Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இன அழிப்பில் கருணாநிதி ? – வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி வடக்கு முதல்வரின் அஞ்சலிக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமானகலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்திகேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 94வது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார். எனினும் அவர் தமிழ் மக்களின் கருத்தியலிலும்,தமிழக அரசியலிலும்,தமிழ்க் கலை இலக்கியத்திலும் ஆற்றிய மகத்தான பணிகளும் நிகழ்த்திய சாதனைகளும் அவரை மறக்க முடியாத மனநிலைக்கு எம்மை ஆழ்த்தியுள்ளன.

கலைஞர் கருணாநிதி அவர்கள் சுமார் 60ஆண்டு காலம் தொடர்ந்துமக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தவர். 5 தடவைகள் முதலமைச்சராகப் பதவிவகித்துள்ளார். இது சாதாரணமான ஒரு நிகழ்வல்ல. நவீன இந்திய அரசியல் வரலாற்றில் இவருக்கு தனித்துவமான ஒருவரலாறு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் சமூகரீதியின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்கிக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அடித்தட்டு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அரசுப் பணிகளில் பெண்களுக்கென இட ஒதுக்கீடு இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்று நம்புகின்றேன். இந்தியாவில் முதன் முறையாக பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றினார் கலைஞர் அவர்கள். தன்னால் இயன்ற அளவு மத்தியின் ஆதிக்கத்தை மாநிலத்தில் நிலைகொள்ளவிடாது தடுப்பதற்காக அவர் உழைத்தார். தொழில் துறையில் மத்திய ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய–மாநில–தனியார் கூட்டு முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கினார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் போன்று மாநிலஅரசின் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து இந்திய நாட்டிலேயே முதல் முறையாகத் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கினார்.

தமிழ் மொழி மீது தீராப் பற்றுமிக்க கலைஞர் கருணாநிதி அவர்கள்,தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். தமிழுக்கு செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததோடு,செம்மொழித் தமிழ் ஆய்வுக்காகச் சென்னையில் மத்தியநிறுவனம் ஒன்றையும் உருவாக்கவழிவகுத்தார். இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க விதைபோடும் நிகழ்ச்சியாக உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கூட்டினார். கேட்கும் தோறும் உணர்வுமுறுக்கேறும் “நீராடும் கடலுடுத்த”என்ற மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக்கியவரும் இவரே.

கலைஞர் கருணாநிதி அவர்கள் 1956இல் சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடமுன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் “இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றுவாழவேண்டும்”என்ற தீர்மானத்தைப் முன்மொழிந்திருந்தார். அன்றில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்காக அவர் எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.எனினும்,முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்றஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு.

தன் வாழ்வைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாகப் பதிவுசெய்துவிட்டுமறைந்துள்ளகலைஞர் மு. கருணாநிதிஅவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் அவரது இலட்சோப இலட்சம் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கன்னியாகுமரியில் வானுயர அமைந்திருக்குந் திருவள்ளுவர் சிலைபோன்று அவர் பெயரும் காலாகாலத்துக்கும் நிலைத்திருக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

http://www.thaarakam.com/2018/08/08/தமிழ்-இன-அழிப்பில்-கருணா/

 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் உள்ளடக்கம் கலைஞர் கருணாநிதிக்கு புகழ்பாடுகின்றது. ஆனால் தலைப்பு விக்கி ஐயா சொன்னதை திரிக்கின்றது. இப்படியான நம்பகத்தன்மையில்லாத உள்நோக்கம் கொண்ட “இணைய ஊடகங்கள்”  வெளியிடும் செய்திகளை யாழில் இணைப்பதால் போலி ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதில்தான் முடியும். 

இந்த விடயங்களில் யாழ் மெத்தனப்போக்கில் இருக்கிறது இப்போதெல்லாம் ,

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை வாசிக்காமல் தலைப்பை மட்டும் படிக்கும் வேகமான உலகில் இருப்பதால்தான் போலியான செய்திகள் பரவுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில என்ன பிழை..? கேள்விக்குறி தானே போட்டிருக்கினம்.

நமக்கு சரிப்படாத தலைப்பு என்றவுடன்.. மனசு சங்கடப்படுகுதோ என்னவோ..??!

