Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8 வயதுக் குழந்தை, ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர்

Featured Replies

8 வயதுக் குழந்தை, ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர்

எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது.

எட்டு வயதுக் குழந்தை ஆசிஃபா பானு.படத்தின் காப்புரிமைCOURTESY FAMILY OF ASIFA BANO Image captionஎட்டு வயதுக் குழந்தை ஆசிஃபா பானு.

ஜனவரி 17 காலை, முகம்மது யூசூஃப் புஜ்வாலா, தமது வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது, அவரது பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் அவரிடம் ஓடிவந்து அவரது 8 வயது மகள் அசிஃபா பானுவின் சடலம் சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள காட்டில் புதரில் கிடப்பதாக சொன்னார்.

பிபிசியிடம் பேசிய 52 வயதான புஜ்வாலா "என் மகளுக்கு ஏதோ பயங்கரம் நடந்துள்ளது தெரிந்தது," என்றார். பலவீனமான குரலில் 'அசீஃபா...' என்று முனகியபடியே அவரது அருகே அமர்ந்திருந்தார் அவரது மனைவி நசீமா பிபி.

இமலயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் குஜ்ஜர் எனப்படும் முஸ்லிம் நாடோடி மேய்ப்பர் சமூகத்தைச் சேர்ந்தவர் புஜ்வாலா. பலாத்காரம் செய்து, சிறுமி கொல்லப்பட்ட சம்பவம், இந்தச் சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்துக்களை பெரும்பாண்மையாகக் கொண்ட ஜம்மு மற்றும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் இரண்டுக்கும் இடையிலான பிளவைக் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவுடன் ஒரு கொந்தளிப்பான உறவைக் கொண்டுள்ளது. இந்திய ஆட்சிக்கு எதிராக இந்தப் பகுதியில் 1989 முதல் ஆயுதக் கிளர்ச்சி நடந்து வருகிறது.

போலீஸ் அதிகாரிகள் கைது

ஓர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் வயது முதிராத ஒருவர் உள்ளிட்ட எட்டு ஆண்களை போலீசார் இந்த குற்றம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.

ஆனால், இந்தக் கைதுகளை எதிர்த்து ஜம்முவில் போராட்டங்கள் நடந்தன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீசார் நீதிமன்றத்தில் நுழைவதை வழக்குரைஞர்களே தடுக்க முயன்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி மாநிலத்தை ஆளுகிறது.

ஜம்மு- காஷ்மீர் இரு பகுதிகளுக்கும் இடையே உள்ள பிளவை இந்தப் பிரச்சினை காட்டுகிறது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜம்மு- காஷ்மீர் இரு பகுதிகளுக்கும் இடையே உள்ள பிளவை இந்தப் பிரச்சினை காட்டுகிறது.

ஜம்முவில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் ஆசிஃபாவின் குடும்பம் வசிக்கிறது. ஆசிஃபா காணாமல் போன ஜனவரி 10 அன்று அவள் காட்டில் மேய்ந்துகொண்டிருந்த குதிரையை ஓட்டிவரச் சென்றதாக அவரது தாய் நினைவுகூர்கிறார். குதிரை வீடு திரும்பியது. ஆனால், ஆசிஃபா திரும்பவில்லை.

தகவலை கணவருக்குச் சொல்கிறார் அவரது தாய். அவரும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும், டார்ச் விளக்குகள், லாந்தர்கள், கோடரிகள் ஆகியவற்றோடு காட்டுக்குள் சென்று இரவு முழுக்க தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் ஆசிஃபாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டு நாள்கள் கழித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் உதவ முன்வரவில்லை என்கிறார் புஜ்வாலா. எட்டு வயதான அந்தச் சிறுமி ஆசிஃபா ஏதேனும் ஒரு பையனோடு ஓடிப்போயிருக்கலாம் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாக அவர் கூறுகிறார்.

சாலை மறியல் போராட்டம்

குஜ்ஜர்கள் நெடுஞ்சாலையை மறித்துப் போராடத் தொடங்கினர். இதையடுத்து இரண்டு அதிகாரிகளை தேடுவதற்காக நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தம் போலீசுக்கு ஏற்பட்டது.

அப்படி நியமிக்கப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான தீபக் கஜூரியாவே இந்த வழக்கில் பிறகு கைது செய்யப்பட்டார்.

ஐந்து நாள்களுக்குப் பிறகு ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. "அவள் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். அவளது கால்கள் முறிக்கப்பட்டிருந்தன. நகங்கள் கருத்துப் போயுள்ளன. கையிலும், விரல்களிலும் நீலம் மற்றும் சிவப்பு நிறக் குறிகள் இருந்தன" என்கிறார் ஆசிஃபாவின் தாய் நசீமா.

ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு ஆறு நாள்கள் கழித்து, ஜனவரி 23-ம் தேதி, மாநில குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி. இது மாநிலப் போலீசின் சிறப்புப் பிரிவு.

கோயில் ஒன்றில் பல நாள்கள் ஆசிஃபா கட்டிவைக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து தரப்பட்டதாகவும் புலன்விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். பல நாள்கள் ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு பிறகு கொல்லப்பட்டதாக போலீசின் குற்றப்பத்திரிகை கூறுகிறது. கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டபின், தலையில் கல்லால் தாக்கப்பட்டிருக்கிறாள் ஆசிஃபா என்கிறது குற்றப்பத்திரிகை.

ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சாஞ்சி ராம் (60) என்பவர் போலீஸ் அதிகாரிகள் சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக் ராஜ் மற்றும் கஜூரியா ஆகியோர் உதவியோடு இந்தக் குற்றத்தை திட்டமிட்டுச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சாஞ்சி ராமின் மகன் விஷால், இளைய வயதினரான அவரது சகோதரி மகன் ஆகியோரும் வன்புணர்வு மற்றும் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

கஜூரியா உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள் ரத்தம் தோய்ந்த, ஆசிஃபாவின் ஆடைகளை துவைத்த பிறகு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியதாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் செல்லும் போலீசைத் தடுக்கும் வழக்குரைஞர்கள்.படத்தின் காப்புரிமைSAMEER YASIR Image captionகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யச் செல்லும் போலீசைத் தடுக்கும் வழக்குரைஞர்கள்.

குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி ஜம்முவை விட்டு வெளியேற வைக்கவேண்டும் என்பது குற்றம்சாட்டப்பட்டவர்களின் நோக்கம் என்று விசாரணை அதிகாரிகள் நினைக்கின்றனர்.

பொது நிலங்களிலும், காடுகளிலும் குஜ்ஜர் சமூகத்தவர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். இந்த நடவடிக்கையால் சமீப காலமாக இந்துக்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

ஆசிஃபா குடும்பத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பழங்குடி உரிமை செயற்பாட்டாளரும், வழக்குரைஞருமான தலிப் ஹூசைன் தாம் உள்ளூர் போலீசால் கைது செய்யப்பட்டதாகவும், மிரட்டப்பட்டதாகவும் கூறுகிறார்.

தற்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்முவின் மக்கள் தொகை சமன்பாட்டினை இந்த முஸ்லிம் நாடோடிகள் மாற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காகப் போராடிய வழக்குரைஞர்களில் ஒருவரான அங்கூர் ஷர்மா கூறுகிறார்.

தங்களது காடுகளையும், நீராதாரங்களையும் அவர்கள் ஆக்கிரமிப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்தக் குற்றம் ஜம்முவில் பெரிய கவனத்தை ஈர்க்காதபோதும், ஸ்ரீநகரில் செய்தித் தாள்கள் முதல்பக்கச் செய்திகளாக இந்தக் குற்றம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன.

எதிர்க் கட்சியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க குஜ்ஜர் இன எம்.எல்.ஏ.வான மியன் அல்டாஃப் ஆசிஃபாவின் படங்கள் வந்த செய்தித் தாளைக் காட்டி மாநில சட்டமன்றத்தில் ஆவேசமாக வாதிட்டு இந்த வழக்கில் விசாரணை கோரினார். ஆனால், இது ஒரு குடும்பப் பிரச்சினை என்று குறிப்பிட்ட பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் ஜஸ்ரோட்டியா, அல்டாஃப் இதை அரசியல்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

ஆசிஃபாவின் இறுதிச் சடங்கில்...

சில ஆண்டுகளுக்கு முன்பு குஜ்ஜர்கள் வாங்கி இடுகாடாகப் பயன்படுத்திவந்த இடத்தில் ஆசிஃபாவை புதைக்க குஜ்ஜர்கள் எத்தனித்தபோது, இந்து வலதுசாரிகள் சூழ்ந்துகொண்டு அங்கே புதைத்தால் வன்முறை நடக்கும் என்று மிரட்டியதாக கூறுகிரார் புஜ்வாலா. இதையடுத்து தாங்கள் ஏழு மைல் நடந்து சென்று வேறொரு கிராமத்தில் புதைத்ததாக அவர் மேலும் கூறுகிறார்.

