Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்!

Featured Replies

ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்!

cheliyan.png?resize=672%2C800
ஈழத்தின் எழுத்தாளர், கவிஞர் செழியன், விடைபெற்றார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கவிஞர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்த படைப்பாளியாக இவர் கருதப்படுகின்றார்.

 
‘ஒரு போராளியின் நாட் குறிப்பு‘, (அனுபவக் கட்டுரைகள்) , ‘வானத்தைப் பிளந்த கதை‘, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
 
தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள் பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள்’ என்னும் கவிதைத்தொகுப்பின் முன்னுரைக்குறிப்பில் செழியன் எழுதிய வரிகள்

 

“மூங்கில்களை முறித்து எழுகின்ற துயரத்தின் குரல் பதினாறு திசைகளிலும் பரவுகின்றது. சோற்றுப் பானைக்குள் இருக்கும் பருக்கையை எண்ணுவதற்குள் குழந்தை செத்துக் கிடக்கின்றது. இரவையும் பகலையும் திருடிக் கொண்டு போய் விட்டார்கள். காற்று இடம் பெயர்கின்றது, பிண வாசனையை சுமந்து கொண்டு. சமயத்தில் மனிதர்களையும் தூக்கிக் கொண்டு. வாழ்க்கையை பனை மரத்தின் அடியிலும், வயல் வரம்புகளுக்குள்ளும் தொலைத்து விட்டு வந்து பனிப்புலங்களுக்கடியிலும் இயந்திரங்களுக்கிடையிலும் தேடியவர்களும் களைத்துப் போனார்கள். ஈரக் காற்றில் குளிர்ந்து இப்போதும் துடித்துக் கொண்டிருக்கின்றது நம்பிக்கை. கண்ணீரிலும், மூச்சிலும் கரைந்து பிரபஞ்சத்தின் முடிவிலி வரை எதிரொலிக்கின்றது. பூவரசம் காற்றைக் குடித்துக் கொண்டு, புழுதியைத் திரட்டிப் பூசிக் கொண்டு வாழ வேண்டுமென்ற ஆசை- மனிதனாக வாழ வேண்டுமென்ற ஆசை – மறுபடியும் மறுபடியும் கொழுந்து விட்டு எரிகின்றது. இறுதி மூச்சின் கடைசிச் சொட்டு காற்றிலும் இந்த நம்பிக்கை துடித்துக் கொண்டு தான் இருக்கும்.”

http://globaltamilnews.net/2018/65095/

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களை பற்றி எதையும்  அறிந்து வைத்திருக்கவில்லை அண்ணா...கண்ணீர் அஞ்சலிகள்...உங்கள்  ஆத்மா சாந்தி அடைக!!

உங்கள் தமிழை இனித்த தேடி வாசிப்பேன்...

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

0_CCD3907-50_B2-414_F-8387-792_BEF525_ED

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

விழிநீர் அஞ்சலி
யாழ் உரும்பிராய் மண் ஈன்றெடுத்த மற்றுமொரு ஈழப்போரட்ட போராளிகளில் ஒருவரான சுப்பிரமணியம் சிவகுமாரன் (செழியன் )அவர்கள் இயற்கை எய்திய செய்தி எம்மை ஆழ துயரில் ஆழ்த்தியுள்ளது. விடுதலை வேண்டி போராடிய நம் மக்களுக்கு விடுதலை உணர்வுடன், சமூக, வர்க்க முரண்பாடுகளையும் எடுத்து கூறிய சிந்தனை சிற்பி, இவரை பெற்றதில் நமது மண் பெருமை கொள்கின்றது. விடுதலை போராளியாக மட்டும் அவர் வாழ்ந்தவர் அல்ல. சிறந்த கவிஞனாகவும், எழுத்தானாகவும் வாழ்ந்து பல இலக்கிய படைப்புகளையும், சந்திப்புக்களை தாயக தேசத்திலும், புலம்பெயர் தேசத்திலும் மேற்கொண்டு பெற்றெடுத்த மண்ணுக்கும், எம் மொழியான தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்த பலரில் செழியனும் ஒருவன் ஆகின்றார். விடுதலை, இலக்கிய செயற்பாட்டுக்கும் அப்பால் எமது மண்ணின் மைந்தர்களால் கனேடிய தேசத்தில் உருவாக்கம் பெற்று செயல்பட்டுவரும் உரும்பிராய் மக்கள் ஒன்றியத்தின் செயல்பாட்டுக்கும் செயல் வடிவம் கொடுத்து வந்தவர். இவரது உயிர் இப்போது மட்டும் பறிக்க படவில்லை விடுதலைக்கு உதவிய குற்றத்தில் அன்று ஏக போகம் கொண்டாடியவர்கள் பறித்தெடுக்க முனைந்த போதும் மறுபிறவி எடுத்துத்தான் கனேடிய தேசத்தில் வாழ்ந்து வந்தார். தான் பட்ட உணர்வுகள், வேதனைகள் பலவற்றை தனது வரலாற்று நூல்களாக படைத்து சென்றுள்ளார். உன்னை பெற்றதற்காக உரும்பிராய் மக்களும் மண்ணும் கர்வம் கொள்கின்றது.
சென்று வா மகனே ! மீண்டும் ஒர் பிறவி எடுத்து வா மகனே !

சாந்தி ! சாந்தி ! சாந்தி !

உரும்பிராய் மக்கள் ஒன்றியம் - கனடா

முகநூலில் இருந்து

 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.