கருணாநிதி.. ஈழத்தில் இனப்படுகொலையில்.. துணை நின்றார் என்பது வெளிப்படை உண்மை தானே. இல்ல ராஜீவ் காந்தி மகன் ராகுல் காந்தி எதுக்கு கருணாநிதியின் இறுதிச் சடங்களில் முன்னுக்கு நிற்கனும்..????????! ?

போராட்டதோல்விக்கும் அழிவுகளுக்கும் பல காரணங்கள் இருக்கின்றது.  கருணாநிதி அக்கறையற்று இருந்தது என்பது அதில் மிகவும் சிறிய பங்கே.

முக்கிய பங்கு எம்மில் தான் உள்ளது. அதை மறைக்க அடுத்தவன் மீது பாயும் தமிழரின் குணம் எமது எதிரகால போராட்டங்களையும் தோல்வி அடையவே வைக்கும். எங்களுக்குள் அதாவது போராட்டத்தை கொண்டு நடத்தியவர்களின் தவறுகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனால் அவை புனிதமானவை விமரசனத்துக்கு அப்பாற்பட்டவை என்று நினைப்போர் தான் எப்போதும் அடுத்தவர் மீது முழுப் பழியையும் போடுவது கெட்டித்தனம் என்று நினைக்கிறார்கள்.

அதன் வெளிப்பாடுதான் கருணாநிதியை திட்டுவது, எரிக் சோல்கைமை திட்டுவது, நேர்வேயை திட்டுவது, அமெரிக்காவை திட்டுவது, பிரிட்டனை திட்டுவது,. போராட்ட தோல்விகளுக்கும் அழிவுகளுக்குமான் மூல காரணிகளை மட்டும் ஆராயவும் மாட்டார்கள். ஏன் அதை பற்றி பேச கூட மாட்டார்கள் . 

  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலைப் போராட்டத்தில்.. எம் ஜி ஆர் காலத்தில் கருணாநிதி.. போட்டி தமிழ் ஆயுதக் குழுக்களை பலப்படுத்த பாவிக்கப்பட்டார். ஈழ விடுதலைப் போராட்டம் முழுவதும் கருணாநிதி.. தமிழீழமே தமிழ் மக்களுக்கு தீர்வு என்றதில் ஆரம்பித்து.. பின்னர் முள்ளிவாய்க்காலில்.. இன அழிப்பில் கொண்டு வந்து விடும் வரை.. ஏதோ ஒரு தொடர்பில் இருந்தார்.

ஆகவே ஈழ விடுதலைப் போராட்டப் பின்னடைவில்.. வெறும் உள்ளகக் காரணிகளை விட.. வெளியகக் காரணிகள் தான் அதிகம் செல்வாக்குச் செய்துள்ளன. அதில் கருணாநிதி என்பதும்.. முக்கியமான ஒன்று. சிறியது என்று புறக்கணிக்கவோ.. மன்னிக்கப்படவோ கூடிய ஒன்றல்ல. ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

செய்தியின் உள்ளடக்கம் கலைஞர் கருணாநிதிக்கு புகழ்பாடுகின்றது. ஆனால் தலைப்பு விக்கி ஐயா சொன்னதை திரிக்கின்றது. இப்படியான நம்பகத்தன்மையில்லாத உள்நோக்கம் கொண்ட “இணைய ஊடகங்கள்”  வெளியிடும் செய்திகளை யாழில் இணைப்பதால் போலி ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுப்பதில்தான் முடியும். 

 

கருணாநிதி  சார்ந்து

ஈழத்தவரிடமுள்ள கவலையை 

விக்கி ஐயா (தமிழரின்  வடக்கு முதல்வர்) தெரிவித்திருப்பது தெரிந்தது

அதனால் தான் பதிந்தேன்.

செய்தியில்  அது பற்றி  இல்லாதுவிட்டால்  நீங்கள்  சொல்வது சரியே.

மேலும்  இணைக்கும் போதே இந்த இணையம்  யாழில் பதிய  தகுதியானதா என்பதை  நானும் யோசித்தேன்

சரியாக  தெரியாதபோது

நிர்வாகம்  பார்த்துக்கொள்ளும் என்ற நிலையில்  பதிந்தேன்

 

4 hours ago, nedukkalapoovan said:

ஈழ விடுதலைப் போராட்டத்தில்.. எம் ஜி ஆர் காலத்தில் கருணாநிதி.. போட்டி தமிழ் ஆயுதக் குழுக்களை பலப்படுத்த பாவிக்கப்பட்டார். ஈழ விடுதலைப் போராட்டம் முழுவதும் கருணாநிதி.. தமிழீழமே தமிழ் மக்களுக்கு தீர்வு என்றதில் ஆரம்பித்து.. பின்னர் முள்ளிவாய்க்காலில்.. இன அழிப்பில் கொண்டு வந்து விடும் வரை.. ஏதோ ஒரு தொடர்பில் இருந்தார்.

