Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்திற்க்கு பிறகு நல்லதொரு கருத்தாடலில் பங்கு பெற்றியது மகிழ்ச்சி.?

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2018 at 5:58 AM, Eppothum Thamizhan said:

'

விவசாயிகள் மழை நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளதால் மூன்று  போகமும் விவசாயம்  செய்ய  நீராதாரம்  இல்லையென்பதை பற்றி நாங்கள் கதைத்தால்

தண்ணி இல்லா நாட்டில் எவ்வளவு காலத்துக்கு தான் விவசாயத்தை நம்பி இவர்கள் வாழ போகிறார்கள்?

இப்படி தண்ணி இல்லாமல் பல நாடுகளே இருக்கின்றன, ஆனால் அங்கு உள்ள மக்கள் புத்திசாலிகள் - தண்ணி இல்லா நாடு என்பதால் அவர்கள் விவசாயத்தை நம்பி வாழவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2018 at 3:44 AM, குமாரசாமி said:

 இங்கே எனக்கு தெரிந்து  பலர் ஓய்வூதிய காலத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள். தருணம் வந்ததும் பெட்டிபடுக்கைகளுடன் சொந்த ஊரின் மடியில் வாழ்க்கையை தொடர்வர்.

நான் எப்பவோ திரும்பியிருப்பேன்.....திரும்பவும் மண்வெட்டி தூக்க தென்பில்லாத உடம்பு.:(

இப்ப எல்லாம் உழவு இயந்திரங்கள் நீர்ப்பம்பிகள் வந்துள்ளது நீங்கள் பயிரை பராமரித்தால் போதும்  மண் வெட்டி வேலைகளுக்கு ஆள் தேவையென்றால் நான் வருகிறேன் விடுமுறை காலங்களில் எப்படி வசதி நாள் கூலி பேசி தீர்மானிக்கப்படும் :27_sunglasses::27_sunglasses:

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎3‎/‎2018 at 8:18 AM, சுவைப்பிரியன் said:

அப்படி இல்லை தனி தேங்காய் இப்பவும் சிங்களப் பகுதியில் இருந்து கிளிநொச்சி பளை போன்ற இடத்திற்க்கு வந்து தான் வாங்குறார்கள்.எமது யாழ் உறவகளுக்கு தாயத்தில் இருக்கும் அக்கறை அளவிற்க்கு தாயக நிலமை தெரிவதில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் படக்குடாது.

 

தென்னை முக்கோண வலயம் காலி ,சிலாபம்,களுத்துறை என்று படித்த ஞாபகம்,,,,அங்கேயிருந்து இங்கே வந்து வாங்குகிறார்கள் என்பதை நம்ப முடியாமல் உள்ளது 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

தென்னை முக்கோண வலயம் காலி ,சிலாபம்,களுத்துறை என்று படித்த ஞாபகம்,,,,அங்கேயிருந்து இங்கே வந்து வாங்குகிறார்கள் என்பதை நம்ப முடியாமல் உள்ளது 

தற்போது தேங்காயில் எண்ணெய் மற்றும் ஏற்றுமதி செய்வதால் அதிகமாக கிழக்கில் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு அதனால் விலை 100 ரூபா அங்கிருந்து பெரிதாக தற்போது முக்கோண வலயங்கள் என்று சொல்கின்ற ஊர்களிலிருந்து வருவது மிக குறைவு என்று சொல்லலாம் கிழக்கில் மரத்த விலை பேசி பறித்து ( ஆய்ந்து) செல்கிறார்கள் லொறியில் தேங்காயை அதனால் தட்டுப்பாடு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது தேங்காயில் எண்ணெய் மற்றும் ஏற்றுமதி செய்வதால் அதிகமாக கிழக்கில் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு அதனால் விலை 100 ரூபா அங்கிருந்து பெரிதாக தற்போது முக்கோண வலயங்கள் என்று சொல்கின்ற ஊர்களிலிருந்து வருவது மிக குறைவு என்று சொல்லலாம் கிழக்கில் மரத்த விலை பேசி பறித்து ( ஆய்ந்து) செல்கிறார்கள் லொறியில் தேங்காயை அதனால் தட்டுப்பாடு 

