Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் இலக்கியம் என ஒன்று இருக்கிறதா?

Featured Replies

ஈழத்தில் இலக்கியமே இல்லை. இரண்டு மூன்றுபேர் போர்க் கதைகளையும் அதைச் சுற்றிய வலி அனுபவங்களையும் டெம்லேட் மெட்டீரியலாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் சண்டையென்றால் சிரிப்பு வருகிறது. 

தமிழ்நாட்டில் இலக்கியச் சண்டை நடப்பதற்கு வலுவான பல காரணங்கள் உண்டு. புதுமைப்பித்தன் எழுதிய முதல் கதையிலிருந்து இலக்கியத்திற்கான தரம் குறித்த சண்டை சர்ச்சைகளில் இறங்கலாம். பிறகு எழுதிய ஒவ்வொருவரும் உலகத்தரமான கதைசொல்லிகள். மாஸ்டர்கள். 

ஆதவன் கதைகளை ஆராய்ந்தால் ஒரு பொதுப்புத்தி தமிழன் எழுதிய கதைகள்போல இருக்காது. ஆதவன் எண்பதுகளில் வாழ்ந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்காரன். 
பா. சிங்காரம் போர்க் கதைகளை பயணக் கட்டுரை சுவாரஸியத்தோடு எழுதினான். தஞ்சை ப்ரகாஷ் முற்போக்கு எழுத்திலிருக்கும் கோபத்தை அகற்றிவிட்டு அதற்குக் கலைவடிவம் கொடுத்தான். இதுமாதிரி ஐம்பது மாஸ்டர்களை கை காட்டலாம். இளம் எழுத்தாளரான லஷ்மி சரவணக்குமார் வரைக்கும் தனித்துவமான எழுத்தாளர்கள் நிறைந்த நிலம் இது. இங்கு நடக்கும் சண்டைகளுக்கு வளர்ச்சி என்ற மாற்று அர்த்தமுண்டு. சின்ன விவாதம் முதல் அடிதடி வரைக்கும் போவதற்கு தமிழ் இலக்கியம் தகுதியானது. இலக்கியம் வளர்ந்து குலைதள்ளி பக்கக்கன்களை உருவாக்கிய நிலத்தில் சண்டைகளை கொண்டாடலாம்.

ஈழத்தில் நடக்கும் இலக்கியச் சண்டைகளை ஆண்டி மடம் கட்டிய கதையாகப் பார்க்கிறேன். ஈழத்து மண்ணில் உலகம் ரசிக்கும் கொண்டாடும் இலக்கியம் இருக்கிறதென்ற கற்பனையில் சண்டை போடுகிறார்கள். ஈழத்துச் சண்டைகளை சலம்பல்கள் என்ற அளவில் புரிந்துகொள்கிறேன். 

இலக்கிய அடையாளமில்லாமல் பேஸ்புக்கில் எழுதும் ஈழத்து மக்கள் படு சுதந்திரமாக எழுதுகிறார்கள். போர் நிலம் என்ற கடிவாளமில்லாமல் எழுதுகிறார்கள். எல்லாவற்றை குறித்தும் பரந்த பார்வையிருக்கிறது. இவர்கள் குவிந்து இலக்கியம் எழுதவேண்டும்.

இலக்கிய உலகில் சண்டை வேண்டுமென்றால் சண்டைக்கான சரக்கு பிரதி வடிவில் இருப்பது முக்கியம். ஈழ இலக்கியத்தில் சரக்கு குறைவு. வாய் ஜாலம் அதிகம். 

குழப்பாமல் சொல்கிறேன். அமெரிக்கா அல்லது அண்டார்டிக்க தமிழ் எழுத்தாளர்களுக்குள் தள்ளு முள்ளு. அடிதடி கலவரமென தலைப்புச் செய்தி வந்தால் எப்படி வினையாற்றுவோம்! நான் **தால் சிரிப்பேன். அதே கதைதான் ஈழத்துக்கும்.

 

சாம் நாதன் ( முகநூல்)

அகர முதல்வன மற்றும் குணா கவியழகன் இடையேயான முறுகல் ஜெயமோகன குணா கவியழகன் எழுத்துகளை இலக்கியமே இல்லை என எழுதியதன் பின்னனியில் இக்கட்டுரை எழுதபட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சாம் நாதன் யார்?...ஈழத்தவரோ

இரண்டு புலிகள் அல்லது புலிகளில் இருந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் தங்கட நூல்களை விற்பதற்காக சண்டை பிடிக்கிறார்கள் என நினைக்கிறேன்...இதில் ஜெய மோகனுக்கும் ,சாமுக்கும் ஏன் தேவையில்லாத வேலை

கேள்வியில் தவறு இல்லை எனத்தான் நானும் நினைக்கின்றேன். தமிழர் போராட்டத்தின் தோல்வியின் பின் வெளி வந்த புலிகளுக்கு எதிரான ஒற்றைப் பார்வையைக் கொண்ட ஒரு சில படைப்புகளும் போரின் வலியை சொல்லும் சில படைப்புகளும் மட்டுமே ஈழத்து இலக்கியம் ஆகிவிடாது. எமக்கு என்று ஒரு பரந்துபட்ட இலக்கிய போக்கோ படைப்புகளோ எதுவுமில்லை.

