Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்கள் பார்த்தால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நீண்ட நாளைய நண்பன் ஒருவன் கதைக்கும்போது என்னிடம் கேட்டான் என்னடா முந்தி ஒரு காலத்திலை கனக்க கவிதையள் கதையள் எண்டு எழதுவாய் இப்ப வர வர உன்ரை எழுத்து இப்பிடி மோசமாய் பேச்சு தமிழிலையும் அதுவும் ஊர்வம்பு மற்றவர்கள் வம்பு என்று போய் கொண்டிருக்கு என்ன நடந்தது வயசு போட்டுதா? என்றான். அவன் திட்டினது எனக்கு கோபம் வரேல்லை ஆனால் வயது போட்டுதா எண்று கேட்டதுதான் கோபம் வந்திட்டுது அதுதான் வழைமையை விட ஒரு மாறுதலுக்கு இந்த வரிகள்

கண்கள் பார்த்தால்

காதல் வரும்

கண்கள் பார்க்காமலும்

காதல் வரும்

காலத்தின் கோலம்

கணணிக் காலம்

இனிக்கும் மணக்கும்

இதமாய் இருக்கும்

இதுவல்லவோ உலகமென்று

இவ்வுலகமும் மறக்கும்

தடைபோட்டு தடைபோட்டு

தாய் தந்தை தடுத்தாலும்

முளைவிட்டு கிளைவிட்டு

காதல் பூ பூக்கும்

சுற்றமெல்லாம்

குற்றம் சொல்வார்

குறை சொல்வார்

குறையெல்லாம்

கறையாய் துடைத்து

காறி உமிழ்ந்துவிட்டு

முத்தம் இடும்போது

கிடைக்கும் சுகம்பெரிதா

இட்ட முத்தத்தை

நினைக்கும் சுகம்பெரிதா

காத்திருப்பது சுகமா

காக்க வைப்பது சுகமா

பேசிகொண்டிருப்பது சுகமா

பேசியதை அசை போட்டு

பொறும் இன்பம் சுகமா

தொடமுடியுமா என

தவிப்பது சுகமா

தொடதொட சுகமா

பாதி இரவில் பட்டிமன்றம்

பாவி மனதில்

முத்து குளிப்பவனிற்கு

மூச்சு திணறும்

பக்குவமாய் படிக்காதவனிற்கு

பாடம் கசக்கும்

அறுசுவை உணவையும்

ஆறஅமரஉண்ணாவிடில்

அது சுவையற்றது

மருந்தும் விருந்தும்

காதலே

மருந்தோ விருந்தோ

அருந்துபவரிற்கு

அளவுதேவை

கண்டதும் காதல்

கொண்டதும் காமம்

இரண்டுமே பாவம்

கூடிவாழ முன்னரே

கூடி முடித்து விட்டால்

பள்ளியறை செல்லாமலே

பாடம்முடித்துவிட்டால்

ஆலயம் செல்லாமலே

அருச்சனை முடித்துவிட்டால்

சுகம் இல்லாத சொர்க்கம்

சுரம் இல்லாத சங்கீதம்

உள்ளத்தில் தொடங்கி

உடலில் முடிக்காமல்

உடலில் தொடங்கி

கள்ளத்தில் முடிப்பது

காதலல்ல அது

கண்கள் பார்த்த

காதலானாலும்

பார்க்காத காதலானாலும்

ஆயினும் காதல்

செய்வீர் கண்ணியமாய்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணியமாய் காதல் செய்ய உங்க கவிதை துணை போகுமா சாத்திரி :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி கவிதை கண்ணியத்திற்கு உதவும் எண்டதிலை எனக்கு நமபிக்கை இல்லை ஆனால் காதலுக்கு உதவும் உங்களிற்கு உதவுதா எண்று ஒரு முயற்சி பண்ணி பாக்கிறது :D

"கண்கள் பார்த்தால்

காதல் வரும்

கண்கள் பார்க்காமலும்

காதல் வரும்

காலத்தின் கோலம்

கணணிக் காலம்

இனிக்கும் மணக்கும்

இதமாய் இருக்கும்

இதுவல்லவோ உலகமென்று

இவ்வுலகமும் மறக்கும்

தடைபோட்டு தடைபோட்டு

தாய் தந்தை தடுத்தாலும்

முளைவிட்டு கிளைவிட்டு

காதல் பூ பூக்கும்

சுற்றமெல்லாம்

குற்றம் சொல்வார்

குறை சொல்வார்

குறையெல்லாம்

கறையாய் துடைத்து

காறி உமிழ்ந்துவிட்டு

முத்தம் இடும்போது

கிடைக்கும் சுகம்பெரிதா

இட்ட முத்தத்தை

நினைக்கும் சுகம்பெரிதா

காத்திருப்பது சுகமா

காக்க வைப்பது சுகமா

பேசிகொண்டிருப்பது சுகமா

பேசியதை அசை போட்டு

பொறும் இன்பம் சுகமா

தொடமுடியுமா என

தவிப்பது சுகமா

தொடதொட சுகமா

பாதி இரவில் பட்டிமன்றம்

பாவி மனதில்

முத்து குளிப்பவனிற்கு

மூச்சு திணறும்

பக்குவமாய் படிக்காதவனிற்கு

பாடம் கசக்கும்

அறுசுவை உணவையும்

ஆறஅமரஉண்ணாவிடில்

அது சுவையற்றது

மருந்தும் விருந்தும்

காதலே

மருந்தோ விருந்தோ

அருந்துபவரிற்கு

அளவுதேவை

கண்டதும் காதல்

கொண்டதும் காமம்

இரண்டுமே பாவம்

கூடிவாழ முன்னரே

கூடி முடித்து விட்டால்

பள்ளியறை செல்லாமலே

பாடம்முடித்துவிட்டால்

ஆலயம் செல்லாமலே

அருச்சனை முடித்துவிட்டால்

சுகம் இல்லாத சொர்க்கம்

சுரம் இல்லாத சங்கீதம்

உள்ளத்தில் தொடங்கி

உடலில் முடிக்காமல்

உடலில் தொடங்கி

கள்ளத்தில் முடிப்பது

காதலல்ல அது

கண்கள் பார்த்த

காதலானாலும்

பார்க்காத காதலானாலும்

ஆயினும் காதல்

செய்வீர் கண்ணியமாய் ..."

