்பிங், பேட்டிங் செய்வதை கேட்டுத் தெரிந்துகொண்டேன். எப்படி கீப்பிங் செய்ய வேண்டும், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சில் எப்படி கீப்பிங்கை வேகமாக செய்ய வேண்டும் என்பதை தோனி எனக்கு விளக்கியுள்ளார்.

இவ்வாறு ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/article23393174.ece

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி பேசிய ரஜினி வசனம்

 
அ-அ+

கேப்டன் டோனி, காலா படத்தில் ரஜினி பேசும், கியாரே செட்டிங்கா என்ற வசனத்தை ரஜினி ஸ்டைலிலேயே பேசி அசத்தி இருக்கிறார். #Dhoni #Rajinikanth

 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி பேசிய ரஜினி வசனம்
 

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. 2 ஆண்டு தடைக்கு பிறகு இந்த போட்டியில் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்குகிறது. இதனால் இந்த போட்டிக்கு இப்போதே தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்த அணி வீரர்கள் சென்னையில் பயிற்சி செய்து வருகிறார்கள். இதில், டோனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்த அணி வீரர்கள் ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ரஜினியின் ‘காலா’ படத்தின் டீசரில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் பேசி, இதை பார்க்கிறவர்களின் ரசனையை அதிகமாக்கி இருக்கிறார்கள்.

இந்த வீடியோவில் கேப்டன் டோனி, ‘காலா’ படத்தில் ரஜினி பேசும், “கியாரே... செட்டிங்கா...” என்ற வசனத்தை ரஜினி ஸ்டைலிலேயே பேசி அசத்தி இருக்கிறார். இதை ரஜினி ரசிகர்களும், கிரிக்கெட் அபிமானிகளும் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். #Dhoni #Rajinikanth

https://www.maalaimalar.com/News/Sports/2018/03/31163228/1154304/Chennai-super-kings-team-Dhoni-speech.vpf

Link to comment
Share on other sites

ஹர்பஜனை தொடர்ந்து தமிழில் கலக்கும் அடுத்த CSK வீரர்: இம்ரான் தாஹிர்

 
 
home_press_blog_4
 

 

இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர், இந்த வருடம் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டியில் பங்கேற்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி ப்ரோமோஷன் வேலைகளை தற்போது வேகமாக செய்து வருகிறது. அதேபோல் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் தமிழில் ட்விட் செய்து கலக்கி வருகின்றனர். 

 இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சளரும் CSK வீரருமான ஹர்பஜன் சிங் சில நாட்களாகவே தமிழில் ஏராளமான ட்விட் செய்து கலக்கி வந்தார். இவர் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு ஆவதற்கு முன்பே நிறைய முறை தமிழில் ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இம்ரான் தாஹிர் தமிழில் ட்விட் செய்து கலக்கியுள்ளார். இவர் அந்த ட்விட்டில் 'என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். சிங்கார சென்னைக்கு நாளை வந்துவிடுவேன். உங்கள் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்து வரும் உங்கள் அன்பு சகோதரன். வரோம், தட்றோம், தூக்கறோம். எடுடா வண்டிய, போடுடா விசில, என்னுடைய தமிழ் ஆசிரியர் மற்றும் சகோதரர் ப்ரசன்னாவிற்கு நன்றி' என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இவர் இதற்கு முன்பே என்னுடைய தமிழ் ஆசிரியரை அறிமுகம் செய்கிறேன் என பிரசன்னாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.news.mowval.in/News/sports/Imran-Tahir-Twittes-In-Tamil-4587.html

Link to comment
Share on other sites

ரசிகர்களின் ஆசையை லாபமாக்கிக் கொள்கிறதா?: டிக்கெட் விலை குறித்த புகார்களுக்கு சிஎஸ்கே விளக்கம்!

 

 
fan_dhoni1

 

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணி, சென்னையில் விளையாடவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் எளிதில் விற்றுவிடும் என்று தெரிகிறது. 

எனினும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்களுக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற நகரங்களை விடவும் சென்னையில் ஐபிஎல் டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் தளத்தில், அடுத்தவன் ஆசைய எப்பிடி பணம் ஆக்கி லாபம் பண்றது??? இவுங்கல @ChennaiIPL பாத்து கத்துகிடனும் #unfairticketpricing #IPL2018 என்று ஒரு ரசிகர் ட்வீட் செய்திருந்தார். வழக்கமாக, இதுபோன்ற ரசிகர்களின் புகார் ட்வீட்கள் கண்டுகொள்ளாமல் விடப்படும். ஆனால் ஆச்சர்யப்படும் விதத்தில் சிஎஸ்கே நிர்வாகம் இந்தப் புகாருக்கு ட்விட்டர் வழியாகப் பதில் அளித்துள்ளது.

இதற்காக வருந்துகிறோம். ஜிஎஸ்டி + உள்ளூர் வரியுடன் சேர்த்து வசூலிப்பதால் கட்டணம் அதிகமாக உள்ளது. மற்ற ஐபிஎல் மையங்கள் ஜிஎஸ்டி மட்டும்தான் வசூலிக்கிறது. இங்கு நாங்கள் உள்ளூர் வரியையும் செலுத்தவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது. எதன் அடிப்படையில் ரூ. 1300 என்கிற மற்றொரு கேள்விக்கு சிஎஸ்கேவின் பதில்:

அடிப்படை விலை - ரூ. 762 + உள்ளூர் கேளிக்கை வரி ரூ. 254 + ஜிஎஸ்டி ரூ. 284 = ரூ. 1300.

csk_fan11.jpg

 
 
 

http://www.dinamani.com/sports/sports-news/2018/apr/02/chennai-super-kings-2892173.html

Link to comment
Share on other sites

தொடக்க ஜோடியை முடிவு செய்யவில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் தகவல்

 

 
03CHPMUCSKPRATICE

பயிற்சியில் ஈடுபட்ட சென்னை வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஸ்டீபன் பிளெமிங்.   -  THE HINDU

