Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கல்லும் கனியாகும் (1968)

இசை : MSV

வரிகள் : புலமைபித்தன்

பாடியவர்:TMS

எங்கே நான் வாழ்ந்தாலும்
என்னுயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே........(எங்கே)

இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில்
உலகம் எல்லாம் காணுகிறேன்
நிலவும் வானும் கடலும் இங்கே
உலகம் என்றால் நாணுகிறேன்......(எங்கே)

சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன்
இழந்த சிறகை இணைக்க எண்ணி
உனது கையை நீட்டுகிறாய் (எங்கே)

மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான்
மழலை உன்னை காட்டுகிறான்.......(எங்கே)

  • Replies 2.9k
  • Views 246.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைனர் லைவ்வு ரொம்ப ஜாலி, மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி .......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)

இசை : இளையராஜா

வரிகள் : கங்கை அமரன்

பாடியோர்: P சுசீலா & மலேசிய வாசுதேவன்

ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ………. வரும் வரை (ஆசை)

பொங்கி வரும் அலை பூச்சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில்
வெண்ணிற வானில் மன்மத தேர் வந்தது

மலர் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் .....வா இப்போது (ஆசை)

வாழ்ந்திருந்தால் தினம் நான்
உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்கை எல்லாம் சுகம் வளர்வதைப்போல
நான் உனை சேர்ந்திருப்பேன்

கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும் நான் உன்னோடு (ஆசை)

காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பது போலே
கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை
தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவேயில்லை ...........நாம் ஒன்றானோம் (ஆசை)

  • கருத்துக்கள உறவுகள்

படம் : உங்கள் விருப்பம் (1974)

இசை : விசய பாஸ்கர்

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் :சவுந்தரராஜன் & அஞ்சலி

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராமா ராமா
மந்திரத்தை சொல்லி விடு ராமா ராமா
மயங்கிய சீதா வரவழைத்தாளா
மடியினில் உன்னை அனுமதித்தாளா

மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட சீதா சீதா
மந்திரத்தை சொல்லி விடு சீதா சீதா
மயங்கிய ராமன் வரவழைத்தானா
மடியினில் உன்னை அனுமதித்தானா (மஞ்சள்)

தசரதன் மகன் நான் ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டில் இன்று விருந்துக்கு வந்தேன்
அதிசய வரவு ஆனந்த உறவு
அரண்மனை காவகல்காரன் தூங்கிவிட்டானா
நாயகன் இங்கே காவலன் அங்கே
நல்ல நேரம் பூஜை செய்ய..... (மஞ்சள்)

கோபுர கலசம் கோவிலின் அழகு
யாவையும் உந்தன் சொந்தன் அழகிய ராமா
மாலையும் இல்லை மணவறை இல்லை
மனதினில் சொந்தம் உண்டு அழகிய சீதா
நானொரு பாதி நீயொரு பாதி
நல்ல நேரம் பூஜை செய்ய....... (மஞ்சள்)
நேரம் குறைவு நெருங்கட்டும் உறவு
ஆரத்தி கொண்டு வந்து தீபத்தைக் காட்டு
தழைத்தது நினைவு பலித்தது கனவு
தந்தைக்கு பக்தி என்னும் திரையினைப் போட்டு
இனி என்ன வேலை இணைத்தது சேலை
நல்ல நேரம் பூஜை செய்ய...... (மஞ்சள்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் .........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மிட்டாய் மம்மி (1976)

இசை : V.குமார்

பாடியோர் : TMS & P சுசிலா

வரிகள் : அவிநாசி. மணி

திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள் (திருக்)

ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்...........(திருக்)

பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
பூஜைக்குப் போகும் வேளையிலே அவள்
பூமியை மறந்து வந்தாள்

ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர்கலை கூற வந்தாள்
ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்....(திருக்)

பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்

அழகிய இதழ்களில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்.......(திருக்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்........!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நீலவானம்(1965)

இசை : MS.விஸ்வநாதன்

வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்: P சுசீலா

ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களே
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையைச் சொல்லுங்களே (ஓஹோஹோ )

வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆகலாம்
ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம் (ஓ ஹோ ஹோ )

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம்
காலதேவன் கோயில் மீது பாசதீபம் காணுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ.........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகுக்கு மறுபெயர் பெண்ணா, அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா.........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ..........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பெண் ஒன்று கண்டேன்
(1974)
இசை: MS விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர்கள்:  SPB & P. சுசிலா

காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
வாரிக் கொடுக்கும் கன்னி மனது
வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது
ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது
உறவில் இன்பம் அள்ளித் தந்தது

 காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க

பூந்துகில் மூடிய பைங்கிளி மேனியை
நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது  
ஏன் ஏன் ஏன்

