Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

 

tourist-arrival-300x200.jpgசிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின்  முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார்.

“வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, ”பல்வேறு விமானங்களின் முன்பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, குறிப்பாக ஐரோப்பாவில் இருந்தான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன” என்று சிறிலங்கன் விமானசேவை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களை அடுத்து, இங்கு நடத்தவிருந்த கூட்டங்கள், நிகழ்வுகளை பல்வேறு நிறுவனங்களும் தென்கிழக்காசியாவுக்கு நகர்த்த ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து, கருத்து வெளியிட்ட சிறிலங்கா விடுதிகள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த,“ சிலர் ரத்துச் செய்திருக்கிறார்கள். சிலர் சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். கருத்தரங்குகள், கண்காட்சிகள் தொடர்பான முன்பதிவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா சுற்றுலா ஒழுங்கமைப்பு சங்கத்தின் தலைவர், ஹிரத் பெரேரா கருத்து வெளியிடுகையில், “இந்த நேரத்தில் முன்பதிவு மெதுவாகி விட்டது, இது கவலை தருக்கிறது.

தற்போதைய நெருக்கடி இழுத்தடிக்கப்படும் போது,அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, எல்லா இடங்களைச் சேர்ந்தவர்களும் ரத்துச் செய்கிறார்கள்” எனஅவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2018/12/07/news/35169

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

6 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

ஓவர் ரியாக்க்‌ஷன் ???

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

 

36 minutes ago, Dash said:

ஓவர் ரியாக்க்‌ஷன் ???

நோ ஓவரீயாக்சன்.

ஏன் அங்க, இங்க பார்க்கிறீயள்....

அக்டோபர் கடைசி வாரத்தில் போக இருந்தேன். நாலுநாள் கொழும்பு கோட்டலில், இரண்டு நாள் யாழ் கிறீன் கிறாஸ், இரண்டு நாள், கிக்கடுவ என்று பிளான்..... கடைசீல கனடா போய் வந்தேன்.....

சிங்களம் பேச்கூடிய ஒரு பக்கா லோக்கல் பாட்டியே (?) தவிர்த்தால், வெள்ளையள் ஏன் போகப் போகினம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

அங்கு வட்டி வீதம் கூட என்று எத்தனையோ பேர் லட்சக் கணக்காக நிரந்தரமாக கைப்பிலிட்டுள்ளனர்.
கூட்டணிகாரர் மாதிரி இவைக்கும் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கும்.

1 hour ago, Nathamuni said:

 

நோ ஓவரீயாக்சன்.

ஏன் அங்க, இங்க பார்க்கிறீயள்....

அக்டோபர் கடைசி வாரத்தில் போக இருந்தேன். நாலுநாள் கொழும்பு கோட்டலில், இரண்டு நாள் யாழ் கிறீன் கிறாஸ், இரண்டு நாள், கிக்கடுவ என்று பிளான்..... கடைசீல கனடா போய் வந்தேன்.....

சிங்களம் பேச்கூடிய ஒரு பக்கா லோக்கல் பாட்டியே (?) தவிர்த்தால், வெள்ளையள் ஏன் போகப் போகினம்.

கனடா போவதைப் பற்றி மூச்சே காட்டேல்லை.சொல்லியிருந்தா நம்மாக்கள் செங்கம்பளம் விரித்திருப்பார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கு வட்டி வீதம் கூட என்று எத்தனையோ பேர் லட்சக் கணக்காக நிரந்தரமாக கைப்பிலிட்டுள்ளனர்.
கூட்டணிகாரர் மாதிரி இவைக்கும் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கும்.

Bildergebnis für நாமமà¯

கதிர்காமத்தில்.. கந்தன்.... கோவணத்தில  நிக்கிறது, தெரிந்தும்... 
கோவிந்தா... கோவிந்தா...  என  நாமம் போடும்...  கூட்டணிக்காரரும்,  ரொம்ப  ஜாக்கிரதையாக இருக்க வேணும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

50% மேற்பட்ட Hotel முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டது என்று கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கனடா போவதைப் பற்றி மூச்சே காட்டேல்லை.சொல்லியிருந்தா நம்மாக்கள் செங்கம்பளம் விரித்திருப்பார்களே?

முகம் காட்ட மறந்தேன்..... முகவரியை தொலைத்தேன்....

அது அல்ல..... நண்பர்கள்... உறவினர்கள்.... 

அடுத்த முறை சந்திப்போம் என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

50% மேற்பட்ட Hotel முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டது என்று கூறினார்கள்.

உல்லாச பயணத்துறை பாரிய சரிவுதான் இலங்கை நிலவரத்தால் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.