மட்டக்களப்பார் சூறாவளி அழிவுக்கு பிறகு தென்னம்பிள்ளை வடிவுக்குத்தானே தாட்டவையள். :grin:

இப்ப என்ன சோலையாய் நிக்குதோ??? :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/5/2018 at 3:23 AM, Jude said:

சிங்கப்பூரில் எங்கே விவசாயம் நடக்குது? அங்கே மனிதன் வாழவில்லையா? "பாரம்பரியத்தை மறக்காத பூமி" என்று நீங்கள் பெருமைப்படும் பூமியிலும் பார்க்க சிங்கப்பூரில் மனிதன் வசதியாகவும் பாதுகாப்பாகவும் (வாள்வெட்டு குழுக்கள் அங்கே இல்லை ?.) வாழுகிறானே?

மண்வெட்டி எதுக்கு அண்ணை? வளர்ச்சி அடைந்த நாட்டில் இருந்து போறீங்கள், சூரிய சக்தியில் வேலை செய்யும் உழவு இயந்திரத்தை கொண்டுபோவம் எண்டு கூட யோசிக்காமல்  பழைய மண்வெட்டிக்கு திரும்ப பார்க்கிறீங்கள்? எப்பவும் பின்னோக்கி போக தானா  விருப்பம் உங்களுக்கு?? நீங்கள் போனால் நாடு உருப்பட்ட மாதிரி தான்!

நீங்கள் கனடாவிலிருந்து கனடா சிந்தனையுடன் கதைக்கின்றீர்கள். (எல்லாத்தையும் வாங்கலாம் விற்கலாம்)
நான் வடக்கு மக்களின் நிலபுல வாழ்க்கை நிலையை வைத்து கதைக்கின்றேன்.

அது சரி நான் ஊருக்கு போவதற்கும் நாடு உருப்படுவதற்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் கனடாவிலிருந்து கனடா சிந்தனையுடன் கதைக்கின்றீர்கள். (எல்லாத்தையும் வாங்கலாம் விற்கலாம்)
நான் வடக்கு மக்களின் நிலபுல வாழ்க்கை நிலையை வைத்து கதைக்கின்றேன்.

இன்றைய வடக்கு மக்களின் நிலபுல வாழ்க்கை நிலை நீங்கள் விட்டுவிட்டு வந்த காலத்தில் இருந்து எவ்வளவோ முன்னேறி விட்டது.  நீங்கள் போய் பார்க்க வேண்டியது அவசியம். இப்பொது மண்வெட்டியை நம்பி அங்கே விவசாயம் செய்வது இல்லை.

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப எல்லாம் உழவு இயந்திரங்கள் நீர்ப்பம்பிகள் வந்துள்ளது நீங்கள் பயிரை பராமரித்தால் போதும்  மண் வெட்டி வேலைகளுக்கு ஆள் தேவையென்றால் நான் வருகிறேன் விடுமுறை காலங்களில் எப்படி வசதி நாள் கூலி பேசி தீர்மானிக்கப்படும் :27_sunglasses::27_sunglasses:

இங்கே உடற்பயிற்சிக்கு ஓடுவது  போல அங்கே இப்பவும் சிலர் விவசாயத்துக்கு  மண்வெட்டியை பயன்படுத்த கூடும்.

அது சரி நான் ஊருக்கு போவதற்கும் நாடு உருப்படுவதற்கும் என்ன சம்பந்தம்?

  இத்தனை காலம் வளர்ச்சி அடைந்த நாட்டில் இருந்துவிட்டு  போகிறீர்கள். இங்கிருந்து  அங்கே  உள்ள மக்களுக்கு என்ன அறிவையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு போக போகிறீர்கள்? இவை எதுவும் இல்லாமல், அங்கே நீங்கள் விட்டுவிட்டு வந்த மண்வெட்டியை நினைத்துகொண்டு போனால் ... "சோற்றுக்கு பாரம், பூமிக்கு கேடு" என்று சொல்லி கேள்விப்பட்டது உண்டா? என்று தான் கேட்க தோன்றுகிறது.

