Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mano-7-720x450.png

அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ

அரச பயங்கரவாதம் தற்போது நாட்டில் தலையெடுத்துள்ளமையால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு ஏற்படலாமென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, மனோ கணேசன் இதனை கூறியுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“நாட்டின் நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற நகர்வுகள் காணப்படுகின்றது.

இவ்வாறு தொடர்ச்சியாக ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறுமானால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கின்ற தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை மேற்கொள்வதற்கு தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு நாட்டின் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரி, நாட்டு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை சிறந்த அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வாரென எண்ணிய அனைத்தும் தலைகீழாக தற்போது காணப்படுகின்றது” என மனோ கணேசன் கவலை வெளியிட்டுள்ளார்.

http://athavannews.com/அரச-பயங்கரவாதத்தால்-தமிழ/

மனோ... நாங்கள், சும்மா... இருக்கின்றோம். ஏனய்யா... இதுக்குள், எங்களை  கோத்து  விடுகின்றீர்கள்.
சிங்களவன்  தமக்குள் அடித்து... சாவதை,  பார்க்க... எமக்கும்,  ஒரு சந்தர்ப்பம் கொடுங்களேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்ல வருகிறார்?

 

சிங்களவனுக்கு தெரியும் இனி ஒரு போராட்டம் தமிழர்களால் நடாத்துவது முடியாது என்று எனவே அவங்கள் அடிபட்டு கொண்டாடி மகிழ்கிறார்கள் நாளை தங்களுக்குள் கொலை செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள் அதை இந்த மனிசன் கெடுத்து கொண்ட்டாடிகொண்டு இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடாத்துவது முடியாது என்று எழுதியவுடன் மகிழ்ச்சி கொள்ளவேண்டாம் காலசக்கரம் நாளை என்ன நினைக்குது என்பதை  சிறியோர்கள் ஆகிய நாங்கள் தீர்மானிக்க முடியாது . விசித்திரமாக பல வரலாறுகள் உலகில் உருவாகிஉள்ளது என்பதும் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அமைச்சர் பதவி வேணுன்னா.. சிங்கள நண்பர்களிடம் கேட்டு வாங்கிக்கிறது.

தனிநாட்டு.. தமிழர்கள் கையில் ஆயுதம் போன்ற பதங்களை பாவித்து தமக்குள் அதிகார வெறி பிடித்து அடித்துக் கொண்டிருக்கும் சிங்களவர்களை இவர் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் ஒற்றுமைப்படுத்த முனைவது ஏன்..????!

தனிநாட்டை பிரகடனம் செய்தால்.. அயலில் உள்ள ஹிந்தியப் பயங்கரவாதம் தான் ஏற்குமா என்ன.. சீனன் ஏற்பானா..??!

தமிழர்கள் இன்றைய பூகோள அரசியல் பொருண்மிய நிலையில்.. நவீன தொழில்நுட்ப வேவுகள் நிறைந்த உலகப் பந்தில்.. மீண்டும் ஒரு காத்திரமான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்பது தற்கொலைக்குச் சமனானது. ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

தனிநாட்டை பிரகடனம் செய்தால்.. அயலில் உள்ள ஹிந்தியப் பயங்கரவாதம் தான் ஏற்குமா என்ன.. சீனன் ஏற்பானா..??!

தமிழர்கள் இன்றைய பூகோள அரசியல் பொருண்மிய நிலையில்.. நவீன தொழிநுட்ப வேவுகள் நிறைந்த உலகப் பந்தில்.. மீண்டும் ஒரு காத்திரமான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்பது தற்கொலைக்குச் சமனானது. ?

கிந்தியன் ஏற்கமாட்டான்? ஆனால் சீனன் கண்டுகொள்ள மாட்டான் என்றும் நம்பிக்கை கொள்ளலாம்.☺️

 

32 minutes ago, பெருமாள் said:

இங்கு நடாத்துவது முடியாது என்று எழுதியவுடன் மகிழ்ச்சி கொள்ளவேண்டாம் காலசக்கரம் நாளை என்ன நினைக்குது என்பதை  சிறியோர்கள் ஆகிய நாங்கள் தீர்மானிக்க முடியாது . விசித்திரமாக பல வரலாறுகள் உலகில் உருவாகிஉள்ளது என்பதும் உண்மை .

இது நெடுக்காலைபோவன் அவர்களுக்கும் சமர்ப்பணமாகட்டும்.?

  • கருத்துக்கள உறவுகள்

தன்மானத்தையும் உரிமையையும் வெல்ல இன்று ஈழத்தமிழனுக்கு தேவை போர் வீரர்களல்ல கர்ம வீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

இவர் என்ன சொல்ல வருகிறார்?

 

சிங்களவனுக்கு தெரியும் இனி ஒரு போராட்டம் தமிழர்களால் நடாத்துவது முடியாது என்று எனவே அவங்கள் அடிபட்டு கொண்டாடி மகிழ்கிறார்கள் நாளை தங்களுக்குள் கொலை செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள் அதை இந்த மனிசன் கெடுத்து கொண்ட்டாடிகொண்டு இருக்குது. 

முடிந்தால் ஊதிப்பெருப்பிக்கிறது.

On 11/17/2018 at 11:00 AM, தமிழ் சிறி said:

அரச பயங்கரவாதத்தால் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு- மனோ

அதே அரச பயங்கரவாதிகளுடன் கூடிக்குலவி கூத்தாடிய மனோ கணேசன் அமைச்சு சொகுசு நாற்காலி பறிபோன கவலையில் உளறுகிறார்.

போராடும் தகுதியுடைய தமிழ் மக்கள் சார்பில் கதைக்க இவருக்கு எந்த அருகதையும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.