Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!!

Featured Replies

பரிஸில் 14 தமிழ்இளைஞர்கள் அதிரடிகைது! பயங்கர ஆயுதங்கள் மீட்பு!!

 

 

பிரெஞ்சுகாவற்துறையினால் பரிஸ் நகரில் வைத்து வாள்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள்அதிரடியாக நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஊடகங்கள் அனைத்திலும் இன்று இந்தசெய்தி முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.

பரிஸ் நகரின் 19 வட்டாரபோர்த் து பந்தன் (porte de Pantin) பகுதியில் மேற்படி இலங்கை இளைஞர்கள் குழு வாள்கள்> பெரும்கத்திகள்>இரும்புகம்பிகள் கண்ணீர்புகை கருவிகள் ஆகியவற்றுடன் நேற்று பிற்பகல் வேளை நின்றனர்.

இது குறித்து காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களையடுத்து அங்கு விரைந்த காவற்துறை அணி இவர்களை அனைவரையும் மாலை 15.45 மணியளவில்கைதுசெய்தனர். இவர்கள் அனைவரும் இன்றும் தடுத்துவைக்கபட்டுள்ளனர். கொமாண்டோ குழுமோதல்களில் ஈடுபட தயாராகும் வகையில் இந்த தமிழ் இளைஞர்கள் குழு இங்கு நின்றதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

https://www.ibctamil.com/france/80/105272?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

தேர்த்திருவிழாவில் தாக்க காத்திருந்தனர்! கைதான தமிழர்கள் குறித்து பரிஸ் காவற்துறை அதிர்ச்சி செய்தி !!

 

 

பரிஸ் நகரில் வைத்து கூரியவாட்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்களுடன் பிரெஞ்சுகாவற்துறையினால் அதிரடியாக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ள14 இலங்கை இளைஞர்களின் தடுப்புக்காவல் இன்றும் நீடிக்கபட்டுள்ளதாக தெரிகிறது.சட்டவிரோத ஆயுத பிரயோக முயற்சி குற்றங்களின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் இவர்களின் தாக்குதல் திட்டம் குறித்த புதிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் இடம்பெற்ற மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் பின்னர் குழு மோதல் ஒன்றில் ஈடுபடும் வகையில் இந்த இளைஞர்கள் தயார்படுத்தல்களை செய்யதாகவும் இவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதான அனைவரும் நியூலி சூ மார்ன்(Neuilly-sur-Marne)பகுதியில் வசிக்கும்18 முதல்29 வயதுக்கு உட்பட்ட இலங்கை குடியுரிமையை கொண்ட இளைஞர்கள் என காவற்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழா உற்சவத்தில் சுமார்40.000 மக்கள் கூடியிருந்த நிலையில் திருவிழா முடிந்தபின்னர் தமிழ் இளைஞர்களில் ஒரு பகுதி வன்முறைகளில் ஈடுபட ஆயத்தமாகியதாக குறிப்பிடும் பரிஸ் காவற்துறை,தேர்த்திருவிழாவுக்கு பின்னர் தமிழ் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் குழு வன்முறைகளில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் அண்மைய வருடங்களில் அவதானிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

இந்த இளைஞர்கள் குழுவிடம் இருந்த இரண்டு பைகளில் கூரியவாட்கள் பெரும் கத்திகள் உட்பட்ட ஆயுதங்கள் மட்டுமன்றி கண்ணீர்புகை கருவிகள் இருந்ததாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

https://www.ibctamil.com/france/80/105324?ref=imp-news

அப்படியே இலங்கைக்கு  ஏத்தி விட்டிடனும் அதுக்கு பிறகு தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அபராஜிதன் said:

அப்படியே இலங்கைக்கு  ஏத்தி விட்டிடனும் அதுக்கு பிறகு தெரியும்..

ஏன்...அபராஜிதன்?

அங்கே இருக்கிற உள்ளூர் உற்பத்தியே....காணும் எண்டு நினைக்கிறன்!

இறக்குமதியைச் சனம் தாங்காது!

அங்க போனால் வருமானம் தடைப்பட இப்படி தெருவில் நிக்க  கஸ்டம் தானே 

  • கருத்துக்கள உறவுகள்

பாரீஸே சட்டவிரோதக் கும்பல்களின் சொர்க்கம் தானே. இதில..... இந்த 14 பேரின் கைது மட்டும்.. ஒன்றும் பெரிசா சாதிச்சு விடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.