Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்பிழுத்த குரங்கு வாலை காக்குமா? தலையை காக்குமா?

Featured Replies

இன்று ராம நவமி, நான் சிவன் கோவிலுக்கு செல்லும் போது பெருமாள் கோவில் வழியாக சென்றேன். பெருமாள் கோவிலில் நல்ல கூட்டம் அதை பர்த்துக்கொண்டே சிவன் கோவில் சென்று தரிசனம் முடித்து திறும்பும் போது சில சிவாச்சாரியார்கள் பேசுவது காதில் விழுந்தது. ஒருவர் சொன்னார் சித்திரை நவமி திதியில் இராமன் பிறந்தர் என்று மற்றொறுவர் கூறினார் பங்குனி நவமியில் இராமர் பிறந்தார் என்று. நம்மில் சிலருக்கு இராமாயணம் உண்மையா கதையா என்று இன்றும் என்பதிலேயே சர்ச்சை. அது ஒரு புறம் கிடக்கட்டும். கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி சீதையை கண்டுபிடிக்க அனுமான் இலங்கைக்கு வந்து தேடிகொண்டிருக்கும் போது இந்திரஜித்தால் கட்டபட்டு இராவணன் முன் நிறுத்தப்பட்டான். இராவணன் அனுமனுக்கு அமர ஆசனம் அளிக்க வில்லை என்ன தான் கட்ட பட்டிருந்தாலும் அனுமன் தூதுவன் அல்லவா அவன் இராவணனிடத்தில் மரியாதையை எதிபார்த்தான் அவனுக்கு கிடைக்க வில்லை உடனே அனுமன் தன் வாலை நீட்டி அதையே ஆசனமாக்கி இராவணுடன் பேசி எச்சரித்தான். கோபமுற்ற இராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்து துரத்திவிட ஆணையிடான். அனுமன் அந்த தீயை பல இடங்களில் பற்ற வைத்ததாக கதை போகிறது...............எனவே குறங்கிற்க்கு வாலில் பலம் என்று சொல்லாடலும் நம்மில் உண்டு.

இதை வைத்துதான் மகிந்த என்னும் குறங்கு தன் வாலின் பலத்தின் மீது கொண்ட நம்பிக்கையால். சம்பூரிலும், வாகரையிலும் வாலை விட்டு பலத்தை காமித்து விட்டு சமாதன பேச்சென்ற ஆப்பை அசைத்து பிடுங்கிவிட்டது ஆனால் வால் மாட்டி கொண்டது. இப்ப கையிலுள்ள சமாதன ஆப்பை தூர வீசவும் முடியவில்லை ஆப்பை அடித்து வாலை எடுக்கவும் இடமில்லை.

அன்று இராவணன் சொய்த தவறை நம்மவர்கள் திருத்தி வாலில் நெருப்பு வைக்காமல் வாலை பிடித்து வைத்தது தான் இராஜ தந்திரம். அதனால் தான் கட்டுநாயக விமான தளத்தின் மீது கொண்ட வெற்றி பல மடங்கானது. சில வெற்றிகள் கொடுக்கும் பயணை விட சில தோல்விகள் மிகுந்த பலனை கொடுக்கும். சம்பூரையும், வாகரையும் விட்டு விலகாதவரை இன்று தலையில் விழுந்த அடி நாளை உடல் முழுவதும் விழும் இதைதான் "இப்படியான தாக்குதல்கள் தொடரும் என்ற இராசையா இளந்திரையனின் வார்தைகள் சொல்லாமல் சொல்கிறது".

இன்று சிங்களத்தின் பக்கம் உள்ள ஒரே வழி சரியான தீர்வை முன்வைத்து வாலை அருவை சிகிச்சையின் மூலம் வெட்டி விட்டு உடலை காப்பதா? அல்லது வாலை காக்க முயன்று உடல் முழுவதும் சூடு படுவதா என்பது தான். சிங்களவர்களின் செருக்கு அழிந்து சிந்தை தெளிந்திருந்தாள் தனி ஈழமே தீர்வு என்ற முடிவுக்கு வந்து அருவை சிகிச்சைக்கு சம்மதிப்பார்கள். மாறாக முரண்டு பிடித்தால் உடல் முழுவதும் சூடுபட்டு நடை பிணமாக இருப்பார்கள். யார் கண்டது நாளை ஈழத்திடமே இலங்கை கையேந்தினாலும் ஆச்சரியபடுவதற்க்கு ஒன்றுமில்லை. நம்மவர்கள் வீரத்தில் மட்டுமா ஈகையிலும் சிறந்தவர்கள் என்பதால் அதுவும் நடக்கும்.

