Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை

Featured Replies

“தாமரை மொட்டின் மூலமே தமிழீழம் மலரும்”

 

 

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும். 

podujana-peramuna-logo.jpg

தேர்தல் பிரசாரத்தில் தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். 

ஆகவே நாம் கேட்காத தமிழீழத்தை பொதுஜன பெரமுனவினர் பிரசாரத்தின் மூலமாக பெற்றுகொடுக்கவே முயற்சித்து வருகின்றனர் என பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

http://www.virakesari.lk/article/30793

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலேயே ஈழம் உருவாகும்

sambanthan-1.jpg?resize=480%2C360
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈழக் கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோரிநிற்கிறோம். இவற்றை மீறி ஈழம் பிறக்குமாயின் அது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலேயே பிறக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிகவும் கீழ்த்தரமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அவரது பொதுஜன முன்னணியும் பிரச்சாரம் செய்திருந்தார்கள். அரசாங்கத்திற்கும், ஐக்கியதேசியக் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் ஈழம் உருவாக வழிவகுக்கும் என அப்பாவிச் சிங்கள மக்களை மகிந்த ராஜபக்ஸ வழிநடத்தி இருந்தார்.

இது மிகவும் தவறானதும் பிiழையானதுமான முன்னுதாரணம் ஆகும் எனத் தெரிவித்த இரா சம்பந்தன் இப்படியாக சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாராளுமன்றில் எச்சரித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/67536/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை

 

ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழ கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலை குறித்து நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இவற்றையும் மீறி ஈழம் பிறக்குமாயின் அது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலேயே பிறக்கும்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது பொதுஜன முன்னணியும் மிகவும் கீழ்த்தரமாகவே தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

அரசாங்கத்திற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் ஈழம் உருவாக வழிவகுக்கும் என அப்பாவிச் சிங்கள மக்களை வழிநடத்தி இருந்தார்கள்.

இது மிகவும் தவறானது. இப்படியாக சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என நாடாளுமன்றில் சம்பந்தன் எச்சரித்தார்.

இதேவேளை நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விசேட விவாதத்தில் ஆளும் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாடும் பொது பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விமல் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு இடையிலும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எனினும் சம்பந்தனின் உரையின் போது கூட்டு எதிர்க்கட்சியோ வேறு கட்சியினரோ எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்தார்கள்.

மஹிந்தவை பகிரங்கமாக விமர்சித்த போதும் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. அத்துடன் சம்பந்தன் தனது உரையை முடித்துக்கொண்டு அமரும் போது அவருடைய உரைக்காக கைத்தட்டல்கள் எழுந்ததையும் அவதானிக்க முடிந்தது.

 

http://www.tamilwin.com/parliment/01/174747?ref=home-feed

 

 
  • தொடங்கியவர்

‘தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும்’ – சம்பந்தன்

 

sampanthanமகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறும், சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“உள்ளூராட்சி த் தேர்தலில்  சிறிலங்கா பொதுஜன முன்னணி 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும்.

இது 2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த வாக்குகளை விடக் குறைவு தான். எனவே இந்த தேர்தலிலும் வெற்றிபெறவில்லை.

தேர்தல் பரப்புரையின் போது, தமிழீழ கதைகளை கூறியே சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஐதேகவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழீழம் உருவாக வழியை உருவாக்கும் என்று சிங்கள மக்களை ஏமாற்றி நம்ப வைத்திருக்கிறீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்கள் தமிழீழத்தை கேட்கவில்லை.

ஒன்றுபட்டு ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு தான் நாங்கள் கேட்கிறோம்.

ஆனால், நீங்கள் இதுபோன்று தொடர்ந்து நடந்து கொள்வீர்களேயானால், ஈழம் மலர்ந்து விடும். தாமரை மொட்டில் இருந்து தான்  அந்த ஈழம் மலரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/02/19/news/29226

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

மஹிந்தவை பகிரங்கமாக எச்சரித்த சம்பந்தன்! அமைதியாக இருந்த சபை

மாகாணசபை தேர்தலுக்கு இப்பவே சம்பந்தன் ரெடியாகிறார் ஆரம்ப வெடிசத்தமே காதை பிளக்குது .

