Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இவர்­கள் திருந்­தவே மாட்­டார்­களா?

Featured Replies

  • இவர்­கள் திருந்­தவே மாட்­டார்­களா?
 
 

இவர்­கள் திருந்­தவே மாட்­டார்­களா?

யாழ். பண்­ணைக் கடற்­கரை தற்­போது பல பொழுது போக்கு அம்­சங்­கள் நிறைந்த இட­மா­கப் பேணப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­க­ளி­லும் பார்க்க தற்­ச­ம­யம் இங்கு பொழு­தைக் கழிக்க வரும் மக்­கள் தொகை அதி­க­மா­கி­யுள்­ளது.

உடற்­ப­யிற்­சிக்கு வரு­ப­வர்­கள், சிறு­வர்­கள், பெண்­கள், வேறு இடங்­க­ளில் இருந்து வரும் சுற்­று­லாப் பய­ணி­கள் என குறித்த பகுதி மாலை வேளை­க­ளில் நிரம்பி வழி­கி­றது. சனி, ஞாயிறு தினங்­க­ளில் இங்கு பொழு­தைக் கழிக்க வரு­வோர் தொகை இன்­னும் அதி­கம்.

குதி­ரைச் சவாரி, பட­குச் சேவை என்பவையும் மிக­வும் சிறப்­பா­னவை. ஆனால் இங்கு வரும் சில இளம் ஜோடி­கள் நடந்து கொள்­ளும் விதம் சிறு­பிள்­ளை­ க­ளைக் கூட்­டிக்­கொண்டு பொழு­தைக் கழிக்­கச் செல்­லும் பெற்­றோரைக் கூச்­சப்­ப­ட­ வைக்­கின்­றது.

இங்கு வரும் ஜோடி­கள் தங்­க­ளை­யும் மறந்து, அரு­கில் நிற்­கும் பொது மக்­க­ளை­யும் பொருட்படுத்தாது, முகம் சுளிக்­கும் விதத்­தில் அநா­க­ரீ­க­மாக நடந்து கொள்­கி­றார்­கள். இதில் பெரும்­பா­லா­னோர் தனி­யார் வகுப்­புக்­க­ளுக்கு கற்­கச் செல்­லும் மாணவ மாண­வி­யரே.

இவர்­க­ளது பெற்­றோர் இவர்­களை படிக்க என்று அனுப்பி வைக்க, இவர்­கள் பெற்­றோ­ரை­யும் ஏமாற்றி கடை­சி­யில் தாங்­க­ளும் ஏமாற்­றப்­பட்டு நிற்­கும் நிலை­தான் மிஞ்­சிப் போகி­றது. இவர்­களை கட­வுள் தான் காப்­பாற்ற வேண்­டும் என்று கூறு­வ­தைத் தவிர எம்­மால் வேறென்ன செய்­ய­மு­டி­யும்?

ந. ரூபன், கொக்­கு­வில்

http://newuthayan.com/story/86103.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இங்கு வரும் ஜோடி­கள் தங்­க­ளை­யும் மறந்து, அரு­கில் நிற்­கும் பொது மக்­க­ளை­யும் பொருட்படுத்தாது, முகம் சுளிக்­கும் விதத்­தில் அநா­க­ரீ­க­மாக நடந்து கொள்­கி­றார்­கள். இதில் பெரும்­பா­லா­னோர் தனி­யார் வகுப்­புக்­க­ளுக்கு கற்­கச் செல்­லும் மாணவ மாண­வி­யரே.

படிக்கபோகும் பிள்ளைகள் அப்படி செய்வது தப்புத்தான்...ஆனால் அவர்களின் அநாகரிக நட‌வடிக்கைக்களை பார்க்காமல் மற்ற பக்கம் பார்த்துகொண்டு பெரியவ‌ர்களும் குழந்தைகளும் செல்லலாம்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் பிரச்சனை எல்லாம் நாடுகளிலும் இருக்குது. வயசுக் கோளாறு. அதுகளை கணக்கெடுக்காமல்.. போவது என்பதிலும் கண்டிப்பான அறிவுறுத்தல்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டி வரும் என்பது போன்ற அறிவுருத்தல்களும்.. இவர்களுக்கு வழங்கப்படுவது அவசியம். 