 

 

 

சில எழுத்தளர்கள் மத்தியல் நடக்கும் அடயாளம் அங்கீகாரம் தேடும் போட்டிகள் அபத்தமான கருத்துக்களை தோற்றுவிக்கின்றது. 

இலக்கியம் என்பது பல்வேறு வடிவங்களால் புரிந்துகொள்ளப்படுவது. இலக்கியத்திற்கு ஒரு கவிஞ்ஞனோ அல்லது கதை எழுதுபவரோ தலைவனாக முடியாது. அல்லது இலக்கியத்திற்குள் நான் பெரிது நீ பெரிது என்று சண்டை போட முடியாது. 

இலக்கியம் ஒரு காலத்தை பதிவு செய்வது , கலாச்சாரத்தை, மொழியை பதிவு செய்வது மேலும் இவைகளுக்கு இடையேயான மாற்றத்தையும் கடந்த காலங்களில் இருக்கும் நல்ல விசயங்களை நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நகர்த்தும் செயலை செய்வது என்பது போன்ற பல்வேறு நிலைகளில் புரிந்துகொள்ளப்படவேண்டியது. இனி இவற்றை எழுத்து மூலமாக என்னும் போது கதையாக கவிதையாக விமர்சனமாக குறிப்புகளாக வரலாற்று பதிவுகளாகவும், இசை நாடகம் ஓவியம் ஒளிப்பதிவுகள் என பல வடிவங்களில் இலக்கியம் பதிவுசெய்யப்படுகின்றது. 

ஒரு தேசீய இனத்துக்கான இலக்கியம் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கான இலக்கியம் என்ற அணுகுமுறையும் பரந்துபட்ட மனப்பாங்கும் தான் ஆரோக்கியமானது. ஈழத்து இலக்கியம் தமிழகத்து இலக்கிம் என்ற அணுகுமுறை ஆரோக்கியமானதாக இருக்கமுடியாது. 

ஒரு இருப்பத்தைந்து வருட யாழ்க்ளத்தை அப்படியே பதிவுசெய்து பாதுகாத்து 100 வருடங்களின் பின்னர் வருபவர்கள் படித்தால் அவர்களுக்கு எந்த எழுத்தாளனும் கவிஞனும் கொடுக்க முடியாத ஒரு காலத்தின் புரிதலை  இக்களம் கொடுக்கும் . இலக்கியம் சார்ந்த எனது புரிதல் இவ்வாறானதுதான்.  

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎25‎/‎2018 at 5:22 PM, நிழலி said:

கேள்வியில் தவறு இல்லை எனத்தான் நானும் நினைக்கின்றேன். தமிழர் போராட்டத்தின் தோல்வியின் பின் வெளி வந்த புலிகளுக்கு எதிரான ஒற்றைப் பார்வையைக் கொண்ட ஒரு சில படைப்புகளும் போரின் வலியை சொல்லும் சில படைப்புகளும் மட்டுமே ஈழத்து இலக்கியம் ஆகிவிடாது. எமக்கு என்று ஒரு பரந்துபட்ட இலக்கிய போக்கோ படைப்புகளோ எதுவுமில்லை.

 

ஈழத்தில் இலக்கியம் இருக்கிறதா/இல்லையா என்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் வரேல்ல...அ.முதல்வனுக்கும்,குணாவுக்கும் நடக்கும் சண்டையில் அடுத்தவர்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை

  • தொடங்கியவர்

அக்கா,அகர முதல்வனுக்கும் குணா கவியழகனுக்கும் நேரடி சண்டை எதும் இல்லை, ஜெயமோகன் சயந்தனை குணா கவியழகனுக்கு எதிராக நிலை நிறுத்துகிறார்,அதே நேரம் தமிழகதில் இப்போது இருக்கும ஈழமுகம் அகர முதல்வன்,ஆனால் அகரமுதல்வனோ தனது கூட்டங்களில் பி ஜெ பி காரர்களை விருந்தினர்களக அழைக்கிறார், தமிழ் திரைப்படங்களில் சில பங்களிப்புக்களயும் அகர முதல்வன செய்கிறார்.. ஈழபடைப்பாளர்களின் முகமாக அகரமுதல்வன் முன்னிலைபடுத்த படுவது பிடிக்காமல் கூட இருக்கலாம்.. இலக்கியம் என்றாலே பிடுங்கு பாடு தானே எப்போதும்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, அபராஜிதன் said:

