Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்; இந்தியர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி புகழாரம்

Featured Replies

Modi%201jpg

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், அதனை எண்ணி இந்திய மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்று வானொலியில் மனதில் இருந்து பேசுகிறேன் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார், அந்த வகையில் 45 மன்கிபாத் நிகழ்ச்சியில் இன்று மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:

நம்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பவர்களை வாழ்த்துகிறேன். இந்த மகத்தான பணியில் மூலம் பெரும் சமூகத்தின் வரலாற்றுக்கு தொண்டாற்ற முடியும்.

ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்தது. அதன் பழமையால் தனிச்சிறப்புடன் திகிழ்கிறது. உலகின் மிக பழமையான மொழி தமிழ். இதை எண்ணி ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது. வேதகாலத்தில் இருந்து தற்போதைய நவீன காலம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் நன்கு அறிவோம். உலகம் முழுவதும் அறிவை பரப்பியதில் சமஸ்கிருதுத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை நாம் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஸ்வேசரய்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படும்.

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் நடந்து முடிந்துளளது. மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.. 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

https://tamil.thehindu.com/india/article24784403.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Athavan CH said:

Modi%201jpg

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், அதனை எண்ணி இந்திய மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

....

https://tamil.thehindu.com/india/article24784403.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

"பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை!" என்ற சொலவடை ஞாபகத்திற்கு வருகிறது..!

அப்படி தமிழின் பெருமையை உணர்ந்தவரென்றால் தமிழ் வாழும் நாட்டில் ஏனிந்த பொந்தி திணிப்பு?

தமிழை தேசிய மொழியாக அறிவிக்கலாமே?

சென்னை உயர்நீதிமனறத்தில் தமிழை வழக்காடு பொழியாக அறிவிக்கச் செய்ய தமிழ் நாடு சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது..

எல்லாம் அடுத்த வருட மக்களவை தேர்தல் படுத்தும்பாடு!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ராசவன்னியன் said:

"பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை!" என்ற சொலவடை ஞாபகத்திற்கு வருகிறது..!

அப்படி தமிழின் பெருமையை உணர்ந்தவரென்றால் தமிழ் வாழும் நாட்டில் ஏனிந்த பொந்தி திணிப்பு?

தமிழை தேசிய மொழியாக அறிவிக்கலாமே?

சென்னை உயர்நீதிமனறத்தில் தமிழை வழக்காடு பொழியாக அறிவிக்கச் செய்ய தமிழ் நாடு சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது..

எல்லாம் அடுத்த வருட மக்களவை தேர்தல் படுத்தும்பாடு!

சும்மா ஒரு பேச்சுக்கும் கதைக்க விடமாடீங்களே tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான்  பல்பு எரியுதாக்கும் தமிழ் தமிழ் என்று நாலு வசனமும் ஆக்களை வைத்து நாலு புத்தகமும் எழுதி மறக்காமல் தன்பெயரை போட்டு நாலு தமிழ் விழா எடுத்தால் .  ஊருக்கு ஒரு பெண்டாட்டி வைத்து இருந்தால் நாட்டையே கொள்ளை அடித்து தன் குடும்பம் வாழ்ந்தால் என்ன அதுக்கு மேலே என்ன செய்தாலும் தமிழ்நாட்டு சனம் தமிழ் மயக்கத்தில் மட்டும் இருப்பினம் ஏனென்றால் தமிழ் உயரினும் மேலானது என்பது வேத வாக்கு தமிழனுக்கு.

இனி என்ன மோடி, ராகுல்காந்தி ,சோனியா நாலு தமிழ் கதை குரைத்து ஆளை வைத்து நாலு தமிழ்  புத்தகமும் எழுதினால் காணும் வோட்டு விழும் என நம்பி விட்டாங்க பாவி மக்காள்  எல்லாம் இந்த தன்னைதானே உலகத்தமிழரின் தலைவர் என்ற கருணாநிதியால் வந்த வினை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் பிரதமர் என்றால் சகல மக்களையும் சரி சமமாக நடாத்த வேண்டும்.ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு மாதிரி நடக்கிறவன் எப்படி தகப்பனாக தலைவனாக இருக்க முடியும்?

இதுக்கு தான் குடும்பம் பிள்ளைகுட்டி என்று இருந்தா தானே அதன் அருமை தெரியும்.

அடுத்த தேர்தலுக்கிடையில் தமிழ்நாட்டை இரண்டில் ஒன்றென்று பார்ப்பார் போல தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இவரின்ட வயா( ர )லாற்றை ஆராய்ந்து பார்த்தா ஒவ்வொர் முறை இப்படி புகழும் போதும் பின்னால் ஆப்பு வைத்து இருக்கார் ..( neet ) மாதிரி மற்றுமொரு ஆப்பு கன்பார்ம் ..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.