Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல்.. மற்றவர்களை சொல்வானேன்.. நீங்களே இங்கே களத்தில் பல முறை சலிப்படைந்ததையும் புலிகளின் பலம் பெருமளவில் அழிக்கப் பட்டு விட்டது போலத் தான் தெரிகிறது என சொன்னதும் நினைவு வருகிறது.

  • Replies 275
  • Views 59.8k
  • Created
  • Last Reply

மன்னிக்கவும். தவறுதலாக எழுதி, அழித்துவிட்டேன்.

Edited by lisa01

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The use of air power had a secondary purpose for the Tamil Tigers. It was the final link in their claim that they were a state-in-waiting. They had an army, a navy, a police force and court system in their area, and now had an air force.

http://www.theage.com.au/news/world/air-ra...4761379257.html

இந்த கன்னித்தாக்குதல் வெற்றியோ இல்லையோ இதில் பலருக்கு பல செய்தி சொல்லப்படிருக்கிறது. இனி சிங்கள தேசமே தமிழனின் விமானத்தாக்குதல் பயத்தில் இருக்கும். படைமுகாங்கள், தளங்கள் எல்லாம் இனி உசார்ப்படுத்தப்படும் இதனால் படையினர் எதிர்காலத்தில் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகுவார்கள், கடல் மூல வினியோகங்களுக்கும் இனி இது சவாலாக அமையும். அரசமட்டத்தில் பெருந்தலைகள் எல்லாம் நித்திரையில்லாமல் பயப்பீதியில் நாட்களை கழிக்கும், மொத்தத்திலே சிங்களத்தின் இராணுவ முஸ்தீபுகளுக்கு கொடுத்த பேதி என்றே இதனை சொல்லலாம்.

உதாரணத்துக்கு கடல்புறாவாக இருந்த தமிழ் கடற்படை கடற்புலிகளாக மாற்றம் பெற்ற போது இது கைகூடாத காரியம் இது ஒரு அரசாலே தான் முடியும், புலிகளால் இது முடியாது என இலங்கையில் தென்றல் வானொலியிலும் சரி பிரித்தானியாவிலிருந்து தென்றல் மூலம் இலங்கையில் ஒலிபரப்பாகும் TBC தமிழ் துரோக வானொலியிலும் சரி எப்படி எல்லாம் மட்டம் தட்டினார்கள் ?ஆனால் இன்று கடற்புலிகளின் பலம்? முடியுமா சிங்கள கடற்படையால் இன்று சவால் விட? இது மாதிரித்தான் வான் புலிகளும். இன்று உலகமே இந்த தாக்குதலை உற்று நோக்குகிறார்கள். இதைவைத்து சர்வதேசத்தில் பிச்சையெடுக்க சிங்களவர்கள் தயாராகுகின்றனர் :P

விடுதலைப் புலிகள் நடாத்திய அதிகாலை விமான அதிரடி தாக்குதலை

அடுத்து உலகம் புராவும் புலிகளது போரிடும் மதி நுட்பமும் தந்திரமம்

பரப்புரையாக அந்த உலக முன்னணி செய்தி நிறுவனங்களே முக்கியத்துவம் கொடுத்து

செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

பெரும் கஸ்ரப் பட்டு புலிகளிற்க்கெதிராக தீவிர பொய் பரப்புரைகளை

நடாத்தி வந்த அரசு தற்போது இந்த அதிரடி செய்தி பரப்புரையால்

திணறி வருகிறது .

த''தமிழ் நெற்'தனது செய்தியில் மிக விளவாரியாக அதன் ஆரம்ப வளர்ச்சி தொட்டு

தற்போது நடந்தேறிய தாக்குதல் வரை காட்சியோடு வெளியிட்டுள்ளது.

