Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவத்தை ஆத்திரமூட்டும் வகையில் போராடக்கூடாது- நீதிமன்றம் கட்டளை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை ஆத்திரமூட்டும் வகையில் போராடக்கூடாது- நீதிமன்றம் கட்டளை!!

பதிவேற்றிய காலம்: Jan 27, 2019

கேப்­பா­பி­லவு இரா­ணுவ முகா­மின் இரண்டு முதன்மை வாசல்­க­ளி­லி­ருந்­தும் 75 மீற்­றர் தொலை­வில், இரா­ணு­வத்­தி­னரை ஆத்­தி­ர­மூட்­டாத வகை­யில் போராட்­டத்தை முன்­னெ­டுக்க முடி­யும் என்று முல்­லைத்­தீவு நீதி­வான் நீதி­மன்­றம் நேற்­றுக் கட்­டளை பிறப்­பித்­துள்­ளது.

கேப்­பா­பி­லவு மக்­கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி, இரா­ணுவ முகா­முக்கு அரு­கில் தொடர்ச்­சி­யா­கப் போராடி வரு­கின்­ற­னர். நேற்று 700ஆவது நாளில் இரா­ணுவ முகாம் முன்­பா­கப் போரா­டி­னார்­கள். இந்­தப் போராட்­டத் தைத் தடுக்­கும் வகை­யில் பொலி­ஸார் நீதி­மன்­றில் தடை உத்­த­ரவு பெற்­றுக் கொள்­வ­தற்கு முயற்­சித்­த­னர். நீதி­மன்­றம் ஜன­நா­யக வழி­யில் போரா­டத் தடை­யில்லை என்று அறி­வித்­தது.

 

இந்த நிலை­யில் முள்­ளி­ய­வ­ளைப் பொலி­ஸார் நீதி­மன்­றில் நேற்று மீண்டும் அறிக்கை தாக்­கல் செய்­த­னர். அதற்கு அமை­வாக நீதி­மன்று, நேற்­று­முன் தி­னம் வழங்­கிய கட்­ட­ளைக்கு மேல­தி­க­மாக மற்­றொரு கட்­ட­ளை­யை­யும் பிறப்­பித்­தது.

அதில், இந்­தப் பிர­தே­சத்­தில் ஏதே­னும் ஆர்ப்­பாட்­டங்­கள் அல்­லது ஊர்­வ­லங்­கள் நடத்­து­வ­தற்­குத் தீர்­மா­னித்து அவ்­வாறு நடத்­திச் செல்­லும் சந்­தர்ப்­பத்­தில் ஜன­நா­யக அடிப்­படை உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் வகை­யி­லும், பொது அமை­திக்­குப் பங்­கம் ஏற்­ப­டாத வகை­யி­லும், கேப்­பா­பி­லவு படை முகா­மின் பாது­காப்­புக்குப் பங்­கம் ஏற்­ப­டாத வகை­யி­லும், அந்த முகா­மின் அன்­றாட நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டாத வகை­யி­லும், ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுக்­க­வேண்­டும்.

கேப்­பா­பி­லவு -– புதுக்­கு­டி­யி­ருப்பு வீதி­யில் மறி­யல் செய்­யவோ, வீதி­யில் கூடா­ரம் அமைத்து தங்­கி­யி­ருந்து வாக­னங்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தவோ, பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கைக்­குப் பாதிப்பு ஏற்­ப­டும் விதத்­தில் செயற்­ப­டு­வது தடை செய்­யப்­ப­டு­வ­து­டன், கேப்­பா­பி­லவு பாது­காப்புப் படை இரா­ணுவ முகா­மின் தலை­மை­ய­கத்­தின் முதன்மை நுழை­வா­ச­லுக்கு முன்­னால் எந்­த­வித ஆர்ப்­பாட்டமும் நடத்­தக்­கூ­டாது என்­றும், அந்­தப் முதன்மை நுழை­வா­சல் இரண்­டுக்கும் அப்­பால் 75 மீற்­றர் வற்­றாப்­ப­ளைப் பக்­க­மாக, இரா­ணு­வத்தை ஆத்­தி­ர­மூட்­டும் விதத்­தில் நடத்­தாது ஜன­நா­யக ரீதி­யில் அமை­தி­யாக நடத்­து­மாறு கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

