Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!

தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப் பெறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என, வடக்கு மக்களும் புலம்பெயர் சமூகமும் நன்கு அறிந்துள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் பிரதமர் மஹிந்தவுடனேயே இருக்கிறார்கள். அவர்கள் மஹிந்தவையே நாட்டின் தலைவராக நேசிக்கிறார்கள்.

எனவே, வடக்கில் சுமூக நிலையை ஏற்படுத்தி அங்கு அபிவிருத்திகளைச் செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து செயற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் சமூகத்துடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றது. அவர்களை சிறுபான்மையினத்தவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களும் இந்த நாட்டின் இன்னொரு சமூகம்.

அவர்களுக்கும், அவர்களது சமூகத்தினருக்கும் சரியான இடத்தைக் கொடுக்க வேண்டும். எனினும் நாம் பயங்கரவாதிகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு அவர்களது பாணியில் பதில் கொடுப்போம்” என்றார்.

 

http://athavannews.com/தெற்கு-சிங்களவர்களின்-ஆச/

 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நீங்க தேர்தலில் நின்று வென்று காட்டுங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின்ஆசீர்வாதமின்றி மகிந்தவின் அதிரடி பிரதமமந்திரி கனவு கலைந்து பாேயிற்றே.   என்னவாே சி்ங்களமக்களின் ஆசீர்வாதத்துடன் சர்சவதேசத்தின் பாெறியில் மாத்தையா தலையை மாட்டிக்காெள்ளப்பாேகிறேன் என அடம் பிடிக்கிறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!

ஒரு அப்பட்டமான இனவாதத்தின் சான்றிதழ் இதுவாகும். 

13 hours ago, கிருபன் said:

தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இப்பிடியான சூழ்நிலைகள் அறவே இல்லாத ஒரு தீர்வே தமிழர்களுக்கு வேணும்!

அதைத் தான் விக்னேஸ்வரன் அவர்கள் கூறி வருகிறார். ஆனா சுமந்திரன்-சம்பந்தன்-மாவை தொடர்ச்சியா அவர்ரை காலை வாரி வருகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய!

தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப் பெறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என, வடக்கு மக்களும் புலம்பெயர் சமூகமும் நன்கு அறிந்துள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் பிரதமர் மஹிந்தவுடனேயே இருக்கிறார்கள். அவர்கள் மஹிந்தவையே நாட்டின் தலைவராக நேசிக்கிறார்கள்.

எனவே, வடக்கில் சுமூக நிலையை ஏற்படுத்தி அங்கு அபிவிருத்திகளைச் செய்ய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து செயற்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் சமூகத்துடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றது. அவர்களை சிறுபான்மையினத்தவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களும் இந்த நாட்டின் இன்னொரு சமூகம்.

அவர்களுக்கும், அவர்களது சமூகத்தினருக்கும் சரியான இடத்தைக் கொடுக்க வேண்டும். எனினும் நாம் பயங்கரவாதிகள் தொடர்பில் அவதானமாக இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு அவர்களது பாணியில் பதில் கொடுப்போம்” என்றார்.

 

http://athavannews.com/தெற்கு-சிங்களவர்களின்-ஆச/

 

இதற்கு ஜீவாவின் பதில் என்ன. தன்னை மாதிரி சிங்களவர்களின் காலில் விளச்சொல்வாரோ

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தவர கடல் இருக்கோ இல்லையோ எட்டுபக்கமும் கடனை வாங்கி கரியாக்கிவிட்டு எகத்தாளத்தை பாருங்கோ .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

சுத்தவர கடல் இருக்கோ இல்லையோ எட்டுபக்கமும் கடனை வாங்கி கரியாக்கிவிட்டு எகத்தாளத்தை பாருங்கோ .

அதிலையும் சிலோனுக்கு வாற வருமானத்திலை அரைவாசி பங்குக்கு மேலை மலையகதமிழரின்ரை இரத்தம் சிந்திய உழைப்பும் அடங்குதெண்டு மொக்கன்களுக்கு தெரியாது போலைகிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ragaa said:

இதற்கு ஜீவாவின் பதில் என்ன. தன்னை மாதிரி சிங்களவர்களின் காலில் விளச்சொல்வாரோ

என்ன ஜீவன் சிவா என்னாச்சு பதில் சொல்லுங்க பாஸ் ...

17 minutes ago, குமாரசாமி said:

அதிலையும் சிலோனுக்கு வாற வருமானத்திலை அரைவாசி பங்குக்கு மேலை மலையகதமிழரின்ரை இரத்தம் சிந்திய உழைப்பும் அடங்குதெண்டு மொக்கன்களுக்கு தெரியாது போலைகிடக்கு....

