Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஸ்கிரதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?

Featured Replies

சமஸ்கிரதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?-

சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி… நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு  அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு )

சமசுகிருதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று வாய் வீரம் பேசுவோர் ஒரு கல்லையாவது புரட்டி போட்டுள்ளனரா என்றால் இல்லைவே இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை… உதாரணமாக

1- மகா பாரதத்தில் 100 கௌரவர்கள் பிறந்தனர்?

இந்த கேள்வியை நாத்திகன் கேட்ட போது பதில் தெரியாதவர்கள் குதித்தனர் தாவினர் பின்னர் சாடினர்!!! விஞ்ஞானம் டெஸ்ட் டியூப் முறையை கண்டுபிடித்தவுடன் . ஆத்திகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உடனே விஞ்ஞானத்தின் சாதனையை தான் மகா பாரத காலத்தில் செய்தனர் என்று மார்தட்ட ஆரம்பித்தனர்.

இதில் ஒரு கேள்வி , விஞ்ஞானிகன் கூறும் முன் இதனை ஆத்திகன் விளக்கியோ அல்லது செய்திருந்தால் நாத்திகம் வளர்ந்திருக்குமா???

பதில் தெரியாத காரணமே ஆத்திகனை விமர்சனத்திற்கு உரியவனாக்கிறது.

2-  இதே நிலை தான் கணித கண்டுப்பிடிப்புகளின் பின்னும் வேதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று தன்னுடைய பெருமை பீற்றீக்கொண்டனர்.

3- அதே போன்று கேள்வி கேட்கப்படுகின்றதே அல்லது சமசுகிருதம் ஆளுமையை இழந்திடுமோ என்ற பயத்தில் ஆராயப்படாமல் அல்லது ஆராயாமல் பல புதிய கற்பணைகளை உருவாக்கி வருகின்றனர் பிறாமணர்களும் அவர்களின் பாதுகை தாங்குபவர்களும்.

4- சமீபமாக நடந்த தலை மாற்று சிகிச்சைக்கு பிறகு இது வேதத்தில் உள்ளது என்றனர். ஏன் இதனை இந்தியாவில் சமசுகிருத பண்டிதர்கள் சேர்ந்து செய்திருந்தால் மருத்துவ சமூகமே கைக்கட்டி வாய்பொத்தி பின் வந்திருக்குமே??

5- அரசியல்வாதிகள் பலர் வேதத்தில் அது இருக்கிறது அது இருக்கிறது என்று அன்னிய நாட்டினர் உருவாக்கிய வாகனங்களையும் ஆயுதத்தையும் கல்வியையும் பிடித்து தொங்கும் சொல் ஒன்றும் செயலொன்றுமான நிலையே நிலவுகிறது

6- ஒருவர் இறந்தால் அவர் பித்ரு உலகம் சென்றடைய ஓராண்டுகாலம் ஆகும் அதற்காகதான் ஒருவர் இறந்தபின் ஓராண்டிற்குள் மாதா மாதம் பல சடங்குகள் நடத்தபடுகிறது என்று காரணம் கூறுவார்கள். இந்த ஓராண்டு அப்படி எங்கு தான் பயனப்படுகிறார்கள் என்ற கேள்வி வலுக்க.. ஒரு பிறாமணர் தொலைகாட்சி நிகழ்ச்சியில்  ”இறந்தவர் நிலவுக்கு செல்கிறார்கள் அதற்கு ஓராண்டு ஆகிறது” என்று விளக்கம் கூறினார். இப்படிபட்ட பதில்கள் பலரை மீண்டும் பல விமர்சனங்களை தான் பெற்று தருமே தவிர மரியாதையை அல்ல.

வேதத்தில் இது இருக்கிறது அது இருக்கிறது என்று கூறுபவர்கள் தாமாக முன்வந்து விஞ்ஞானம் ஒரு கண்டுபிடிப்பை செய்யும் முன் இவர்கள் ஒரு கண்டுபிடிப்பை செய்து மானுட நலனுக்கோ பலனுக்கோ எதேனும் கண்டுபிடித்தால் கேள்விகள் கேட்பவர்களை மாணவனாகவும் பதில் கூறுபவர்களை ஆசானாகவும் மாறி இந்திய சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் .