ஆகவே ஈழ விடுதலைப் போராட்டப் பின்னடைவில்.. வெறும் உள்ளகக் காரணிகளை விட.. வெளியகக் காரணிகள் தான் அதிகம் செல்வாக்குச் செய்துள்ளன. அதில் கருணாநிதி என்பதும்.. முக்கியமான ஒன்று. சிறியது என்று புறக்கணிக்கவோ.. மன்னிக்கப்படவோ கூடிய ஒன்றல்ல. ?

உணமை தான் நெடுக்கர். என்னில் தவறில்லை. எல்லாத்தவறும் அடுத்தவன் மீது தான் என்று கூறுவது Komfortable  ஆன சிறந்த அணுகுமுறை தான். ஜாலியா எல்லா தவறுகளையும் அடுத்தவன் மீது போட்டு விட்டு தப்பிப்பது என்ன சுகமான என்ஜோய்மென்ற்.  நன்றி.

ஈழத்தமிழர்களான எங்களை  பொறுத்தவரை தோல்வியை எளிதில் ஜீரணிக்க மாட்டோம் வெற்றி  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த எமக்கு  2009 தோல்வி தாங்க முடியாத அடி..எனவே அந்த
 தோல்விக்கு  நாம் பொறுப்பாளிகள் இல்லை என கைகழுவி அத்துடன் யாரோ ஒருவரை பலிக்கடாவாக்க பார்த்து கொண்டிருந்த எமக்கு சரியாக மாட்டினார் கலைஞர், அவரை துரோகியாக்கியதன் மூலம் நாம் தோற்கவில்லை தோற்கடிக்கபட்டோம் என எமக்கு நாமே சொல்லி  ஆறுதல் சொல்லி கொண்டோம்.....
 இப்போது 95வயசு பெரியவரின் சாவினை  கொண்டாடுவதெல்லாம் எங்களுக்கு கிடைத்த தோல்வியினால் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மையுடன் கூடிய  கருணாநிதிபோபியா என்கிற மன நோய் அது வந்து கிட்டத்தட்ட 10 வருடம் ஆகிவிட்டது குணப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் ?

?

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

கருணாநிதி  சார்ந்து

ஈழத்தவரிடமுள்ள கவலையை 

விக்கி ஐயா (தமிழரின்  வடக்கு முதல்வர்) தெரிவித்திருப்பது தெரிந்தது

அதனால் தான் பதிந்தேன்.

செய்தியில்  அது பற்றி  இல்லாதுவிட்டால்  நீங்கள்  சொல்வது சரியே.

மேலும்  இணைக்கும் போதே இந்த இணையம்  யாழில் பதிய  தகுதியானதா என்பதை  நானும் யோசித்தேன்

சரியாக  தெரியாதபோது

நிர்வாகம்  பார்த்துக்கொள்ளும் ன்ற நிலையில்  பதிந்தேன்

பதிவு செய்ததில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை ; சரியான பதிவு என்றே எண்ணுகிறேன் தோழர்களே !

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாக இருக்கலாம். ஏனென்றால் மற்றய எல்லா முதலமைச்சர்களையும் விட பல நல்ல திட்டங்களை ஏழை எளியவர்களுக்காகவும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கும் செய்தவர் அவர்.

ஆனால் ஈழத்தமிழர்கள் அவருக்காக கண்ணீர்வடிக்கத்தேவையில்லை.ஏனென்றால் MGR காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால்  வரை அவர் ஈழ விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

ஈழத்தமிழர்களான எங்களை  பொறுத்தவரை தோல்வியை எளிதில் ஜீரணிக்க மாட்டோம் வெற்றி  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த எமக்கு  2009 தோல்வி தாங்க முடியாத அடி..எனவே அந்த
 தோல்விக்கு  நாம் பொறுப்பாளிகள் இல்லை என கைகழுவி அத்துடன் யாரோ ஒருவரை பலிக்கடாவாக்க பார்த்து கொண்டிருந்த எமக்கு சரியாக மாட்டினார் கலைஞர், அவரை துரோகியாக்கியதன் மூலம் நாம் தோற்கவில்லை தோற்கடிக்கபட்டோம் என எமக்கு நாமே சொல்லி  ஆறுதல் சொல்லி கொண்டோம்.....
 இப்போது 95வயசு பெரியவரின் சாவினை  கொண்டாடுவதெல்லாம் எங்களுக்கு கிடைத்த தோல்வியினால் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மையுடன் கூடிய  கருணாநிதிபோபியா என்கிற மன நோய் அது வந்து கிட்டத்தட்ட 10 வருடம் ஆகிவிட்டது குணப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் ?