தொடக்க ஜோடியை இன்னும் முடிவு செய்யவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் 7-ம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது. 2 வருட தடைக்கு பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் தொடக்க நாளான 7-ம் தேதி மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. இந்தத் தொடருக்காக சென்னை அணி வீரர்கள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி ஆகியோரது மேற்பார்வையில் கடந்த ஒரு வாரகாலமாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பயிற்சியார் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

இந்த சீசனில் தொடக்க வீரர்கள் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. சேம் பில்லிங்ஸ், டு பிளெஸ்ஸிஸ், சோரே, முரளி விஜய், ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு உள்ளிட்ட 6 தொடக்க பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். அணி சேர்க்கை மற்றும் சூழ்நிலையின் அடிப்படையிலேயே தொடக்க ஜோடியை முடிவு செய்வோம். அணி சேர்க்கை என்பது தொடக்க ஜோடிக்கு மட்டும் அல்ல மற்ற வரிசைக்கும் சேர்த்துதான் அமையும். தோனி இந்த சீசனில் பேட்ஸ்மேனாக விளையாடுவார். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆல்பி மோர்கல், நெஹ்ரா ஆகியோர் இல்லாத குறையை நிகிடி, மார்க் வுட் நிரப்புவார்கள்.

இவர்களுடன் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சுழற்பந்துதான் எங்களுக்கு வலுவான ஆயுதம். மிட்செல் சான்ட்னருக்கு மாற்று வீரரை இதுவரை நாங்கள் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் அவசரம் காட்டவில்லை. அணியில் பலதுறையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் பலர் உள்ளனர். தொடர் சிறப்பாக சென்றால் மாற்று வீரரை தேட வேண்டிய சூழல் அமையாது என்றே கருதுகிறேன். பயிற்சி ஆட்டங்களில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோரை பவர் பிளே மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் அதிகம் பயன்படுத்தி உள்ளோம்.

ஷர்துல் தாக்குர் இந்திய அணிக்காக இந்த பணியை ஏற்கெனவே சிறப்பாக செய்துள்ளார். ஹர்பஜன் சிங்குக்கு பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் கூடுதல் பயிற்சி வழங்கி வருகிறோம். முதல் ஆட்டத்தில் பந்து வீச்சு கூட்டணி எப்படி இருக்கும் என்பது இப்போதைக்கு எங்களுக்கே தெரியாது. இன்னும் சில வீரர்கள் அணியில் இணைய வேண்டியது உள்ளது. சூழ்நிலையை பொறுத்துதான் அணி சேர்க்கை முடிவு செய்யப்படும். ஹர்பஜன் சிங் பந்து வீச்சுக்கு சேப்பாக்கம் ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும். இந்தத் தொடரில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்.

இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article23421508.ece

Link to comment
Share on other sites

மும்பை புறப்பட்ட சிஎஸ்கே வீரர்கள்

 

 
finalpng

 ஐபிஎல் போட்டிகள் வரும் 7-ம் தேதி தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொள்கின்றனர்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது.

ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி நடைபெறவுள்ள மும்பைக்கு இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையிலிருந்து விமான நிலையம் புறப்பட்டனர்.

இது தொடர்பான புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் பதிவேற்றியுள்ளது. சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராமில் மும்பையை நோக்கி என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை வீரர்கள் சந்திக்கின்றனர்.

தொடக்க நிகழ்ச்சியை பிரம்மாண்ட முறையில் நடத்த ஐபில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://tamil.thehindu.com/sports/article23425643.ece

Link to comment
Share on other sites

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் vs இதர அணிகள்!

 

 
dhoni_captain1

 

ஐபிஎல் போட்டியின் மிகச்சிறந்த அணி என்று மதிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற அணிகளுடனான வெற்றி - தோல்வி விகிதம் எந்தளவுக்கு உள்ளது?

தில்லி - 68.8%

தில்லி அணியுடனான வெற்றி விகிதம் இது. இதுவரை விளையாடிய 16 ஆட்டங்களில் 11-ல் வெற்றி கண்டுள்ளது சிஎஸ்கே. ஐபிஎல்-லின் பலவீனமான அணிகளில் ஒன்றான தில்லிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக வெற்றிகளை அடைந்ததில் ஆச்சர்யம் இருக்கமுடியாது.

ஹைதராபாத் - 66.7%

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 66.7% வெற்றியடைந்துள்ளது என்பது ஆச்சர்யமான தகவல். ஐபிஎல் போட்டியில் பலமான அணிகளில் ஒன்று, ஹைதராபாத். அந்த அணிக்கு எதிராக விளையாடிய 6 ஆட்டங்களில் நான்கில் வென்றுள்ளது சிஎஸ்கே அணி. 

ராஜஸ்தான் - 64.7%

ராஜஸ்தான் அணிக்கு எதிராக. 17 ஆட்டங்களில் 11-ல் வெற்றி கண்டுள்ளது சிஎஸ்கே. முதல் வருடம் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தானிடம் இழந்த சிஎஸ்கே அதன்பிறகு அந்த அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடியுள்ளது. 

பெங்களூர் - 63.2%

ஐபிஎல் போட்டியில் சென்னை - பெங்களூர் மோதும் ஆட்டங்கள் எப்போதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. 19 ஆட்டங்களில் 12-ல் சென்னையும் 7-ல் பெங்களூரும் வெற்றி கண்டுள்ளன. 

கொல்கத்தா - 62.5%

16 ஆட்டங்களில் 10-ல் வெற்றி கண்டுள்ளது சென்னை. ஐபிஎல்-லின் பலமான அணிகளில் ஒன்றான கொல்கத்தாவிடம் நல்ல வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது சென்னை. 