சில ஆண்டுகள் முன்பு ஒரு விபத்தில் அவரது இரண்டு மகள்களும் இறந்துவிட்டனர். இதையடுத்து அவரது மனைவி வலியுறுத்தியதால் அவர் தமது மைத்துனரின் மகளான ஆசிஃபாவை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

ஆசிஃபாவை ஒரு பாடும் பறவை என்றும், மான் போல என்றும் வருணிக்கும் நசீமா தாங்கள் பயணத்தில் இருக்கும்போது ஆசிஃபாவே மந்தையைப் பார்த்துக் கொண்டதாக கூறுகிறார்.

அதனாலேயே அவள் தங்கள் சமூகத்தின் செல்லப்பிள்ளையானாள் என்றும், தங்கள் பிரபஞ்சத்தின் மையம் அவளே என்றும் கூறுகிறார் நசீமா.

http://www.bbc.com/tamil/india-43746825

  • தொடங்கியவர்

என்னை மன்னித்துவிடு ஆசிபா - சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கமல் குரல்

 
அ-அ+

காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். #JusticeForAshifa

 
 
 
 
என்னை மன்னித்துவிடு ஆசிபா - சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கமல் குரல்
 
சென்னை:

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா இம்மாத கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார். மேலும், 18 வயதுக்கு உள்பட்ட ஒருவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.

8 பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆனால், கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியுள்ளது. மாநில போலீசார் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கில் கைதான வரை விடுவிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் இருவர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து, சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 
201804131008309884_1_kaam._L_styvpf.jpg


இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில்:-

சிறுமி ஆசிபாவுக்கு நிகழ்ந்துள்ள கொடூரம் உங்களுக்கு புரிய அவள் உங்களது மகளாக இருக்க வேண்டுமா? அவள் என்னுடைய மகளாக இருந்திருக்கலாம். ஒரு மனிதனாக எனக்கு மிகுந்த கோபம் வருகிறது. ஒரு தந்தையாக, ஒரு குடிமகனான ஆசிபாவை பாதுகாக்க தவறிவிட்டேன். என்னை மன்னித்துவிடு குழந்தையே, உனக்கான பாதுகாப்பான நாட்டை நாங்கள் உருவாக்க தவறிவிட்டோம். எதிர்காலத்தில் உன்னைப்போல வேறு யாருக்கும் இந்த கொடூரம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நான் போராடுவேன். உன்னை நினைவு கூர்கிறோம், உன்னை மறக்கவும் மாட்டோம்

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13100831/1156773/kamal-haasan-mourns-ashifa-who-killed-brutally-in.vpf

ஒரு 8  வயது குழந்தையை இப்படிச் செய்ய எப்படி மனம் வருகின்றது இந்த மனிதர்களுக்கு. அதுவும் கட்டி வைத்து பல நாட்கள் தொடர்ந்து. குற்றவாளிகளில் ஒய்வு பெற்ற  அப்பனும் மகனும் இணைந்தும் இதை செய்து உள்ளனர்

இவர்களின் ஆண் குறிகளை வெட்டி ஏறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தப்பட்டவர்களை தெரிந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார்களாம்....டிஜிட்டல் இண்டியாவாம்...
 

வல்லுறவுக்குள்ளானது ஒரு இஸ்லாமிய குழந்தை என

காப்பாற்ற தவறியதோ இந்து கடவுள்... 
வல்லுறவு நிகழ்ந்த இடம் ஒரு கோயில் என

வர தயங்கி ஒதுங்கி நின்றதோ இஸ்லாமிய கடவுள்....

DapZz1mVMAE-47F.jpg

Twitter

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DarA3vyW4AAEJUz.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆஷிஃபாவை முன்வைத்து!: குட்டிரேவதி

பெண் - ஆண் மரபணுக்கள் வரை சென்று, வாஷிங்பவுடர் போட்டுக் கழுவும் அயர்ச்சியான வேலை நமக்கு இருக்கிறது. ஆனால் எளிய வழி ஒன்றும் இருக்கிறது.

குட்டிரேவதி

ஆஷிஃபா (8 வயது) வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது ஒரு கொண்டாட்டம் போலவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்று சமீபத்தில் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிறைய சிறுமிகளின் பெயர்களை நமக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் ஆவேசப்பட்டுவிட்டுத் தளர்ந்து போய்விடுகிறோம். இனியேனும், பிரச்சனை உண்மையில் எங்கு இருக்கிறது என்று புரிந்துகொள்வதிலும் அதைக் களைவதிலும் நமது முயற்சியை செலவழிக்கலாம் என்று நம்புகிறேன்.