அதையடுத்து நிதர்சனம் தந்த காட்சி பதிவுகள் பீ.பீ.சி. தொலைகாட்சியல்

அந்த நிழல் படங்கள் இட்டு தலைப்பு செய்திகளாக தற்போது வரை

தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகலாவிய தமிழ் மக்கள் மனங்களில் பாரிய வியப்பையும் சந்தோசத்தையும் அளித்தள்ளது.

உலக விமன நிறுவனங்கள் தனது வான் வளி பயணங்களை நிறுத்துவதாக கூறியுள்ளதென்பது

பொருளாதார ரீதியில் மகிந்தாவிற்கு விழுந்த பெரிய அடி.

இந்த இலகு ரக விமானங்கள் எவ்வாறு வந்து தாக்கிவிட்டு திருப்பி சென்றதென்பது

உலக ஆய்வாளர்களை வியப்பில் ஆழத்தியுள்ளது..

தங்களிற்கு இழப்பு இல்லையெனின் நிச்சயமாக பத்திரிகையாளர்களை அழைத்து

அந்த விமானப் படை தளத்தை காட்டியிருப்பார்கள் ஆனால் இதுவரை

அதை செய்யவில்லை.

எனவே இதில் இருந்து அனுமாணிக்க முடிகிறது அங்கு பாரிய

சேதம் உண்டாகியிருப்பதை. நள்ளிரவு தொடக்கம் தற்போது வரை பீ.பீ.சி. தனது

செய்திகளில் தொடராய் கூறி வருகிறது.

கரிகாலன் படையணிகளின் வளர்ச்சியும் அடுத்த கட்ட போரியல் பரிமாணமும்

அரச படை விழிகளிற்குள் விரலை விட்டு ஆட்டியுள்ளது. அடி மடியில் நெருப்பை கட்டி கொண்டு

தற்போது அந்த படைகள் உலாவ வேண்டிய நிர்ப்பந்தத்தை திணித்து விட்டுள்ளது

இந்த தாக்குதல்.

ஏக காலத்தில் புலிகள் மற்றுமொரு தாக்குதலை தொடுக்கலாம் என அரச கிலி கொண்டிருப்பதாக

தெரியவருகிறது. எது எப்படியோ புலிகளது பொறுமை கடைசி ஈழ என்ற முடிவிற்குள்

அவர்களை நகர தள்ளியுள்ளதை இந்த தாக்குதல் ஊடாக சிங்கள தேசத்திற்கு கூறிவிட்டார்கள்.

இனி வரும் கள முனை செய்திகள் இரணைமடுவை நொக்கி வான் படைகள் தாக்குதலை

நடத்தலாமென ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இலகு ரக விமானங்கள் சிறு மைதானத்தில் கூட இறங்க வள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்க்குடிலில் இணைக்கப்பட்டுள்ள செய்தி

வான் புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பான உணர்வுப் பதிவாக அமைந்துள்ளது. கேட்பதற்கு இங்கே அழுத்தவும்!

அண்ணா அண்ணா திரையன் அண்ணா இராணுவம் உங்கட கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி றொம்ப நாள்ஆச்சுனா....நீங்களும் அடிக்கடி இந்த டயலக்க தான் அடிக்கிறிங்க..

யாழ் இராணூவபேச்சாளர் சுண்டல் அந்த அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளார்

:):unsure::unsure:

உலகம் மட்டுமல்ல இன்று தெற்கும் மூக்கில் விரல் வைக்க ஆரம்பித்து விட்டன. அடாவடித் தனமான அரசியலால் வாய் மூடி மெளனியாக இருந்த தெற்கின் சிலரும் சந்தோஷமாக குசு குசுப்பதை கேட்கக் கூடியதாக உள்ளது.

ஈழத்திலிருந்து

ஜானா

TEAF Tamil Eelam Air Force / தமிழீழ விமானப்படை

VEDEO RELEASE AT YOUTUBE.COM

Link:

வான் புலிகளின் தாக்குதல் அடுத்து என்ன ?

அலைகள் சிறீலங்காவின் இன்றைய நிலை கேள்வி பதில் ஆய்வு 26.03.07 திங்கள் மாலை.