பஞ்சாப் - 58.8%

ஐபிஎல்-லின் பலவீனமான அணிகளில் ஒன்றான பஞ்சாபிடம் சென்னை அந்தளவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றதில்லை என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. 17 ஆட்டங்களில் 10-ல் வெற்றி பெற்றாலும் 7-ல் தோற்றுள்ளது. மும்பைக்கு அடுத்ததாக பெங்களூர், பஞ்சாப் அணிகளிடம் சென்னை தலா 7 முறை தோற்றுள்ளது. 

மும்பை - 45.5%

சென்னையை வீழ்த்தக்கூடிய ஒரே அணியாக உள்ளது மும்பை. 2013, 2015-ம் ஆண்டுகளில் மும்பையிடம் இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது சென்னை. இரு அணிகளும் 22 முறை மோதியுள்ளன. அதில் மும்பை 12 முறையும் சென்னை 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஐம்பது சதவிகிதத்துக்குக் குறைவான வெற்றியை மும்பையிடம் மட்டுமே அடைந்துள்ளது சென்னை. இந்த ஐபிஎல்-லில் என்ன நடக்கப்போகிறது? இரு ஆட்டங்களையும் வென்று மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவு கொண்டுவரப் போகிறதா சென்னை?

http://www.dinamani.com/sports/sports-news/2018/apr/03/csk-head-to-head-record-2892934.html

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் ஆட தோனிக்கு வாய்ப்பு

 

 
dhoni

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் ஆட தோனிக்கு வாய்ப்புள்ளது என அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி 6 அல்லது 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். இதற்கிடையே 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி இடம் பெற்றுள்ளது. தற்போது தொடக்க வரிசையில் தோனியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் எத்தனையாவது பேட்ஸ்மேனாக இறங்குவார் என்பதை பிளெமிங் தெரிவிக்கவில்லை. மேலும் அணியில் பல்வேறு பன்முகத் திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மார்க் உட், லுங்கி கிடி, இந்திய வீரர் தாகூர் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்வார்கள். மேலும் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளதும் அணிக்கு வலிமை தந்துள்ளது. அவர் பந்துவீச்சோடு, சிறப்பாக பேட்டிங்கும் மேற்கொள்வார் என்றார் பிளெமிங்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/apr/04/சென்னை-சூப்பர்-கிங்ஸ்-அணியில்-தொடக்க-வரிசையில்-ஆட-தோனிக்கு-வாய்ப்பு-2893094.html

Link to comment
Share on other sites

“சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளதை காண ஆவலாக இருக்கிறேன்”

 

 
gdjpg

கோப்புப் படம்

 சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்குத் திரும்பியுள்ளதைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவது குறித்தும், சிஎஸ்கே தடைக்கு பின்னர் திரும்பி உள்ளது குறித்தும் அவ்வணிக்காக 2008 முதல் 2013 வரை விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அல்பி மார்கல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐபிஎல் இந்த வாரம் தொடங்குகிறது. சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளதைக் காண ஆவலாக இருக்கிறேன் பல சிறந்த நினைவுகளுடன்” என்று பதிவிட்டுள்ளார்.

அல்பி மோர்கலின் இந்த ட்வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிப்பிட்டு , “நன்றி, தொடர்ந்து விசில் அடியுங்கள்” என்று பதிவிட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23434584.ece

Link to comment
Share on other sites

ஒரு சீசன் 2 சீசனல்ல 10 சீசன்கள் ஆடியுள்ளேன்: எனக்குத் தெரியாதா மும்பை இந்தியன்ஸை? சென்னை வெல்லும் என்கிறார் ஹர்பஜன்

 

 
harbajan

ஹர்பஜன், தோனி.   -  கோப்புப் படம். | பிடிஐ.

மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரராகி விட்ட ஹர்பஜன் சிங் அந்த அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வரும் 7-ம் தேதி மும்பையில் களமிறங்குகிறார்.

இந்த ஆட்டம் தனக்கு உணர்ச்சிகள் ததும்பும் ஆட்டமாக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து பயிற்சிகளுக்கிடையே ஹர்பஜன் கூறியதாவது:

முதல் 10 சீசன்களுக்கு என் தாய் மைதானமாக இருந்தது வான்கடே ஸ்டேடியம், அதில் நான் ஆடிய அணிக்கு எதிராகக் களமிறங்குவது என்னைப் பொறுத்தவரையில் உணர்ச்சி ததும்பும் போட்டியாகவே அமையும்.

ஆனால் தொழில்பூர்வமான ஒரு வீரர் இவற்றையெல்லாம் கடந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதைத்தான் நானும் எதிர்நோக்குகிறேன்.

இதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் அபாரமான சில ஆட்டங்களில் மோதியுள்ளது, இந்தப் போட்டிகளில் என்னை நிரூபிப்பது எனக்கு ஆழமான திருப்தியை அளிக்கும்.

ஒரு சீசன் 2 சீசன் அல்ல 10 ஆண்டுகள் ஆடியிருக்கிறேன், எனவே மும்பை இந்தியன்ஸ் ஆடும் கிரிக்கெட் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் ஆடியுள்ளதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை.

மும்பை அணியின் திட்டமிடுதல் குழுவில் நான் இருந்திருப்பதால் மும்பை இந்தியன்ஸ் எப்படி அணுகும் என்பது பற்றி எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும். ஆனால் அனைத்திற்கும் மேலாக அவர்களை வீழ்த்த சிறப்பாக ஆடுவது அவசியம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் அவர்களை வீழ்த்த ஆட்களிருக்கிறார்கள்.

மிகப்பெரிய ஆட்டம் அது, சென்னை ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறேன். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

http://tamil.thehindu.com/sports/article23444106.ece?homepage=true

Link to comment
Share on other sites

 

நம்ம சி.எஸ்.கே எப்படி இருக்கனும் ? - ஒரு சர்வே !