 

இந்­தக் கட்­ட­ளையை மீறிச் செயற்­ப­டு­ப­வர்­கள் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டில் தண்­டிக்­கப்­ப­டு­வீர்­கள் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அத்­து­டன் போராட்­டத்தை முன்­னெ­டுக்­கும் ஏற்­பாட்­டா­ளர்­கள் மூன்று பேரை­யும் நாளை திங்­கட்கிழமை மன்­றில் முன்­னி­லை­யா­க­வும் கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

50574145_2028663507241337_4266997897737750568713_2028663243908030_7156943406801851010705_2028663317241356_10295813052699

 

https://newuthayan.com/story/12/ராணுவத்தை-ஆத்திரமூட்டும்-வகையில்-போராடக்கூடாது-நீதிமன்றம்-கட்டளை.html

 

  • கருத்துக்கள உறவுகள்

கேப்பாபிலவு மக்களே! எனதருமைத் தமிழ்மக்களே!! என்னால் என்ன செய்ய முடியும்....???

2.jpg?itok=qb07XykD

ஐயகோ.....😭😭😭😭😭😭... !!

மக்கள் தம் நிலத்தை தானே கேட்க்கிறார்கள் , கொடுத்து விட்டு போவது தானே . 
 

திருவாளர் சுமந்திரன் சட்டத்தரணி எங்கே , இவர் வாதாடி ராணுவத்தை வெளியேற்ற முடியாதா ? 
ரணிலுக்கு வாலாட்டுவது மட்டும் தான் இவருக்கு தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபாதாசன் said:

திருவாளர் சுமந்திரன் சட்டத்தரணி எங்கே , இவர் வாதாடி ராணுவத்தை வெளியேற்ற முடியாதா ? 

அவர் ராணுவத்துக்கு முக்கியமற்ற காணிகள் விடுவிக்கபடும் போது அங்கு போய் தனக்குத்தானே செம்புகள் மூலம் மாலைகளை கழுத்தில் அடுக்கிக்கொண்டு பிலிம் காட்டுவார் .

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு மட்டுமல்ல இங்கும் நீதிமன்றங்களின் இம்சை பெரியதாகி கொண்டே போகிறது ..

C4nJOCqXUAEpeqc.jpg

ராணுவத்தினர் களிப்படையும்படி என்ன உண்டோ ரான்சா குத்துப்பாட்டா அதையும் நீங்களே சொல்லிடுங்க ஆப்பீசர் ..

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை ஆத்திரமூட்டும் இராணுவத்துக்கு ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கும்??

On 1/27/2019 at 1:23 PM, கிருபன் said:

ராணுவத்தை ஆத்திரமூட்டும் வகையில் போராடக்கூடாது- நீதிமன்றம் கட்டளை!!

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறையை தமிழர் நம்பவே முடியாது என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

மக்களை, மக்களின் உரிமைகளைப்  பாதுகாப்பதே நீதித்துறையின் தலையாய செயற்பாடு. ஆனால் இங்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை தமிழினப் படுகொலைகாரர்களை பாதுகாக்கிறது. மக்கள் தங்கள் அடிப்படை உரிமைக்கான ஜனநாயக போராட்டங்களை முடக்குகிறது.

On 1/27/2019 at 1:23 PM, கிருபன் said:

பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கைக்­குப் பாதிப்பு ஏற்­ப­டும் விதத்­தில் செயற்­ப­டு­வது தடை செய்­யப்­ப­டு­வ­து­டன்

இது உண்மையானால் பொதுமக்களின் காணிகளை கொள்ளையடித்த சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளை சிறைகளில் அடைக்க வேண்டிய நீதித்துறை, அதைவிடுத்து  "பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கைக்­குப் பாதிப்பு ஏற்­ப­டும் விதத்­தில் செயற்­ப­டு­வது தடை செய்­யப்­ப­டு­கிறது" என்று முதலைக் கண்ணீர் விடுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.