Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த வளர்த்து வரும் கருணாவுக்கும், கள்ள அரசாங்கத்துக்கும், காவற்துறையினரின் கொலைக்கும் தொடர்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
November 30, 2018

Karuna-MR-MY3.jpg?zoom=1.210000026226043
மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருக்கலாமென, பாராளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் சுமந்திரன் ஆகியோர் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நளின் பண்டார, மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவமானது பாரதூரமான ஒன்றாகும். அண்மையில் கருணா அம்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

 

அதில், ‘சில ஐக்கிய தேசியக் கட்சியினர் கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். நான் மட்டக்களப்பு கருணா அம்மான் . 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய கருணா அம்மான் என்றால் யார் என மற்றவர்களிடம் கேளுங்கள்…” என பதிவிட்டுள்ளார்.இதற்கு பின்னரே நேற்றிரவு இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் கருணா அம்மானுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.

இது பாரதூரமான விடயமாகும். உடனயாக ஜனாதிபதி தலையிட்டு இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். புலி புலி என இனவாதத்தை தூண்டும் மஹிந்த அணியினரான விமல் வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் தற்போது வாயை மூடிக்கொண்டிருக்கின்றனர்.இவர்களை போன்று நாம் இனவாதத்தை தூண்டுபவர்கள் அல்ல. மாறாக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுதொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

காவற்துறை உத்தியோகத்தர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி சூடானது நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைத்தோங்கிறது என்பதை தெட்டத் தெளிவாக காட்டுகிறது. இது நாட்டில் தீவிரவாதம் தலைதூக்குகின்றது என்பதையே உணர்த்தி நிற்கிறது.மஹிந்த ராஜபக்ஸ வளர்த்து வரும் கருணா அம்மான் போன்றவர்களைப் பாவித்து இந்த கள்ள அரசாங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தினை கெடுக்க முயற்சிக்கின்றதாக என எண்ணத் தோன்றுகின்றது.

இதன் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் இருக்கின்றாரா என விசாரணை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துங்கள்” என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். “இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்துகிறேன் மேலும் பாதுகாப்பு செயலாளருக்கும் விசாரணை செய்து விளக்கமளிக்குமாறு தெரியப்படுத்துகிறேன்” என சபாநாயகர் சபையில் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/2018/105181/

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பிழம்பு said:

அதில், ‘சில ஐக்கிய தேசியக் கட்சியினர் கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். நான் மட்டக்களப்பு கருணா அம்மான் . 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய கருணா அம்மான் என்றால் யார் என மற்றவர்களிடம் கேளுங்கள்…” என பதிவிட்டுள்ளார்.இதற்கு பின்னரே நேற்றிரவு இரண்டு காவற்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் கருணா அம்மானுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.

எவன்டா என்ரை அண்ணனை வம்புக்கிழுக்கிறதென்று ரதி கோபத்தில் வரப் போகிறா?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, சொறி இலங்கை அரசை பொறுத்தவரையில் பயங்கரவாதி அல்லது கூலிப்படை.

கருணாவும் அதை விரும்பி சிரமேற்கொண்டுள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐதேகவின் நளின் பண்டார கருணாவை சாட்டுகிறார். கருணா அதனை மறுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினம் முடிந்து, இரண்டாவது நாள்...  காவல் துறையினர் மீது... 
கொலை நடக்கும் போது, அப்படித்தான் எண்ணத்  தோன்றுகின்றது. 