ஆணிலும் பெண்ணிலும்,”சாதி – இந்து” மனநிலை என்பது காலம் தோறும் கட்டமைக்கப்பட்டு வரும் ஒன்று. சென்ற நூற்றாண்டின் தமிழ், இந்திய திரைப்படங்கள் முழுக்க, ஆண் சாலையில் செல்லும் பெண்ணை ‘பாலியல் சீண்டல்’ செய்வதாகவும், பின்பு அதே ஆணை அந்தப்பெண்ணே காதலிப்பதாகவும், அல்லது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ஆணையே திருமணம் செய்வதாகவும் தாம் கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மறைமுகமாக, இவை நியாயம் என்றே இண்டு இடுக்களில் எல்லாம் உணர்த்தப்பட்டிருக்கின்றன. எவ்வளவு பெரிய இயக்குநரும் தனது இந்தச் சாதி – இந்து மனநிலையிலிருந்து தப்பித்ததாகத் தெரியவில்லை. திரைத் துறையிலும் சரி, சொந்த வாழ்விலும் சரி. திரை இயக்குநர்கள் பெரும்பாலும் ஆண்கள் தாம். இவர்கள் கட்டமைக்கும் கதைகள், கதைமாந்தர்கள், காட்சிகள் தாம் காலங்காலமாக, அடுத்தடுத்த தலைமுறை ஆண்களுக்குக் கடத்தப்படுகின்றன. இப்படித்தான் பெண் என்பவளின் உடல் பார்க்கப்படவேண்டும், பயன்படுத்தப்பட வேண்டும், காயப்படுத்தப்படவேண்டும் என்பதாக. எந்த ஆணும் இந்த வாய்ப்பை விட்டுக்கொடுப்பதில்லை.

இளம் தலைமுறை இயக்குநர்கள் பலரின் திரைக்கதைகள் என் வாசிப்பிற்கு வரும்போது, இந்த விடயத்தில் வெகுவான மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்கிறேன். சாலையில், நாற்பது – ஐம்பது வயது பெண்களை இளம் ஆண்கள், எந்தச் சுயமரியாதை உணர்வும் மனித மாண்பின்றி சீண்டல்களையும் கமெண்டுகளையும் வெளிப்படுத்தும்போது, எப்படி அவர்கள் சிந்தனைக்குள் இவை காலங்காலமாகத் திணிக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்படுகின்றன என்பதை உணரமுடிகிறது. உடலல்லாமல் பெண்ணைப் பார்க்கும் ஆண்களைச் சந்திக்க நேரும் தருணங்கள் என்னளவில், மிகவும் அரிதாகவே நிகழ்ந்திருக்கின்றன. இதற்குக் காரணமாக, ஆண்களை மட்டுமே சொல்லமுடியாது. பெண்களும், தம் மகன்களை ‘ஆண்’ என்று சொல்லி வளர்க்கும் விதமும், அதற்காக அவர்கள் அடையாளம் காட்டும் விடயமும், ‘வன்முறை’ தான். இன்றும், பெண்கள் நமக்குக் கிடைக்கும் சுய விடுதலையுணர்வை, தன் உடலுக்குத் தாமே அனுமதிக்கக் கிடைக்கும் கேளிக்கையை, தன் உடலுக்குக் கிடைக்கும் அபரிமிதமான சுதந்திர, காட்சி வெளிப்பாட்டை மட்டுமே உண்மையான விடுதலை என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில், இது தனித்த அளவில் அப்படி ஓர் உணர்வைக் காட்டலாம். பொதுவெளியில், பெண்கள் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் மிக நெருக்கமாக, அதே சமயம் கட்டாயமான இடைவெளியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதில்லை.

ஒருவரின் வாழ்வில் நிகழும் அதே வன்முறையும் துயரும் தான் இன்னொரு பெண்ணின் வாழ்விலும் நிகழ்கிறது. இருந்தாலும், இதை மாற்றியமைக்கும், இதிலிருந்து விடுதலை பெறும் முயற்சிகளை நாம் கற்றுக்கொள்வதில்லை.

இதற்கு உதாரணமாக, இரண்டு வகையான பெண் எழுத்தாளர்களை இந்தியத் தரப்பில் பார்த்திருக்கிறேன். சுய அங்கீகாரங்கள், சுய பாலியல் விடுதலைகள் இவற்றையே கொண்டாட்டம் என்று எழுதிய சாதி -இந்துப்பெண்கள், ஒரு வகை. இவர்கள் அல்லாமல், தாம் முன்வைக்கும் விடுதலைகள், எல்லோருக்கும் ஆனதாக எங்கேயேனும் மாறுகிறதா என்று கூர்ந்து பார்த்து எல்லோருக்காகவும் தம் எழுத்து வழியாக அன்பைக் கொட்டியவர்கள். இதையெல்லாம் பெண்ணியம் என்று உயர்ந்த டைட்டிலுக்குள் திணித்து ஒவ்வாமை காட்டவேண்டியதில்லை. அன்றாட வாழ்வில் பெண்ணும் ஆணும் இன்பம் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பை இப்படி ஏன் வன்முறையைத் திணிக்கும் வாழ்சாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஆதங்கத்தில் மட்டுமே எழுதுகிறேன்.

