Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்…

Featured Replies

ஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்…

 

 

தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைவிட்டு பிரச்சனைகள் தலைதூக்க காரணமாகிவிடும் என மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க றணவக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையிலும் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் மக்களுக்கு எதிராக செயற்படும் தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டிய, அமைச்சர் சம்பிக்க றணவக்க,

யுத்தத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளை விடுதலை போராட்ட வீரர்களாக நினைவுகூருவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும், பயங்கரவாதிகளை நினைவுகூருவதனால் நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் தோன்றி, இரத்த ஆறு ஓடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படும் அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.இந்த அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இடையில் வேற்றுமை ஏற்படாத வகையில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும்” என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/2018/82681/

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிட்லரைப் போல் என்றால் மஹிந்த ராஜபக்சவைத் தானே சொல்ல வேண்டும் ? சம்பிக்க ரணவக்க வரலாற்றுப் பாடத்தில் ஃபெயில் ஆனவரோ ?

7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஹிட்லரைப் போல் என்றால் மஹிந்த ராஜபக்சவைத் தானே சொல்ல வேண்டும் ? சம்பிக்க ரணவக்க வரலாற்றுப் பாடத்தில் ஃபெயில் ஆனவரோ ?

விடுதலைக்காக போராடப்போன மற்ற சொந்த சகோதரர்களை துரோகிகள் என்று யாழ் நகர வீதிகளில் டயர் போட்டு எரித்த இவர்கள் எரிந்தவர்களின் உறவினர் பார்வையில் மகிந்தவை விட மோசமானவர்கள்.

 

அதைவிட மோசமானது - கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு என்று அப்பாவி மக்களை முதலில் யாழில் இருந்து வன்னிக்கும் அப்புறம் மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுசென்று புதைத்தது.

 

இப்ப சொல்லுங்கோ யார் வரலாற்று பாடத்தில் பெயில் ?????

  • கருத்துக்கள உறவுகள்

02960_BD1-_F053-41_BE-9_CFA-_FAA485_C3_F

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

 

13 hours ago, நவீனன் said:

ஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்…

 

 

தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைவிட்டு பிரச்சனைகள் தலைதூக்க காரணமாகிவிடும் என மஹரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க றணவக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையிலும் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் மக்களுக்கு எதிராக செயற்படும் தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டிய, அமைச்சர் சம்பிக்க றணவக்க,

யுத்தத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளை விடுதலை போராட்ட வீரர்களாக நினைவுகூருவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும், பயங்கரவாதிகளை நினைவுகூருவதனால் நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் தோன்றி, இரத்த ஆறு ஓடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக ஏற்படும் அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.இந்த அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இடையில் வேற்றுமை ஏற்படாத வகையில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும்” என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

http://globaltamilnews.net/2018/82681/

இந்த குழப்பவாதிண்ட நாலு வரி பேச்சில நாப்பது தடவை புலியையும் நாநூறு தடவ பிரபாகரனையும் கூவி கூவி வித்துத்தள்ளுவான்.

இதெல்லாம் ஒரு ஆளு , இதுக்கு ஒரு மேடை , அதுக்கு ஒரு அரசியல் .
நல்லா வருவீங்க டேய்...

 

4 hours ago, ஜீவன் சிவா said:

விடுதலைக்காக போராடப்போன மற்ற சொந்த சகோதரர்களை துரோகிகள் என்று யாழ் நகர வீதிகளில் டயர் போட்டு எரித்த இவர்கள் எரிந்தவர்களின் உறவினர் பார்வையில் மகிந்தவை விட மோசமானவர்கள்.

 

அதைவிட மோசமானது - கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு என்று அப்பாவி மக்களை முதலில் யாழில் இருந்து வன்னிக்கும் அப்புறம் மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுசென்று புதைத்தது.

 

இப்ப சொல்லுங்கோ யார் வரலாற்று பாடத்தில் பெயில் ?????

சிலருக்கு  அப்போ வாங்கின பச்சை மட்டையடி இன்னுமே சுளீர் சுளீரென்று இருக்குது போல ..
இந்த சீரல் சிணுக்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாய் தொடரும், என்ன செய்ய.
கக்காவ கண்டால் விளத்தி போறத போல , இதுகளையும் விளத்திதான் போகணும்.    

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

விடுதலைக்காக போராடப்போன மற்ற சொந்த சகோதரர்களை துரோகிகள் என்று யாழ் நகர வீதிகளில் டயர் போட்டு எரித்த இவர்கள் எரிந்தவர்களின் உறவினர் பார்வையில் மகிந்தவை விட மோசமானவர்கள்.

 

அதைவிட மோசமானது - கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு என்று அப்பாவி மக்களை முதலில் யாழில் இருந்து வன்னிக்கும் அப்புறம் மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு கொண்டுசென்று புதைத்தது.

 

இப்ப சொல்லுங்கோ யார் வரலாற்று பாடத்தில் பெயில் ?????

ஜீவன் சிவா நீங்கள் தான்வ வரலாற்று பாடத்தில் பெயில்......