?

நோய்  என  எம்மை  சொல்லியபடி  நீங்கள்  பல விடயங்களை மறைத்துவிட  நினைக்கிறீர்கள்

கருணாநிதிக்கும் ஈழவிடுதலை  இயக்கங்களுமான தொடர்பாடல்களை  ஆதியிலிருந்து வாசியுங்கள்

தமிழினத்தின் தலைவன்  என்ற  மகுடத்தை ஏற்றவர்

ஆகக்குறைந்தது செய்யவேண்டியது என்ன?

செய்திருக்கவேண்டியது என்ன?  என்பது ஈழத்தவரின்  கவலையே  தவிர

போர் தோல்விக்கு கருணாநிதியை யாரும் முன்னுக்கு நிறுத்தவில்லை.

ஆகக்குறைந்தது 3 மணி  நேர  நாடகத்தையாவது  தவிர்த்திருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

6 minutes ago, விசுகு said:

 

மக்களை உசுப்பேற்ற சீமான் சொன்ன அத்தனையும் வேத வாக்காக நம்புகின்றீர்றீர்களா?  கலைஞர் பதவி ஏற்ற 1989/90 காலப்பகுதியில் போராளிகள் சுதந்திரமாக செயற்பட தாராள அனுமதியை கலைஞர் அளித்ததை மறந்து விட்டீர்களா? 

Edited by tulpen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

மக்களை உசுப்பேற்ற சீமான் சொன்ன அத்தனையும் வேத வாக்காக நம்புகின்றீர்றீர்களா?  கலைஞர் பதவி ஏற்ற 1989/90 காலப்பகுதியில் போராளிகள் சுதந்திரமாக செயற்பட தாராள அனுமதியை கலைஞர் அளித்ததை மறந்து விட்டீர்களா? 

பேச்சைக்கேட்டீர்களா?

அவர்  சொல்வதில்  எது நடக்கவில்லை??

விசுகு அண்ணா முகநூலாக இருப்பின் உங்களை நேற்றே un friend பண்ணிட்டு தான் மறுவேலை பார்த்திருப்பேன்,சீமானின் half boil தனமான கருத்துகளை வைத்து என்னை quote பண்ணாதீங்க, ஆதாரப்பூர்வமாக  இருக்கா அதை வைத்து கருத்து சொல்லுங்க, உலகத்தில்  உள்ள நாம்தமிழர் கட்சி காரங்க கூட எல்லாம் முகநூலில் நட்பாக இருக்கிற  அவங்கள் பகிர்கிற எல்லாவற்றையும்  உண்மை என நம்பி கருத்தாடுற... அப்படி  எனில் சீமான் சொன்ன ஆமை இறைச்சி கதை ,ஆமை ஓட்டில் கடலில் பயணம்  ஏ.கே 74 ,அரிசி கப்பலில் ரெயினிங் எல்லாவற்றையும் நம்புறீங்க  அப்படிதானே?

நான் தலைவனாக  ஏற்றுகொண்டவர் இன்னொரு தமிழனின் சாவை கொண்டாட சொல்லி தரவில்லை, பிரபாகரன் என் தலைவன் இல்லை சீமான் தான் என் தலைவன் என்று சொல்லிவிட்டு வெடி கொளுத்தி கொண்டாடுங்கள்

என்னை வரலாற்றை படிக்க சொல்வதை விட்டு விட்டு முடிந்தால் கலைஞரின் ஒரு நூலின் பெயர் சொல்லுங்க 

5 hours ago, Eppothum Thamizhan said:

கருணாநிதியின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாக இருக்கலாம். ஏனென்றால் மற்றய எல்லா முதலமைச்சர்களையும் விட பல நல்ல திட்டங்களை ஏழை எளியவர்களுக்காகவும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கும் செய்தவர் அவர்.