தடை முடிந்து 2 வருடங்களுக்கு பின் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பெரும் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்கின்றனர் நம்முடைய மக்கள், சி.எஸ்.கே அணி எப்படி இருக்கவேண்டும், என்ன மாற்றங்கள் அவர்கள் செய்யவேண்டும் என நடத்தப்பட்ட ஒரு சர்வேயின் முடிவு இந்த வீடியோவில்.

Link to comment
Share on other sites

வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தோம் என்பது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங் ஒப்புதல்

 

 
Flemingjpg

படம். | விவேக் பெந்த்ரே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30வயதுக்கும் அதிகமானோர் அதிகமுள்ளனர் என்று அந்த அணி மீது கேலிகள் தொடரும் நிலையில், வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்துள்ளோம் என்ற பார்வை சரியானதுதான் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

இன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கும் நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஏலத்தின் முதல் நாளில் வயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தோம் என்ற பார்வை சரியானதுதான், ஆனால் 2ம் நாளில் நிறைய இளம் வீரர்களையும் ஏலம் எடுத்தோம் நான் அனுபவத்துக்கு மதிப்பு கொடுப்பவன். இளம் வீரர்கள் வந்தவுடனேயே தங்கள் அடையாளத்தைப் பதிவு செய்வதில்லை.

நிறைய பேசப்படுகிறது, ஆனால் இளம் வீரர்கள் அரிதாகவே போட்டிகளை வென்று கொடுக்கின்றனர்.

எப்போது ஒரு இளம் வீரர் வந்து டாப் ரன் ஸ்கோரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. சிலபல விதிவிலக்குகள் உண்டு, ரஷீத் கான், வாஷிங்டன் சுந்தர் என்று. ஆனால் அனுபவ வீரர்கள்தான் இதனைச் செய்கின்றனர். எனவே அனுபவத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

டிவைன் பிராவோ, வாட்சன், ஹர்பஜன் ஆகியோர் இன்னமும் சிறந்த போட்டியாளர்கள், தோனி இன்னமும் சிறந்த தலைவர்தான். ஆகவே நாங்கள் எடுத்துள்ள வீரர்கள் திறமை செலவழிந்த வீரர்கள் என்று கூற முடியாது. இந்த ஆண்டு இவர்கள் சிறப்பாகத் திகழ்கிறார்கள்.

2 ஆண்டுகள் தடை பற்றிய காயங்கள் எதுவும் வீரர்களிடத்தில் இல்லை. நன்றாகவே தயார் செய்துள்ளோம்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்

http://tamil.thehindu.com/sports/article23463637.ece

Link to comment
Share on other sites

‘பிராவோவுக்கு ஒரு விசில் போடு’ - வீரர்களின் சிஎஸ்கே வெற்றி உற்சாக ட்வீட்கள்

bravo

பிராவோ அடித்த சிக்சர்களுல் ஒன்று.   -  படம். | பிடிஐ.

மும்பை இந்தியன்ஸ் கையில் இருந்த வெற்றிக்கனியை தனது அனாயச அதிரடி மூலம் பறித்து தோனி கையில் கொடுத்த டிவைன் பிராவோதான் இன்றைய talk of the town.

119/8 என்று சென்னை அதலபாதாளத்தில் இருந்த போது சகடை போட்டு இழுக்காமல் ஒரே இழுப்பில் தோல்விக்கிணற்றிலிருந்து வெளியே கொண்டுவந்தார் டிவைன் பிராவோ.

 

முதல் போட்டியில் சற்றும் எதிர்பாராத வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றது, தோனியின் கேப்டன்சி என்பதை விட பிராவோவின் அதிரடி, அதிர்ஷ்டம் காரணம், மேலும் பும்ரா பந்தில் ஸ்டம்பில் பட்டு பைல்கள் விழாமல் இருந்ததே அது பெரிய விஷயம்.

இந்நிலையில் டிவைன் பிராவோவுக்கு விசில் போடு என்ற ரீதியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஹர்பஜன் சிங்: ஐபிஎல்-க்கு திரும்பிவிட்டது சிஎஸ்கே, அதுவும் எப்படி... கிரேட் கேம். பிராவோ யூ பியூட்டி.. ஆட்டத்தை முடிக்க டாப் ஷாட். விசில் போடு.

சுரேஷ் ரெய்னா: நாங்கள் வெளியில் செல்லவில்லை என்ற உணர்வை ஏற்படுத்தியது. என்ன மாதிரியான ஆட்டம், ஹேட்ஸ் ஆஃப் டு பிராவோ. நம்ப முடியாத இன்னிங்ஸ். ரசிகர்களுக்கு நன்றி, வான்கடே ரசிகர்கள் எங்கள் ஊரில் ஆடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தினர்.

ரஷித் கான்: வாட் அன் இன்னிங்ஸ் பிராவோ! பார்க்க அபாரமாக இருந்தது ப்ரோ!

சாம் பில்லிங்ஸ்: வாவ் பிராவோ, நம்ப முடியவில்லை. ஐபிஎல் திரும்பியது, வாட் எ வின்.

ஆல்பி மோர்கெல்: சென்னை அணி வெடிப்புடன் மீண்டும் திரும்பியுள்ளது

கிறிஸ் மோரிஸ்: எங்கிருந்தோ வந்து இது சீரியஸ் வின். பிராவோ பிரமாதம்

இயன் பிஷப்: மட்டை, பந்து வீச்சு இரண்டுமே பிராவோவுக்கு அற்புதம். உண்மையான சாம்பியன். தரநிலைகளை நிர்ணயம் செய்யுங்கள் பிராவோ, எதுவும் உண்மையில் முடிக்கப்படமால் முடிந்து விடுவதில்லை.

மைக் ஹஸ்ஸி: ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு என்ன மாதிரியான தொடக்கம். மீண்டும் வந்த சிஎஸ்கே-யை வரவேற்கிறேன்.

சுப்பிரமணியம் பத்ரிநாத்: பிரமாதமான சிக்ஸ் ஹிட்டிங் மூலம் விருந்தளித்தார் ப்ராவோ. 18வது 20வது ஓவரை சிக்கனமாக பிராவோ வீசியதையும் மறுக்க முடியாது.