சமீபமாக நமது நாட்டு பிரதமர்  திரு மோடி அவர்கள் புவி சூடாதல் பற்றிய உலக நாடுகளின் சந்திப்பில் சமசுகிருத வேதத்தை படித்தால் புவி சூடாதலுக்கு தீர்வு கிட்டும் என்றார், இதில் ஒன்று புரிகிறது நமது பிரதமர் வேதம் படிக்கவில்லை என்று ஏனெனில் படித்திருந்தால் மற்றவர்களை படிக்கச்சொல்லாமல் தீர்வை சொல்லியிருப்பார்.

ஆனால் வேதத்தை படிப்பது மட்டுமே வர்ணதர்மமாக செய்துவரும்  பிறாமணர்களாவது உடனடியாக தங்களின் மிக விருப்பமான தலைவருக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தாங்கள் படித்த வேதத்தில் உள்ள புவி சூடாதல் பற்றி தீர்வு சொல்லியிருக்கலாம். ஆனால் இன்று வரை அப்படி ஒன்றும் கேள்விப்பட்டதாக இல்லை என்ற போது ஒன்று தெளிவாகிறது சமசுகிருதம் வெறும் வாய்ப்பேச்சுதான் என்று.

https://kuthoosi.wordpress.com/2018/10/27/சமசுகிருதம்-வெறும்-வாய்ச/

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலரைச் சந்திக்கிறேன், நன்கு படித்துச் சான்றிதழ் வைத்திருப்பார்கள்! ஆனால், இந்த "நாம் அப்பவே கண்டு பிடித்து விட்டோம், மேற்கத்தையன் இப்ப கண்டு பிடிக்கிறான்" என்ற சின்ட்றோம் உள்ளவர்கள்! நவக்கிரகத்தை நாம் முதலே அறிவோம் என்பார்கள், அதில் உள்ள சந்திரனும் சூரியனும் கிரகங்கள் அல்லவே? கிரகங்கள் இப்போது ஒன்பது இல்லையே? என்று கேட்டு விடக் கூடாது! இப்போது எதுவும் பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதோ ஒரு சக்தி எம்மையெல்லாம் இயக்குகின்றது என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

செத்த மொழியை (சவத்தை) தலையில் வைத்து ஆடும் பேதைகள், என்றும் சீரிளமைத் திறத்துடன் விளங்கும் தாய்மொழியாம் தமிழைப் புறந்தள்ள முனையும் அறியாமையும் தமிழகத்தில் அரங்கேறுவது அவலம். "என் பிள்ளை தமிழ் படிக்கவில்லை" என்று சொல்வதைப் பெருமையாய் நினைக்கும் மானங்கெட்ட தமிழ்ச் சமூகம் ஒன்று உருவாகி வருகிறது. இச்சமூகத்தை மேலும் வளர்க்கத்தான் பார்ப்பனரின் மேற்கூறப்பட்ட அறிவியல் புரளி எல்லாம். தமிழில் பேசாத தமிழனைக் கேவலமாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். அதுவே ஆரிய மொழி வெறியரின் வினைக்கு சிறந்த எதிர்வினையாய் அமையும்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • தொடங்கியவர்
11 hours ago, Justin said:

இங்கே பலரைச் சந்திக்கிறேன், நன்கு படித்துச் சான்றிதழ் வைத்திருப்பார்கள்! ஆனால், இந்த "நாம் அப்பவே கண்டு பிடித்து விட்டோம், மேற்கத்தையன் இப்ப கண்டு பிடிக்கிறான்" என்ற சின்ட்றோம் உள்ளவர்கள்! நவக்கிரகத்தை நாம் முதலே அறிவோம் என்பார்கள், அதில் உள்ள சந்திரனும் சூரியனும் கிரகங்கள் அல்லவே? கிரகங்கள் இப்போது ஒன்பது இல்லையே? என்று கேட்டு விடக் கூடாது! இப்போது எதுவும் பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்!  