மாதுளம் என்பது மாங்கனிப் போன்றது
காதலர் கை பட பொங்கி வழிந்தது
தேன் தேன் தேன்

தேன் சுவையோ இல்லை மான் சுவையோ
என நான் துடித்தேன் இந்த வேளையிலே

நான் தரவோ இல்லை நீ தரவோ  
என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்துப் பதிக்க
.
பாலிடை ஊறிடும் திராட்சையை போல் இரு
சேல் விழி பார்த்தும் காதல் பிறந்ததோ  
சொல் சொல் சொல்

பாதரசம் என ஓடிடும் பார்வையில்
காதல்ரசம் தரும் கன்னியின் அருகே  
நில் நில் நில்

ஆத்திரமோ இல்லை அவசரமோ - எனை  
அணைத்திடவே இந்த நாடகமோ

நீ அறிவாய் அதை நான் அறிவேன் - இதில்  
கேள்விகள் நூறு கேட்கனுமா
.
காத்திருந்தேன் கட்டியணைக்க
கனி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
இதயம் உண்டு கொட்டி எடுக்க

காத்திருந்தேன் கட்டியணைக்க..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தந்த இரு மலர்கள் ..........!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மாட புறா (1962)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மருதகாசி

பாடியோர் : சூலமங்களம். ராச லெட்சுமி & P சுசீலா

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு

விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே (மனதில்)

ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே
உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே (மனதில்)..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சூதாட்டம் (1970)

இசை : MS விஸ்வநாதன்

வரிகள் : கண்ணதாசன்

பாடியவர் : P.சுசீலா.

விளக்கேற்றி வைக்கிறேன்
விடிய விடிய எரியட்டும்..
நடக்கப் போகும் நாட்களெல்லாம்
நல்லதாக நடக்கட்டும்...  

விளக்கேற்றி வைக்கிறேன்

மஞ்சளிலிலே நீகொடுத்தாய் மங்கலம்... இந்த
மஞ்சத்திலே நான் அறிவேன் மந்திரம்...
நெஞ்சத்திலே பூசிவிடும் சந்தனம்... அதைக்
கொஞ்சட்டுமே நீகொடுத்த குங்குமம்... உனைத்
தஞ்சமென தழுவிக்கொண்டது பெண்மனம்... இனி
கொஞ்சமல்ல கோடி கொள்ளும் உன்மனம்!..

விளக்கேற்றி வைக்கிறேன்

கருணைமிகு மாரியம்மன் துணையிலே.. நல்ல
கல்வியுண்டு செல்வமுண்டு மனையிலே
பொறுமையுடன் பாசமுண்டு பெண்ணிலே... அதன்
பூஜையெல்லாம் எதிரொலிக்கும் விண்ணிலே... என்
வீடுஎன்பதும் கோயில் என்பதும் ஒன்றுதான்.. நான்
வாழ்வு என்பது காண வந்தது இங்குதான்!...  

விளக்கேற்றி வைக்கிறேன்

பருவங்கண்டு ஓடிவரும் மழையிலே... நல்ல
பழங்களுண்டு நெல்லுமுண்டு வயலிலே..
கணவனெனும் மேகம் தந்த மழையிலே.. இளம்
மனைவிடம் மழலை வரும் மடியிலே... நான்
காதல் தெய்வம் காண வேண்டும் பண்பிலே.. நீ
காவல் தெய்வம் ஆகவேண்டும் அன்பிலே..

விளக்கேற்றி வைக்கிறேன் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேகமே தூதாக வா......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: மாப்பிள்ளை அழைப்பு (1972)

இசை : V.குமார்

வரிகள் ; வாலி

பாடியோர் : SPB & P சுசீலா .

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை கோடி பிறக்கும் ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும் (உள்ளத்தில்)

நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணா உன் கண்ணிரெண்டும்
ஆராரோ பாடாதோ நான் துயில

அந்தி வரும் தென்றலுக்கு மயங்கி
முந்தி வரும் ஆசையிலே நெருங்கி
போக போக அத்தனையும் விளங்கி
நடக்கட்டும் கதை இன்று தொடங்கி (உள்ளத்தில்)

தேராட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன எனத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப் புரட்ட
பள்ளியறை பாடங்களை புகட்ட
முக்கனியும் சக்கரையும் திகட்ட
முப்பொழுதும் இன்ப சுகம் இனிக்க (உள்ளத்தில்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில இருப்பேன் நான் பார்த்து பார்த்து ரசிப்பேன்........!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாணத்தாலே கால்கள் பின்ன பின்ன நடக்கும் நாடகமே.......!    😍

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் இணையுங்கள்.கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சிவகாமி (1960)

இசை : KV மகாதேவன்

வரிகள் : மு.ஷெரிப்

பாடியவர் :TMS

வானில் முழு மதியை கண்டேன்..

வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ எங்கே என் நினைவுகள் அங்கே.......!   😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.