மேத்யூ ஹெய்டன்: நம்ப முடியாத தொடக்கம். பிராவோ இன்னிங்ஸுக்குத் தலை வணங்குகிறேன்.

சேவாக்: பிராவோ ஒரு சாம்பியன், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு என்ன மாதிரியான ஒரு தொடக்கம்!

லஷ்மண்: கடைசி 18,20 வது ஓவரில் பிராவோ பிரமாதமாக வீசினார், பிறகு மகா அதிரடி. பின் தங்கியிருந்த நிலையிலிருந்து முயன்று பெற்ற வெற்றி. இதைவிட ஐபிஎல்க்கு சிறந்த தொடக்கம் இருக்க முடியாது.

ஆர்.பி.சிங்: நம்பமுடியாத அதிரடி பிராவோ! முதல் போட்டியை முழுதும் கொண்டாடினேன், வாழ்த்துக்கள்.

http://tamil.thehindu.com/sports/article23471019.ece

Link to comment
Share on other sites

சிஎஸ்கே 2.0 : மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி 17 பந்துகளில் எப்படி வீழ்த்தியது சென்னை?

11-வது ஐ.பி.எல் சீசன்  நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

மும்பை அணியை கடைசி 17 பந்துகளில் எப்படி வீழ்த்தியது சென்னை?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் ஐ.பி.எல் களத்தில் நுழைந்திருக்கும் சென்னை  அணி வெற்றியுடன்  கணக்கைத்  தொடங்கியுள்ளது.

நேற்று இரவு நடந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை அணி கடைசி 17 பந்துகளில் அதிரடியாக 50 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணித்தலைவராக வலம் வந்த  தோனி நேற்றைய  போட்டியில்  டாஸ் வென்றதும் சேஸிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா துவக்க  வீரராக களம் இறங்கினார். பவர்பிளே ஓவர்களில் மும்பை அணியால் அதிகம் ரன்கள் குவிக்க முடியவில்லை.மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகிய இருவரும் பொறுப்பாக ரன்கள் சேர்த்து அவுட் ஆயினர். அதன் பின்னர் பாண்ட்யா சகோதரர்கள் மும்பை ரசிகர்களுக்கு சிக்ஸர்களால்  வாண வேடிக்கை  காட்டத் துவங்கினர்.

சென்னை அணியைச் சேர்ந்த பிராவோ தனது கடைசி இரண்டு ஓவர்களை சிறப்பாக வீசியதால் மும்பை அணி கடைசி ஓவர்களில் அதிகளவு ரன்களை குவிக்க முடியவில்லை. இறுதியில் சென்னைக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மும்பை அணியை கடைசி 17 பந்துகளில் எப்படி வீழ்த்தியது சென்னை?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மும்பை அணி சார்பில் க்ரூனால் பாண்ட்யா 22 பந்துகளில் 5 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 41 ரன்கள் குவித்தார். 

சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மார்கண்டே தோனி, ராயுடு ஆகியோரை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

119/8 என்ற நிலையில் சென்னை பரிதவித்தபோது, தோனி தலைமை வகிக்கும் அந்த  அணி  18 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற நிலை. 

ஆட்டத்தின் 18-வது ஓவரை  மெக்லனகன் வீசினார். முதல் பந்தில் தாஹிர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தை சிக்சருக்கு விரட்டினார் பிராவோ. 4-வது பந்தில் 2 ரன்களும்  ஐந்தாவது பந்தை பௌண்டரிக்கு விளாசி நான்கு ரன்களும் குவித்தார். 18-வது ஓவரின் இறுதி பந்தில் அவர் மேலும் ஒரு ரன் எடுத்தார். மொத்தம் 20 ரன்கள் அந்த ஓவரில் வந்தது.

கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை சென்னைக்கு. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா பந்துவீசினார். 19-வது ஓவரின் முதல்  இரண்டு பந்துகளையும் சிக்ஸர் விளாசினார் பிராவோ. 25 பந்துகளில் அரை சதம் கடந்த பிராவோ, பும்ராவின் அந்த ஓவரில் மூன்றாவது  பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார்.

நான்காவது பந்தில் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் பிழைத்த பிராவோ, ஐந்தாவது பந்தில்  மீண்டும் ஓர் சிக்ஸர் விளாசினார். ஆனால்  அதற்கடுத்த  பந்திலேயே அவுட் ஆனார். 19 - வது ஓவரில் சென்னை அணி 20 ரன்கள் குவித்தது.

மும்பை அணியை கடைசி 17 பந்துகளில் எப்படி வீழ்த்தியது சென்னை?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆட்டத்தில் இறுதி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை சிஎஸ்கேவுக்கு. ஒரு விக்கெட் எடுத்தால் எளிதில் வெற்றி என்ற நிலை ரோஹித் அணிக்கு. கேதர் ஜாதவ் பேட்டிங்  முனையிலும்  முஸ்தபிசுர் ரஹ்மான் பௌலிங்  முனையிலும்  வந்தனர். 

இறுதி ஓவரின்  முதல் மூன்று பந்தில்  ரன்கள் இல்லை. நான்காவது  பந்தில் சிக்ஸர் மற்றும் ஐந்தாவது பந்தில் ஓர் பௌண்டரி அடித்து அணி வெற்றி பெற உதவினார் கேதர் ஜாதவ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்  வித்தியாசத்தில் வெல்வது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை. 

http://www.bbc.com/tamil/sport-43687827

Link to comment
Share on other sites

பிராவோவின் 5 சிக்ஸர்கள்... இரண்டு ஓவர்கள்... ஒற்றைக் கால்..! சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயித்தது எப்படி? #CSKvsMI #WhistlePodu

 
 

வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா என விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்த நேரம்... வந்துவிழுந்தது ஒரு பிரபல ட்வீட்டரின் ட்வீட்... ''முதியோர் இல்லம் பரவால்லயே... 120 தாண்டிருவாங்க போல...'' ஆமாம் அந்த ட்வீட்டில் உண்மையில்லாமல் இல்லை.  அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்காமல் 120 ரன்கள் எடுத்தாலே போதும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், அப்போது எல்லோரும் பிராவோ பிட்ச்சில் இருப்பதையே மறந்துவிட்டார்கள்.

