Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் – குளோபல் டைம்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் – குளோபல் டைம்ஸ்

pic-1-696x475.jpg

பெய்ஜிங்,

சீன அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில், “ஒருதலைப்பட்சமான ராணுவ தலையீட்டுக்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா குறைத்து மதிப்பிடக்கூடாது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம், அவசரநிலை பிரகடனம் என மோசமான நிலையில் அந்நாட்டு அப்துல்லா யாமீன், நிலை தொடர்பாக விளக்கம் அளிக்க சிறப்பு தூதரை நெருங்கிய நாடுகளான சீனா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிட்டார். இதில் இந்தியா இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவைதான் முதலில் நாடினோம் என மாலத்தீவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்தியாவின் மீது சீனா பாய்ந்தது. டோக்லாமில் இந்திய-சீன ராணுவம் இடையிலான மோதல், பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு ஐ.நா.வில் பொருளாதார தடை விதிப்பு ஆகிய சம்பவங்களால் இருநாடுகள் இடையே எரிச்சலூட்டும் மோதல் போக்கு நிலவியதை குறிப்பிட்ட சீனா, “மாலத்தீவு மற்றொரு “மோதல் தளமாக வேண்டாம்” என குறிப்பிட்டது,

மாலத்தீவு அரசியல் சூழ்நிலை தொடர்பாக இந்தியாவுடன் தொடர்பில் உள்ளோம்,” என கூறியது.

இந்நிலையில் இந்தியா மாலத்தீவுக்கு படைகளை அனுப்பினால் சீனா நடவடிக்கை எடுக்கும் என குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

சீன அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில், “ஒருதலைப்பட்சமான ராணுவ தலையீட்டுக்கு சீனாவின் எதிர்ப்பை இந்தியா குறைத்து மதிப்பிடக்கூடாது,” என குறிப்பிடப்பட்டு உள்ளது. நெருக்கடியான நிலை நீடிக்கும் மாலத்தீவுக்கு இந்தியா ஒருதலைப்பட்சமாக ராணுவத்தை அனுப்ப முடிவை எடுத்தால் சீனா பதிலடியை கொடுக்கும் என சீன அரசு பத்திரிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சீன பத்திரிக்கையில் இதுபோன்ற கொக்கரிப்புக்கள் வெளியாவது தொடர்ச்சியான ஒரு சம்பவமாகும். டோக்லாம் விவகாரத்திலும் இதுபோன்றுதான் மிரட்டும் விதமாக செய்திகளை முடிவு வரையில் வெளியிட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“ஐ.நா.வின் அனுமதி இல்லாமல் ராணுவ தலையீடு என்பதற்கு எந்தஒரு நியாயமான காரணமும் கிடையாது. மாலத்தீவு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடாது, இவ்விவகாரத்தில் புதுடெல்லி விதிகளை மீறினால் சீனா சோம்பேறித்தனாமாய் அமர்ந்து இருக்கும் என பொருள் கிடையாது. இந்தியா மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்ப நடவடிக்கையை எடுத்தால், சீனா அதனை தடுக்க நடவடிக்கையை எடுக்கும்,” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://www.velichaveedu.com/pic-1/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தி மொழியில் சீன தேசிய கீதம் அடிச்சு வித்தால் நல்ல காசு பார்க்கலாம் போல் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப் பார்த்தால்....இந்தியா இலங்கைக்குப் படையை அனுப்பினால்....இதே கதி தான் போல உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

போற போக்கைப் பார்த்தால்....இந்தியா இலங்கைக்குப் படையை அனுப்பினால்....இதே கதி தான் போல உள்ளது!

சே.. சே அப்படியெல்லாம் நடக்காது..

இந்தியா "தமிழர்களை அழிக்க" படையனுப்பினால், சீனாவும் அப்படையில் சேர்ந்து கொள்ளும். இவ்விடயத்தில் அனைவரும் சேர்ந்து கொல்லுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

சே.. சே அப்படியெல்லாம் நடக்காது..

இந்தியா "தமிழர்களை அழிக்க" படையனுப்பினால், சீனாவும் அப்படையில் சேர்ந்து கொள்ளும். இவ்விடயத்தில் அனைவரும் சேர்ந்து கொல்லுவர்.