வான் புலிகளின் தாக்குதல் அடுத்து என்ன ?

போலீஸ் ஸ்டேசனை அடிக்க முடியாத புலிகள் சிறீலங்கா விமானத்தளத்தில் !

புத்த பாஞ்சாலைகளுக்கு இனி மிசைல்ஸ் பாதுகாப்பு போடப்படுமா?

சிங்கள மக்கள் பங்கர் தோண்டும் நிலையில்.. !

இன்று நடாத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலித் தாக்குதல் உலக அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. விமானப்படைத் தாக்குதலை முதல் தடவையாக விடுதலைப் புலிகள உத்தியோக பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வளவல்ல தாக்குதல் மேலும் தொருடம் என்றும் அறிவித்துள்ளார் இராசையா இளந்திரையன். இந்தத் தாக்குதல் இராணுவ சமநிலையில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன ? இதுதான் இப்போது உருவாகியுள்ள புதிய கேள்வியாகும். இது குறித்த சிந்தனைகள் கேள்வி பதில் வடிவில் இங்கே தரப்படுகிறது.

கேள்வி - ஒரு போலீஸ் நிலையத்தையும் அடிக்க முடியாதளவிற்கு புலிகள் வலுக்குன்றி விட்டதாக சிறீலங்கா பாராளுமன்றத்தில் கொக்கரித்த புத்தபிக்குகள் இனி என்ன செய்வார்கள் ?

பதில் - இனி புத்த பாஞ்சாலைகளுக்கு மிசைல்ஸ் பாதுகாப்பு வழங்கும்படி ஒப்பாரி வைக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகள் மரபு ரீதியான ஓயாத அலைகள் மூன்று போன்ற தாக்குதலுக்கு தயாராவார்கள் என்று திட்டம் தீட்டி அதற்கமைவாக அவர்களை போருக்கு அழைக்க படாதபாடுபட்டது அரசு. புலிகளின் பலம் போலீஸ் நிலையங்களை தாக்கும் அளவில் இருப்பதாக மதிப்பிடும் அளவுதான் பிக்குகளின் மூளைகளின் அளவாகும்.

கேள்வி - சிறீலங்கா அரசு விடுதலைப் புலிகளின் விமானங்களை விமான எதிர்ப்புப் பீரங்கிகளால் தடுக்க விரைந்து ஏற்பாடு செய்யும் என்று கூறப்படுகிறது. அவ்வாறான நிலையில் புலிகளால் என்ன செய்ய முடியும் ?

பதில் - விமான எதிர்ப்பு ஏவுகணையை நாடு முழுவதும் போட முடியாது. தமிழர் தாயகத்தில் விமானக் குண்டு வீச்சு இன்று நடைபெற்றால் நாளை சிங்களப் பகுதியில் புலிகளின் விமானம் தாக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. அரசு தமிழ் பொதுமக்களின் மீது இனியொரு விமானத் தாக்குதலை நடாத்த கடுமையாக யோசிக்கும். தமிழ் பொது மக்கள் வாழும் இடத்தை விட சிங்கள பொது மக்கள் வாழும் இடம் அதிகம் என்பது அரசு சிந்திக்க வேண்டிய விடயம். சிங்கள சமுதாயமா தமிழ் சமுதாயமா விமானக் குண்டு வீச்சுக்களை சமாளிக்கும் ஆற்றல் மிக்கது என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் சிங்கள சமுதாயம் ஓர் இரவில் சந்தித்த ஆபத்தான நிலையை எளிதாக உணரலாம்.

கேள்வி - விமான எதிர்ப்புப் பீரங்கிகளை போட முடியாத சிங்களப் பகுதிகளை அரசு இனி எவ்வாறு காப்பது ?