கடைசியில வின்னர் பட வடிவேல் நிலைமை என்பது எல்லாருக்கும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு முன் மகிந்தவுக்கு நேசக்கரம் நீட்டினார். பசில் கூட்டமைப்பு/ ஐதேகவின் Deal  களை போட்டுடைக்க போவதாக கூறி இருந்தார்.இதற்கு பதிலாக சம்பந்தரும் ஒரு வெடியை கொழுத்தி போட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

தாமரை மொட்டின் மூலம் தமிழீழம் மலரும் : அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்ற வேண்டாம் என்கிறார் சம்பந்தன்

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

ஒருமித்த நாட்டுக்குள் தீர்வுகளை பெற்றுக்கொண்டு இணைந்து செயற்படவே நாம் முயற்சித்து வருகின்றோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமிழீழக் கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றியே தமது தேர்தல் வெற்றியினை பெற்றுள்ளார். தமிழீழம் மலருமாயின் அது மஹிந்த ராஜபக் ஷவினாலேயே அமையும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சிங்கள மக்கள் மத்தியிலும் உண்மைகளை கொண்டு சென்று ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  

பாரளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் தமது ஆணையினை வழங்கியுள்ளனர். மக்கள் வழங்கிய ஆணையினை மதிக்க வேண்டும். அதேபோல் இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி 32.61 வீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8.90 வீத வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதற்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளன.

 தேசிய அரசாங்கமாக கருதும் நிலையில் பிரதான இரண்டு தரப்பும் பெற்றுள்ள வாக்குகளை நோக்குகையில் 45.99 வீத வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விடவும் அதிக வாக்குகளை பெற்றுள்ளன. அதேபோல் மக்கள் விடுதலை முன்னணி 4.42 வீத வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி 4.07 வீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

ஆகவே வெற்றி பெற்றுள்ளோம் என கூறும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிராக இந்த நாட்டு மக்கள் 56 வீதமான வாக்குகளை வழங்கியுள்ளனர். கடந்த காலங்களில் இவர்களின் வாக்கு வீதம் சரிந்துகொண்டு செல்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து மூன்று தேர்தல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மூன்று தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எனினும் தேர்தலில் சில கட்சிகள் வெற்றி பெறலாம், சில கட்சிகள் தோல்வி அடையலாம். ஆனால் அவற்றை கொண்டு ஆட்சியினை தீர்மானிக்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷ 44 வீத வாக்குகளை வைத்துகொண்டு ஆட்சியினை மாற்றியமைக்க முடியாது. பாரளுமன்றம் தீர்மானிக்கப்படுவது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை அடிப்படையாக வைத்தேயாகும். அதை விடுத்து தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக இந்த நாடு வேறு திசையில் பயணிக்க முடியாது. அது ஜனநாயகத்தை மீறிச் செயற்படும் செயலாகும்.

மேலும் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்துமே இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்பட்டது. இந்த தேர்தலை மஹிந்த ராஜபக் ஷ வெற்றிகொள்ள தமிழீழக் கதையினை கூறியே பிரசாரம் செய்தார்.

 அதேபோல் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப் பட்டால் ஈழம் மலரும் என கூறிக்கொண்டு அவர்களின் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இந்த நாட்டில் 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அப்போதைய அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பேசியது, அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவும் அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலத்திலும் அதிகார பரவலாக்கல் குறித்து அக்கறை செலுத்தப்பட்டது. அப்போதைய சபையில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மூலமாக தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்திலும் அவர் அதியுச்ச அதிகாரப் பகிர்வை நோக்கி செயற்படுவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார். அவரது ஆட்சியில் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி நிபுணர் குழு அமைக்கப்பட்டு தீர்வுகள் குறித்து பேசப்பட்டதுடன் அவர்களின் தேர்தல் மேடைகளில் அதியுச்ச அதிகாரப்பகிர்வுகள் குறித்து அதிகமாக பேசினார்கள்.