ஏற்கெனவே... மாவீரர் நிகழ்வுகள் சிறப்பாக நடந்த கடுப்பில், மகிந்த அரசாங்கம்? உள்ளது.
இதனை சாட்டி... புலிகள் உயிர் பெற்று விட்டார்கள் என்ற பொய்யை... 
சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி, மிகுதியாக இருக்கும் தமிழர்களையும்... 
மகிந்த,  ஒரு வழி பண்ணப் போகின்றார் என்பதில் சந்தேகம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரின் வாக்குக்காகவும், தமிழர்களை அச்சுறுத்தி அடிமைகளாக வைத்து சுரண்டுவதற்கும், மாவீரரின் நினைவுகளை தமிழ்மக்களின் மனங்களில் இருந்து மறங்கடிப்பதற்கும் அழகாக திட்டமிட்டு தமிழ் இளைஞர்களை பொலீஸ், இராணுவதில் சேர்த்து வடக்கிலும் கிழக்கிலும் ஒவ்வொரு அலம்பறைகளுக்கு பட்டுக்குஞ்சம் கட்டி தமக்கு நெருக்கடி வரும்பாேதெல்லாம் விரலை சுண்டியவுடன் வாலை ஆட்டிக்காெண்டு காலடியில் வந்து எசமான் இடும் பணியை தலையில் வைத்து கூவிக்கூவிசுடலைச்சாத்திரம்சாெல்லி  ஆள்பிடிப்பதும்,  இல்லாத ஒரு  புலியை உருவாக்கிபடையிலுள்ள இளைஞரை காெலைசெய்வதும், பின்னர் முன்னாள் பாேராளிகளை கைது செய்வதும், மாவீரர்தின ஏற்பாடு செய்தவர்களை விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவதும் சிங்களத்தின் காய்நகர்த்தலே. இதுவரை பாெட்டம்மானைப்பற்றி வாய்திறவாத அலம்பறை  இப்பாே உயிர் காெடுப்பது ஏன்? அவசர அவசரமாக மாவீரா்தினவிழா ஏற்பாட்டாளரை விசாரணை, கிளிநாெச்சிநபரை இங்கு காெண்டுவந்து செருக தேவை என்ன? கிளிநாெச்சியில் பாெலிசார் இல்லாமையால் அவர்களைத் தேடி மட்டக்களப்புக்கு வந்தாரா? கிளிநாெச்சிப்பக்கம் கையைக்காட்டினால்  விசாரணை தன்பக்கம் திரும்பாது என்ற நினைப்பு. செய்தி வந்தவுடனேயே செய்தது யாரென சிங்களம் பகிரங்கமாக உடைத்து விட்டது. உன்னை வைத்து ஆட்டியவர்களுக்கு உனது ஆட்டமும் தெரியும், உன்னை ஆட்டுவிப்பவர்களையும் புரியும். கருணா ஒன்றை தெரிந்துகாெள் எட்டப்பன், காக்கைவன்னியனைவிட தமிழர் சரித்திரத்தில் நீதான் முதல் இடத்தில் இருந்து நாறப்பாேறாய். நீ உன்னிஷ்ரத்துக்கு ஒண்டும் புடுங்க முடியாது.  நீ என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்பவரே உன் எசமான்தான். செய்யிறது இழி வேலை, ஆர்ப்பாட்டம் ராஜாங்க அமைச்சர் அளவுக்கு, பாேராளிகளை உன்னை வைத்து சிங்களம் கச்சிதமாய் அழிக்கும். கடைசியில் உனது முறைவரும்பாேது எப்படி தப்பிப்பாய்? அதுவரை ஆடு, காெண்டாடு. உன்ர தற்பாேதைய எசமானின் பணம், பேரம் பேசல், காெலைஅச்சுறுத்தல் எந்த தந்திரமும் எடுபடாமல் சுருட்டிக்காெண்டு வெளியேற தயாராய் விட்டார். இது தெரியாமல் நீ பாவம் இன்னும் அவருக்கு விசுவாசமாய் கூவிக்காெண்டே இருக்கிறாய். யாராவது ஓங்கி செவிட்டாவில பாேட நீ யாரென்பது புரியும் உனக்கு, உன்னால ஆகவேண்டியது எதுவும் இல்லை இனி அவர்களுக்கு. அவர்குளுக்கான உனது குரைப்பும் தேவையற்றது. ஒதுங்குகிற வழியைப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.