உண்மை.  எல்லா மூடப்பழக்ககளுக்களு விஞ்ஞான விளக்கம் கொடுப்பவர்களின் நோக்கம் அந்த அந்த மூடப்பழக்கம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கபட வேண்டும் என்ற நோக்கம் தான்.  பெரும் எடுப்புடன் விளக்கம் சொல்வார்கள் அந்த விளக்கம் இப்போதக காலத்திற்கு பொருந்தாது என்று நாம் நிறுவினால் அதை விடுத்து வேறு விடயம் பேச தொடங்கிவிடுவார்கள். இதை படித்தவர்கள் கூட பெருமளவில் செய்வது புரியாத புதிர்.  எமது முன்னோர் சிறிந்த அறிவாளிகள். எல்லா விடயத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்று முன்னோர் பெருமை பேசுவார்கள். எமது தாத்தாவின் பிறந்த திகதி என்ன என்று தெரியாத அளவிற்கு வரலாற்றை பதிவு செய்யும் அறிவற்றவர்களாக அவர்கள் விளங்கினார்கள் என்பதே உண்மை.   எல்லாவிடயங்களில் சிறந்து விளங்கிய முன்னோர்கள் வந்த அந்நியருக்கெல்லாம் ஏன் அடிமைப்பட்டார்கள் என்று கேட்டால் பதில் இல்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒன்றைக் காட்டிப் பயமுறுத்துவதே ஆரியர் செய்யும் வேலை. தமிழ் மொழியில் இருந்துதான் சமஸ்கிருதம் தோன்றியது என்பதை பலர் நிறுவியிருந்தாலும் சாதாரண மக்களின் அறியாமையும் கடவுள்மேல் உள்ள பயமுமே பிராமணிகளையும் அவர்கள் கூறுவதையும் நம்பவைக்கிறதேயன்றி பலருக்கும் இப்போது சமஸ்கிருதம் பற்றிய தெளிவு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மத்திய அரசு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் எதிரானதாக இருப்பதனாலும் தமிழன் சுயநலமாய் இருப்பதாலும் நாம் எதுவும் செய்யமுடியாது இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2019 at 5:51 AM, Justin said:

இங்கே பலரைச் சந்திக்கிறேன், நன்கு படித்துச் சான்றிதழ் வைத்திருப்பார்கள்! ஆனால், இந்த "நாம் அப்பவே கண்டு பிடித்து விட்டோம், மேற்கத்தையன் இப்ப கண்டு பிடிக்கிறான்" என்ற சின்ட்றோம் உள்ளவர்கள்! நவக்கிரகத்தை நாம் முதலே அறிவோம் என்பார்கள், அதில் உள்ள சந்திரனும் சூரியனும் கிரகங்கள் அல்லவே? கிரகங்கள் இப்போது ஒன்பது இல்லையே? என்று கேட்டு விடக் கூடாது! இப்போது எதுவும் பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்!  

இப்பொழுது கிரகங்கள் ஒன்பது தெரியுமா...

விண்ஞான உலகம் பதிதாக கண்டுபிடித்த?? அந்த கிரகத்துக்கு ப்ளானட் X என்று பெயரிட்டுள்ளனர்...

அதற்க்கு ஏன் பெயரிடப்படவில்லை என்றால் அது இன்னும் கண்டுபிடிக்கவில்லை... (இந்த சின்ன கருத்திற்க்குள்ளேயே எத்தனை முறண் (இதற்க்காக விண்ஞானத்தை குறை சொல்ல இயலாது))

அதை எப்படி கண்டுபிடிக்காமல் கண்டுபிடித்தார்களென்றால், ஏதேனும் விண்கற்கள் சூரிய குடும்பத்திற்க்குள் நுழையும் பொழுது அந்த கிரகத்தின் புவியீர்ப்பு விசையின் மூலம் அதன் வழித் தடம் மாறுகின்றதாம்... இது வரை அறிவியல் உலகம் இரண்டு முறை விண்கற்கள் தடம் மாறியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக பதியபட்டுள்ளது...

அந்த கிரகம் சுத்தமாக தெரியாமல் இருப்பதற்க்காக இரண்டு காரணங்ள் கூறப் படுகிறது... சூரிய ஒளி படாத அளவு தொலைவில் உள்ளது... இன்னொன்று பிரபஞ்சத்தின் பல கோடி நச்சத்திரங்களின் ஒளிகள் தொந்தரவினாலும்...

விண்ஞான உலகால் அந்த கிரகமும் சூரியனை தான் சுற்றி வருவதாக கூறப் படுகிறது...

--ஆனாலும் சமஸ்கிருதம் செத்து போன மொழி என்பதில் மாற்று கருத்து இல்லை...

Edited by மியாவ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.