பதில் - சிங்கள மக்களும் இனி பங்கர் கிண்ட வேண்டிய நிலை வந்துள்ளது. பங்கர் கிண்டும் வாழ்வுக்குள் சிங்கள மக்கள் போனால் ஜே.வி.பியினதும், புத்தபிக்குகளினதும் வீறாப்புப் பேச்சுக்களை சிங்கள பொதுசனம் ஏற்காத நிலை வரும். சென்ற வாரம் எமது கேள்வி பதிலில் போர் ஏற்பட்டால் சிங்கள மக்களுக்கே தமிழ் மக்களைவிட பெரிய ஆபத்து வருமென்று எழுதியிருந்தோம்.

கேள்வி - விமானப்படையின் வரவு கடற்படைக்கு என்ன தாக்கம் ஏற்படுத்தும் ?

பதில் - சிறீலங்காவின் ஒவ்வொரு டோரா படகிற்கும் இனி விமான எதிர்ப்பு ஏவுகணை பூட்ட வேண்டி வரும். அது இல்லாமல் டோரா படகுகளை ஓட முடியாது. டோராப் படகு அனைத்திற்கும் விமான எதிர்ப்பு பீரங்கி பொருத்துவதென்றால் சிறீலங்கா அரசுக்கு ஜப்பான் தனது பணம் முழுவதையும் கொடுக்க வேண்டி வரும். ஆக பாக்குநீரிணை சிங்களக் கடற்படையற்ற வெற்றிடமாக வேண்டிய அபாய நிலை உள்ளது. வெறும் சிறீலங்கா இராணுவப் படைகளை வைத்து ஒரு போரை முன்னரைப் போல நடாத்த முடியாதளவிற்கு நிலமை சட்டெனத் திரும்பியுள்ளது.

கேள்வி - இந்த நிலையில் சர்வதேச சமுதாயம் என்ன சொல்லும் ?

பதில் - சர்வதேச சமுதாயத்தில் நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று சுப. தமிழ்செல்வன் சென்ற வாரம் சொன்னது ஏன் என்பதை இப்போது சிங்கள அரசும், சர்தேச அரசுகளும் அழகாக உணர்ந்திருக்கும். சமீபத்தய மட்டக்களப்பு நிகழ்வுகள், படுகொலைகளை எல்லாம் பார்த்து மெனமாக இருந்த சர்வதேச சமுதாயம் வாய் திறக்காமல் இருப்பதற்குரிய சூழலை உருவாக்குவதே புலிகளின் கடுமையான மெனத்திற்கு காரணம் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

கேள்வி - இப்போது ஜனாதிபதி அவசரக் கூட்டம் நடாத்துகிறார். அங்கே என்ன திட்டம் தீட்டுவார்கள் ?

பதில் - புலிகளை விட சிங்கள மக்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்துத்தான் ஜனாதிபதி பெரும் கவலையடைய வாய்ப்பு இருக்கிறது. விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதங்கள் மிகப்பெரியவை. அங்கு பத்திரிகையாளர் அனுமதிக்கப்படாததில் இருப்பதிலிருந்தே இதை உணர முடியும். புலிகளின் பழைய முறையிலான தாக்குதல்களை அடக்கவே பணம் போதாத நிலையில் இருந்த அரசு, புதிய விமானப் போருக்கு எங்கிருந்து பணம் தேடுவது? வெளிநாட்டவரிடம் நாட்டை விற்க வேண்டிய கடுமையான பொருளாதார அவலம் வரும். கடும் பண வீக்கம், பொருளாதாரத் திண்டாட்டம் போன்றன இப்போதைய விட மூன்று நான்கு மடங்குகளாக அதிகரிக்கும். நாட்டின் உல்லாசப் பயணம் வீழ்ச்சியடையும், நாடு தாங்க முடியாத அவலத்தில் சிக்குண்டு போகும். அதனால்தான் சில மாதங்களில் அரசைக் கலைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்று ரணில் கூறினார் என்பதை உணர வேண்டும்.

கேள்வி - புலிகளின் அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் ?