மும்பை இந்தியன்ஸ்

அடடட..! ஆரம்பமே... அதிருதடா! ஐ.பி.எல் முதல் மேட்ச் மீம்ஸுக்கா பஞ்சம்!

டெத் ஓவர்களில் பந்து வீசுவதாக இருந்தாலும் சரி, பேட்டிங்காக இருந்தாலும் சரி 'நான் இருக்கிறேன்' என்று எப்போதுமே அதிரடி ஆட்டம் ஆடுபவர் பிராவா.  வெறும் மூன்று ஓவர்களே கையில் இருக்கின்றன. இரண்டு விக்கெட்டுகள்தான். வெற்றிக்கு 18 பந்துகளில் 47 ரன்கள் வேண்டும் என்கிற நிலை. யாருமே எதிர்பாராதவகையில் மெக்ளினிகன் வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர், 1 பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்ததார் பிராவோ. வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் என டார்கெட் சுருங்கியது.

அடுத்த ஓவர்தான் பிராவோவின் தாக்குதல் இன்னும் வெறிகொண்டது. பும்ரா வீசிய இந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் பிராவோ. கடைசிப் பந்தையும் பிராவோ அடிக்கமுயற்சி செய்ய அது கேட்ச் ஆனது. பிராவோ அடித்த அந்த 5 சிக்ஸர்களும், மெக்ளீகன், பும்ரா வீசிய இரண்டு ஓவர்களும்தான் மேட்ச்சின் திருப்புமுனை.

பிரேவோ

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் உள்ளே வந்தார் காயத்துடன் வெளியேறியிருந்த கேதார் ஜாதவ்.  கிட்டத்தட்ட ஒற்றைக்காலில் பேட்டிங் ஆடிய ஜாதவின் பேட்டிங் மிகமுக்கிமானது. கேதர் ஜாதவால் ஓட முடியாது என்பது ஒரு நிலை என்றால் எதிர்முனையில் இம்ரான் தாஹிர் என்பதால் ஓடியும் உபயோகம் இல்லை. ஆறு பந்துகளையும் ஒருவரே எதிர்கொள்ள வேண்டும் என்பதால் பதற்றதைத் தணித்துவிட்டு பெளலரை கவனித்தார் ஜாதவ். முதல் மூன்று பந்துகளையும் ஃபீல்டர்களுக்கு இடையே தட்டிவிடவே முயற்சி செய்தார் ஜாதவ். ஆனால் அதேசமயம் பெளலரின் லைன் அண்ட் லெந்தைக் கணித்துவிட்டார். முஸ்டஃபைசுர் ரஹ்மான் ஒரே லைனிலேயே பந்துவீசுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ஜாதவ் நான்காவது பந்தை லாவகமாகப் பின்னால் தட்டி சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்தப் பந்து கிளீன் ஷாட்... பவுண்டரி. இப்படித்தான் மும்பையை கடைசி நேரத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

 

பிராவோதான் இந்த மேட்ச்சின் ஹீரோ என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு முக்கியமான சில காரணங்கள் இருப்பதுபோலவே தடுமாற்றங்களும் இருந்தன. 

 

டீம்!

மும்பை பிட்ச்சில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் ஆடுவதுதான் வழக்கம். ஆனால், டாஸ் வென்றதும் முதலில் பெளலிங்கை தேர்ந்தெடுத்தார் தோனி. இதற்கு முழுக்காரணம் அவர் பெளலிங்கின் மீது வைத்திருந்த நம்பிக்கைதான். பெளலர்கள் 160 ரன்களுக்குள் எதிர் அணியின் டார்க்கெட்டை சுருக்கினால் வெற்றி நிச்சயம் என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் வகுத்திருந்த திட்டம். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. டீமைப் பொருத்தவரை ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா என மூன்று ஸ்பின்னர்கள். அதுப்போலவே வுட், சாஹர், வாட்சன், பிராவோ என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் என பெளலிங் பிரிவைத்தான் ஸ்ட்ராங்காக்கி இருந்தார் தோனி. அதனால்தான் அவர் முதலில் பேட்டிங்கை தேர்தெடுக்காமல் பெளலிங்கை தேர்ந்தெடுத்தார்.

 

தோனியின் பெளலிங் பிளான்!

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஷேன் வாட்சன், தீபக் சாஹர் இருவரின் ஓப்பனிங் பெளலிங்குமே செம. தீபக் சாஹரின் ஸ்விங்கைப் பார்த்து ரோஹித் ஷர்மாவே மிரண்டார். ஆரம்பித்தில் சில பவுண்டரிகளை ரோஹித் அடித்தாலும் அவருக்கு கான்ஃபிடன்ஸை குலைத்துக்கொண்டேயிருந்தது தீபக் சாஹரின் ஸ்விங். முதல் 6 ஓவர்களை எந்த மாற்றமும் செய்யாமல் சாஹருக்கும், ஷேன் வாட்சனுக்கும் கொடுத்தார் தோனி. ஆனால் 9-வது ஓவருக்குப் பிறகு மார்க் வுட், தாஹிர், பிராவோ, வாட்சன் என இந்த நான்கு பேரையும் மாற்றி மாற்றி பந்துவீசச் செய்தார். பெளலிங் ஆக்‌ஷன் மாறிக்கொண்டேயிருந்ததால் மும்பை பேட்ஸ்மேன்களால் அடித்து ஆடமுடியவில்லை. பிராவோ வீசிய அந்தக் கடைசி ஓவர்தான் பெளலிங்கின் உச்சம். ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா என இரண்டு செட் பேட்ஸ்மேன்கள்... ஆனால் அவர்களால் 5 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் அடிக்க முடிந்தது. ஹர்திக் பாண்டியாவின் காலைப் பதம் பார்த்த பிராவோவின் அந்த யார்க்கர்தான் இந்த போட்டியின் #ballofthematch.