மலையக தமிழருக்கு நுண்கடன் திட்டம் இல்லையாமே ?

எல்லாரும் வளைகுடா பக்கம் வேலைக்கு போகக்கூடாது எனும் நல்லெண்ணம் ஆக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
50 minutes ago, பெருமாள் said:

என்ன ஜீவன் சிவா என்னாச்சு பதில் சொல்லுங்க பாஸ் ...

மலையக தமிழருக்கு நுண்கடன் திட்டம் இல்லையாமே ?

எல்லாரும் வளைகுடா பக்கம் வேலைக்கு போகக்கூடாது எனும் நல்லெண்ணம் ஆக்கும் .

யார் விட்டாலும் தொண்டை மான் கொம்பனி மலையகதமிழரை வளைகுடா பக்கம் போக விடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

யார் விட்டாலும் தொண்டை மான் கொம்பனி மலையகதமிழரை வளைகுடா பக்கம் போக விடாது.

அதுக்கதானே அவர்கள் இவ்வளவு நாளும் நாடகம் ஆடினார்கள் அனால் சமீபத்தில் ஒரு சிங்கள அமைச்சரே இவர்கள் வளைகுடா நாடுகளுக்குக்கு போவதை பற்றி ஓநாய் போல் அழுதவர் எத்தனைநாளைக்குத்தான் சிறைச்சாலைக்கு ஒப்பான கூட்டுக்குள் அவர்கள் வாழ்வது அதுசரி யாழில் தேவையில்லாமல் குந்தியிருந்து கொண்டு அழிசாட்டியம் பண்ணும் இந்திய தூதரகம் ஏன் மலையகத்தில் அமையவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகள் எவ்வாறு வளைகுடாவை ஆக்கிரமித்தார்கள் முத்து பைனான்ஸ் ,cfg பைனான்ஸ் போன்ற நுண்கடன் கொடுப்பவர்கள் மூலம். மலையாளிகளை விட கேவலமான நிலையில் இருந்த மலையகத்தில் நுண்கடன் மறுக்கபடுது வடக்கில் கிழக்கில் தாரளமாக கொடுக்கபடுது காரணம் இருக்கும் மிஞ்சிய தமிழர் அவுஸ் தாய்லாந்து என்று கடனை வாங்கிகொண்டு ஓடி துலையுங்க மலையகத்தில் உள்ளவர்கள் எந்த உதவியும் கிடைக்காமல் சிங்கள இனமாய் மாறி சிங்களத்துக்கு அடிமையாய் இருங்க எனும் இனத்துவேச கோட்பாடு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, பெருமாள் said:

அதுக்கதானே அவர்கள் இவ்வளவு நாளும் நாடகம் ஆடினார்கள் அனால் சமீபத்தில் ஒரு சிங்கள அமைச்சரே இவர்கள் வளைகுடா நாடுகளுக்குக்கு போவதை பற்றி ஓநாய் போல் அழுதவர் எத்தனைநாளைக்குத்தான் சிறைச்சாலைக்கு ஒப்பான கூட்டுக்குள் அவர்கள் வாழ்வது அதுசரி யாழில் தேவையில்லாமல் குந்தியிருந்து கொண்டு அழிசாட்டியம் பண்ணும் இந்திய தூதரகம் ஏன் மலையகத்தில் அமையவில்லை ?

விசுக்கோத்து கொம்பனி முத்தையர் சுருளி  இதுகளைப்பற்றி வாயே திறக்கமாட்டுது ....ஆனால் வடக்குகிழக்கு  பிரச்சனை பற்றி நெசனல் லெவல்லை  பிழந்து கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தன்னுடைய மதுசார கம்பனி யின் பங்குகள் பற்றிய பிரச்சனை .

சிம்பிளா கூகிள் தட்ட வரும் அவரின் கொண்டையினர் மது மூலப்பொருளை எத்தனை தடவை இலங்கை கஷ்ட்டம் பிடிச்சு ராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசுக்கு சார்பாக கதைக்க வைத்தனர் என்று விபரமாய் எடுத்து சொல்லனும் .

6 hours ago, பெருமாள் said:

அவருக்கு தன்னுடைய மதுசார கம்பனி யின் பங்குகள் பற்றிய பிரச்சனை .

சிம்பிளா கூகிள் தட்ட வரும் அவரின் கொண்டையினர் மது மூலப்பொருளை எத்தனை தடவை இலங்கை கஷ்ட்டம் பிடிச்சு ராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசுக்கு சார்பாக கதைக்க வைத்தனர் என்று விபரமாய் எடுத்து சொல்லனும் .

முத்தையா  முரளிதரன் எத்தனோல் கடத்தலில் மும்மரமாக இருக்கிறார்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.