ஆனால் ஈழத்தமிழர்கள் அவருக்காக கண்ணீர்வடிக்கத்தேவையில்லை.ஏனென்றால் MGR காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால்  வரை அவர் ஈழ விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் அழ தேவையில்லை சாவை கொண்டாடாமல் இருக்கலாம்

 

இது நான் பார்த்த முதலாவது எதிர்வினை நேற்று 

கலைஞர் இறந்ததை சில ** ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம்

அட பதர்களா

யாழ்பாணம் நாறிகொண்டிருக்கின்றது, நடக்கும் அழிவுகளுக்கும் அசிங்களுக்கும் கட்டுகடங்கா கொள்ளைகளுக்கும் அளவே இல்லை

அதை பற்றி கவலைபடுவதை விட்டு, அடுத்த நாட்டில் ஒரு மாநில தலைவன் சாவதையா பார்த்துகொண்டிருப்பீர்கள்?

கேட்டால் பிரபாகரன் தாயை கலைஞர் பார்க்கவில்லையாம்

ஏண்டா *******, நீங்கள்தான் லண்டன், பிரான்ஸ், கனடா என இருக்கின்றீர்கள் அல்லவா? அழைத்து வைத்து பார்த்தால் என்ன ****** கூட்டமே

நன்றி கெட்ட ** கூட்டமே

1983ல் கொழும்பு எரிய இங்கு ஊர்வலம் நடத்தி உங்களை காத்தது எவன்?

அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது ஓடோடி சென்று கலந்து பேசி ஆறுதலையும் தைரியத்தையும் சொன்னவன் எவன்?

லட்சகணக்கான ஈழமக்கள் அகதிகளாய் வந்தபொழுது இங்கு அகதி முகாம் அமைத்து, சோறுபோட்டு காத்த தலைவனடா அவன்

உங்களால் ஒரு ஈழத்தவனை ஆதரிக்க முடியுமா **** ***** ******

அன்றெல்லாம் உங்களை அரவணைத்தது யார்? அமைதிபடையினை திரும்ப பெற்றது யார்?

உங்களுக்காக இருமுறை ஆட்சி இழந்தவர் யார்?

ராஜிவ் கொலைக்காக கட்சியினை பறிகொடுக்கும் நிலைக்கு சென்றது யார்? 

கொலைகார கூட்டமே, 

செய்யகூடா படுகொலைகளை செய்து அழிந்தான் பிரபாகரன், அது ஏன் உங்களுக்கு தெரியவில்லை ****

உலகிலே நன்றிகெட்ட இனம் ஈழதமிழினம் என்பதில் இனி மாற்று கருத்தே இல்லை

ஈழம் இனி ம‌....குள்ள இருந்து மலரும், ஒரு நாளும் ஒரு முடிவும் பெற்று கொள்ளமாட்டீர்கள்

காலத்துக்கும் அடிவாங்கி சாவுங்கள்

உங்களுக்கு தமிழில் பேசினால் புரியாது, காரணம் நீங்கள் மனிதர்களுமில்லை தமிழர்களுமில்லை

உங்களுக்கு புரிய கூடிய பாஷை அடித்து துவைப்பது, அது ஒன்றுதான் உங்களுக்கு புரியும்

சிங்களன் அதில்தான் உங்களிடம் பேசமுடியும், பேசிகொண்டும் இருக்கின்றான்

ஆயிரம் உதவிகள் பெற்றும் கலைஞரை சாடும் உங்களை விட, பகை இனம் என்றாலும் இன்று இரங்கலை தெரிவித்த இலங்கை அதிபர் மகா உத்தமானவர்

உங்களை விட மகிந்த ராஜபக்சே ஆயிரம் மடங்கு நல்லவன்

அடேய் ***மக்களே, ஒன்றை நினைவில் வையுங்கள்

புதைக்கபட போவது கலைஞர் உடல் மட்டுமல்ல, இந்த ஈழம், இனவிடுதலை, இனதுரோகம் , பிரபாகரன் புனிதன் அது இது போன்ற இம்சைகளும்

கலைஞரோடு எல்லாம் முடிந்தது

இனிதான் இருக்கின்றது உங்களுக்கு அடி, தாங்கமாட்டீர்கள்

 

Edited by நியானி
இழிவான வார்த்தைப் பிரயோகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அபராஜிதன் said:

