Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

RANIL-WICKREMESINGHE.jpg

பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

இந்நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/பிரதமராக-ரணில்-ஞாயிறு-பத/

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா. இதோட கொஞ்ச நாளைக்கு சிறிலங்காவின்  அரசியல் ஆருடம் பார்க்கும் வேலை நிற்கும். ஆனால் பிரித்தானிய பிரெக்ஸிற் பிஸியாக வைத்திருக்கும்😆

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மாற்றம் இத்துடன் நின்றுவிடாது வேறு வகையில் ரணிலுக்கு வில்லங்கம் தொடரும் என்றுதான் எனது ஆருடம் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி இருக்கும் வரைக்கும் திடுக்கிடும் அரசியல் மாற்றங்கள் தொடரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vanangaamudi said:

பிரதமர் மாற்றம் இத்துடன் நின்றுவிடாது வேறு வகையில் ரணிலுக்கு வில்லங்கம் தொடரும் என்றுதான் எனது ஆருடம் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

நானும்,  அப்படித்தான் நினைக்கின்றேன்.... 
சம்பந்தனுக்காக... தனது எதிர்க் கட்சி  தலைவர் பதவியையே... விட்டுக்  கொடுத்தவர் மகிந்த.
அந்த நிலையில்... சம்பந்தர் / சுமந்திரன் கும்பல்... ரணிலுக்கு ஆதரவு கொடுத்ததை... 
மகிந்த...  என்றுமே மன்னிக்க மாட்டார். 
எதுக்கும்.... சம்பந்தனும், சுமந்திரனும்.... வீட்டுக் கதவை... இறுக்கி பூட்டிப் போட்டு.. படுக்கிறது நல்லது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

மைத்திரி இருக்கும் வரைக்கும் திடுக்கிடும் அரசியல் மாற்றங்கள் தொடரும்.

Ãhnliches Foto

சீனாக் காரனும் விட மாட்டான்,  இந்தியாக் காரனும்... விட மாட்டாமல் ... 
இரண்டு பேரும்,  மூக்கில்... இரத்தம் வரும் வரை, போராடுவார்கள். போராட வேண்டும்... 
அப்பிடி  இருந்தால்... தான்... ஆர், பெரிசு என்று நாங்கள்.. ஒரு முடிவுக்கு வரலாம்.

பஞ்சாயத்து... தொடரும்...
எலே... சண்முகம்,  அந்த செம்பை.. திரும்ப எடுத்து....  "மினுக்கி வை.... "  :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எதுக்கும்.... சம்பந்தனும், சுமந்திரனும்.... வீட்டுக் கதவை... இறுக்கி பூட்டிப் போட்டு.. படுக்கிறது நல்லது. 

இருவருக்கும் 4 அடுக்கு பாதுகாப்பு.பண்ணுற என்றால் பண்ணிப் பாருங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

சீனாக் காரனும் விட மாட்டான்,  இந்தியாக் காரனும்... விட மாட்டாமல் ... 
இரண்டு பேரும்,  மூக்கில்... இரத்தம் வரும் வரை, போராடுவார்கள். போராட வேண்டும்... 
அப்பிடி  இருந்தால்... தான்... ஆர், பெரிசு என்று நாங்கள்.. ஒரு முடிவுக்கு வரலாம்.

பஞ்சாயத்து... தொடரும்...
எலே... சண்முகம்,  அந்த செம்பை.. திரும்ப எடுத்து....  "மினுக்கி வை.... "  :grin:

image_1544668337-0be77adf79.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், 

RANIL-WICKREMESINGHE.jpg

ரணில் ஒரு விட்டு கொடாத கொள்கை சார்ந்த ஆனால் துர் அதிஷ்ட்டம் மிக்க அரசியல் வாதி. ரவி கருணாநாயக்க போன்ற ஊழல்வாதிகளின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு எடுத்த அரசியல்வாதி.

காமினி திசாநாயக்க மரணத்தின் பின்னர், சந்திரிகாவை எதிர்த்து காமினி மனைவி போட்டியிட விரும்பிய போது முதல் தடவையாக விட்டுக்  கொடுத்தார்.

சந்திரிகா இரண்டாவது தடவை போட்டி இடுகையில், புலிகள் தாக்குதலில், கண் பாதிக்கப் பட்டு, அதனைக் காட்டியே, வென்று இருக்கக் கூடிய ரணிலை தோற்க  வைத்து வென்றார்.

2004ல் சந்திரிகா, இவரை பதவி பதவி நீக்கிய போது, போராட்டம் நடத்துங்கள் என்று சொல்லப்படட போது, அமைதியாக நகர்ந்தார். ஏனெனில், சந்திரிகா அப்படி செய்ய அதிகாரம் சட்டப்  படி உள்ளது என அவருக்கு புரிந்து இருந்தது.

2005ல் மகிந்தா, புலிகளுடன் டீல் பேசிவிட்டார், நீங்களும்  பேசுங்கள் என்ற போது மறுத்தார். தோல்வி அடைந்தார். புலிகள் பகிஷ்கரிப்பால் மகிந்தா வென்றார்.  ரணில் வெல்லுவார்  என இருந்த மேலை நாடுகள், புலிகளை ஒடுக்கவேண்டும்  என முடிவு செய்ய, இந்த பகிஸ்கரிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.

2010ல் சரத் பொன்சேகாவுக்காக மீண்டும் விட்டுக் கொடுத்தார்.

2015ல் மைத்திரிக்காக மீண்டும் விட்டு கொடுத்தார். மைத்திரி வென்றதும், 2004 சந்திரிக்கா அனுபவத்தினால், உடனடியாகவே, 19A திருத்த சட்டத்தினைக்  கொண்டு வந்து, ஜனாதிபதியின் அதிகாரத்தினை குறைக்க அலுவல்கள் பார்த்தார்.

2004 ல் சந்திரிகா பதவி இறக்கியபோது போனது போல கிளம்பி போவார் என மஹிந்தவும், மைத்திரியும் எதிர்பார்த்து, அவரை பதவி இறக்க, சட்டத்தினை கொண்டு வந்த அவருக்கு, மைத்திரிக்கு அந்த அதிகாரம் இல்லை என, சொல்லி போராடி, இன்று வென்று இருக்கிறார்.

மகிந்தாவுக்கான சகல வழிகளும் மூடப் பட்டு விட்டதால், அவர் வெளியே போவதை தவிர வேறு வழி இல்லை.

பிரதமரை நீக்கும் அதிகாரம் மைத்திரிக்கு 4 1/2 வருடத்தின் பின்னரே கிடைக்கும். ஆனால், பாராளுமன்றின் 4 1/2 வருடம் முடிவத்துக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தல் வந்து, மைத்திரி வீடு போய்  விடுவார்.

அடுத்த டிசம்பர் - ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், ரணில் தான் வெல்லக் கூடிய குதிரை. அதனால் தான், தமிழ், முஸ்லீம் கட்சிகள் அவர் பின்னே உறுதியாக உள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, இந்தியா, ஜப்பான், மேற்குலக நாடுகள் கூட அதே நம்பிக்கையில் உள்ளன.

இதன் காரணமாகவே கூட்டமைப்பு தனது நம்பிக்கையையும் வைத்து இருக்கிறது.

அரசியலுக்கு அப்பால், அவரது விடா முயற்ச்சிக்கு வெற்றி கிடைக்குமாயின், அது விடாமுயற்ச்சியாளர்கள் அனைவருக்கும் ஒரு  நம்பிக்கை தருவது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.