 

7 hours ago, ரதி said:

 

தென்னை முக்கோண வலயம் காலி ,சிலாபம்,களுத்துறை என்று படித்த ஞாபகம்,,,,அங்கேயிருந்து இங்கே வந்து வாங்குகிறார்கள் என்பதை நம்ப முடியாமல் உள்ளது 

 

நீங்கள் படித்தது சுனாமிக்கு முற்பட்ட காலம். மேலும் காலி, சிலாபம், களுத்துறையிலும் பார்க்க யாழ்ப்பாணம், அனுராதபுரம் போன்ற பகுதிகளுக்கு கிட்டவாக உள்ளது. ஆகவே இங்கே வந்து வாங்குவது அனுராதபுரம் போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு இலாபமானது. யாழ்ப்பாணம் சுனாமியால் பாதிக்கப்பட்டதும் குறைவு.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இயந்திரங்களின் பாவனைகள் அதிகரித்தாலும் முற்மறாக மண்வெட்டி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்ற அடிப்படை அறவே இல்லை சிலருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

மட்டக்களப்பார் சூறாவளி அழிவுக்கு பிறகு தென்னம்பிள்ளை வடிவுக்குத்தானே தாட்டவையள். :grin:

இப்ப என்ன சோலையாய் நிக்குதோ??? :cool:

தற்போது மட்டக்களப்பில் , அம்பாறையில் தென்னை பதியம் வைக்கும் நிலையங்கள் , கூடங்கள் வந்துள்ளது ஆகையினால் அதிக தென்னைகள்  நட்ப்பட்டு உள்ளது தோட்டங்களும் அமைந்துள்ளது சாமியார் மயிலம்பா வெளி மட்டக்களப்பில் தென்னைக்கு பெயர் போன இடம் :104_point_left: அம்பாறையில் திருக்கோவில்  என்ற ஊரில் மற்ற நிலையமும் உள்ளது 

நான் பாடசாலையில்  பொழுது போகாமல் ஒருமுறை ஒதுங்கியபோது யாரோ வாத்தியார் சொன்னது ஞாபகம் வருகுது.

உனக்கு தென்னையைப் பற்றி மட்டும்தான் தெரியும் ஆனால், வினா மாட்டைப் பற்றி வந்தால் 

மாட்டை கொண்டுபோய் தென்னையில் கட்டிவிட்டு தென்னையைப்பற்றி எழுது

வாசிப்பவன் புத்திசாலியா இருந்தா உனக்கு பாடம் பெயில் இல்லை நூறு புள்ளிகள் / .ஐம்பதுக்கு ஐம்பது - இனிமேல் வெற்று பேப்பரை கொடுக்காதை.

 

சரி சரி சிங்கள தாதியரையும் வைத்தியர்களையும் தென்னை மரத்தில் கட்டியாச்சு இனி தென்னைமரம் + தேங்காயப் பற்றி எழுதுங்கோ.???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, MEERA said:

என்னதான் இயந்திரங்களின் பாவனைகள் அதிகரித்தாலும் முற்மறாக மண்வெட்டி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது என்ற அடிப்படை அறவே இல்லை சிலருக்கு.....

நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்காவுக்கு வந்து தானாக எறியவர்களும் உண்டு.ஏற்றப்பட்டவர்களும் உண்டு. :cool:

சம்பந்தப்பட்டவர் எந்த ரகம் என்பதை சகலரும் இலகுவாக தீர்மானிக்கலாம். :grin:

மண்வெட்டி எதற்கு என்னவென்று தெரியாதவர்களெல்லாம் கனடா கோதுமை வயல்களை பார்த்து வடபகுதி வயல்களையும் / தோட்டம் துரவுகளையும் ஒப்பிட்டு கதைக்கின்றார்கள். :77_alien:
 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

நான் பாடசாலையில்  பொழுது போகாமல் ஒருமுறை ஒதுங்கியபோது யாரோ வாத்தியார் சொன்னது ஞாபகம் வருகுது.