இன்று நம்மவர்கள் செய்ய வேண்டியதெல்லாம். வேண்டாத விமர்சனங்களை விலக்கி வேண்டியதை செய்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே, தலைகுனிவை ஏற்படுத்தியர் மத்தில் தமிழன் தலை நிமிர செய்த தன்னிகரில்லா தலைவன் வெட்டு கொடுக்க வேண்டியதை வெட்டு கொடுத்து வெற்றியை ஈட்டிக் கொடுப்பான். அந்த தன்னிகரில்லா தலைவனை தலை தாழ்த்தி வணங்கி வாழ்த்துவோம்.

சுவையான விளக்கங்கள், விமர்சனங்கள்! தொடர்ந்து தாருங்கள்!

தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் இவ்வாறு எழுதுவது மகிழ்ச்சியைத் தருகின்றது!

நன்றிகள் பல!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தலை நிமிர செய்த தன்னிகரில்லா தலைவன் வெட்டு கொடுக்க வேண்டியதை வெட்டு கொடுத்து வெற்றியை ஈட்டிக் கொடுப்பான். அந்த தன்னிகரில்லா தலைவனை தலை தாழ்த்தி வணங்கி வாழ்த்துவோம்.

:lol:

உதாரணங்களுடன் சிறந்த கருத்துக்கள். நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆப்பிழுத்த குரங்குபோல" என்ற உவமை எனக்குத் தெரியும் தான். அதற்குள் இத்தனை விளக்கங்கள் இருக்கிறது என்று தெரியவுமில்லை. சிந்திக்கவுமில்லை.

சில வெற்றிகள் கொடுக்கும் பயணை விட சில தோல்விகள் மிகுந்த பலனை கொடுக்கும். சம்பூரையும், வாகரையும் விட்டு விலகாதவரை இன்று தலையில் விழுந்த அடி நாளை உடல் முழுவதும் விழும் இதைதான் "இப்படியான தாக்குதல்கள் தொடரும் என்ற இராசையா இளந்திரையனின் வார்தைகள் சொல்லாமல் சொல்கிறது".

நம்மவர் பலருக்கே இந்த விளக்கம் இருக்கிறதா என்பது சந்தேகமே.

மேலும், நான் சிறுவயதினனாக இருக்கும் போது எனக்குப் படிக்கக் கிடைத்த புத்தகங்கள் எல்லாம் பெரும்பாலும் இந்திய எழுத்தாளர்களதே. இந்த வகையில், நான் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளையும், ஏராளமான சிறுகதைகளையும் கல்கி (பொன்னியின் செல்வன்), சாண்டில்யன் போன்றோரது வரலாற்று நாவல்களையும், இன்னும் சுஜாதா, பாலகுமாரன், லக்ஷ்மி், சிவசங்கரி போன்றோரது ஏராளமான நாவல்களையும் மற்றும் வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் போன்றவர்களின் கவிதைகளையும் படித்துள்ளேன். இதை விட ஒவ்வொரு நாளும் கேட்பது இந்திய வானொலியாகும் (விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, மற்றும் சென்னை வானொலி போன்ற). அன்று எனக்கு, ஜன கண மண வும் வந்தே மாதரமும் தான் தெரிந்திருந்திருந்தது (இந்த வானொலிகளூடாக), இலங்கை தேசிய கீதம் இன்றும் எனக்கு முழுவதுமாக தெரியாது. இந்தவகையில் ஒரு இலங்கையன் என்ற உணர்வை விட இந்தியன் என்ற உணர்வே என்னிடம் அதிகம் இருந்தது (அந்தக் காலத்தில் தமிழ் தேசிய உணர்வு இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க வில்லை). மேலும் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்கள் காரணமாக இலங்கை மீது வெறுப்பும் இந்தியா மீது, குறிப்பாக தமிழ் நாட்டின்மீது, இந்த உணர்வுபூர்வமான அன்பும் தானாகவே தொற்றிக் கொண்டது.

ஆனால், ஒரு இந்திய தமிழனுக்கும் அதே போல இந்தளவு ஈடுபாடும் (தமிழ் தேசிய) உணர்வும் இருக்க முடியும் என்பதை உங்கள் வரிகள் சொல்கின்றன.

இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதோ?

இலகுவாக அனைவருக்கும் புரியக்கூடியவகையில் எழுதியிருக்கிறீர்கள் சிவராயா.

தமிழகத்து உறவான உங்களை பெருமையுடன் நோக்கின்றோம்.

ஈழத்தின் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் தூங்கள் வைத்திருக்கும் அன்புக்கும் மதிப்புக்கும் நன்றி சிவராஜ் தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும்

தொப்பிள் கொடி உறவாகிய உங்களுக்கு இருக்கும் இந்த தமிழ் உணர்வு--எங்கடையள் சிலருக்கு இல்லை என்பதை நினைக்கும் போதுதான் கவலையாக இருக்கு.

உங்களுடைய உணர்வுக்கு என்றும் தலை வணங்குகிறோம்.பணி தொடர வழ்த்துக்கள் :blink::blink::blink:

சிவராஜா,

உங்கள் கருத்துகள் வார்த்தைக்கு வார்த்தை வரிக்கு வரி மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஈழத்தவர்கள் மேல் வற்றாத பாசம் வைத்திருக்கும் உங்களைப் போன்ற தமிழக உறவுகள் தான் எமது தாயவேட்கைக்கு என்றென்றும் பற்றுக்கோடு என்றால் அது மிகையாகாது.

நான் பிறந்த நாட்டின் தேசியக்கொடியை கையில் என்றுமே எடுத்ததில்லை. அதன் தேசியகீதத்தை ஒருபோதும் பாடியதுமில்லை. புலிக்கொடியைப் பிடித்து தாம் வாழும் நாட்டில் ஊர்வலம் போகும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களில் நானும் ஒருவனாயிருப்பதில் தற்போதைக்கு பெருமையடைகிறேன். விரைவில் சுதந்திர தமிழீழ தேசியக் கொடியை எமது கைகளில் தாங்குவோமென உறுதியெடுத்துக் கொள்வோம். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைக் கேட்க ஆவலாயிருக்கிறேன்.

நகைச்சுவைக்காக பின்வரும் வரிகளை எழுதுகிறேன். குறையிருந்தால் மன்னிக்கவும்:

ஆப்பிழுத்த குரங்கு வாலை காக்குமா? தலையை காக்குமா? என்று ரொம்ப சாதாரணமாகக் கேட்டுவிட்டீர்களே.

அந்தக் குரங்கு ஆணா பெண்ணா என்று நீங்கள் சொல்லவேயில்லையே.

Edited by Norwegian

அருமையான விமர்சனம் நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு:சிவராஜா அவர்களே,

மிக்க நன்றி!! ராம நவமி அன்று 'அனுமனைக் குறை சொல்லலாமா தாங்கள்?! அதில் ஒரு சின்ன வருத்தம் அடியேன் ஆஞ்சநேய பக்தை. நீங்கள் சொன்ன விளக்கங்கள் அருமை. ஒரு வேளை இலங்கை ஈழத்திடம் கையேந்தலாம் என்று சொன்னீர்களே! அது நிகழப்போகின்ற நிதர்சனம். ! இலங்கைக்கு கையேந்தித்தான் பழக்கம்!.

உங்களைப்போன்ற தெளிவுபெற்ற விளக்கம் கொண்டவர்கள் எம் போராட்டங்களை குழம்பிப் போயிருக்கின்றோருக்குத் தெளிவுபடுத்துங்கள். தமிழீழம் என்றுமே தமிழகத்தை மறப்பதில்லை. !.

நன்றிகள் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சிவராஜா. உங்களுக்கு யாழ் இணையத்தளம் எவ்வாறு தெரிய வந்தது என்று அறிய ஆவல்?

  • தொடங்கியவர்

திரு:சிவராஜா அவர்களே,

மிக்க நன்றி!! ராம நவமி அன்று 'அனுமனைக் குறை சொல்லலாமா தாங்கள்?! அதில் ஒரு சின்ன வருத்தம் அடியேன் ஆஞ்சநேய பக்தை.

மன்னிக்கவும், அனுமனை குறை கூறுவது எனது நோக்கமல்ல.

நன்றிகள் சிவராஜா. உங்களுக்கு யாழ் இணையத்தளம் எவ்வாறு தெரிய வந்தது என்று அறிய ஆவல்?

தேடு இயந்திர உதவியால்.

----------------------

அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.