பதில் - சிறீலங்கா அரசு திட்டமிட்டு காத்திருக்கும் ஒரு மரபு ரீதியான போரை புலிகள் தொடங்க மாட்டார்கள். முற்றிலும் புதிய வியூகம் ஒன்றையே முன்னெடுப்பார்கள். அது மிகவும் புதிதாக இருக்கும் என்பதையே உணர முடிகிறது. ஏற்கெனவே சிறீலங்காப் படைகள் எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டாலும் எதோ இன்று தாண்டியது போல, சிறீலங்காப் படைகள் யுத்த நிறுத்த எல்லைக் கோட்டை தாண்டிவிட்டனர் என்று இராசையா இளந்திரையன் சொன்னது விளையாட்டுக்கு அல்ல. அவர் கருத்து அடுத்த போர் எல்லைகளைப் பிடிக்கும் போர் அல்ல என்ற செய்தியையே சொல்லியுள்ளது. தெற்கு போர்க்களமாகும் என்று சுப. தமிழ்செல்வன் சொன்னதும் கவனிக்கத் தக்கது. அடுத்த கட்டப் போருக்காக மகிந்த செலவிட்ட அவ்வளவு பணமும் நாசமாகப் போக, சிங்கள அரசு புதிதாக பணம் தேட வேண்டிய போர்ச் சூழ்நிலை வரப்போகிறது. இதைச் சமாளிக்க வேறு நாடுகளின் காலில் விழவேண்டிய அவலம் வந்தாலும் வரலாம். அதுதான் போர் வந்தால் தமிழ் மக்களுக்கு ஆபத்து, சிங்கள மக்களுக்கு அதைவிட பெரிய ஆபத்து, நாட்டுக்கு அதைவிட பேராபத்து என்று தெளிவாக சென்ற வாரமே எழுதியிருந்தோம்.

http://www.alaikal.com/index.php?option=co...8&Itemid=35

ஹி ஹி, இப்ப கொழும்பில் அவசர, அவசரமாக பங்கருகள் கிண்டுப்படுவதாய் கேள்வி!

சிங்கிள குண்டர்கள் நன்னாத்தான் கதி கலங்கிப் போய் இருக்கிறீனம்!

நல்ல சொக் Treatment தான் இன்று அதிகாலை கொடுக்கப்பட்டுள்ளது!

:):unsure: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்...

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் இத்தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன

இது மாதிரி சிந்திக்க பேச சிங்களத்தாலேயே முடியும்

இது தான் சிங்களம்

தமிழனே இன்னுமா துதிபாடுகின்றாய்

இவன் திருந்த வாய்ப்புண்டா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகுறித்து அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கையில்...

கட்டுநாயக்க விமானத் தளம் மீதான தாக்குதலைக் கண்டித்து சிறீலங்கா அரச திணைக்களம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது ஒரு கோளைத் தனமான தாக்குதல் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளும் இத்தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன

இது மாதிரி சிந்திக்க பேச சிங்களத்தாலேயே முடியும்

இது தான் சிங்களம்

தமிழனே இன்னுமா துதிபாடுகின்றாய்

இவன் திருந்த வாய்ப்புண்டா???<<<

நாங்கள் தான் ஐயா, திருத்த வேண்டும்!. " அடி உதவுவது போல் அண்ணன்/ தம்பி உதவமாட்டினம் என்று ஒரு பழமொழி இருக்கல்லோ !அதைத்தான் செயலில் காட்டப்போகினம் எங்கட அண்ணைமார் உந்த மோட்டுச் சிங்களவனுக்கு!

ஹி ஹி, இப்ப கொழும்பில் அவசர, அவசரமாக பங்கருகள் கிண்டுப்படுவதாய் கேள்வி!

சிங்கிள குண்டர்கள் நன்னாத்தான் கதி கலங்கிப் போய் இருக்கிறீனம்!

நல்ல சொக் Treatment தான் இன்று அதிகாலை கொடுக்கப்பட்டுள்ளது!