17 hours ago, Sasi_varnam said:

சிலருக்கு  அப்போ வாங்கின பச்சை மட்டையடி இன்னுமே சுளீர் சுளீரென்று இருக்குது போல ..
இந்த சீரல் சிணுக்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாய் தொடரும், என்ன செய்ய.
கக்காவ கண்டால் விளத்தி போறத போல , இதுகளையும் விளத்திதான் போகணும்.    

 

14 hours ago, MEERA said:

ஜீவன் சிவா நீங்கள் தான்வ வரலாற்று பாடத்தில் பெயில்......

சரி சரி இன்னும் கொஞ்சம் "கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு " அப்ப பாஸ் பண்ணலாம்?

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

 

சரி சரி இன்னும் கொஞ்சம் "கிட்ட வரட்டும் திட்டம் இருக்கு " அப்ப பாஸ் பண்ணலாம்?

குறிப்பிட்ட இரு வரலாற்று நிகழ்வுகளிலும் உங்கள் பிரசன்னம் இருக்கவில்லை. வாய்வழி கதைமூலம் நீங்க பாஸ் பண்ணுங்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

ஹிட்லரின் பெயரை ஜெர்மனியில் உச்சரிக்க எங்கே எப்போ தடை விதிச்சாங்க? தடை விதிச்சாலும் எங்கே அதை கடைபிடிக்கிறாங்க?

ஒவ்வொரு நாளும் இரண்டாம் உலகபோரில் ஹிட்லரின் அணிவகுப்பு  எந்த நாடுகள் மறந்தாலும் ஜெர்மன் தொலை காட்சிகளில் காட்டிகிட்டே இருப்பாங்க...

பழைய தலைமுறை பயத்தால் ஹிட்லரை விட்டு தூரம் நின்றாலும்...புதிய ஜெர்மன் தலைமுறை நாஸி சின்னத்தை அவர்கள் தோளில் பச்சைகுத்தி அலைவதே பெருமையாக நினைக்கிறார்கள்...

எத்தனை தலைமுறை கடந்து நீங்கள் ஜேர்மனில் வாழ்ந்தாலும்... எப்பவுமே உங்களை அவர்கள் ..

‘’அவுஸ் லாண்டர்’’ என்றே அழைப்பார்கள்...

ஆனால் எத்தனை தலைமுறை கடந்தாலும்,  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரபாகரன் பெயர் சொல்லி பெருமை கொள்வோம்.

ஏனென்றால் மானம் ரோஷத்தோடு வாழ கிடைச்ச ஒரேயொரு சந்தர்ப்பம் அவர்காலம்.. அதைவிட்டா/அவரைவிட்டா வேற எதுவும்       எமக்கு இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, valavan said:

ஹிட்லரின் பெயரை ஜெர்மனியில் உச்சரிக்க எங்கே எப்போ தடை விதிச்சாங்க? தடை விதிச்சாலும் எங்கே அதை கடைபிடிக்கிறாங்க?

ஒவ்வொரு நாளும் இரண்டாம் உலகபோரில் ஹிட்லரின் அணிவகுப்பு  எந்த நாடுகள் மறந்தாலும் ஜெர்மன் தொலை காட்சிகளில் காட்டிகிட்டே இருப்பாங்க...

பழைய தலைமுறை பயத்தால் ஹிட்லரை விட்டு தூரம் நின்றாலும்...புதிய ஜெர்மன் தலைமுறை நாஸி சின்னத்தை அவர்கள் தோளில் பச்சைகுத்தி அலைவதே பெருமையாக நினைக்கிறார்கள்...

எத்தனை தலைமுறை கடந்து நீங்கள் ஜேர்மனில் வாழ்ந்தாலும்... எப்பவுமே உங்களை அவர்கள் ..

‘’அவுஸ் லாண்டர்’’ என்றே அழைப்பார்கள்...

ஆனால் எத்தனை தலைமுறை கடந்தாலும்,  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரபாகரன் பெயர் சொல்லி பெருமை கொள்வோம்.

ஏனென்றால் மானம் ரோஷத்தோடு வாழ கிடைச்ச ஒரேயொரு சந்தர்ப்பம் அவர்காலம்.. அதைவிட்டா/அவரைவிட்டா வேற எதுவும்       எமக்கு இல்லையே.

வளவன்,  ரசித்த  அருமையான கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

வளவன்,  ரசித்த  அருமையான கருத்து. 

இதில ஒண்டும் உள் குத்து இல்லையே தல? :unsure:    

  • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

இதில ஒண்டும் உள் குத்து இல்லையே தல? :unsure:    

சந்தேகம் வேண்டாம்,  நிச்சயமாக...  இல்லை வளவன். ?
நேற்று.. இந்தச்  செய்தியை.... வாசித்து விட்டு,  
சிங்களவனுக்கு... புத்தி சொல்வதும்,  நாய் வாலை, நிமிர்த்துவதும்... ஒன்று தான்... என்று யோசித்து  விட்டு,   போய் விட்டேன். 

இன்று... உங்கள் கருத்தை, வாசித்தவுடன், சந்தோசமாக இருந்தது. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.