விசுகு அண்ணா முகநூலாக இருப்பின் உங்களை நேற்றே un friend பண்ணிட்டு தான் மறுவேலை பார்த்திருப்பேன்,சீமானின் half boil தனமான கருத்துகளை வைத்து என்னை quote பண்ணாதீங்க, ஆதாரப்பூர்வமாக  இருக்கா அதை வைத்து கருத்து சொல்லுங்க, உலகத்தில்  உள்ள நாம்தமிழர் கட்சி காரங்க கூட எல்லாம் முகநூலில் நட்பாக இருக்கிற  அவங்கள் பகிர்கிற எல்லாவற்றையும்  உண்மை என நம்பி கருத்தாடுற... அப்படி  எனில் சீமான் சொன்ன ஆமை இறைச்சி கதை ,ஆமை ஓட்டில் கடலில் பயணம்  ஏ.கே 74 ,அரிசி கப்பலில் ரெயினிங் எல்லாவற்றையும் நம்புறீங்க  அப்படிதானே?

நான் தலைவனாக  ஏற்றுகொண்டவர் இன்னொரு தமிழனின் சாவை கொண்டாட சொல்லி தரவில்லை, பிரபாகரன் என் தலைவன் இல்லை சீமான் தான் என் தலைவன் என்று சொல்லிவிட்டு வெடி கொளுத்தி கொண்டாடுங்கள்

என்னை வரலாற்றை படிக்க சொல்வதை விட்டு விட்டு முடிந்தால் கலைஞரின் ஒரு நூலின் பெயர் சொல்லுங்க 

ஈழ  வரலாறு  பற்றியும்

கருணாநிதியின் துரோகங்கள் மற்றும் வரலாற்றில் எமது இயக்கங்களை அவர் எவ்வாறு பிரித்தாண்டார் என்பதனையும் 

கருணாநிதி  எழுதிய  நூலை  வாசித்து அறியவேண்டிய  தேவை  எனக்கில்லை சகோ

முகநூலில் தவறான பதிவுகள்  வருகின்றன  என்றபடி அடுத்த பகுதியில் யாரோ கொட்டியதைத்தான்  நீங்களும் தருகின்றீர்கள்

உங்களுக்கொரு பார்வை

எங்களுக்கொரு பார்வை

எம் தலைவரே  இறுதிக்கணம் வரை நம்பினார்

ஏமாற்றப்பட்டார் என்பது தான்  எம்  கண் முன்னால்  நடந்த வரலாறு

அதைத்தான் மேலே சீமானும் சொல்கிறார்

இதில் அவர்  பொய்  சொல்லவில்லை

சொன்னால் சுட்டிக்காட்டுங்கள்

எமக்குச்செய்த துரோகம்  சார்ந்து தான் எனது வருத்தமே  அன்றி

அவரது எழுத்து இலக்கியம் சார்ந்து அல்ல.

Edited by விசுகு

2 minutes ago, விசுகு said:

ஈழ  வரலாறு  பற்றியும்

கருணாநிதியின் துரோகங்கள் மற்றும் வரலாற்றில் எமது இயக்கங்களை அவர் எவ்வாறு பிரித்தாண்டார் என்பதனையும் 

கருணாநிதி  எழுதிய  நூலை  வாசித்து அறியவேண்டிய  தேவை  எனக்கில்லை சகோ

முகநூலில் தவறான பதிவுகள்  வருகின்றன  என்றபடி அடுத்த பகுதியில் யாரோ கொட்டியதைத்தான்  நீங்களும் தருகின்றீர்கள்

உங்களுக்கொரு பார்வை

எங்களுக்கொரு பார்வை

எம் தலைவரே  இறுதிக்கணம் வரை நம்பினார்

ஏமாற்றப்பட்டார் என்பது தான்  எம்  கண் முன்னால்  நடந்த வரலாறு

அதைத்தான் மேலே சீமானும் சொல்கிறார்

இதில் அவர்  பொய்  சொல்லவில்லை

சொன்னால் சுட்டிக்காட்டுங்கள்

 

இதில் நீங்கள் அவமானப்படுத்துவது தலைவர் பிரபாகரனை தான். பிரபாகரன் எப்போதுமே மற்றவர்கள் நம்பி தனது போராட்டத்தை நடத்தியதில்லை. அதை அனுபவபூர்வமாக பார்த்தவர்கள் தமிழர்கள். எப்போதுமே தன்னம்பிக்கையுடன் கொள்கை பற்றுடன் போராடும் போராளி. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை போல அவரது இராணுவ அரசியல் கணக்குகள் தவறியதால்  எம‍க்கு தோல்வி கிடைத்த‍து என்பதே உண்மை.  தமிழர்களின் வரலாற்றில் தமிழர்களுகளின் விடுதலைக்கு போராடி மடிந்த உண்மை போராளி பிரபாகரனுக்கும் முக்கிய இடம் உண்டு. அது வேறு விடயம்.