பொதுப் போக்குவரத்து.. பொது பொழுதுபோக்கிடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்பவர்கள் மீதான வழிகாட்டல்களை மாநகர சபைகள் செய்வது இலகு. எல்லாம் அவைட கைல தான் இருக்குது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பொது இடங்களில் நடந்துகொள்பவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாகவும் சூழல் நிலைமைகளையும் கலாச்சாரத்தையும் பேணி நடந்து கொள்ள பழக்கப்படாதவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சீர்கேடுகளை கண்டும் காணாதவராகவோ அல்லது மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதாகவோ இருப்பது அவர்களது துர் நடத்தையை  தூண்டிவிடுவதாகவே அமையும். அனைத்தையம் அந்தந்த இடங்களுக்குப் பொறுப்பான மாநகரசபை மாகாணசபை போன்ற  அரச நிறுவனங்கள் இலாக்கா அல்லது இன்னும் சொல்லப்போனால் அமைச்சுகள் தான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அது தண்டப்பணமாகவோ சிறைத்தண்டனையாகவோகூட இருக்கலாம். சிலவிடயங்களை கையாளும்போது நாங்கள் "கிட்லராக" இருந்தால்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பணி ஓய்வு பெற்ற என் ஆசிரியர் ஒருவர் அவரது தள்ளாத வயதில் பாலுணர்வு பற்றிச் சொன்னதை நினைவு கூர்கிறேன். " It is the way man has direct communion with God". இறைவனுக்குக் கூட பள்ளியறை என்ற ஒன்றை அமைத்துப் பார்த்தவன் மனிதன். அறையில் பகிர்வதை அம்பலத்தில் பகிர்வதால் அப்புனிதம் கெடும் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். மனிதன் கட்டமைத்த சமூகத்தில் உடையணிந்து செல்வதுதானே நாகரிகம்?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vanangaamudi said:

இப்படி பொது இடங்களில் நடந்துகொள்பவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாகவும் சூழல் நிலைமைகளையும் கலாச்சாரத்தையும் பேணி நடந்து கொள்ள பழக்கப்படாதவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சீர்கேடுகளை கண்டும் காணாதவராகவோ அல்லது மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதாகவோ இருப்பது அவர்களது துர் நடத்தையை  தூண்டிவிடுவதாகவே அமையும். அனைத்தையம் அந்தந்த இடங்களுக்குப் பொறுப்பான மாநகரசபை மாகாணசபை போன்ற  அரச நிறுவனங்கள் இலாக்கா அல்லது இன்னும் சொல்லப்போனால் அமைச்சுகள் தான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அது தண்டப்பணமாகவோ சிறைத்தண்டனையாகவோகூட இருக்கலாம். சிலவிடயங்களை கையாளும்போது நாங்கள் "கிட்லராக" இருந்தால்தான் முடியும்.

சாதாரண நகர சபை உழியர்கள் போய் நடவடிக்கை எடுக்க முடியாது, அநாகரிக நடவடிக்கையில் ஈடுபடுபவ்ர்கள் சண்டித்தனத்திற்கு தான் செல்வார்கள்.

பொலிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் .... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்காரங்கள் செய்யுறது முழுக்க திறம் எண்டு நினைச்சு எங்கடையளும்  அவங்களை மாதிரியே சாப்பிட்டு  உடையுடுத்தி கூடிக்குலாவ வெளிக்கிட்டுதுகள்.
எதை எங்கை எப்ப செய்யவேணுமெண்டது பரிசுகெட்டதுகளுக்கு எங்கை தெரியப்போகுது?

  • கருத்துக்கள உறவுகள்

பொழுதை போக்கும் தளத்தில் காதலர்கள் என்னத்தை போக்குவார்கள் இப்பவெல்லாம் தமிழ் மக்கள் கலை கலாச்சாரம்:11_blush: என்று சொல்லி திரிய தேவை இல்லை எங்க தம்பி ஆர்யா கூட வந்து போனார் ஓர் நிகழ்ச்சிக்கு இலங்கையில் அதுவும் பொழுது போக்குதானே  :11_blush::104_point_left:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.