Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம்

யாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொன்றும், காரொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன.

வங்கி முகாமையாளர் ஒருவரின் வீடே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து நாசக்கார செயலில் ஈடுபட்டுள்ளனர்.

நாசக்கார கும்பலின் செயற்பாட்டிற்கு அஞ்சி வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வராத நிலையில், சற்று நேரத்தில் வாள்வெட்டு கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Jaffna-1.jpg

http://athavannews.com/தொடரும்-வாள்வெட்டுக்-குழ/

அரியாலையில் நள்ளிரவு நடந்த வன்முறை; மகிழுந்து ஒன்றுக்கு பலத்த அடி!

யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வன்முறைக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்லது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இன்று அதிகாலை 2.45 மணியளவில் இரண்டு மோட்டார்சைக்கிளில் நான்கு பேர் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் சென்றுள்ளனர். இதன் போது வீட்டின் முன்பாக இருந்த மின்குமிழை அடித்து உடைத்ததுடன் வீட்டின் முன்பக்க கதவையும் வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் இரண்டு பேர் வாள்களுடன் வீட்டின் மதிற் சுவரால் பாய்ந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

இவ்வாறு வாள்களுடன் உள்ளே சென்றவர்கள் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினை முற்றாக அடித்து உடைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளனர். ஆயினும் இதன் போது வீட்டிலிருந்தவர்கள் அச்சம் காரணமாக வெளியே வரவில்லை.

இவ்வாறு கார் மற்றும் வீட்டை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்தே வீட்டுக்கார்ரகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/110732

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Ariyalai1.jpg?zoom=1.2100000262260437&re

யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வீடொன்றுக்குள் முகமூடி அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று வீட்டையும் வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இச் சம்பவம் அரியாலை புருடி வீதியிலுள்ள தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

குறித்த வீட்டிற்கு இன்று அதிகாலை 2.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் முகமூடிகளை அணிந்து வாள்களுடன் சென்றுள்ளனர். இதன் போது வீட்டின் முன்பாக இருந்த மின்குமிழை அடித்து உடைத்ததுடன் வீட்டின் முன்பக்க கதவையும் வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் இரண்டு பேர் வாள்களுடன் வீட்டின் மதிலை பாய்ந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

இவ்வாறு வாள்களுடன் உள்ளே சென்றவர்கள் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினை முற்றாக அடித்து உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளனர். ஆயினும் இதன் போது வீட்டிலிருந்தவர்கள் அச்சம் காரணமாக வெளியே வரவில்லை.

இவ்வாறு கார் மற்றும் வீட்டை அடுத்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்தே வீட்டுக்கார்ரகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 Ariyalai2.jpg?zoom=1.2100000262260437&reAriyalai3.jpg?zoom=1.2100000262260437&reAriyalai4.jpg?zoom=1.2100000262260437&re

2 hours ago, போல் said:

தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலேயே

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச உருவாக்கிய சிறப்பு  இராணுவ பயங்கரவாதக் கும்பலின் பங்களிப்பு இல்லாது இப்படி வடமாகாணம் முழுவதும் பரவலாக வாள்வெட்டுக்கள் / தாக்குதல்கள் நடக்கும் சாத்தியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, போல் said:

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச உருவாக்கிய சிறப்பு  இராணுவ பயங்கரவாதக் கும்பலின் பங்களிப்பு இல்லாது இப்படி வடமாகாணம் முழுவதும் பரவலாக வாள்வெட்டுக்கள் / தாக்குதல்கள் நடக்கும் சாத்தியம் இல்லை.

கடந்த மூன்றரை வருடங்களாக கோத்தபையன் இல்லாத போதும் வாள்வெட்டுக்குழு நன்றாகவே இயங்குகிறது.

இதுவும் ஒருவித இன அழிப்பு.

36 minutes ago, ஈழப்பிரியன் said:

கடந்த மூன்றரை வருடங்களாக கோத்தபையன் இல்லாத போதும் வாள்வெட்டுக்குழு நன்றாகவே இயங்குகிறது. 

கொலைகாரன் கோத்தபாய பதவில் இல்லையென்றாலும், உருவாக்கிய கொலைகாரக் கும்பல்/குழுக்கள் வடகிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.