ஆகா .. சூப்பர் கவிதை! மணியாய் இருக்கிறது! :P

களத்தில் ஏராளம் நல்ல சரக்கு இருக்கின்றது, ஆனால், அவ்வப்போது தான் வெளிக்காட்டப்படுகின்றது, நன்றி! வாழ்த்துக்கள்! :D

சாத்து

எங்கை ஐயா சரக்கை எல்லாம் வச்சிருந்தனியள்.

அந்த மாதிரி இருக்குது. :D

அடிக்கடி எழுதுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்து ஐயா உங்கள் கவிதை ஏ ஒன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டியவர்களிற்கு நன்றிகள் மணிவாசன் சரக்குஇப்பிடித்தான் இடையிடை வெளிவரும் பிறகு பழைய பல்லவி ஊர்வம்பு என்று முருங்கைமரம் ஏறிவிடும் :lol:

சாத்திரியின் கவிதை படித்ததில் மகிழ்ச்சி தொடர்ந்து கவிதைகள் படைக்கவும்

மீண்டும் உங்கள் வரிகளில்கருத்தை சொல்லும் அருமையான கவிதை.. :)

கண்கள் பார்த்த

காதலானாலும்

பார்க்காத காதலானாலும்

ஆயினும் காதல்

செய்வீர் கண்ணியமாய்

ஹும் ..... :)

ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு கவிதை யாழ்ல இணைச்சிருக்குறீங்க .... கவிதை நல்லாயிருக்கு சாத்திரி அண்ணா.... பாராட்டுக்கள்... தொடந்து பல கவி படையுங்கள்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் கவிதை எழுதுறிங்க :)

அழகாய் கதை எழுதுறிங்க :)

அழகாய் ஊர் வம்பு எழுதுறிங்க :)

அழகாய் வானொலியில் பேசுறிங்க

வேறு ஏதும் விட்டு விட்டேனா

உங்களுக்குள் இத்தனை பேர் இருக்கிறார்களா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் கவிதை எழுதுறிங்க :)

அழகாய் கதை எழுதுறிங்க :)

அழகாய் ஊர் வம்பு எழுதுறிங்க :)

அழகாய் வானொலியில் பேசுறிங்க

வேறு ஏதும் விட்டு விட்டேனா

உங்களுக்குள் இத்தனை பேர் இருக்கிறார்களா

ஆ.......ஆ.........ஆச்சும் மன்னிக்கவும் கறுப்பி தும்மல் வந்திட்டுது . கி கி கீ நன்றிகள் பாராட்டிற்கு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்கள் பார்த்த

காதலானாலும்

பார்க்காத காதலானாலும்

ஆயினும் காதல்

செய்வீர் கண்ணியமாய்

கவிதை அழகா இருக்கிறது சாத்து மாமா :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்பரே!

மேலோட்டமாகப் பார்த்தால் இன்பமோ, அன்றி துன்பமோ உடல் அனுபவிப்பதாகத்தான் படும். ஆனால் கொஞசம் ஆழ்ந்துநோக்கினால் இவையெல்லாவற்றையுமே அனுபவிக்கிறது மனசுதான் என்ற உண்மை புலப்படும்.

எ+கா: கண்கள் இரண்டும் பிரதானமானதுதான். ஆனால் ஒரு நோயாளியிடம் வைத்தியர், உமது கண்களில் ஒரு கண்ணை எடுத்தால்தான் மற்றதால் தொடர்ந்து பார்க்க முடியும் என்று கூறினால் அவருடைய மனம் அதற்குத் தயாராகிவிடுகிறது.

இந்த உண்மையை உங்கள் கவிதை தொக்கி நிற்கிறது. நன்றி!! உமக்கல்ல உம்மை கோபப்படுத்திய அந்த முகமறியாத நன்பருக்கு !!!!!. நீர் இன்னும் நன்றாகக் கோபப்படும். :lol::D

சாத்ரி மாமா உங்கள் நீண்ட நாள் நண்பனுக்கு என் நன்றியை சொல்லி விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

காதலுக்கு தான் கண்ணே இல்லையே.அப்புறம் கண்ணியத்துக்கு யாரிடம் போவது?

சுகம் எதுவென தெரியாதவரா இந்த சாத்திரி

இருக்காது ஏனென்றால் இந்த சாத்திரி எல்லா சுகமும் அறிந்தவர்போலிருக்கிறார்.

வாழ்த்துகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகம் எதுவென தெரியாதவரா இந்த சாத்திரி

இருக்காது ஏனென்றால் இந்த சாத்திரி எல்லா சுகமும் அறிந்தவர்போலிருக்கிறார்.

வாழ்த்துகள்..

அய்யா விகட கவி உங்கடை பெயருக்கு ஏற்றால்: போலை என்ரை அடி மடியிலை கை வைக்கலாமா??? ம் எல்லா சுகமும் தெரியும் இப்ப அதை மீட்டி பாக்கிற சுகம் தனி சுகம் கிகிகி :unsure::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.