காலகாலமாக எதிரியாக இருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்த்து அழித்த இனமல்லவா?

தமிழனின் அழிவிலாவது ஒன்று சேர்ந்தார்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

சே.. சே அப்படியெல்லாம் நடக்காது..

இந்தியா "தமிழர்களை அழிக்க" படையனுப்பினால், சீனாவும் அப்படையில் சேர்ந்து கொள்ளும். இவ்விடயத்தில் அனைவரும் சேர்ந்து கொல்லுவர்.

நீங்க தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் ராஜவன்ன்னியன் சார் 2009 மே 18 க்கு பிறகு சொறிலன்காவின் வடகிழக்கு உட்பட பலபகுதிகள் சைனாவின் மாகானம்கள் ஆகி விட்டன இதை எப்போது பகிராங்கமாக சைனா தமிழ் வானொலி யில் அறிவிக்கிரார்களோ தெரியலை(பகிடிதான் போறபோக்கை பார்த்தால் உண்மை ஆகிவிடும் போல் உள்ளது ) ,  உங்கள் நாட்டில் டெல்லியில் கூட அப்படி ஒரு ஹிந்தி வாலா தமிழ் விரும்பி கதைக்க மாட்டான் ஆனால் அவர்களை பாருங்கள் அறிவிப்பாளர்கள் அனைவரும்    சைனிஸ் .http://tamil.cri.cn/news/index.html

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

நீங்க தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள் ராஜவன்ன்னியன் சார் 2009 மே 18 க்கு பிறகு சொறிலன்காவின் வடகிழக்கு உட்பட பலபகுதிகள் சைனாவின் மாகானம்கள் ஆகி விட்டன இதை எப்போது பகிராங்கமாக சைனா தமிழ் வானொலி யில் அறிவிக்கிரார்களோ தெரியலை(பகிடிதான் போறபோக்கை பார்த்தால் உண்மை ஆகிவிடும் போல் உள்ளது ) ,  உங்கள் நாட்டில் டெல்லியில் கூட அப்படி ஒரு ஹிந்தி வாலா தமிழ் விரும்பி கதைக்க மாட்டான் ஆனால் அவர்களை பாருங்கள் அறிவிப்பாளர்கள் அனைவரும்    சைனிஸ் .http://tamil.cri.cn/news/index.html

பகிர்விற்கு நன்றி, திரு.பெருமாள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிரிக்கும் விடயம் அல்ல இவ்வளவு பெரிய இந்தியாவில் கொள்கை வகுப்பாளர் தேர்வை எப்படி நடத்தினார்களோ தெரியலை வெள்ளம் தலைக்குமேல் போனபின் ஓடித்திரிகிறார்கள் கனக்க வேண்டாம் Katchatheevu இது ஏதோ நேற்றுத்தான் நடந்தது போல் டெல்லி மீடியாக்கள் பக்கம் பக்கமாய் கடந்த ஒருமாதமாய் கிறுக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

சே.. சே அப்படியெல்லாம் நடக்காது..

இந்தியா "தமிழர்களை அழிக்க" படையனுப்பினால், சீனாவும் அப்படையில் சேர்ந்து கொள்ளும். இவ்விடயத்தில் அனைவரும் சேர்ந்து கொல்லுவர்.

தமிழர், சீனர், கிரேக்கர் இவர்கள் அனைவரும் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பிருந்தே திரைகடல் ஓடித் திரவியம் தேடியவர்கள். அந்த வழியில் அவர்களிடையே மிகுந்த ஒற்றுமை இருந்ததை சரித்திரங்களும் தெரிவிக்கின்றன. முக்கியமாக சீன தமிழர் ஒற்றுமை மிக மிக நெருக்கமாக இருந்துள்ளது. இந்த நூற்றாண்டில் எமது தமிழ் தலைவர்கள் சீனர்களுடனான நெருக்கத்தை மேம்படுத்தத் தவறிவிட்டனர். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

உண்மையில் சிரிக்கும் விடயம் அல்ல..

இப்பொழுதான் "ஈழம் அழிந்த கதை" என்ற காணொளியை ( https://youtu.be/3iSWroJpKgM ) பார்த்துவிட்டு வந்த கோபத்தில், கடுப்பில் உங்கள் பதிவை பார்த்ததும் மனம் லேசாகி சிரித்துவிட்டேன் சாமி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.