:):unsure: :unsure:

சிங்களத்தின் மக்கள் மட்டும் இல்லை அரச படை, அரச உயர் பதவிகள் வகிப்பவர்கள், அரஜனாதிபதிகளின் கூட்டம் எல்லாம் வேண்டுமாயின் எமது தமிழ் மக்ளிடம் கேட்டாள் பங்கர்களை எப்படி பாதுகாப்பாய் அமைப்பது என்று திட்டம் சரியாய் தருவார்கள் அல்லத செத்து தொலையுங்கோ நீங்களும் தமிழ் மக்களை ( அப்பாவிகளை கொண்ற நீங்கள் தானே) ஆனா உங்களின் இடத்தில் பனை மரங்கள் இல்லாததால் கஸ்டம் தான் இருப்பினும் பாக்கு மரத்தை வெட்டிப்பாவியுங்்கோ!

நான் வாரன் உங்களுக்கு பங்கர் வெட்டி அதற்க்குள்ளும் குண்டுகள் வைக்க

நாதன்

மகிந்தா & பிறதர்ஸ் பதுங்கு குழி வெட்ட வேண்டிய அவசியமே இல்லை. பாதாள கோஸ்டிக் கும்பலுடன் பதுங்கிக் கொள்ளலாம்.

மகிந்தா வெட்டிய பங்கர் என்னவாம்....பல மில்லியனில கட்டினவர்...

பாவம்..ஜயா..இப்பா...

எல்லோரும் ஓடிப் போய் புலிகளின் குரல கேளுங்கோ..மக்கள் சந்தோச பேட்டி கொடுத்திருக்கினம்...

தலைவருக்கு நன்றியும் பாராட்டும் சொல்ல ஒரு தலைப்ப தொடங்கி அவருக்கு நன்றி சொல்வோமாக...

வெட்டிப் பேச்சுக்களை விட்டுவிட்டு புலிகளின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம் எமக்கான விடுதலையை விரைவாக்கலாம். புலிகளின் கரங்களைப் பலப்படுத்த நாங்கள் இங்கு என்ன செய்ய வேணும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைச் செய்யுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்ட குண்டை பராளுமன்றம் மீது போட்டிருக்க வேணும்... அல்லது மகிந்த வீட்டு வாசலிலை கொண்டுபோய் போட்டிருக்கவேணும்..

இரவோட இரவா அரசியில் இருந்தே ஓடியிருப்பான்..

untitled-17.jpg

இன்றும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புகை தெரீவது போல google earth இல் தெரீகிறது ஆனால் வெள்ளையாக தெரிவது முகில் கூட்டம் கறுப்பாக தெரிவது அவ் முகில் கூட்டத்தின் நிழல் வடிவாக உற்று கவனித்தீர்கள் என்றால் கறுப்பாக தெரியும் இடத்துக்கும் வெள்ளையாக தெரியும் இடத்துக்கும் ஒற்றுமை தெரியும்.இதனை நான் உறுதியாக கூறுகின்றேன் ஏன் எனின் கடந்த வாரம் நான் கட்டுநாயக்கா விமான நிலையத்தை பார்த்தேன் இப்படியான தோற்றத்திலேயே இருந்தது.புலிகளின் தாக்குதல் வெற்றிகளையும் தாக்குதல் சாதனையையும் இப்படி மலின பிரச்சாரத்தின் மூலம் கொச்சைப்படுத்தப்படுவது கண்டிக்க்க தக்கது.

ஐயோ, அப்படியா விசயம்?

நான் அந்த வெள்ளை, கறுப்பு நிறங்களை பார்த்து, தேவலோகத்தில் உள்ள பிரம்மா, விட்ணு, அக்கினி முதலியோர் சிறீ லங்காவின் விமானத்தளம் மீது கோபங்கொண்டு கக்கூசு செய்து விட்டதாயல்லவா நினைத்து விட்டேன்!

தகவலுக்கு நன்றி!