பல நேரங்களில், ஆஸிஃபா, ஹாசினி போன்றோருக்காகப் பொதுவெளியில் ஆதங்கப்பட்டுவிட்டுத் தனித்த வாழ்வில் இன்னொரு பெண்ணுக்காக சகோதர அக்கறை இன்றி, அதற்கான எந்த முயற்சியும் இன்றி கழிக்கும் பெண்களால் இத்தகைய பாலியல் வன்முறைகள் இன்னும் தீவிரப்படும் என்பதுதான் என் கணிப்பு. பெண்களிடம் தென்படும் சிறிய முரண்பாடுகளைக் கூடப் பெரிதாக, பூதாகரமாக ஆக்கும் வன்மை சாதிக்கு மட்டுமே உண்டு. பெண்கள் ஏதோ பெயருக்கு, ‘பெண்கள், பெண்கள்’ என்று எழுதினாலும், அடியில் ஓடும் சாதிய நீரோட்டங்களும், ஆண்களிடையே போலவே பெண்களிடையேயும் அது வன்மமாய் மாறிச் செயல்படுவதும் நாம் அறியாததல்ல. இது மாறாமல், பெண் பாலியல் வன்புணர்வு பற்றியெல்லாம் பேசிச்செல்வதில் எழுதிச் செல்வதில் எந்த நியாயமுமில்லை. நமக்கெல்லாம் நம் தனித்த நுகர்வு இன்பங்களும், நமக்குள்ளேயே நாம் கட்டமைத்து வளர்க்கும் ஆல்டர்- ஈகோக்களும் தான் முக்கியம், எனும்போது, ஆசிஃபா போன்ற பாலியல் வன்முறைகள் தொடரவே செய்யும்.

ஆண்களும் இம்மாதிரியான பாலியல் வன்புணர்வுகள் குறித்து அலட்சியம் காட்டலாம். நாளை இதே வன்கொடுமை தங்கள் மகளுக்கு நிகழாது என்பது என்ன நிச்சயம். தன் மகனை வளர்க்கும் விதத்தில், தன் மகன் முன் தான் நடந்துகொள்ளும் விதத்தில் அவனும் ஒரு குற்றவாளியாக நாளை மாறமாட்டான் என்பது என்ன நிச்சயம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சாதி – இந்து ஆண்களுக்கு, அவர்களின் படிநிலைக்கு ஏற்றாற் போன்ற காட்சி, பார்வை அதிகாரத்தை பெண்கள் உடல் மீது வழங்கியிருக்கிறது. பெண்கள் இடுப்பில் குடம் தூக்காமல் தலையில் தான் தூக்கிச் செல்லவேண்டும் என்ற விதிகளே கூடப் பட்டவர்த்தமான பாலியல் நுகர்வும் வன்முறையும் திணிக்கப் பட்டிருந்ததைத் தான் காட்டுகிறது. உண்மையில், பெண் – ஆண் மரபணுக்கள் வரை சென்று, வாஷிங்பவுடர் போட்டுக் கழுவும் அயர்ச்சியான வேலை நமக்கு இருக்கிறது. ஆனால் எளிய வழி ஒன்றும் இருக்கிறது. கலை, இலக்கியப்படைப்புகள் வழியாக இதை காலத்தின் எந்த அழுத்தமும் இன்றி நம்மால் செய்துவிட முடியும். மிகவும் விழிப்போடும், கவனத்தோடும் தீவிரத்தோடும் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம், தமிழ் சினிமா, கலை வழியாகவேனும் இவற்றை மாற்றி அமைக்கலாம்.

இதையெல்லாம், இவ்வளவு நுட்பமாகப் பொது ஊடகங்களில் பதிவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை. இதுவெல்லாம் யாருக்கு முக்கியம். அன்றன்றைய பாடுகள், அந்தந்த நிமிடத்துய்ப்புகள் கழிந்தால் சரி. உண்மையில், இந்த வகையில் முகநூலுக்கும், முகநூலில் என் எழுத்தைத் தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். உண்மையாகவே!

 

https://thetimestamil.com/2018/04/13/ஆஷிஃபாவை-முன்வைத்து-குட/

  • கருத்துக்கள உறவுகள்

30706513_1928117940553204_54387242079805

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.