 

சென்னை மீண்டும் ஸ்பின்னர்களையே நம்பியிருக்கிறது என்று எல்லோரும் விமர்சித்தபோதுதான் ஸ்பின்னர்களுக்கு ஓவர்களே தராமல்விட்டார் தோனி. ஜடேஜா ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசினார். ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிருக்குமே இரண்டு ஓவர்கள்தான் கொடுக்கப்பட்டன. வாட்சன், வுட், பிராவோ என வேகப்பந்து வீச்சாளர்களைதான் முழுவதுமாக பயன்படுத்தி மும்பையை கட்டுக்குள் கொண்டுவந்தார் தோனி.

 

மும்பையின் தவறு!

கீரன் பொலார்ட்டை 20/20 ஸ்பெஷலிஸ்ட் என அணிக்குள் வைத்திருக்கிறது மும்பை. ஆனால் பொலார்டை இறுதி ஓவர்களின்போது பேட்டிங் செய்ய அனுப்பாமல் ஹர்திக்கை அனுப்பியது மும்பையின் சொதப்பல். ஹர்த்திக் ரன்களை அடிக்கவே நிறைய தடுமாறினார். அதே போல் பொலார்டுக்கு ஒரு ஓவர்கூட பந்துவீசவும் வாய்ப்பு தரப்படவில்லை. டெத் ஓவர்களில் பொலார்டை பயன்படுத்தாமல் விட்டனர்.

 

இந்த வெற்றி போதுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான வெற்றி என்பது பிராவோ மற்றும் பெளலர்களால் கிடைத்த வெற்றி. மற்றபடி சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் படுமோசம். ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி, ஜடேஜா என யாருமே பார்க்க ஃபார்மில் இல்லாத பேட்ஸ்மேன்களைப் போலவே ஆடினார்கள். மும்பையின் சுழற்பந்து வீச்சாளர் மார்க்கண்டேவின் பந்துவீச்சை சமாளிக்க ஏன் இவ்வளவு திணறல்? முழுக்க முழுக்க ஸ்பின்னர்களை அடித்து ஆடி பயிற்சி பெறும் சென்னை அணிக்கு சுழற்பந்தை சமாளிக்க முடியவில்லை என்பது ஒருவகையில் அவமானம்தான். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

 

என்ன செய்ய வேண்டும்?

நிச்சயமாக பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். கேதர் ஜாதவ் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட முடியாத அளவுக்கு காயம் அடைந்திருப்பதால் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனை உள்ளே கொண்டுவரவேண்டும். டுப்ளெஸ்ஸி அணிக்குள் வரவேண்டும். இம்ரான் தாஹிர், ஹர்பஜன் என இரண்டு பேரில் ஓருவர் இருந்தாலே சுழற்பந்து டிபார்ட்மென்ட்டுக்குப் போதுமானதாக இருக்கும் என்பது இந்தப் போட்டியில் தெரிந்துவிட்டது. அதனால் ஸ்பின்னர்களைக் குறைத்துவிட்டு பேட்டிங்கில் தோனி கவனம் செலுத்தவேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக தோனியே மீண்டும் ஃபார்முக்கு வரவேண்டும்.  

 

 

அடுத்த மேட்ச்சில் என்ன செய்யப்போகிறார் தோனி?!

https://www.vikatan.com/news/sports/121570-csk-opens-their-account-in-ipl-with-bravo-style.html

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு பாதுகாப்பு

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சென்னையில் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #IPL2018 #CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு பாதுகாப்பு
 
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த பிரச்சினை தீரும் வரை சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்று சில அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சில பிரபலங்களும், சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு இது உகந்த சூழல் அல்ல, இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் நாளை மறுதினம் சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், சென்னையில் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் முதல் ஆட்டத்தில் வெற்றியை ருசித்த கையோடு, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று மாலை சென்னை வந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட வீரர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஓட்டல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Tamilnews #IPL2018 #CSK

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/08231614/1155881/high-security-in-chennai-super-kings-palyers-hotel.vpf

Link to comment
Share on other sites

சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு: மொபைல்,கொடிகளுக்கு தடை

 

chepauk33

 

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று சில அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் மைதானத்துக்குள் சென்று தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடப் போவதாகவும், தமிழகத்தில் தமிழர்களின் உணர்வுகளை திசை திருப்பும் முயற்சிதான் ஐபிஎல் போட்டி என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் மைதானத்துக்கு உள்ளே சென்று கிரிக்கெட் வீரர்களை சிறைபிடிப்போம் என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தவேண்டாம் என்று பேச தமிழக அரசும் மறுக்கிறது. காவிரிக்கான போராட்டத்தை அணைப்பதற்காக திட்டமிட்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கிறது என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டினார். மேலும், ஐபிஎல் டிக்கெட்டுகளை கிழித்தெறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

ஐபிஎல் போட்டியில் விளையாட சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏதாவது நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியை ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், திட்டமிட்டப்படி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. இசைக்கருவிகள், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள், பேனர்கள், கொடிகள், பதாகைகளை, மொபைல் ஃபோன்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்ரல் 10-ஆம் தேதி) நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்துள்ளனர். மேலும் மைதானம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

http://www.dinamani.com/sports/special/2018/apr/09/சேப்பாக்கம்-மைதானத்தில்-கடும்-கட்டுப்பாடுகள்-விதிப்பு-மொபைல்-கொடிகளுக்கு-தடை-2896800.html

Link to comment
Share on other sites

கேதர் ஜாதவுக்குப் பதிலாகப் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே!