இந்த ஆட்சியில் கூட முழுப் பாராளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக அமைத்து புதிய அரசியல் அமைப்பு குறித்து ஆராய அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அணியினரும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி செயற்பட்டனர். ஆனால் இன்று அரசியல் களத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமிழீழக் கதைகளை கூறி தனது அரசியல் நகர்வுகளை கையாண்டு வருகின்றார்.

 நாம் தமிழீழத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றோம் என தெற்கின் சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை கொண்டு சென்று அதன் மூலமாக மக்களை தங்களின் பக்கம் திசை திருப்பும் செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை கூறி செயற்படுவது மிகவும் தவறான ஒரு செயற்பாடாகும். விகாரைகளில், வீடுகளில், பொது இடங்களில் சிங்கள மக்கள் முன்னிலையில் பொய்யான ஒரு கருத்தினை கூறி அவர்களின் இருப்பினை தக்க வைத்துள்ளனர்.

நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக கூறியுள்ளோம். ஒருமித்த நாட்டுக்குள் எமது உரிமைகளை வெற்றிகொள்ளும் கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளோம். அதேபோல் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு சகல மக்களின் அங்கீகாரத்தையும் பெற்று அதன் மூலமாக உருவாக்கப்பட வேண்டும் என நாம் தெரிவித்துள்ளோம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தமிழீழம் உருவாகுவதாக தென் பகுதி சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை கூறி அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி வருகின்றார்.

இந்த நாட்டின் சகல மக்களுக்கும் உண்மைகள் சரியாக சென்றடைய வேண்டும். உண்மை என்னவென்பதை சிங்கள மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.நாம் வடக்கு கிழக்கில் ஒருமித்த நாடு என்ற கொள்கையினை மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்கின்றோம். ஆனால் எங்களை பிரிவினை வாதிகள் என சுட்டிக்காட்டி பொய் பிரசாரங்களை முன்வைத்து வருகின்றனர். ஈழம் குறித்து இவர்கள் பேசுகின்றனர். ஆனால் தாமரை மொட்டின் பொய் பிரச்சாரங்கள் மூலமே தமிழீழம் உருவாகும். அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமாயின் அதற்கு மஹிந்த ராஜபக் ஷ அணியினரின் பொய்யான பிரசாரங்களே காரணமாகும் என தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-20#page-1

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை எச்சரிப்பததனால் நமக்கு என்ன லாபம். 

முதலில், சம்மந்தனை சிங்களவர்களில் எவருமே எதிரியாகப் பார்ப்பதில்லை. அப்படியிருக்க, இவர் எச்சரிக்க, அவர் அமைதியாகவிருந்தார் என்பது வேடிக்கை. 

இவரை வைத்து அன்று சிங்களவர்கள் பாராளுமன்றத்தில் காமடி கீமடி பண்ணியிருக்கிறார்கள். 

ஒரு இனத்தின் லட்சக்கணக்கானவர்களை அழித்து , அவ்வினத்தை முற்றாக ஆக்கிரமித்த ஒரு இனப்படுகொலையாளியை, எதுக்குமே லாயக்கற்ற ஒருவர் எச்சரித்தார். பிய்ச்சரித்தார் என்பதெல்லாம், கொஞ்சம் ஓவராகத்தான் எனக்குத் தெரியுது !

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

 

Bildergebnis für மகிந்த

சம்பந்தா.....!! நீயுமா......??

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2018 at 5:31 PM, பெருமாள் said:

மாகாணசபை தேர்தலுக்கு இப்பவே சம்பந்தன் ரெடியாகிறார் ஆரம்ப வெடிசத்தமே காதை பிளக்குது .

கடைசியில வின்னர் பட வடிவேல் நிலைமை என்பது எல்லாருக்கும் தெரியும் .

DWdNPREXkAETDoT.jpg

Image result for வின்னர்  வடிவேல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.