ஆனால் கலைஞர் தன்னால் முடிந்த அளவுக்கு புலிகள் உட்பட ஈழ போராளிகளுக்கு  உதவி புரிந்த‍தற்கான சாட்சியமான விடுதலை புலி தலைவர்கள் உயிருடன் இல்லை என்பதற்காக சில சுயநலமிகளின் பொய் உண்மையாகி விடாது. அதை நம்பி சிலர் தமது கவிதை திறனைக்காட்ட முகநூலில் கவி பாடுவதை ஆதாரமாக நினைக்காதீர்கள்.   இந்திய ராணுவத்துடனான உக்கிர யுத்த‍த்தின் பின்னர் 1989 / 90  காலப்பகுதியிலான கலைஞர் ஆட்சி  புலிகள் மீள பலம் பெற  மிகப்பெரிய வரபிரசாதமாக இருந்ததாக அவ்வேளையில் விடுதலைப்புலி உறுப்பினர்களுடனான தனிப்பட்ட உரையாடலிலை அவர்களே தெரிவித்திருந்தார்கள்.  தமிழகத்தில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினரான எனது நண்பனுடன் நான் உரையாடும் போது இந்தியாவில் இருப்பது உனக்கு ஆபத்தில்லையா என்ற கேட்டதற்கு ஈழத்தை விட இங்கு பாதுகாப்பாக உள்ளோம். நடப்பது திமுக ஆட்சி தானே என்று பதிலளித்திருந்தார். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

இதில் நீங்கள் அவமானப்படுத்துவது தலைவர் பிரபாகரனை தான். பிரபாகரன் எப்போதுமே மற்றவர்கள் நம்பி தனது போராட்டத்தை நடத்தியதில்லை. அதை அனுபவபூர்வமாக பார்த்தவர்கள் தமிழர்கள். எப்போதுமே தன்னம்பிக்கையுடன் கொள்கை பற்றுடன் போராடும் போராளி. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை போல அவரது இராணுவ அரசியல் கணக்குகள் தவறியதால்  எம‍க்கு தோல்வி கிடைத்த‍து என்பதே உண்மை.  தமிழர்களின் வரலாற்றில் தமிழர்களுகளின் விடுதலைக்கு போராடி மடிந்த உண்மை போராளி பிரபாகரனுக்கும் முக்கிய இடம் உண்டு. அது வேறு விடயம்.

ஆனால் கலைஞர் தன்னால் முடிந்த அளவுக்கு புலிகள் உட்பட ஈழ போராளிகளுக்கு  உதவி புரிந்த‍தற்கான சாட்சியமான விடுதலை புலி தலைவர்கள் உயிருடன் இல்லை என்பதற்காக சில சுயநலமிகளின் பொய் உண்மையாகி விடாது. அதை நம்பி சிலர் தமது கவிதை திறனைக்காட்ட முகநூலில் கவி பாடுவதை ஆதாரமாக நினைக்காதீர்கள்.   இந்திய ராணுவத்துடனான உக்கிர யுத்த‍த்தின் பின்னர் 1989 / 90  காலப்பகுதியிலான கலைஞர் ஆட்சி  புலிகள் மீள பலம் பெற  மிகப்பெரிய வரபிரசாதமாக இருந்ததாக அவ்வேளையில் விடுதலைப்புலி உறுப்பினர்களுடனான தனிப்பட்ட உரையாடலிலை அவர்களே தெரிவித்திருந்தார்கள்.  தமிழகத்தில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினரான எனது நண்பனுடன் நான் உரையாடும் போது இந்தியாவில் இருப்பது உனக்கு ஆபத்தில்லையா என்ற கேட்டதற்கு ஈழத்தை விட இங்கு பாதுகாப்பாக உள்ளோம். நடப்பது திமுக ஆட்சி தானே என்று பதிலளித்திருந்தார். 