 

 
willey1

 

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள கேதர் ஜாதவுக்குப் பதிலாக புதிய வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி "த்ரில்' வெற்றி கண்டது. ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை, டுவைன் பிராவோவின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை நோக்கி முன்னேறியது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் கேதர் ஜாதவ் காயம் காரணமாக 14 ரன்களுக்கு "ரிடையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் மீண்டும் களம் கண்ட கேதர் ஜாதவ், ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். அவர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 24 ரன்கள் எடுத்தார். எனினும், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து ஜாதவ் விலகியுள்ளார். சென்னை அணியின் பேட்டிங் பிரிவில் முக்கிய பலமாக இருப்பார் என்று கணிக்கப்பட்ட நிலையில் அவர் விலகியிருப்பது சென்னை அணிக்கு பின்னடைவை உருவாக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் கேதர் ஜாதவுக்குப் பதிலாக இங்கிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை அணியில் சாம் பில்லிங்ஸ், மார்க் வுட் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நிலையில் 3-வது இங்கிலாந்து வீரராக டேவிட் வில்லே அணியில் நுழைந்துள்ளார். 

அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு 28 வயது டேவிட் வில்லே-யை சிஎஸ்கே தேர்வு செய்துள்ளது. டேவிட் வில்லே, இங்கிலாந்து அணிக்காக 34 ஒருநாள் மற்றும் 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் நல்ல ஃபீல்டராகவும் உள்ளதால் சென்னை அணிக்குக் கூடுதல் பலமாக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.

http://www.dinamani.com/sports/special/2018/apr/10/david-willey-replaces-kedar-jadhav-at-csk-2897429.html

Link to comment
Share on other sites

இன்று சேப்பாக்கம் செல்லும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..?

 

இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டிகளைக் காணச் செல்லும் ரசிகர்கள் செல்ஃபோன்களை எடுத்துச் செல்லலாம் என சி.எஸ்.கே அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சிஎஸ்கே

தமிழகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது எனப் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது. பல எதிர்ப்புகளை மீறி இன்றைய போட்டி நடக்க உள்ளது. இதனால், மைதானம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடந்தால் மைதானத்தை முற்றுகையிடுவோம் மற்றும் மைதானத்துக்குள் போராட்டம் செய்வோம் எனப் பல தரப்பினர் கூறியிருந்தனர். இதனால் மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு நேற்று தமிழக கிரிக்கெட் சங்கம் பலத்த கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் கொடிகள், பதாகைகள், செல்ஃபோன்கள், ரோடியோ, இசைக் கருவிகள், கார் சாவி, பட்டாசு, தீப்பெட்டிகள், கத்தி போன்ற பொருள்கள், உணவுப் பொருள்கள் ஆகியவை கொண்டு செல்லக் கூடாது என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் போட்டியைக் காணச் செல்லும் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். 

இந்நிலையில் தற்போது போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் செல்ஃபோன்களை கொண்டு வரலாம் என சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வரவேற்பளித்துள்ளனர். 
 

 

Match update: mobile phones will be allowed inside the stadium today. #Whistlepodu #CSKHomeComing #CSKvsKKR #Yellove

https://www.vikatan.com/news/tamilnadu/121777-mobile-phones-will-be-allowed-inside-the-stadium-today-csk-tweets.html

Link to comment
Share on other sites

தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு

 

 
download%202

மோட்டார் சைக்கிளில் சுற்றும் தோனி- கோப்புப் படம்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் வலுத்து வருவதை அடுத்து சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு சிஎஸ்கே நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், விசில் போடு, மஞ்சள் பனியன் அனைத்தையும் தாண்டி சென்னை கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் உச்சரிக்கப்படும் நேசிக்கப்படும் ஒரு வார்த்தை உண்டென்றால் அது தோனி என்ற வார்த்தை.

தோனி என்ற தனி மனிதர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனானார். இதனால் தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையானார் தோனி. மற்ற நட்சத்திரங்களை தொலைவில் வைத்து பிரமித்துப் பார்த்த ரசிகர்கள் தோனியை மட்டும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக வைத்துப் பார்த்து ரசித்தனர்.

செல்வாக்கு மிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டபோது அணிக்கு தடை என்பதை விட இனி தோனி சென்னை அணியில் இல்லையா என்றே ரசிகர்கள் வருத்தப்பட்டனர். அதன் பின்னர் தோனி புனே அணியின் கேப்டனாக மாறினாலும் தோனி இருக்கும் அணிதான் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றே தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர்.

தோனி மீது ரசிகர்களுக்கு இருக்கும் அன்பு அளவிட முடியாதது. அதை தோனியும் பல முறை பேட்டியில் கூறியுள்ளார். தான் சென்னையின் செல்லப்பிள்ளை என்றே கூறியுள்ளார். சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் சிம்புகூட தோனி தமிழக மக்களை நம்மைவிட நேசிப்பவர் அவர் காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் தகுந்த முடிவெடுத்து எப்படி முடியுமோ அப்படி எதிர்ப்பை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தோனி சென்னை வரும்போதெல்லாம் சென்னையில் தனது பிரதான மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து சாதாரணமாக சுற்றிவருவார். அல்லது எங்காவது வெளியில் திடீர் விசிட் அடிப்பார். இந்த முறை காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தால் வீரர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீங்கள் வழக்கம் போல் ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு சென்னையில் ஊர் சுற்றக்கூடாது, அல்லது வெளியில் நண்பர்களுடன் செல்லக்கூடாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கடுமையாக கட்டுப்பாட்டை விதித்துள்ளதாம்.

http://tamil.thehindu.com/sports/article23492147.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
    • இன்னும் ரெண்டு ஓவர் குடுத்திருந்தால் 50 அடித்திருப்பார்கள் ..... அவ்வளவு வெறியோடு களத்தில் நின்றவர்கள்.......!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.