:lol::icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sky செய்தியில் பிரசுருரிக்கப்பட்ட செய்மதி மூலப்படங்களின் மூன்றிடங்களில் இருந்து பெரும் புகைமண்டலம் கிழம்புவது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அப்படிப் புகைக்க என்ன காரணமாக இருந்திருக்கும்..??! தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சி என் என் சொல்கிறது..!

அது கூகுள் ஏர்த் படமெல்லவா.. மூண்டு இடங்களில இருந்து கிளம்புவது புகையா.. அது மேகம்..

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ஈழப்பிரியன் நான் புலிகள் அவர்களுடைய பிரதேசங்களை இழக்கும் போது ஆதங்கப்பட்டு இருக்கின்றேனே தவிர இப்படியான சாதனைகள் நிலைநாட்டப்டுகின்றபோது பேரிணவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றபோது அதில் குறைகள் கண்டு பிடிப்பவன் அல்ல..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ வான்படையினரின் தாக்குதல்: இரு விசாரணைக்குழுக்கள்

ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 மார்ச் 2007இ 04:41 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ

சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்டைத் தளத்தின் மீது நேற்று திங்கட்கிழமை தமிழீழ வான்படையினர் நடத்திய தாக்குதல்களை விசாரணை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இரு உயர்மட்ட விசாரணைக்குழுக்களை அமைத்திருக்கின்றது.

ஏயர் வைஸ் மார்சல் பி..பி. பிரேமச்சந்திரா தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய விசாரணைக்குழுவை சிறிலங்காவின் விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக்க நியமித்துள்ளதாகவும்இ அதேவேளை குற்றப்புலனாய்வுத் துறையும் தமது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறுப் கப்டன் அஜந்தா சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விசாரணைகள் தொடர்பாக மேலதிக தகவல்களை விசாரணைகள் முடிவடையும் வரை வெளியிடுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இத்தாக்குதலை கண்டனம் செய்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம்இ தமக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகள் விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதாகவும்இ படையினரை பலவீனப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் நலன்களுக்கு முன்பாக அரசியல் அபிலாசைகள் பெரிதல்ல. எனவே எல்லா மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழீழ வான் படையினருக்கு

வாழ்த்துக்கள்

வழி நடத்தும் தலைவருக்கு

நன்றிகள்.

11 பக்கத்தையும் ஆறுதலா சந்தோசமாக வாசிச்சன்.

சந்தோசத்தை விபரிக்க வார்த்தைகள் இல்லை. உணர்ந்தவர்கழுக்கு புரியும்.

விடயம் கேள்விப்பட்ட உடன் எனக்கு ஞாபகம் வந்தது யாழ் களத்தில் உலாவிய சில புல்லுருவிகளின் சில கேள்விகளும் அவர்களின் வார்த்தைகளுமே.

தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு வேறானதாகத்தான் இருக்கும் அது நிறைவேறாதுபோவது தோல்வி இல்லை.

இலக்கை (நோக்கம்) அடைவதுதான் வெற்றி.

உங்களுடைய நோக்கத்தை அல்ல அவர்களுடைய நோக்கத்தை .(இதைவிட வடிவா எழுத தெரியாது)

தவறான வழி நடத்தல்களை செய்யாதீர்

எவ்வளவோ மக்கள் இதைப் பார்வையிடுகிநார்கள். அவர்களை குளப்பாதீர்கள். இயல்பாக எல்லோரும்

தெளிவாக இருப்பதில்லை தெளிவை கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

நீஙகளும் குளம்பி மற்றவரையும் குளப்பாதீர்(எனது மெழியில் தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளவும்)

இதுவரை காணாதவர்களை கண்ட மகிழ்ச்சியோடும்

இதுவரை வந்த சிலர் காணாமல் போனதற்கான காரணத்திற்கான கேள்வியோடும்

கருணை_நிழல்

(நேற்று வரமுடியாமல் போனது பெரும் கவலை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.