உங்கள்  கருத்துக்கும்  நம்பிக்கைக்கும்  நன்றி சகோ

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கருணாநிதியின் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாக இருக்கலாம். 

 

2 hours ago, Eppothum Thamizhan said:

ஆனால் ஈழத்தமிழர்கள் அவருக்கா கண்ணீர்வடிக்கத்தேவையில்லை

 

2 hours ago, Eppothum Thamizhan said:

அவர் ஈழ விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளார்.

தமிழருக்கு எங்கு இன்னல் நேரிடினும் , அது உலகத் தமிழர் அனைவருக்கும் வலிக்க வேண்டும். எனவே ' உனக்கு நல்லவன், எனக்குக் கெட்டவன் ' என்றில்லை ; இருக்கக் கூடாது , சகோதரா !  " நின்னைச் செற்றனன் என்னைச் செற்றனன்; தீயரே ஆயினும் உனக்கு உற்றனன் எனக்கும் உற்றனன் " (உன்னைப் பகைத்தவன் என்னைப் பகைத்தான் ; தீயவனேயாயினும் உனக்கு வேண்டியவன் எனக்கும் வேண்டியவன்) என ஏதோ பிறவியில் நம்மிடையே நிகழ்ந்த உரையாடலைத்தானே கம்பன் பதிவு செய்தான் ? நினைவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்

கலஞைரை விடுவோம்.யாழில் நடக்கும் வன்முறைகளுக்கு முழுப் பொறுப்பையும் இராணுவம் மற்றும் சிங்கள புலாய்வுத்துறையை கை காட்டி எமது பிள்ளைகளை காப்பாற்றவோரிடம் வேறு எதை எதிர் பாக்க முடியும்.அவங்கள் எதிரி.நாம தான் எம்மை திருத்த வேணும்.எமக்குத்தானே ஆயிரம் பிரச்சனைகள் இங்கு இருக்கு.?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

தலைப்பில என்ன பிழை..? கேள்விக்குறி தானே போட்டிருக்கினம்.

நமக்கு சரிப்படாத தலைப்பு என்றவுடன்.. மனசு சங்கடப்படுகுதோ என்னவோ..??!

கருணாநிதி.. ஈழத்தில் இனப்படுகொலையில்.. துணை நின்றார் என்பது வெளிப்படை உண்மை தானே. இல்ல ராஜீவ் காந்தி மகன் ராகுல் காந்தி எதுக்கு கருணாநிதியின் இறுதிச் சடங்களில் முன்னுக்கு நிற்கனும்..????????! ?

 

“முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்றஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு.”

இதுதான் செய்தியில் விக்கி ஐயா சொன்னதாக உள்ளது. தலைப்பு கேள்விக்குறியோடு இருந்தாலும் தமிழின அழிப்பில் கருணாநிதி என்று தொனிப்பட விக்கி ஐயா சொன்னமாதிரி திரித்துச் சொல்லியிருக்கு. அதாவது இந்த அநாமேதய இணையக்காரர்கள் தங்களுக்கு விரும்பியதை விக்கி ஐயாவின் பெயரில் சொல்லியுள்ளார்கள். இது உங்களுக்கும் புரியும். ஆனால் ஏற்றுக்கொள்ளவா போகின்றீர்கள்!

9 hours ago, விசுகு said:

 

கருணாநிதி  சார்ந்து

ஈழத்தவரிடமுள்ள கவலையை 

விக்கி ஐயா (தமிழரின்  வடக்கு முதல்வர்) தெரிவித்திருப்பது தெரிந்தது

அதனால் தான் பதிந்தேன்.

செய்தியில்  அது பற்றி  இல்லாதுவிட்டால்  நீங்கள்  சொல்வது சரியே.

மேலும்  இணைக்கும் போதே இந்த இணையம்  யாழில் பதிய  தகுதியானதா என்பதை  நானும் யோசித்தேன்

சரியாக  தெரியாதபோது

நிர்வாகம்  பார்த்துக்கொள்ளும் என்ற நிலையில்  பதிந்தேன்

 

செய்தியை முழுமையாக வாசித்திருந்தால் தலைப்பில் திரிப்பை விளங்கியிருப்பீர்கள். ஆனால் அதுக்கெல்லாம் நேரம் எங்கே? கலைஞர்  கருணாநிதியை சேறடிக்க கிடைக்கும் வாய்ப்பை விடமுடியுமா என்ன! அதுவும் விக்கி ஐயா பேரில்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.