உனக்கு தென்னையைப் பற்றி மட்டும்தான் தெரியும் ஆனால், வினா மாட்டைப் பற்றி வந்தால் 

மாட்டை கொண்டுபோய் தென்னையில் கட்டிவிட்டு தென்னையைப்பற்றி எழுது

வாசிப்பவன் புத்திசாலியா இருந்தா உனக்கு பாடம் பெயில் இல்லை நூறு புள்ளிகள் / .ஐம்பதுக்கு ஐம்பது - இனிமேல் வெற்று பேப்பரை கொடுக்காதை.

 

சரி சரி சிங்கள தாதியரையும் வைத்தியர்களையும் தென்னை மரத்தில் கட்டியாச்சு இனி தென்னைமரம் + தேங்காயப் பற்றி எழுதுங்கோ.???

மண்வெட்டி பாவனையின் அறிவே இல்லாதவர்களுக்கு சிங்கள வைத்திய தாதிய பிரச்சனை புரியுமா ?????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக கட்டுநாயக்காவுக்கு வந்து தானாக எறியவர்களும் உண்டு.ஏற்றப்பட்டவர்களும் உண்டு. :cool:

சம்பந்தப்பட்டவர் எந்த ரகம் என்பதை சகலரும் இலகுவாக தீர்மானிக்கலாம். :grin:


மண்வெட்டி எதற்கு என்னவென்று தெரியாதவர்களெல்லாம் கனடா கோதுமை வயல்களை பார்த்து வடபகுதி வயல்களையும் / தோட்டம் துரவுகளையும் ஒப்பிட்டு கதைக்கின்றார்கள். :77_alien:

ஏன் அண்ணை, இவ்வளவு கீழ்த்தரமாக போகலாமா? களவிதிகளை மீறி எழுதுகிறீர்களே? என்னை உங்களுக்கு தெரியவே தெரியாது ☺️

சரியாக என்னை யார் என்று கண்டு பிடித்தால் உங்களுக்கு நீங்கள் ஆசை ஆசையாக தேடும் மண்வெட்டி ஒன்றையே  அன்பளிப்பாக தரலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

 

chillington-baby-hoe.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி சிங்கள தாதியரையும் வைத்தியர்களையும் தென்னை மரத்தில் கட்டியாச்சு இனி தென்னைமரம் + தேங்காயப் பற்றி எழுதுங்கோ.

ஒரு பெண்ணை அதாவது கல்யாணத்திற்கு  பார்க்க போனால் குடும்பத்தை விசாரிப்பதும் வழமைதானே இங்கே தென்னை பக்கம் பேச்சு  போனதால் அதுவும் சேர்ந்த்து விவாதத்தில் நீங்கள் பால் பவுடர் போட்டு சமைப்பதால் இந்த பக்கம் வராதீங்க ஏனென்றால் தேங்காய்க்கு விலை கூடி விட்டது :27_sunglasses:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Jude said:

ஏன் அண்ணை, இவ்வளவு கீழ்த்தரமாக போகலாமா? களவிதிகளை மீறி எழுதுகிறீர்களே? என்னை உங்களுக்கு தெரியவே தெரியாது ☺️

சரியாக என்னை யார் என்று கண்டு பிடித்தால் உங்களுக்கு நீங்கள் ஆசை ஆசையாக தேடும் மண்வெட்டி ஒன்றையே  அன்பளிப்பாக தரலாம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

 

chillington-baby-hoe.jpg

 

இதில் எங்கே களவிதி மீறப்பட்டுள்ளது? கீழ்த்தரமாக எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நான் எழுதியது கீழ்த்தரமும் களவிதியும் மீறப்பட்டிருந்தால்.......இதே திரியில் நீங்கள் எழுதியதை மேலே சென்று அசை போட்டு பாருங்கள் :cool:
மண்வெட்டி தரவேண்டு என்ற ஆசை மனப்பான்மைக்கு நன்றி. இருந்தாலும்  முதளை மார்க் இல்லை தவளை மார்க் மண்வெட்டிகளை  கொல்லரிடம் கொடுத்து எனது பாவனைக்கேற்றவாறு செப்பனிட வேண்டும்.  இதெல்லாம் தொழில் ரகசியம்.:grin:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.