அக்கா,அகர முதல்வனுக்கும் குணா கவியழகனுக்கும் நேரடி சண்டை எதும் இல்லை, ஜெயமோகன் சயந்தனை குணா கவியழகனுக்கு எதிராக நிலை நிறுத்துகிறார்,அதே நேரம் தமிழகதில் இப்போது இருக்கும ஈழமுகம் அகர முதல்வன்,ஆனால் அகரமுதல்வனோ தனது கூட்டங்களில் பி ஜெ பி காரர்களை விருந்தினர்களக அழைக்கிறார், தமிழ் திரைப்படங்களில் சில பங்களிப்புக்களயும் அகர முதல்வன செய்கிறார்.. ஈழபடைப்பாளர்களின் முகமாக அகரமுதல்வன் முன்னிலைபடுத்த படுவது பிடிக்காமல் கூட இருக்கலாம்.. இலக்கியம் என்றாலே பிடுங்கு பாடு தானே எப்போதும்

விளக்கத்திற்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியச் சண்டைகள் எப்போதும் இருக்கும். முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்று குழுவாகப் பிரிந்து சிற்றிதழ்களில் வாதம் செய்தார்கள். ஆதரவு முகாம், எதிர்ப்பு முகாம் என்று எழுத்தாளர்கள் அடிபடுவது சில நேரம் எரிச்சலைத் தரும்.

தஞ்சை பிரகாஷின் ஒரு நாவலைப் படித்தேன். முற்போக்கில் இருக்கும் கோபத்தை அகற்றி கலைவடிவம் கொடுத்தமாதிரித் தெரியவில்லை. வெறும் பிதற்றல் மாதிரி இருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியம் என்பது இலக்கு நோக்கியது மட்டுமன்றி ஒரு மொழி பேசும் மக்களின் உணர்வுகளை, செய்திகளை மற்றவர்க்கு எடுத்துக் கூற முயல்வது. அக்காலத்தில் கூட புலவர்களிடையே போட்டிகளும் பொறாமைகளும் நிலவின என்பதற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால் அவர்கள் காலம் போலல்லாது இப்போதுள்ள ஈழத்து எழுத்தாளர்களிடமோ அல்லது கவிஞர்களிடமோ ஆழ்ந்த தமிழ்ப் புலமையோ ஆக்குதிறனோ இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனாலும் இருக்கும் சிலரையும் கூட பலர் அறிந்துகொள்ளவில்லை என்பதுமட்டுமல்ல ஆழ்ந்த வாசிப்புத்திறன் கூட இணையத்தின் பயன்பாட்டில் சிதறிவிட்டதும் ஒரு காரணம். மற்றுமொன்று தமக்குப் பிடித்த சிலரை மட்டும் போற்றுவதும் மற்றவரைத் தூற்றுவதுமாக ஈழத்து இலக்கியவாதிகள் தம் இலக்கை எதுவென்று தெரியாது கடக்கின்றனர்.  

சண்டமாருதன் நீங்கள் கூறுவதுபோல் இலங்கை இந்தியத் தமிழர்களை ஒரு வட்டத்துள் கொண்டுவர முடியாது. ஈழத்து இலக்கியம் வேறு தமிழகத்து இலக்கியம் வேறு. எங்கள் இழப்புக்களை வலிகளை எந்த யெயமோகனாலோ அல்லது வேறு எந்த இந்திய எழுத்தாளராலும் எழுதவே முடியாது. இலக்கியம் எழுதும் காலத்தில் யாராலும் போற்றப்படுவதில்லை. எமது அடுத்தடுத்த தலைமுறையால் அது புரிந்துகொள்ளப்படுமானால் அதுவே இலக்கியத்தின் வெற்றி.
ஆனாலும் எழுதப்படாத இலக்கியங்களான நாட்டார் பாடல்கள், விழாக்கள்,கட்டடங்கள் என எதுவுமே புதிதாக ஆக்கப்படாது பாரிய ஒரு இடைவெளியை எம் தேசத்தில் ஏற்படுத்தியிருக்க, எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் நூல்களும், பாடல்களும் எதோ ஒருவகையில் ஈழத்தவர் வாழ்வியலைச் சொல்ல, சங்க இலக்கிய நூல்களும், கோயில்களும் கோபுரங்களும் அச்சில் கோர்க்கப்படட பழமொழிகளும் நாட்டுப்புறப் பாடல்களும் மட்டுமே தொடர்ந்தும்  தமிழுக்காய் எஞ்சியிருக்கப் போகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.